The Antipoetry of Tadeusz Różewicz/ததயூஸ் ரோஸாவிச்சின் ஐரோப்பிய எதிர் கவிதை

புதிய எதிர் கவிஞர்களுக்கு கவிதையானது செம்மையான உரைநடை அளவுக்கு எழுதப்பட்டால் மட்டும் போதுமானதாய் இருக்கவில்லை. ஓர் உயர்ந்த உருவகக் குணாம்சத்தால் தனித்துத் தெரியும் பிரத்யேக மொழியை கவிஞன் கைக்கொள்வதில்லை. இதன் முக்கியமான அம்சமாகக் கருதப்படுவது அதன் மொழிச்சலவை (Language Washing). மொழிச்சலவை என்கிற அம்சத்தை தன் கவிதைகளில் வெற்றிகரமாகச் சாதித்தவர் பெர்டோல்ட் ப்ரக்ட். ஆனால் ப்ரக்ட் எதிர் கவிதை ஓர் இயக்கமாக வளரும் முன்பாக 1956இல் காலமானார்.

Rate this:

Enrique Lihn’s Poems/என்ரிக்கே லீன்-6 கவிதைகள்

இது ஒரு கௌரவ போலீஸ் அதிகாரி எனது சொற்களிலிருந்து அவரே உருவாக்கிய இலக்கிய பிரதிநிதித்துவம் மேலும் அதை மொழியின் இந்த நகர மையத்திற்கு ஈர்த்து எனது சட்டவரம்பு மீறலை இடைவிடாது கண்டனம் செய்தபடி இருக்க நான் செய்தித்தணிக்கையை விரும்புகிறேன், ஆனால் சுய-தணிக்கைக்கு பொதுப் போக்குவரத்து அனுகூலம் இருக்கிறது. இந்த மொழியின் நகர அமைப்பில் நான் மிகவும் விரும்புவது இந்தப் பிரிவுதான்.

Rate this:

Poems of Veronica Volkow/வெரோனிக்கா வால்கவ் கவிதைகள்

உடலின் மூல முதல் கண் பசி
உடல் இருளின் ஆதிகாலத்தியக் கண்
தசை எதைக் கொண்டு முதன் முதலாய்த தசையைக் காணும் கண்

மற்றும் நம்மை உள்ளாழ்ந்து இழுக்கும் குருதிசார்ந்த இருளின் கண்
அதைக் கொண்டு என் கால்கள் உனது பற்களைப் பார்க்கின்றன
என் விரல்களை
கண்களை
அவற்றைக் கொண்டு நீண்ட நூற்றாண்டுகளில் உன்னைக் கண்டுபிடிக்கிறேன்

Rate this:

7 Poems of Angel Gonzalez/ஆஞ்சல் கோன்ஸாலெஸ் 7 கவிதைகள்

சுமார் ஏழுமணிக்கு ஒரு சிறு விமானம் நிதானமாய்
வானைக் குறுக்கிட்டது,
ஆனால் குழந்தைகள் கூட அதைக் கவனிக்கவில்லை.
கடுங்குளிர் கட்டவிழ்த்து விடப்பட்டது
யாரோ ஒருவர் தொப்பி அணிந்து வெளியே சென்றார்,
நேற்று, மற்றும் இன்று முழுவதும்
அப்படித்தான் இருந்தது,
ஏற்கனவே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்
எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது

Rate this:

Tadeusz Różewicz/Poems on Poets and Poetry/ததயூஸ் ரோஸாவிச்-கவிஞன் மற்றும் கவிதை பற்றிய கவிதைகள்

கவிஞன் பேசுகிறான்
அதே மொழியை

ஒரு குழந்தையிடம்
ஒரு விதி மீறும் விஷயங்கள் செய்யத் தூண்டுபவனிடம்
ஒரு பாதிரியிடம்
ஒரு அரசியல்வாதியிடம்
ஒரு போலீஸ்காரரிடம்

குழந்தை புன்முறுவல் செய்கிறது
விதி மீறும் விஷயங்கள் செய்யத் தூண்டுபவன் கேலி செய்யப்பட்டதாய்
பாதிரி அச்சுறுத்தப்பட்டதாய்
அரசியல்வாதி அவமதிக்கப்பட்டதாய் உணர
போலீஸ்காரர் தனது கோட்டுக்குப் பட்டன் போடுகிறார்

Rate this:

75 heteronyms of Fernando Pessoa/ஃபெர்னான்டோ பெசோவாவின் 75 பன்மைப் பெயர்கள்

பலவாய்ப் பெருகும் பெசோவாவின் ஆளுமைப் பிரபஞ்சம் சிக்கலானது. இந்த மாற்று ஆளுமைகள் உருவாவதற்கு வரலாற்று, அரசியல் மற்றும் தனிநபர் காரணிகள்(மனோவியல்) இருந்துள்ளன. பெசோவாவின் முரண்படும் ஆளுமைப் பிரபஞ்சத்தில் சம்பிரதாய இலக்கியக் கவிஞரும் அதை நிராகரிக்கும் நவீன கவிஞனும் ஒரு கற்பனை இலக்கியக் கூட்டமைப்பில் இயங்குகின்றனர். பெசோவா போர்த்துகீசிய நவீனத்துவத்தை முன்னெடுத்தச் சென்ற பிரதான இலக்கியவாதி. ஒரே சமயத்தில் பெசோவா ஒரு பிரதேசவாதியாகவும் தேசீயவாதியாகவும்(போர்ச்சுகல் தேசத்தைப் போற்றுதல்) இருக்க முயன்றார்

Rate this:

Reassessing wislawa szymborska/விஸ்வாவா ஷிம்போர்ஸ்கா/ ஒரு மீள் பார்வை

1996ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற விஸ்வாவா ஷிம்போர்ஸ்கா உலகப் போர்களுக்குப் பின் வந்த போலந்து இலக்கியத்தின் முன்னணிக் கவிஞர். போலந்துக் கவிஞர்களில் இவருக்கு முன் 1980 ஆம் ஆண்டு செஸ்வா மிவாஷ்(1911_2004) நோபல் பரிசு பெற்றார். மிகக் குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து நோபல் பரிசு பெற்றவர்கள் போலந்துக் கவிஞர்களாகத்தான் இருக்க முடியும். 50 ஆண்டுக் காலத்தில் ஷிம்போர்ஸ்கா மெல்லிய 9 கவிதைத் தொகுதிகளையே வெளியிட்டிருந்தார்.

Rate this:

17 Poems of Shinkichi Takahashi/ஷின்க்கிச்சி தாகாஹாஷி-17 கவிதைகள்

நான் ஒரு புத்தியற்ற நாய்,
ஒன்றுக்கும் பயனற்ற பூனை,
சாக்கடையின் மீதில் உள்ள ஒரு மூடுபனிப் புகை
ஒரு மலர்வினை சிதைக்கும் மழை.

அணுக் கதிரியக்கம் நிறைந்த காற்றை சுவாசிக்கிறேன்
நான் என் கண்களை மூடி-
ஒரு பில்லியன் ஆண்டுகளில் நான்
பாதியாகச் சுருங்கி விடுவேன்,
மாசு என் எலும்பு மஜ்ஜையைத் தாக்குகிறது.

Rate this:

Shinkichi Takahashi/ஷின்கிச்சி தாகாஹாஷியின் தாதாயிசமும் ஜென் பௌத்தக் கவிதைகளும்/

ஷின்க்கிஷி தாதாயிஸப் பாதிப்பில் எழுதிய கவிதைகளை வெளியிட்டார். தான் தாதாயிஸம் என்று எதை அறிந்து கொண்டாரோ அந்த அனுபவத்தை அடுத்த ஆண்டு “மூன்று தாதாயிஸக் கவிதைகள்” என்ற அறிக்கையாக வெளியிட்டார். 1923 ஆம் ஆண்டு அவர் “ஷின்க்கிஷியின் தாதாயிஸக் கவிதைகள்” என்ற பெயரில் வெளியிட்டார். 1924இல் ஒரு தொகுதியும் பிறகு 1928இல் “ஷின்க்கிஷி தாகாஹாஷியின் சேகரிக்கப்பட்ட கவிதைகளை” என்ற ஒன்றையும் வெளியிட்டார். ஆனால் இந்தக் கவிதைகளில் எது ஒன்றுமே அன்றைய காலகட்டத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. அவரது 22ஆம் வயதில் ஜப்பானின் முன்னணி தாதாயிஸக் கவிஞர் என்றும் ஜப்பானிய ரைம்போ (Rimbaud) என்றும் அழைக்கப்பட்டார்.

Rate this:

Introducing Nicanor Parra’s Antipoetry/நிக்கனர் பர்ராவின் எதிர்கவிதை: ஓர் அறிமுகம்

பர்ரா கவிதை மொழியை நிர்வாணமாக்குகிறார்-சமூக உயர்வகுப்பினரின் தூய சொற்சேகரம் என்று அழைக்கப்படுவதற்காக பர்ரா இதைச் செய்யவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உரைநடைத்தன்மையையும், தனிநபர் தடுமாற்றம் கொள்ளும் தயக்கமான நிலைகளையும், தயார் நிலையில் இல்லாத இடத்தில் தோற்றுவிக்கப்படும் பேச்சின் அசுத்தத்தையும் தீவிரமாக எடுத்துக் கொண்டவர் பர்ரா. அப்படித் தடுமாற்ற நிலையிலிருந்து பேசப்படும் பேச்சின் அடி ஆழம் அதிகம். ஆனால் இதன் விளைவாக ஒரு நகைச்சுவை நிறைந்த சூழ்நிலைமை இக்கவிதைகள் தோன்றுகின்றன என்று சில வாசகர்கள் நினைக்கலாம். பரிச்சயமான அனுபவங்களையும் பர்ரா தன் கவிதைகளில் செதுக்கி செழிப்பாக்குகிறார்

Rate this:

10 poems of Sandor Csoori/ஷேன்டார் ச்சூரி/10 கவிதைகள்

அப்படியானால்
தொலை பேசி இணைப்பை வெட்டிவிட்டு
வாசல் அழைப்பு மணியின் இணைப்பைத் துண்டித்துவிட்டு
மதுவில் கொஞ்சம் கிராம்புகளை ஊற வைத்த பின்
கடந்த காலத்திலிருந்து வந்த கடிதங்களின் ஊடாய் கவனம் திருப்பி
(அது ஏதோ நடவாதது என்பது போல)
எனது வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்ப்பது மிகச் சிறந்ததாய் இருக்கும்

Rate this:

Introducing Sándor Csoóri/ஷேன்டார் ச்சூரி-யின் கவிதைகள் ஓர் அறிமுகம்

எனவே அவரது தேசத்திற்கும் அவருக்குமான இருத்தலியல் பிரச்சனைகளுக்கு அவர் விடை கண்டுபிடிக்கத் தேடினார். ஆனால் அவரது கவிதைகள் பொதுவாக அவற்றுக்கான நேரடி விடைகளைக் கொண்டிருப்பதில்லை. அவர் தன் தனிநபர் நேர்மையைக் கூட சுய பரிசோதனைக்கு உட்படுத்தினார். அவர் தேடிய பல நிஜங்களும் யதார்த்தங்களும் கடந்த காலத்தவையாக மாறியிருந்தன. இதை “தவற விட்ட சாலைகள்” என்ற கவிதையில் பார்க்கலாம். “பழைய கட்சி அலுவலகத்தில் திரிதல்” என்ற கவிதை ஹங்கேரிய கம்யூனிசம் எவ்வளவு கருணையற்று தன் அங்கத்தினர்களை நடத்தியது என்பதற்கான சாட்சியாக விளங்குகிறது.

Rate this: