Brammarajan’s Polyphonic poems

A unique blog about Tamil poetry and Tamil culture, with translations in English

The Adventure of Life and the Death of poetry-Rimbaud/Introduced by Brammarjan

Posted by brammarajan on January 8, 2009

கவிதையின் மரணமும் வாழ்க்கையின் சாகசமும் -பிரம்மராஜன்


ஐரோப்பிய பொது வாழ்க்கையையும் அதன் கலாச்சார மதிப்பீடுகளையும் மாற்றியமைத்த மகத்தான சக்தி படைத்ததாய் அமைந்த சிம்பாலிசக் கவிதை இயக்கத்தின் பிதாமகராகக் கருதப்படுபவர் சார்ல்ஸ் பாதலெர். பாதலெரிடமிருந்துதான் பிரெஞ்சுக் கவிதை இறுதியாகத் தன் தேசீய எல்லைகளைக் கடந்து விரிந்து சென்றதென்றும் அது சகல இடங்களிலும் வாசகர்களைப் பெற்று நவீன காலத்தின் பிரத்யேகக் கவிதையாகத் தன்னை ஸ்தாபித்துக் கொண்டதென்றும் பால் வெலரி ஒரு முறை குறிப்பிட்டதை இங்கு நினைவு கூறலாம். பாதலெருடன் இணைத்தே சொல்லப்படும் பிற கவிஞர்களில் ரைம்போவும் (Rimbaud)மல்லார்மே (Mallarme)வும் சம முக்கியத்துவம் பெறுபவர்களாக இருக்கின்றனர். வெர்லெய்ன் என்ற மற்றொரு கவிஞர் இதே குழுவினைச் சேர்ந்தவராயிருந்த போதிலும் தவறான காரணங்களுக்காகப் பிரபலமானார். இருபதாம் நூற்றாண்டின் பல நவீன கவிஞர்களின் அரசியல் நிலைப்பாடுகளில் பாதலெரின் தாக்கத்தை ஊன்றிக் கவனிக்க முடிகிறது. அவர்கள் எடுத்த அரசியல் நிலைப்பாடுகள் அவர்களின் படைப்பாக்கத்தினை வேண்டிய அளவு பாதித்து மாற்றங்களை உருவாக்கின. இதற்கு இரண்டு முக்கிய இலக்கியவாதிகளை எடுத்துக் காட்டாகச் சொல்லலாம்.

1. எஸ்ரா பவுண்ட்.

பவுண்டின் பொருளாதாரக் கொள்கைகளும் அவரது நீண்ட பகுதிகள் கொண்ட கேண்ட்டோக்களும்.

2. பெர்டோல்ட் ப்ரெக்ட்.

ப்ரெக்டின் கம்யூனிசமும் அவரது செயல்படு கவிதைகளும் (functional poems).

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த இரு பெரும் சர்வதேசக் கவிஞர்களின் மூல மாதிரியாக அமைகிறார் பாதலெர். பாதலெரின் சில தேர்ந்தெடுத்த கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. (பிரமிள் என்கிற தர்மு அரூப் சிவராம் மற்றும் தேவ தேவன்). மிகவும் பிரசித்த பெற்றதும் தடை செய்யப் பட்டதுமான தீவினையின் மலர்கள்(Flowers of Evil) என்ற தலைப்பிலான கவிதைகளை எழுதியவர் சார்ல்ஸ் பாதெலர். கலை கலைக்காகவே என்ற இலக்கியக் கொள்கை வலுப்பெறுவதற்கு பெரிதும் காரணமாக இருந்தவர். இந்தக் கொள்கையின் மூலம் கவிதையின் சுயாட்சியை வலுப்படுத்தி அதற்கான ஸ்தானத்தை மீட்டுப் பெற்றார் பாதலெர். மிகச் சிறந்த கலை மற்றும் ஓவிய விமர்சகராக விளங்கியவர். ஆயினும் பாதலெர் மிகவும் கலைத்துவமான சூழ்நிலைகளில் வாழ்வதாகக் குற்றம் சாட்டினார் இளைய தலை முறையைச் சேர்ந்த ஆர்தர் ரைம்போ. பாதலெர் புதிய கவிதை வடிவங்களைக் கண்டுபிடிக்கத் தவறிவிட்டார் என்றும் கண்டனம் செய்தார் ரைம்போ. எனினும் ரைம்போ அளவுக்கு பாதலெரை வேறு எந்த சக கவிஞனும் போற்றிப் புகழ்ந்திருக்க முடியாது. பாதலெரைக் குறித்து ரைம்போ சொன்னது.

“the first of seers, king of poets, a true God”.

தீர்க்க தரிசியாகக் கவிஞன் செயல்பட வேண்டுமென்கிற ரொமாண்டிசிசக் கோருதலை சிம்பலிஸ்டான ரைம்போ முன் வைப்பது சற்று ஆச்சரியமாகக் கூடத் தோன்றலாம். கவிஞன் தீர்க்கதரிசியாக இருக்கிறான் என்பதை வலியுறுத்திக் கூறியவர் ஆங்கில ரொமாண்டிக் கவியான வில்லியம் வோட்ஸ்வொர்த். அவர் கவிஞனை “a seer into the life of things” என்று வரையறுத்தார். கவிஞனை தீர்க்கதரிசியாகக் காணும் தன்மை வேறெந்த சிம்பாலிசக் கவிஞனிடம் விடவும் ரைம்போவிடம் கூடுதலாகக் காணப்படுவதை பார்க்கலாம். இதை ரைம்போவின் வார்த்தைகளிலேயே (அவரது கவிதைகள் மற்றும் கடிதங்கள் வாயிலாக) நாம் அறிய முடியும்.

The Poet makes himself a seer by a long, gigantic and rational derangement of all the senses. All forms of love, suffering, and madness. He searches himself. He exhausts all poisons in himself and keeps only their quintessences.

(Letter to Paul Demny 15 May 1871)

Illuminations (1886)என்ற தொகுப்பில் அடங்கும் ரைம்போவின் கவிதைகளைப் படிக்கும் போதும் இந்தக் கடித வரிகளில் அவர் குறிப்பிட்டதை ஒருவர் உணர முடியும். பெரும்பாலான இலக்கிய விமர்சகர்களாலும் வரலாற்றாசிரியர்களாலும் குமரக் கவிஞன் (boy-poet) என்று குறிப்பிடப் பட்டார் ரைம்போ. இதற்குக் காரணம் இல்லாமலில்லை. பதினாறு வயதில் தொடங்கிய படைப்பு வாழ்க்கையை ரைம்போ பத்தொன்பது வயதில் முடித்துக் கொண்டார். அவரது குமரப் பருவத்தில் சாத்தியமாகிய கவிதைச் சாதனைகள் எவ்விதத்திலும் சாதாரணப்படுத்தி விட முடியாதவை. ஒரு சாதாரணக் கவிஞன் (முதல் தரமில்லாதவன்) இந்தக் கவிதைகளை அவனது முதுமையிலும் சாத்தியப்படுத்த வாய்ப்பில்லை. அக்கவிதைகள் அடர்த்திச் செறிவினாலும் அவற்றின் ஸர்ரியல்தன்மைகளாலும் இன்றும் மிக நவீனமாகவே விளங்குகின்றன. (இளம் சாப்பாட்டு ராமன் என்ற தலைப்பிலான ரைம்போவின் கவிதையை ஆத்மாநாம் மொழிபெயர்த்திருக்கிறார்.) பல அம்சங்களில், விதங்களில் சர்ரியலிஸ்டுகளின் முன்னோடியாகக் கருதப்படுகிறார் ரைம்போ. ரைம்போவைப் பற்றி நவீன செக்கஸ்லோவிய கவிஞரான டேட்யூஸ் ரோஸ்விக்ஸ் எழுதிய கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு பின் வருமாறு.

டேட்யூஸ் ரோஸ்விட்ஸ்

தீர்வுகள்

ஸ்திரமின்றி நாம் வாழ்கிறோம்

முகங்களின்

சொற்களின்

பெயர்களின்

மூடப்பட்ட ஒரு சுழல்வட்டப்பாதையில்

பிறர் நம்மை விவரிக்கின்றனர்

வகை பிரிக்கின்றனர்

நிலைப்படுத்துகின்றனர்

நமக்குத் தெரியும் நாம் அந்தப் பொய்யான வட்டத்தைக் கடக்க

உடைத்துக் கொண்டு

வெளியேற வேண்டுமென்று

ஆனால் நாம் இருக்கிறோம்

1880இல் ஏடன் நகரில்

ரைம்போ

பல் வேறு புத்தகங்களுக்கு ஆர்டர் கொடுத்தார்

The Perfect Metal worker

The Pocket Carpenter

இவற்றையும் சேர்த்து

அல்லது இது போன்றவற்றுக்கு

வழிகாட்டி நூல்கள்

செங்கல் சுடுவது பற்றியும் பீங்கான் உருக்குவது பற்றியும்

மெழுகுவர்த்தி செய்வது

சுரங்க வேலை

உலோகப் பற்ற வைப்பு

செங்கல் அறுப்பது

சாக்கடை அமைப்பது

ஆம் அவர் நிஜமாகவே

விடைபெற்றுக் கொண்டார்

ஆனால் அவரும் கூட

சேமித்தார்

கவிதையின் மரணத்திற்குப் பிறகு

வீடு திரும்புவதற்கு

ஒரு நிஜமான முழுக் குடும்பத்தைத்

தொடங்கத் திட்டமிட்டார்

ஒரு மகனை ஆளாக்குவதற்குத்

தன்னை அர்ப்பணித்துக் கொள்ள

(அவன் இயல்பாகவே வீரமான புதிய தலைமுறை

மனிதனாக இருப்பான்)

அவர்

ராணுவப் பணிக்குத் தன் அணுகுமுறையை நிலைநாட்டிக் கொள்ளத்

திட்டமிட்டார்

ஒரு திடமான ஸ்திதியில்

மேலும் இப்படியாக

மேலும் இப்படியாக

அது சிறப்பானதுதான்

ஆனால் எனக்குச் சொல்

ஒரு ஐம்பது அறுபது

எண்பது வயதான

ரைம்போ

செய்ய வேண்டியது

என்ன

என்ன புத்தகங்கள்

அவர் ஆர்டர் செய்ய வேண்டும்

எங்கே அவர் செல்ல வேண்டும்

எதை அவர் எரிக்க வேண்டும்

எதைக் கைவிட வேண்டும்

(Taduesz Rosewicz: Selected Poems/Solutions / [Penguin Modern European Poets] pp.115-116)

டேட்யூஸ் ரோஸ்விட்ஸின் கவிதை மிக இறுக்கமாகவும் மிகச் சிக்கனமாகவும் ரைம்போவின் முழு வாழ்க்கையையும் அவர் தொடராமல் போய்விட்ட கவிதைப் படைப்பாக்க இருப்பினையும் அடிப்படையாக வைத்து சில உறுத்தும் கேள்விகளை முன் வைக்கிறது. ஆனால் இவை பதில்களற்ற கேள்விகள். கவிதை இல்லாத உலகில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை ரைம்போவின் கவிதைக் காலத்திற்குப் பிறகான வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால் புரியும். கவிதை மற்றும் இலக்கியம் பற்றிய எந்தப் பின் வருத்தங்களும் இல்லாமல் வாழ்ந்தார் ரைம்போ என்று அவர் தன் வீட்டு அங்கத்தினர்களுக்கு எழுதிய கடிதங்களிலிருந்து தெரிய வருகிறது. இந்தக் கடிதங்கள் வாயிலாக நமக்குத் தெரிய வருகிற ரைம்போவிற்கும் கவிதை மூலமாக நமக்குத் தெரிய வருகிற ரைம்போவிற்கும்தான் எத்தனை வேறுபாடுகள்?

அவர் வாழ்வின் ஒரு கட்டத்தில் ‘‘இலட்சிய வாழ்க்கையின் சாகசக்காரன் நிஜ வாழ்க்கையின் சாகசக்காரனால் பதிலி செய்யப்பட்டான்” என்பது பிரத்யட்ச உண்மை. இளமையின் ஆரம்ப கட்டத்திலேயே ரைம்போவிடம் தெரிந்த நாடோடித்தன்மையின் காரணமாக அவரது சிறிய கிராமப் பகுதியிலிருந்து (Charlesville) பாரிஸ் நகருக்கு ரயிலில் வரும்போது ரயில் கட்டணம் சரிவர செலுத்தாததால் தண்டனைக்காக இரண்டு நாட்கள் காவல் நிலையத்திலிருக்க வேண்டி வந்தது. தொடக்கதிலிருந்தே அவர் ஒரு வக்கிரத்தன்மை மிக்க கலகக்கார மேதையாக இருந்தார் என்பதை வாழ்ந்த வாழ்வும் சரி, எழுதிய எழுத்துக்களும் சரி, நிரூபிக்கின்றன. கலகத் தன்மைதான் A Season in Hell நூலின் அடிப்படையாக இருக்கிறது. கவிதைகள் எழுதாத காரணத்தால் அவரது இருபதாம் வயதிலிருந்து முப்பத்தி ஏழு வயதில் அவர் மரணம் வரையிலான வாழ்க்கையைப் படம் பிடிக்க அவர் எழுதிய கடிதங்களையே அடிப்படை ஆவணங்களாகக் கொள்ள வேண்டி இருக்கிறது. டேட்யூஸ் ரோஸ்விட்சுமே கூட மேற்காட்டிய தீர்வுகள் கவிதைக்கு அடிப்படையாக ரைம்போவின் கடிதங்களைத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறார். இலக்கியப் புகழ் மற்றும் படைப்பு போதை ஆகியவை என்றுமே ரைம்போவின் சிந்தையை மயக்கி விடவில்லை என்று தெரிகிறது. எனினும் இலக்கியம் குறித்தும் அவர் கவிதை எழுதாமல் விட்டுவிட்டது குறித்தும் எவ்வித பின்வருத்தங்களும் அவருக்கு இருக்கவில்லை என்பதை அறிய முடிகிறது.

அவரது இலக்கிய அல்லது இலட்சிய வாழ்வு திடீரென்று ஒரு முடிவுக்கு வந்ததற்கு அவருக்கும் கவிஞர் வெர்லெய்னுக்கும் ஏற்பட்ட நட்பும் நட்பு முறிவுமே காரணமாக இருந்தன என்று சொல்லலாம். வெர்லெய்னுக்கும் ரைம்போவிற்குமிடையில் இருந்தது நட்பு என்று குறிப்பதை விட உறவு என்று குறிப்பிடுவதே சாலப் பொருந்தும். இந்த உறவு காரணமாக வெர்லெய்னின் மணவாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டது. ரைம்போவின் உறவு ஏற்பட்ட பிறகு வெர்லெய்ன் பெல்ஜியத்திலும் ஃபிரான்சிலும் நாடோடி வாழ்க்கை மேற்கொண்டார் சாக்கடைக்கும் மதுபான விடுதிக்கும் இடையிலாய் அலைக்கழிந்தபடி. ஏனென்றால் அலைக்கழிப்பு என்பதே ரைம்போவின் வாழ்க்கைக்கு ஆதார ஸ்ருதியாய் இருந்தது. அலைக்கழிக்கப்படாமல் ரைம்போ சொற்ப காலம் கூட இருக்கவில்லை. பெல்ஜியத்தில் இருந்த சமயத்தில் ரைம்போவின் பிரிவைத் தாங்கவியலாத வெர்லெய்ன் இரண்டு முறை ரைம்போவைக் கொல்ல முயன்றார். இரண்டாவது முறை ஒரு மதுபான விடுதியில் ரைம்போவைக் நோக்கி துப்பாக்கியால் சுட்ட போது இடது கையில் குண்டு பாய்ந்தது. ரைம்போவைக் கொலை செய்ய முயன்றதற்காக சில காலம் வெர்லெய்ன் சிறையிலிருந்தார். இந்தக் கசப்பான அனுபவங்கள்தான் ரைம்போவின் உரைநடை எழுத்தான A Season in Hell என்ற நூலை எழுதத் தூண்டின. இந்த உறவு முறிவிற்குப் பிறகும் கூட ரைம்போ வெர்லெய்னுக்கு இரண்டு கடிதங்கள் எழுதியிருக்கிறார் பயனின்றி. இலக்கற்ற அலைதல்களும் நோக்கமற்ற பயணங்களும் ரைம்போவை எகிப்து நோக்கிப் பயணிக்க வைத்தன. இதற்கு முன் ரைம்போ ராணுவத்தில் சேர்ந்த நிகழ்ச்சி நினைவு கூறப்பட வேண்டும்.

1876ஆம் ஆண்டின் வசந்த காலத்தின் போது ரைம்போ டச்சு ராணுவத்தில் சேர்ந்து பாட்டாவியா என்ற பிரதேசம் வரை பயணம் செய்யவும் செய்தார். ஆயினும் ராணுவத்திலிருந்து ஓடிப்போய் ஐரோப்பாவை நோக்கி நடந்தே திரும்பினார். வியன்னாவில் 1877ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் அவரது உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டு ஆஸ்திரியாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஸ்வீடன் தேசத்தையும் டென்மார்க்கையும் பயணம் செய்து கடந்த பிறகு எகிப்து செல்ல பயனின்றி முயற்சி செய்தார். 1878இல் சைப்ரஸ் தீவில் ஒரு கல் உடைக்கும் குவாரியில் சிறிது காலம் மேஸ்திரியாக பணியாற்றினார். இத்தகைய நிலைமைகளில் வேறு விதமான இலக்கியவாதியாக இருந்திருப்பின் கழிவிரக்கம் கொண்டிருக்கும் எண்ணற்ற சாத்தியங்கள் உள்ளன.

பிறகு சைப்ரசிலிருந்து 1880ஆம் ஆண்டு எகிப்துக்குப் பயணமானார். எகிப்திலிருந்து ஏடனுக்குச் சென்றார். ஏடன் நகரில் காஃபிக் கொட்டை கொள்முதல் செய்யும் ஒரு ஏற்றுமதிக் கம்பெனியில் பணி புரிந்தார். அந்தக் கம்பெனியின் கொள்முதலாளராக சோமாலியா நாட்டிற்குச் சென்று சோமாலியாவை ஆய்வு செய்தார். இந்த ஆய்வுப் பயணங்களைப் பற்றி The Geographic Society க்கு அறிக்கை எழுதி அனுப்பினார். ரைம்போவின் ஆய்வுப் பயணங்கள் மேன்மேலும் ஆபத்தானவையாக மாறின. 1887ஆம் ஆண்டு சோவா(Choa) நாட்டு அரசரான மெனலிக்கிற்கு (Menelik)பழைய துப்பாக்கிகளை ஐரோப்பாவிலிருந்து கொள் முதல் செய்து விற்றார். ஆனால் மெனிலிக் பணம் தராது ஏமாற்றியதால் பெரும் பண நஷ்டம் அடைந்தார் ரைம்போ. இது மட்டுமன்றி இந்த வியாபாரத்தில் அவரது கூட்டாளி இறந்து போனதும் அவரது நஷ்டத்திற்குக் காரணம் என்று ரைம்போ குறிப்பிட்டார்.

இந்தப் பயணக் காலங்களிலும் சரி, அரேபியப் பாலை வனங்களில் அவர் பணியாற்றிய காலத்திலும் சரி அவரது இலக்கிய மற்றும் கவிதை வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. பின் வருத்தம் கொள்ளவுமில்லை. இந்த காலகட்டத்தில் அவர் எந்த வித இலக்கியப் புத்தகங்களையும் படிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. தன் குடும்பத்தினர் வழியாக அவர் ஆர்டர் செய்த புத்தகங்கள் சகலமும் செய்முறைப் பயிற்சி விளக்க ஏடுகள். பெரும்பாலும் அவர் ஆர்டர் செய்த புத்தகங்கள் புதுவித அறிவியலையோ, தொழில் நுணுக்கத்தையோ கற்றுத் தரும் நூல்களாக இருந்தன. ஒரு சமயம் பாரிஸ் நகர தொலை பேசி புத்தகத்தை அனுப்பச் சொல்லி ஒரு கடிதத்தில் கேட்டிருக்கிறார். ஒரு முறை அவரது குடும்பத்தினர் அவருக்கு ஃபிரெஞ்சு அரசியல் பற்றி கடிதம் வாயிலாக ஏதோ செய்தியை எழுதியிருக்க ரைம்போ அதற்குப் பதில் எழுதுகிறார்.

“You write to me about political news. If you knew how indifferent I am all to that. For more than two years I haven’t touched a newspaper. All these debates are for the present without meaning for me. Like the Moslems, I know that what happens happens, and that is all.”

(6 May 1883)

1888லிருந்து 1891வரையில் மீண்டும் காஃபி ஏற்றுமதி செய்யும் வேறு ஒரு நிறுவனத்திற்காக ஹாராரில் வேலை பார்த்தார். மூட்டு வாதத்தினாலும் கால் பகுதியில் வீங்கிப் பெருத்த ரத்தக் குழாய்களினாலும் பெரும் அல்லல் பட்டார். அவர் பணியாற்றிய முஸ்லிம் நாடுகளில் நீக்ரோக்கள் வசித்த பிரதேசத்தில் மருத்துவர்கள் யாரும் இருக்கவில்லை. அரேபிய மொழி கற்றுக் கொள்வதற்கு முயன்று அதற்கான துணை நூலை வாங்கி அனுப்பும்படி தன் குடும்பத்தாரிடம் வேண்டினார். ஒரு கடித்தை அனுப்பிப் பதில் பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு மேலாகிறது என்று மற்றொரு கடிதத்தில் எழுதினார். தொடக்கத்தில் எகிப்தில் அவருக்குக் கிடைத்த குறை ஊதியங்களைப் பார்க்கையில் அவர் வாழ்வின் இறுதி வருடங்களில் சொல்லிக் கொள்ளும்படியான ஊதியம் கிடைத்ததால் சிறிது பணத்தை அவர் சேமிக்கவும் செய்தார். திருமணம் செய்து கொள்வது பற்றி அவரது தாயாருக்கு ஒரு தனிக்கடிதம் எழுதி இப்படி அலைக்கழிப்புக்கு ஆளாகும் ஒருவனைக் கல்யாணம் செய்து கொள்ள எந்தப் பெண்ணும் முன்வருவாளா என்றும் கேட்டார். ராணுவ சேவை பற்றியும் பிறிதொரு கடிதத்தில் குறிப்பு காணப்படுகிறது..

பன்னிரண்டிலிருந்து பதிமூன்றாயிரம் ஃபிரான்க்குகளை தங்கக் காசுகளாக அவரது இடுப்பு பெல்ட்டிலேயே வைத்து சுமந்து செல்ல வேண்டிய இக்கட்டான சூழ்நிலை. இந்த சேமிப்புப் பணமும் கூட அவருக்கு தொடர்ச்சியான இடர்களைத்தான் கொணர்கிறது என வருந்தி எழுதினார். (எட்டுக் கிலோ தங்க நாணயங்களை இடுப்பில் கட்டிச் சுமந்து வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது) யாரையும் நம்புவதற்கில்லை என்பது ஒரு புறம், மறுபுறம் உள்ளூர் கருவூலத்தில் வட்டி இல்லாமல் மாத்திரமே பணத்தை இட்டு வைக்க முடியும் என்கிற நிலை.

உலகிலே வேறு எந்தப் பகுதியையும் விட ஏடனில்தான் கோடை காலத்தின் கடுமை அதிகம். ஐரோப்பிய சீதோஷ்ணத்தில் வாழ்ந்து பழகிய ரைம்போ அந்தக் கோடையை எப்படி எதிர் கொண்டிருப்பார் என்று கற்பனை செய்து மாத்திரமே பார்க்க முடியும். ஒரு தீவிரமான கவிஞன் கோந்துப் பிசின், நெருப்புக் கோழியின் இறகுகள், தந்தம், பதனிடப்பட்ட தோல், கிராம்பு ஆகிய பொருள்களை ஒரு ஏற்றுமதி கம்பெனிக்காக வாங்குவதை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். உலகின் வேறு பிரதேசங்களில் ஐந்து வருடங்களில் ஏற்படும் முதுமையானது ஒரு வருடத்தில் ஒருவருக்கு வந்து விடும் அளவு மோசமான சீதோஷ்ணம் ஏடனில் நிலவியது. ஆயினும் ரைம்போ தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தார் அங்கே. ஒரு சமயம் அவரது வாழ்க்கை நிஜமாகவே ஒரு பீதிக்கனவாய் இருப்பதாக உணர்ந்து எழுதினார். மேலும் இவ்வளவு வெப்பத்தில் (செங்கடல் பகுதியில்) இருந்து பழகிய ஒருவர் ஐரோப்பாவிற்குத் திரும்பிச் சென்றால் ஐரோப்பாவின் கடுங்குளிர் காலத்தில் நுரையீரல் வியாதி வந்து விரைவில் இறந்து விடும் ஆபத்து இருக்கிறது. வணிகவியல் அகராதியையும் கடல் பிரயாண அகராதியையும் புனித குர்ஆனையும் 1885ஆம் ஆண்டு வாக்கில் ரைம்போ படித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

1887ஆம் ஆண்டு வாக்கில் கெய்ரோ நகருக்கு வந்து சேர்ந்த ரைம்போ மூட்டு வாதத்தினால் மிகுந்து சிரமத்திற்குள்ளாகிறார். இடது கால் அவருக்கு பெரும் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறது. நீக்ரோக்களின் மத்தியில் அவர்களின் அசுத்தமான உணவை சாப்பிட்டபடி, அவர்களின் விசுவாசமின்மையாலும் மடத்தனங்களாலும் உண்டாகும் அசௌகரியங்களைப் பொறுத்துக் கொண்டு ரைம்போ வாழ்ந்து கொண்டிருந்தார். அந்த நீக்ரோக்களின் நிலை மேம்பட ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தார். ஆனால் அந்த நீக்ரோக்கள் ரைம்போவை சுரண்டப் பார்த்ததாய் எழுதினார்.

“… how wretched my life is without a family, without intellectual occupation, lost in the midst of Negroes whose fate I would like to improve, but who try to exploit you and make it impossible for you to carry out your business swiftly.”

4 August 1988

ஆறு மாதங்கள் மழை பெய்து பாக்கி ஆறு மாதங்கள் எரிக்கும் கோடை காலமாய் இருக்கக் கூடிய பிரதேசங்களுக்கெல்லாம் எவ்வித வெளிப்படையான இலக்குமின்றி பயணித்துக் கொண்டிருந்தார். நாம் போக விரும்பாத இடங்களுக்குத்தான் செல்கிறோம், நாம் செய்ய விரும்பாத காரியங்களைத்தான் செய்கிறோம், நாம் விரும்பிய விதத்தை விட வித்தியாசமாக, எந்த வித நம்பிக்கையுமின்றி, ஆறுதலுமின்றி இறக்கிறோம் என்று குறிப்பிட்டார் ரைம்போ. அது அவரின் விதியைப் பொறுத்து 100 சதவீதம் நிஜமாக இருந்தது.

வலது காலில் தொடர்ந்து உபத்திரவம் கொடுத்தது மூட்டு வலி. அவருக்கு ஏடனிலோ, ஹாராரிலோ உரிய மருத்துவ உதவி கிடைக்கவில்லை. மேலும் அவரது வலது கால் முட்டியில் ஒரு புற்றுக் கட்டி உண்டாகி அதன் காரணமாய் சொல்லொனாத் துயரத்தையும் வலியையும் அனுபவித்தார். இறுதியில் ஃபிரான்சுக்குத் திரும்பி வந்து மார்செய்லில் உள்ள கன்செப்ஷன் மருத்துவ மனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சையின் போது அவரது வலது கால் வெட்டி எடுக்கப்பட வேண்டியதாயிற்று. இருப்பினும் சிறிது கால சிகிச்சைக்குப் பிறகு ரைம்போ நவம்பர் 10ஆம் தேதி 1891ஆம் ஆண்டு இறந்து போனார். அவரது முப்பத்தி ஏழாவது வயதில். சரியான உணவின்மையாலும் கால் நடையாகவும் குதிரை மீதும் தொடர்ந்து பாலை வனங்களில் பயணம் செய்ததாலும், சீதோஷ்ணத்திற்குத் தகுந்த உடைகள் இல்லாததாலும் அவரது உடல் நலம் இந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஃமீண்டும் ரோஸ்விட்ஸின் கவிதைக்குத் திரும்புவோம். கவிதையின் முதல் பகுதி ரைம்போ தேர்ந்தெடுத்து வாழ்ந்த அலைச்சல் மிகுந்த வாழ்க்கையைச் சிலாகித்துச் சொல்வதாகத் தெரிகிறது. நாம் வாளாவிருக்கிறோம் என்று கவிதை குற்றம் சாட்டுகிறது. ரோஸ்விட்ஸ் கவிதையின் மையப் பகுதி, கவிதையைப் புறக்கணித்து ரைம்போ வாழ்ந்த வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. மென்னுணர்வு மிகுந்த இலக்கியவாதி கவிஞனுக்கு இப்படித் தலை கீழாக்கப்பட்ட ஒரு வாழ்க்கை எண்ணிப் பார்க்கவே இயலாதது. கவிதையின் மரணத்திற்குப் பின்னான வாழ்க்கை என்று ரோஸ்விக்ஸ் இதைக் குறிப்பிடுகிறார். நிறைய விஷயங்கள் ரைம்போவின் வாழ்வில் தலைகீழான மாதிரி கவிதைக்கும் மீண்டு திரும்பியிருக்க மாட்டாரா என்ன அவரது ஐம்பது வயதில்?க்ஷ

***

25-03-2003 அன்று மரபு இலக்கிய அமைப்பும் அலயன்ஸ் ஃபிரான்சேஸூம் இணைந்து பாண்டிச்சேரியில் ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் வடிவம்.

Posted in introduced by brammarajan, translated Poems | Tagged: , , , , , | 7 Comments »

யாசுனாரி கவாபட்டாவின் தூங்கும் அழகிகளின் இல்லம்

Posted by brammarajan on January 7, 2009

kawabatanobel1யாசுனாரி கவாபட்டாவின் தூங்கும் அழகிகளின் இல்லம்

பிரம்மராஜன்

நவீன ஜப்பானிய இலக்கியத்தில் தனித்துவமான இடத்தைப் பெறும் யாசுனாரி கவாபட்டா (1899-1972). ‘‘ஒரு குடும்பமோ வீடோ இன்றி” வளர்ந்தவர். இளையதலைமுறை நாவலாசிரியரான யூகியோ மிஷீமா, கவாபட்டாவை ‘‘நித்திய பயணி” என்று குறிப்பிட்டார். டோக்கியோ இம்பீரியல் பல்கலைகழகத்தில் படித்து பட்டம் பெற்றவர் கவாபட்டா. அவரின் நாவல் உலகு மனிதனின் தனிமைப்படுத்தலை சில்லிடும் கவித்துவத்துடன் வெளிப்படுத்துகிறது. 1968 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கவாபட்டாவுக்கு வழங்கப்பட்டது. ஐந்து நாவல்களையும் இரண்டு சிறுகதைத் தொகுதிகளையும் எழுதியிருக்கி றார்.
யூகியோ மிஷீமா, கவாபட்டாவின் ‘‘தூங்கும் அழகிகளின் இல்லம்” நாவலை “esoteric masterpiece” என்று சொன்னதோடன்றி, அதை நீர்மூழ்கிக் கப்பலுக்கு ஒப்பிடவும் செய்தார். பொய்யான கூச்சத்தையும், அசூயையும் விலக்கிவிட்டு கவாபட்டா என்ற கலைஞன் எழுதிய மிகச்சிறந்த நாவல் இது. மிக நுண்ணிய விவரணைகள், மற்றும் கச்சிதத் தன்மை ஆகியவை இந்த நாவலை கவாபட்டாவின் பிற நாவல்களில் இருந்து வேறுப்பட்டுத் தெரியவைக்கின்றன. கழுத்தை நெரிக்கும் இறுக்கத்துடன் கதை சொல்லப்பட்டிருக்கிறது.
நூறு பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அலாதியான வாசிப்புத்தன்மை கொண்டது. தூங்கும் அழகிகளின் இல்லம் வயோதிகர்களுக்கான பிரத்யேகமான விடுதி. இதில் நிர்வாணமாய் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் அழகிய பெண்கள் இருப்பர். விடுதிக்கு வரும் வயோதிகர்கள், தூங்கும் பெண்களுடன் ஓர் இரவு தூங்கலாம். அவளை எழுப்புவதோ மோசமான ரசனையில் அவளை ஏதும் செய்ய முயல்வதோ கூடாது. சக்தி வாய்ந்த தூக்க மாத்திரையாலோ அல்லது போதைப் பொருளாலோ இந்தப் பெண்கள் உறங்க வைக்கப்படுகின்றனர். உறங்குவதற்கு முன் அவர்கள் என்னமாதிரி உடை அணிந்திருந்தனர் என்பதை அறிய முடியாது. எல்லோருமே கண்ணிப் பெண்கள். நீங்கள் யாருடன் உறங்குறீர்களோ அந்தப் பெண்ணை அடுத்து ஏதோ ஒரு நாளில் சந்திக்க நேர்ந்தால் அவளை அடையாளம் கண்டு பேசுவது குற்றம். அந்தப் பெண்களும் தாங்கள் எவருடன் உறங்கினர் என்பதை அறியமாட்டார்கள். உறங்க வைப்பதற்கு முன் எந்த வயோதிகனும் அவர்களைப் பார்த்ததில்லை- பார்க்கவும் கூடாது என்பது விடுதியின் சட்ட திட்டங்களில் ஒன்று. விடுதியில் எவரும் மது அருந்தக்கூடாது.
67வயதாகும் எகுச்சி இந்த விடுதியைப் பற்றி அவருடைய நண்பரான கிகோ மூலமாக அறிகிறார். விடுதிக்கு வருகை தரும் வேறு நபர்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யக் கூடாது. நாவலில் எகுச்சி, கிகோ, மற்றொரு ஃபுக்குரோ தவிர வேறு எவருக்கும் பெயர் தரப்படவில்லை. எகுச்சியின் மூன்று மகள்கள், அவரது மனைவி, எகுச்சியின் காதலிகள், தூங்கும் பெண்கள் எவருக்குமே பெயரில்லை.
சாவின் அருகாமையால் உந்தப்பட்டு உருவாகும் காமத்தின் பயங்கரம் எகுச்சியின் மூலம் பதிவு செய்யப்படுகிறது. பாலியல் தன்மைக்கும் மென்மையானதொரு கவித்துவத்தைத் தருகிறது கவாபட்டாவின் நடை. ஐந்து இரவுகளில் எகுச்சி சந்திக்கும் பெண்களை வைத்து எகுச்சியின் சிந்தனைப் பாதைகளை பதிவு செய்கிறது நாவல். ஃப்ளாஷ்பாக்கும் நனவோடையும் (stream of Conciousness) கலந்த உத்தி பயன்படுத்தப்படுகிறது. பாலியல் தன்மை(Sexuality)மற்றும் இறப்பு பற்றிய இரட்டைத் தியானங்கள் நாவலின் கருக்களம்.
முதன் முறையாக விடுதிக்கு வருகை தரும் எகுச்சியை நாற்பது வயது மிக்க யுவதி வழிநடத்துகிறாள். தேவைக்கு அதிகமான ஆர்வத்தில் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் அவள் பதில் அளிப்பதில்லை. விடுதியின் மாடி அறையில் வெல்வெட் திரைச்சீலைகளால் சூழப்பட்டு நிர்வாணமாய் இளம் பெண் ஒருத்தி உறங்கிக் கொண்டிருக்கிறாள். அறையை அடைந்து, உடைகளைக் களைந்து அந்தப் பெண்ணின் படுக்கையில் சாய்ந்து கொள்ளும் எகுச்சிக்கு விநோதமான உணர்வு தோன்றுகிறது. தாயின் மார்பிலிருந்து பாலருந்தும் குழந்தையின் மீது வீசும் வாசம் வருவதாக அவர் உணர்கிறார். போர்வையை விலக்கிப் பார்க்கும் போது உறங்கும் அந்தப் பெண் ஒரு குழந்தைக்குத் தாயாகி இருக்க முடியாது என்பதை நிச்சயப்படுத்திக் கொள்கிறார் எகுச்சி. அவரது மூன்றாவது மகள் குழந்தையாக இருந்தபோது அவளை தூக்கி வைத்திருந்த பின், உடையை மாற்றிக் கொள்ளாமல் ஒரு கெய்ஷாப் பெண்ணிடம் செல்கிறார். அவரிடம் பால் வாசனையை முகர்ந்த மலட்டு கெய்ஷா எகுச்சியை மறுத்து அனுப்பி விடுகி றாள். பிஸினஸ் எக்சிகியூட்டிவ்வின் மத்திய வயது மனைவியுடன் எகுச்சி நடனமாடிக் கொண்டிருக்கிறார். தன்னை முத்திமிடக்கூடிய நெருக்கமுள்ள ஆண்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிப் பார்த்தபின் அவள் உறங்குவது வழக்கம் என்று கூறுகிறாள். விரல்விட்டு எண்ணினால் மனம் அந்த ஆண்களை வடிவப் படிமமாகக் கொண்டு வராதா? வெறும் எண்ணிக்கையுடன் நின்று விடுமா என்று தனக்குள் கேட்டுக் கொள்கிறா.
அவருடன் உறங்கும் இந்த இளம் பெண் எகுச்சியின் நினைவுச் சங்கிலியில் அவர் சந்தித்த பிற பெண்களை பிணைத்து விடுகிறாள். விடுதிக்கு வெளியே கடல் அலைகள் மோதி உடைகின்றன. காற்று ஊளையிடுகிறது. கியோடோவில் தனது கல்லூரிப்படிப்பு முடிந்து வேலைக்குப் போகத் தொடங்கிய சமயம் இளம் பெண் ஒருத்தியுடன் ஓடிப் போக திட்டமிடு கிறார். ரயில் பாதை வழியாக தப்பித்துச் செல்லும் போது பல சின்னச் சின்ன குகைகளைக் கடந்து வெளியே வருகிறார்கள். ஒவ்வொரு முறை வெளியே வரும்போதும் அந்த மலைப் பகுதியில் ஒரு வானவில் தோன்றுகிறது. வானவில்களை ஒவ்வொரு முறையும் வியக்கிறாள் அந்தப் பெண். தன்னுடைய 67வருட வாழ்க்கையில் சந்தித்த பெண்களில், அந்தப் பெண்ணுடையதைப் போன்றதான மிகச்சுத்தமான உடல் உட்பாகங்களைப் பார்த்ததில்லை என்று இப்போது நினைவு கூர்கிறார். இவ்வளவு மென்மையான நினைவுகளை துவக்கி விட்ட உறங்கும் இந்தப் பெண்ணை நன்றியுடன் நோக்குகிறார். விடுதியில் தரப்படும் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு உறங்கப் போகிறார்.
இரண்டு வாரங்கள் கழித்து விடுதியில் இருந்து தொலைபேசியில் பேசுகிறாள் விடுதியின் மத்திய வயதுப் பெண். எகுச்சியை இரவு பதினொரு மணிக்கு மேல் வரும்படி சொல்கிறாள். அவருடைய முதல் வருகை எவ்விதமான அசிங்கமான நினைவுகளையும் உண்டாக்கவில்லை என்பதால் இரண்டாம் முறை போகத் தீர்மானிக்கிறார். உறங்கும் பெண்ணுடன் உறங்குவது மனிதத்தன்மையானதே அல்லவென்று வாதிடுகிறார். வயோதிகர்கள் இந்த விடுதியைத் தேடிவரக் காரணம் உறங்கும் இந்தப் பெண்கள் வயதே ஆகாத விடுதலையைத் தருவதுதான் என்று நினைக்கிறார் எகுச்சி. அவர்கள் உறங்கியபடி இருந்தாலும் வயோதிகர்களின் கீழ்த்தன்மையையும், இயலாமையையும் நினைவுறுத்தும் சின்னங்களாக இருக்கின்றனர். இருப்பினும் இப்பேர்பட்ட இளமை மற்றும் தூய்மையின் முன்னிலையில் வயோதிகர்கள் அடையும் அவமானத்தை அப்பெண்களால் அறிய முடியாது. வயோதிகர்களுக்கு இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. சென்ற வருடம் இதே நேரத்தில் வெள்ளை கெமிலியா கோவிலுக்கு தனது மூன்றாவது மகளுடன் சென்றார் எகுச்சி. அவளுக்குத் திருமணம் நடப்பதற்கு இன்னும் ஒரு மாதம் இருந்தது. மிக புத்திசாலியான அவரது மகள் பல இளைஞர்களுடன் பழகுவதை எகுச்சியோ எகுச்சியின் மனைவியோ கண்டிப்ப தில்லை. எதிர்பாராத விதமாக அவரது மகள் யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று நினைக்கிறா ளோ அந்த இளைஞனால் அவளது கன்னித்தன்மையை இழக்கி றாள். இந்நிகழ்ச்சியினால் பெரிதும் பாதிக்கப்படுகிற தனது மகளை ஒரு மாற்றத்திற்காய் வெள்ளை கெமிலியா மரக்கோயி லுக்கு அழைத்து வருகிறார். அந்தக் கோயில் நகரின் மிக இரைச்சலான, மோசமான பகுதியில் அமைந்திருக்கிறது. நானூறு வருடம் முதிர்ந்த அந்த மரம் ஐந்து நிறங்களில் பூக்கிறது. அந்தப் புராதன மரத்திற்குள் என்னவிதமான கதகதப்பு இருக்கக்கூடும் என்று வியக்கிறார்.தேனீக்களின் கூட்டமொன்று மரத்தண்டிற்குள் இருப்பது போல மென்மை யான கர்ஜனையும் மரத்திற்குள்ளிருந்து வருவதாக அவருக்குத் தோன்றுகிறது.
எட்டே நாட்களில் மூன்றாவது வருகை தருகிறார். இம்முறை அதிகப் ‘‘பயிற்சி இல்லாத” இருபது வயதிற்கும் குறைவான பெண் அறையில் உறங்கிக் கொண்டிருக்கிறாள். கோபே நகரில் ஒரு இரவு விடுதியில் நடனப் பெண் ஒருத்தியை அழைத்துக் கொண்டு ஹோட்டல் அறைக்கு வந்தது எகுச்சிக்கு ஞாபகம் வருகிறது. நிறைய குடித்து விட்டு அவர் உறங்கி விடுகிறார். குடித்தும் தூங்க முடியாத அவள் எகுச்சியின் பயன்படுத்திய அழுக்கான உள்ளாடைகளை சுத்தமாக மடித்து வைத்து விட்டு அதிகாலையில் விடைபெறுகிறாள். அவள் இரண்டு குழந்தைக்குத் தாய் என்பதை எகுச்சியால் நம்ப முடியவில்லை. கோபே நகருக்கு மீண்டும் வந்தால் தன்னைச் சந்திக்கும்படி வேண்டியவள் பிறகு சந்திக்க வேண்டாம் என்று கடிதம் எழுதி விடுகிறாள். எகுச்சியிடம் அவள் பழகும் போது குற்ற உணர்வோ மன உறுத்தலோ இன்றி நடந்து கொண்டது ஆச்சரியத்தைத் தருகிறது. தன்னருகில் உறங்கும் தன் மகள் வயதே இருக்கும் இந்தப் பெண்ணைப் பார்க்கையில் ஆவள் புத்தனின் ஒரு அவதாரமாக இருக்கலாம் என்று நினைக்கிறார். ‘‘இந்தப் பெண்களுடன் உறங்குவது ஒரு ரகசிய புத்தனுடன் உறங்குவது போன்றது” என்று நண்பன் கிகோ சொல்லி இருக்கிறான்.
இதற்கிடையில் விடுதியில் தங்கிய ஃபுக்குரா என்ற ஆள் இறந்து போன செய்தியை அறிகிறார் எகுச்சி. எனினும் ஐந்தாம் முறையாக விடுதிக்கு வருகை தருகிறார். விடுதியில் ஒரு ஆள் இறந்ததால் ஏற்பட்ட பயத்தின் காரணமாக தனியாக உறங்க மறுக்கின்றனர் பெண்கள். எனவே எகுச்சி இன்று இரண்டு பெண்களுக்கிடையில் உறங்குகிறார். கறுப்புப் பெண் சற்று வயது முதிர்ந்தவள், சிவப்புப் பெண் இளையவள். அதிகாலை நான்கு மணிக்கு விழிப்புக் கொள்ளும் எகுச்சி, கறுப்புப் பெண் இறந்து போயிருப்பதை அறிகிறார். அவளுக்குத் தரப்பட்ட தூக்க மாத்திரையின் அளவு அதிகமாகப் போயிருக்கலாம். விடுதியின் மத்திய வயதுப் பெண் இறந்துப் போனவளை அறை யிலிருந்து அகற்றுகிறாள். இன்னொரு பெண்தான் இருக்கி றாளே அவளுடன் தொடர்ந்து உறங்கலாமே என்று மத்திய வயதுப் பெண் எகுச்சியிடம் சொல்கிறாள். எகுச்சிக்கு தூங்கு வதற்கு தூக்கமாத்திரை தரப்படுகிறது. கொஞ்ச நேரத்தில் கீழே ஒரு கார் புறப்பட்டுச் செல்கிறது.
இம்மாதிரியான கதைக் கருவை விரசத்தின் சாயல் சிறிதும் விழுந்து விடாமல் எழுத கவாபட்டா போன்ற பெரும் கலை ஞர்களால் தான் முடியும். முதற்பதிப்பு 1969ஆம் ஆண்டு வெளி வந்தது. Edward Seidensticker ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

282

Posted in introduced by brammarajan | Comments Off

தமிழ்ச் சிற்றேடுகளும் ஏ4 அளவு ஏடுகளும்

Posted by brammarajan on January 6, 2009

Perfect targetதமிழ்ச் சிற்றேடுகளும் ஏ4 அளவு ஏடுகளும்

பிரம்மராஜன்

தமிழ்ச் சிற்றேடுகள் என்று குறிப்பிடும் போது இனி அவற்றை ஏ4 அளவு மத்திய ஏடுகளிலிருந்து பிரித்தறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ”மீடியம் ஈஸ் த மெஸேஜ்’” என்று என்னதான் மக்லூஹன் சொன்னாலும் அது தமிழ்ச்சூழலில் இன்று விஷய கனம் என்பதற்கு பதிலாக மேலோட்டமான தளுக்கு என்றே அறியப்பட்டுள்ளது. குறிப்பாக எழுதுவதற்கு ஏதுமில்லாதபோது சில ”பிளாக்’”(வலைப்பூ) எழுத்தாளர்கள் செய்வது போல ”மொக்கை”ப் பதிவுகளைச் செய்து அவைதான் இன்றைக்கு இன்றியமையாத எழுத்து என்று கதைகட்டிவிட சில ஏ4 ஏடுகள் முயல்கின்றன. ஆனால் இந்த வணிக உத்தியை ஊடுருவி பார்க்கத் தெரியாத அந்தகன் அல்ல நவீன வாசகன். உற்பத்திசாதனங்களின் உபரிநன்மைகளால் அவை பார்வைக்கு மட்டுமே பளிச்சென்று தெரிகின்றன.

ஏ4 அளவு ஏடுகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதற்குக் காரணம் அச்சகங்களினால் ”சும்மாயிருக்க” முடிவதில்லை என்பது மட்டுமல்ல. எதை வேண்டுமானலும் எழுத வைத்து அதற்கு இலக்கிய சாயம் பூசிவிட முடியும் என்கிற துணிச்சலும் காரணம். மீண்டும் உபரி மதிப்பு குறித்து ஆழ்ந்து அலச வேண்டிய அவசியம் வந்துவிட்டது போல் தெரிகிறது. ”வெட்டி ஒட்டுதல’” மற்றும் வையக வலைத்தளம் அனைவருக்கும் கிடைக்கும்படியாகியிருக்கும் நிலையுடன் இதை வைத்து ஆய்வோமானால் இன்றைய இலக்கிய வெறுமைக்கு நிறைய பதில்கள் கிடைக்கும். ”சும்மா”வுக்காக விசைப்பலகையை நோக அடிப்பவர்கள் பீதிதரும் அளவுக்கு அதிகரித்திருக்கின்றனர். 1990களின் தொடக்கத்தில் ஐபிஎம் சாஃப்வேர் நிறுவனம் “பொயட்’” என்றொரு கையடக்கமான கவிதை எழுதித் தரும் மென்பொருளைத் தந்தது. அதில் நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவுதான். கவிதை யாருக்கு? ஆண்ஞிபெண் காதல், பிரிவு, போன்ற ஏதாவது ஒரு கவிதைக் கருவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பெண் எங்கே வாழ்கிறாள்-மலையகமா கடற்கரைப் பகுதியா? இந்தத் தகவல்களைக் கொடுத்துவிட்டால் போதும் ஒரு நிமிடத்தில் ஒரு கவிதையை ”பொயட்’” நமக்குத் தயாரித்துக் கொடுத்துவிடும். இன்றைக்கு எழுதப்படும் பல கவிதைகள் ”பொயட்” மென்பொருளால் எழுதிவிட முடியும் அளவான தரத்தை மனதில் வைத்து எழுதப்படுவதாகத் தெரிகின்றன. எனவேதான் இன்றைக்கான கவிதைகள் ஏ4 அளவு இதழ்களின் நிரந்தர ”ஃபில்லர்’”களாகப் பங்காற்றுகின்றன. கவிஞன் என்ற உபரிப் பெயரடையை(அ)விருப்புமிக்க முள்கிரீடத்தை ஏற்க விரும்பும் கவிதை உற்பத்தியாளனும் ”மொக்கை’”அரட்டை இதழைத் தாங்கி நிற்கும் தூணாக மாறிவிடுகிறான்.

சரி. இவ்வளவு அபரிமிதமாக உரைநடை(அதிலும் தரப்படுத்தப்பட்டது-அந்த காலத்து சிற்றிதழ்(குறிப்பாக ”பிரக்ஞை’”யில் எழுதப்பட்டது போன்ற உரைநடையன்று) எழுதப்பட்டாலும் நல்ல சிறுகதைகள் கிடைப்பது அரிதாக இருக்கும் காரணம் என்ன? ”நல்ல” என்பதற்கான வரையறை கிளாசிக் என்றே நம்புவோம். நல்ல என்பதைக் கூட விட்டுவிடுவோம். சிறுகதைக்கான குறைந்தபட்ச அலகுகள் கூட வளமான மொழிக்கு தேவையில்லாமல் போய்விடுகிறதா? மயக்கமான சொல்லாடல்களும் ஜடத்துவமான கூறுமுறைகளும்தாம் இன்று சிறுகதைகளின் பண்புகளாகி இருக்கின்றன. ”சீனியர் ரைட்டர்ஸ்” என்று பிதற்றும் எழுத்தாளர்களுக்கு சிறுகதையின் விஷய கனம் புரியாமல் தடுமாறும் போது இளம் படைப்பாளிகள் நிலை பரிதாபத்திற்குரியது. அவர்களை ஏ4 அளவு இதழ்கள் காப்பாற்றாது.காரணம் இல்லாமல் இல்லை. வெறும் சிறுகதைகள் எழுதினால் பிரபலத்தின் சிகரத்தை அடைய முடியுமா?  விசைப்பலகையை சிரமப்படுத்தி, உங்களுக்கு வந்த ”சேட்’” அரட்டைகளை தமிழ்ப்படுத்தி, “வெட்டி ஒட்டி’” தலையணை சைசுக்கு செய்யப்படும் நாவலுக்குத்தானே விருதுகள் எல்லாம் தருகிறார்கள். எதைக் குறி வைத்து எழுதுவான் இன்றைய உரைநடைக்காரன்? உரைநடை எழுதுவதற்கும் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படுகின்றன என்பதைக் கேட்டு உச்சி குளிர்ந்தது. படைப்பூக்கத்திற்கான பூடக வழிகளை கிறிஸ்டியன் சயன்ஸ் மானிட்டர்-க்கு எழுதும் உரைநடையை வைத்து கண்டுபிடிக்க இயலாது.

Posted in Uncategorized | 2 Comments »

சேஸரே பவேசேவின் கவிதைகள்/The Poetry of Cesare Pavese

Posted by brammarajan on January 6, 2009

pavese-llarge

சேஸரே பவேசேவின் கவிதைகள்

பிரம்மராஜன்

அமெரிக்க இலக்கியத்தின் மிகச்சிறந்த இதாலிய மொழிபெயர்ப்பாளராகவும், நவீன இதாலிய நாவலாசிரியர்களில் குறிப்பிடத் தகுந்தவராகவுமிருந்த சேஸரே பவேசே அடிப்படையில் ஒரு கவிஞர். அதிலும் இடதுசாரிக் கவிஞர். போருக்குப் பின்னான இதாலிய யதார்த்தத்தின் பிரதானமான தோற்றுவாய்களாக அவரது புனைகதைகள் கருதப்படுகின்றன. (The Moon and The Bonfire, The Devil in The Hills) சேஸரே பவேசேவைப் பொருத்தவரை யதார்த்தம் என்பது மீட்டுக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புராணிகமாக இருந்தது. அவரைப் பொருத்தவரை ஞாபகம் கொள்வதென்பதே ஒரு வஸ்துவை முதன்முதலாகப் பார்ப்பதைப் போன்றதென்றார். அதனால்தான் அவரது படைப்புகளில் திரும்பத் திரும்ப இடம் பெறும் படிமங்களான மலைகளும், நாட்டுப்புறச் சாலைகளும், வெறிச் சோடிய நகரத்து ரோடுகளும் யதார்த்தமல்லாத ஒரு இலக்கியப் பயன்பாட்டையே பெறுவதாகின்றன.

இதாலியின் பய்ட்மாண்ட் பகுதியில் பிறந்த சேஸரே பவேசேவின் தந்தை ஒரு நீதித்துறை அதிகாரி. ட்யூரின் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சேஸரே பவேசே படித்தது ஆங்கிலம் மற்றும் அமெரிக்க இலக்கியம். வால்ட் விட்மேன் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார். மாணவப் பருவத்திலிருந்தே தற்கொலை எண்ணங்கள் அவரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தன. இதன் காரணமாக அவரால் அவர் சந்தித்த பெண்களுடன் மனநிறைவுள்ள, அர்த்தமுள்ள உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவியலாது போயிற்று. அமெரிக்காவின் கொலம்பியப் பல்கலைக் கழகத்தில் படிப்பு ஊக்கத்தொகை பெற முயன்றது வீணாய்ப் போயிற்று. பிறகு பகுதி நேர ஆசிரியர் வேலை பார்க்கத் தொடங்கி அவர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்த பெண்ணைக் கண்டுபிடித்து விருப்பத்தையும் சொன்னார்–திரும்பத் திரும்ப. ஒரு இலக்கியப் பத்திரிகையைத் தொடங்கி நடத்தி, பின் என்னவ்டி (Ennaudi) என்னும் பிரபல வெளியீட்டு நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றினார். பாஸிச எதிர்ப்புச் செயல்பாடுகளுக்காக 1935ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். கெலாப்ரியா என்னுமிடத்தில் ஓராண்டு சிறை வைக்கப்பட்டார். சேஸரே பவேசே தனது பெரும்பான்மையான கவிதைகளையும் டயரியையும் இந்த காலகட்டத்தில்தான் எழுதினார்.

அமெரிக்க நடிகை  Constance Dowlingவுடனான உறவுச் சிக்கல்களின் விளைவாக ட்யூரின் ஹோட்டல் ஒன்றில் அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்னால் தான் திருமணம் செய்து கொள்ள விரும்பிய பெண்ணுக்கு தொலை பேசியில் பேசியது ஒரு நாடகத்தை அவர் நிறைவூட்டுவது போல நிஜவாழ்க்கையில் அமைந்து போயிற்று.

கவிதை மற்றும் புனைகதை ஆகிய இரு துறைகளிலும் இயங்கிய பலருக்கு நிகழ்ந்தது போல சேஸரே பவேசேவுக்கும் அவரின் கவிதை சார்ந்த முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அல்லது அவரது புனைகதைகள் அவரது கவிதைகளுக்கான புகழை அபகரித்துக் கொண்டன எனலாம். குறிப்பாக The Moon And The Bonfires, Among Women Only  ஆகிய இரு நாவல்களும் நவீன ஐரோப்பிய நாவல்களில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. அவர் 1935ஆம் ஆண்டிலிருந்து  அவர் தற்கொலை செய்து கொண்ட 1950ஆம் ஆண்டு வரையில்  எழுதிய டயரி இந்த நாவல்கள் அளவுக்கு பிரபலமடைந்தது.

ஆனால் சேஸரே பவேசேவின் ஆதி மற்றும் இறுதி படைப்புத் தூண்டல்கள் யாவும் கவிதை சார்ந்தவையே. இது மட்டுமின்றி கவிதைக்கலை பற்றி இரு முக்கிய கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதில்  The Poet’s Craftஎன்ற கட்டுரையில் வால்ட் விட்மனின் Leaves Of Grass பற்றியும் பாதலெரின் (Baudelaire) Flowers of Evil பற்றியும் கொண்ட ஆரம்ப காலப் பொறாமைகளை மனம் விட்டு ஒப்புக் கொள்கிறார். ”ஒவ்வொரு கவிதைத் தூண்டுதலும், அது எவ்வளவு உன்னதமானதாய் இருந்த போதிலும், அறம் சார்ந்த கோரிக்கைகளை எதிர் கொள்ளும் முயற்சியே” என்று குறிப்பிட்டார். அவரது கவிதை மொழி ஒரு தெளிவான, தனித்துத் தெரிகிற வலுவான மொழி. அவர் எந்த அம்சத்திற்காக வால்ட் விட்மனைச் சிறப்பித்து எழுதினாரோ அதே அம்சம் அவர் கவிதைகளினூடாய் வெளிப்பாடு காண்கிறது இரட்டை தீர்க்கதரிசன நோக்கு. ஐரோப்பிய மறைபொருள்தன்மையான தாக்கங்களிலிருந்து தப்பிக்கவே அவர் அமெரிக்க நேச்சுரலிஸ இயக்கத்து படைப்பாளிகளுடன் தன்னைப் பிணைத்துப் பார்த்துக் கொண்டார். இயற்கையை அனுபவம் கொள்வதன் மூலமாகக் கிடைக்கும் ஒரு ஆன்மீக  உணர்வு அவருக்கு உவப்பாக இருந்தது. புராணிகமே அவரைப் பொருத்தவரை சாதாரண ஜட உலகத்திலிருந்துதான் உருவாகிறதென்ற கருத்துக் கொண்டிருந்தார் சேஸரே பவேசே. இந்த அனுபவத்தில் தனக்கு சோதனையாளர்கள் மற்றும் துணிகரச்செயல்காரர்களுடன் பகிர்ந்து கொள்ள ஏதுமில்லை என்றறிவித்தார். வியத்தலுணர்வு பெற்று ஒரு அற்புத அனுபவ கணத்தை அடைய ஒரு வஸ்துவை பயமின்றி வெறித்துப் பார்த்தலே போதுமானது என்றார்

“I have nothing in common with experimentalists, adventurers, with those who travel in strange regions. The surest, and the quickest way for us to arouse the sense of wonder is to stare, unafraid, at a single object. Suddenly-miraculously-it will look like something we have never seen before”.

இந்த மேற்கோளில் தெரிவது என்னவென்றால் சேஸரே பவேசே புனைவை விட நிஜத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார் என்பதே. ஆனால் அவரது நேச்சுரலிசம் தொடக்க காலத்தியது என்றால் அவரது முதிர்ச்சிக் கட்டம் ஸிம்பலிஸம் என்பதைத் தெளிவாக்கிவிட வேண்டிய அவசியமுள்ளது. அவரது இரட்டை தீர்க்கதரிசனப் பார்வைக்கும் இந்த நேச்சுரலிஸ-ஸிம்பலிஸ இருமைக்கும் தொடர்பிருப்பதை  உணர முடியும். பெரும்பான்மைக் கவிதைகள் சேஸரே பவேசேவின் பிள்ளைப்பிராய நினைவுகளை அசைபோடுகின்றன. முதிர்ச்சிக் காலத்தவை ஒரு மனிதனின் முதிர்ச்சி பற்றிய கேள்விகளை உள்ளடக்கியவை. பெரும்பாலும் எல்லாக் கவிதைகளும்  கிராமப் புற நேச்சுரலிஸ பின்னணியில் விவரிக் கப்பட்டிருக்கின்றன.

காலத்தின் தொடர்ச்சி பற்றிய கூர்ந்த பிரக்ஞையும் அவர் கவிதைகளில் காணப்படுகின்றன. ”காலத்தின் வெளியிலாகப் பேசுவது” பற்றிய குறிப்பொன்று அவரது டயரியில் உள்ளது.

பெண்கள் குறித்தான சேஸரே பவேசேவின் அணுகு முறை பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்திய ஒன்று. ஒரு குறுகிய மனப்பான்மை கொண்ட பெண்ணியவாதிக்கு அவரது அணுகல் உவப்பானதாய் இருக்க முடியாது. எது எப்படி இருந்தாலும் கூட அவரது நாவலான (Among Women Only) 1931ஆம் ஆண்டு எழுதப்பட்ட கவிதையான (Fallen Women)யும் பெண்ணிய பலம் மற்றும் பலவீனங்களைப் பற்றிய கூர்மையான மதிப்பீடுகள் கொண்ட படைப்புகள். விலைமாதர்களைப் பற்றி அவர் எழுதிய கவிதைகள் (Deola’s Thinking, Deola’s Return) சுவைக்கேடு மிக்கவை என சில விமர்சகர்களால் அன்றைய காலகட்டத்தில் கருதப்பட்டவை. சேஸரே பவேசேவின் கவிதையில் இடம் பெறும் நபர்களும் சரி புனைகதை மாந்தர்களும் சரி தனிமையாகவே இருக்கின்றனர்.

அசிரத்தை

இந்த வெறுப்பு மலர்ந்திருக்கிறது வாழும் காதலைப் போல,

துக்கித்துக் கொண்டு, தள் களைப்பை கவனித்துபடி.

அது ஒரு முகத்தைத் தேடுகிறது, அது தசையைத் தேடுகிறது, ஏதோ அதுவே காதல் போல.

இந்த உலகியல் தசை மற்றும் பேசிய அந்தக் குரல்கள்

மரித்துவிட்டன, சகலமும் அஞ்சி நடுங்கி ஒதுங்கியாயிற்று,

சகல வாழ்வும் ஒரு குரலின் மீது தொங்கிக்கொண்டிருக்கிறது.

நாட்கள் செல்கின்றன ஒருவித சோகப் பெருமகிழ்வில்

அந்த துக்கக் குரலின் வருடலில் அது திரும்புகிறது

மற்றும் நமது முகங்களின் குருதியை வடித்தபடி.

இனிமை இல்லாமல் இல்லை

அந்தக் குரல் மனதிடம் வருகிறது களைத்துப் போய்

நடுக்கத்துடன். ஒரு முறை எனக்காய் நடுங்கிற்றது.

ஆனால் தசை நடுங்குவதில்லை. காதல் மாத்திரமே

அதை ஒளிப்படுத்த முடியும்,

இந்த வெறுப்பு அதைத் தேடிப்பிடிக்கிறது.

உலகின் உடமை அனைத்தும், தசைகள் யாவும், குரல்கள் யாவும்

அவ்வுடல் மற்றும் கண்களின் எரிக்கும் அணைப்புக்கு இணையாக முடியாது. அந்தக் கசந்த பெருமகிழ்வில்

அது தன்னையே மாய்க்கிறது,

இவ்வெறுப்பு இன்னும் கூட கண்டுபிடிக்கிறது

ஒவ்வொரு நாளும் ஒரு பார்வையை,

ஒரு உடைந்த வார்த்தையை.

பிறகு அவற்றைப் பற்றிக் கொள்கிறது,

பசியுடன், காதலைப் போல.

இரவு சந்தோஷங்கள்

நாங்களும் கூட இரவினை முகர்வதற்கு நிற்கிறோம்

காற்று மிகவும் மோசமாக இருக்கையில். சாலைகள்

காற்றால் ஜில்லிட்டிருக்க, ஒவ்வொரு வாசனையும் உலர்ந்து விட்டது.

எங்கள் நாசிகள் மினுங்கும் வெளிச்சத்திற்கு உயர்த்தப் பட்டுள்ளன.

இருளில் காத்திருக்கும் ஒரு வீடு நம் அனைவருக்கும் உண்டு திரும்புவதற்கு. இருட்டில் ஒரு பெண் நமக்காகக் காத்திருக்கிறாள் படுத்துறங்கியபடி வாசனைகளால் அறை வெதுவெதுக்கிறது.

உறங்கியபடி ஸ்வாசித்துக்கொண்டிருக்கும் பெண் காற்றினைப் பற்றி ஏதும் அறிந்திலாள், அவள் உடலின் கதகதப்பு நமக்குள் முணுமுணுக்கும் குருதியை ஒத்ததே.

காற்று நம்மைக் கழுவுகிறது, இருளில் திறந்தபடி கிடக்கும் சாலைகளின் ஆழத்திலிருந்து வருகிறது அது.

மினுங்கும் வெளிச்சங்கள் மற்றும்

நமது விடைத்த நாசிகள் ஒன்றையொன்று

நேராக எதிர்கொள்கின்றன.

ஒவ்வொரு வாசனையும் ஒரு ஞாபகம்.

அப்பால் இருளிலிருந்து காற்று நகரில் கிடக்கும் ஏதொன்றையும் இடம் மாற்றுகிறது.

கீழே வயல்கள் மற்றும் மலைகள்

அங்கே சூரியனால் எரிக்கப்பட்ட புல் மாத்திரமே உண்டு.

மற்றும் ஓதத்தால் கறுத்துப் போன மண்.

நம் ஞாபகம் ஒரு கசந்த சுவை, பிளக்கப்பட்ட பூமியால் குளிர்காலத்தில் வெளியேற்றப்படும் ஒரு சிறு இனிமை

கீழிருந்து வரும் ஒரு மூச்சு.

எல்லா வாசனையும் உலர்ந்து விட்டது இருளில்

மற்றும் நகரினுள் காற்று மாத்திரமே நம்மை அடைய முடியும்.

இன்றிரவு நாம் திரும்பிச் செல்வோம்  உறங்கும் அந்தப் பெண்ணிடம்

சில்லிடும் விரல்களால் அவளின் உடலை ஆராய்ந்தபடி,

மேலும் வெப்பம் நமது குருதியை உலுக்கும்.

பூமியின் வெப்பம்

ஓதத்தால் கறுப்பாக்கப்பட்டு வாழ்வின் ஒரு மூச்சு.

அவளும் கூட சூரியனால் வெதுவெதுப்பாக்கப்பட்டிருக்கிறாள்

மேலும் இப்போது அவளது நிர்வாணத்தில்

அவளின் உச்ச இனிமை வாழ்வு

பகலில் அது மறைந்து விடுகிறது,

அது மண் ருசியுடன் இருக்கிறது.

சந்திப்பு

அந்தக் கடினமான மலைகள் என் உடலை உருவாக்கின

அவை அதை பலவிதமான ஞாபகங்களினால் உலுக்குகின்றன, தந்தன எனக்கு

அந்தப் பெண்ணின் அற்புதத்தினை நான் சிருஷ்டிக்கிறேன் எனபதை அவள்

அறியாள், ஆனால் நான் அவளைப் புரிந்து கொள்ளவில்லை.

ஒரு நாள் மாலை அவளை நான் சந்தித்தேன்.

இரு அர்த்தம் கொண்ட நட்ஷத்திரங்களின் கீழே

அவள் ஒரு லேசான வடிவம்,

கோடையின் பனிப்படலத்தில்.

சுற்றிலுமாக இந்த மலைகளின் முணுமுணுப்பு,

நிழலை விட ஆழமாக,

ஒரே நேரத்தில் அந்த மலைகளிலிருந்து வருவது போல ஒரு ஓசை,

ஒரு குரல் ஒரே சமயம் தெளிவாகவும்  கடூரமாகவும்,

இழந்து போன காலங்களிலிருந்து வந்த ஒரு குரல்.

சில சமயங்களில் நான் காண்கிறேன் அவளை,

மேலும் அவள் என் முன்னே வாழ்கிறாள்

தெள்ளத் தெளிவாக, மாறுதலேயில்லாது,

ஒரு ஞாபகத்தைப் போல.

அவளை எப்போதும் என்னால் மறக்க முடிந்ததில்லை. அவளின் நிஜம்

எப்பொழுதுமே என்னிடமிருந்து நழுவுகிறது.

என்னை வெகு தொலைவிற்குக் கொண்டு செல்கிறது.

அவள் அழகானவளா என்று எனக்குத் தெரியாது. பெண்களுக்கிடையில் அவள் இளையவள்.

அவள் பற்றிய சிந்தனை ஒரு தூரத்து ஞாபகத்தினை நினைவு கூர்கிறது

மலைகளுக்கு இடையே வாழப்பட்ட குழந்தைப்பிராயம்,

அவள் அவ்வளவு இளையவள். அவள் விடியலைப் போலிருக்கிறாள்.

தொலைவான காலைகளின் எல்லா தூரத்து வானங்களும்

அவள் கண்களிலிருந்து எனக்கு அழைப்பு விடுக்கின்றன.

அந்தக் கண்கள் ஒரு தெளிவு கூடிய ஒளியை வெளிப்படுத்துகின்றன

இந்த மலைகளின் மீது விடியல் வெளிப்படுத்தியதை விட.

எனக்கு அத்யந்தமான இந்த விஷயங்களின் ஆழங்களிலிருந்து அவளை உருவாக்கினேன்,

நான் புரிந்து கொள்ளாத ஏதோ ஒன்றாகவே அவள் இருக்கிறாள்.

டி.க்கான இரு கவிதைகள்

ஏரி மருங்கின் மரங்கள் கண்டன

உன்னை ஒரு காலைப் போதில்

கூழாங்கற்கள் ஆடுகள் வியர்வை

எல்லாம் காலத்தின் வெளியில்,

ஏரியின் நீரைப் போல்.

நாட்களின் துக்கமும் குமுறலும்

ஏரியை அசங்குவதில்லை.

காலைப் போதுகள் கடந்து விடும்

துயரம் மறைந்து விடும்,

பிற கற்கள் வியர்வை

உன் குருதியுள் கடிக்கின்றன-

இவை நீடிக்கா மாட்டா.

நீ மீண்டும் எதையாவது கண்டுபிடிப்பாய்,

காலையொன்று வரும்

அப்போது குமுறலுக்கப்பால்

நீ தன்னந்தனியாய் ஏரி மீதிருப்பாய்

நீ காதலும் தான்

பிறரைப் போலவே குருதியாலும் மண்ணாலும்

ஆகியிருக்கிறாய்

வீட்டின் வாசலைக் கடக்காத யாரோ ஒருவரைப் போல

நீ நடக்கிறாய்

நீ காத்திருப்பது போல பார்க்கிறாய்

ஆனால் பார்ப்பதில்லை

துக்கித்து பேச்சற்றிருக்கும் பூமிதான் நீ

நொதித்தல் சோர்வு நீ அறிவாய்

உன்னிடம் சொற்களுண்டு–நீ நடக்கிறாய்

மற்றும் காத்திருக்கிறாய்.

காதல்தான் உன் குருதி–வேறெதுவுமல்ல.

வேசிப் பெண்கள்

அவர்களை அப்படி நடத்துவது சரியே.

நிச்சயமாக அவர்களுக்காகப் பரிதாபப்பட்டு

பின் படுக்கைக்கு அழைத்துச் செல்வதை விட.

”அது நம் வாழ்வனைத்திலும் மிக வலுவான தேவை”-

ஆனால் சொல்லுங்கள் பதிலாய் ”நாம் இதில் தீர்த்தொதுக்கப்பட்டுள்ளோம்

ஆயினும் தொழிலில் அந்தப் பெண் நுழைந்தால் நான் கடுங்கோபத்தால் தொண்டை அடைத்துப் போவேன் அல்லது வஞ்சந்தீர்ப்பேன்”

கருணை எப்போதும் கால வீணடிப்பு,

வாழ்க்கை பெரியது, கருணை அதை மாற்றாது,

மௌனத்தில் உங்கள் பற்களை நரநரத்துக் கடிப்பது மேல்.

ஒரு மாலைப்போதில்

பயணம் செய்தேன் ரெயிலொன்றில்

அதில் அமர்ந்திருந்தாள்

அந்த யுவதி, கௌரவமாய் உடையணிந்து, மேக்கப் செய்து,

முகத்தில் ஒரு தீவிர பார்வையுடன்.

வெளியில், வெளிர் விளக்குகளும் சாம்பல்-பச்சை பூமியும்

உலகினை தேய்த்தழித்தன. நாங்கள் தனித்திருந்தோம்

மூன்றாம் வகுப்புப் பெட்டியில், நானும் அந்தப் பெண்ணும்,

நான் இளையவனாய்.

அந்த பிராயத்தில் எப்படிப் பேசுவதென எனக்குத் தெரியவில்லை

மேலும் நானழுதேன் பெண்களைப் பற்றி எண்ணும் போது. இவ்வாறு நான்

பயணம் செய்தேன், கவனமாய் படபடப்புடன்,

மேலும் அவள்

சிலநேரம் என்னைப் பார்த்தாள் புகைத்தாள். நான் பேசவில்லை,

நிச்சயமாய் நான் எண்ணவில்லை, ஆனால் என் குருதியில்

இன்னும் உணர்கிறேன் அந்த ஊடுருவும் பார்வையை,

கடுமையாய் உழைத்து வாழ்க்கையை அது கிடைத்தவாறு ஏற்ற

யாரோ ஒருவரின் ஒரு கண நகைப்பை.

ஒரு நண்பன், சொல்ல ஏதாவது வைத்திருக்கும் ஒருவன்,

ஒரு பெண்ணைக் காப்பாற்ற விரும்புவான், அவள் கண்ணீரைத் துடைத்து,

சந்தோஷப் படுத்துவான்.

”இல்லை, நம் வாழ்நாள் அனைத்திலும் அது வலுவான தேவை

கடின இதயம்தான் நம் ஒரே வலிமை என்றால்

மேலும் பயனற்றது எனின், நாம் நாசமாய்ப் போவோம்”.

நீங்கள் ஆயிரக்கணக்கில் பெண்களைக் காப்பாற்ற இயலும்,

ஆனால் நான் பார்த்த

புகைக்கும் அந்த எல்லோரும், தற்பெருமை கொண்ட பார்வை அல்லது சலித்த புன்னகை–

என் நல்ல நண்பர்கள்–எப்போதும் இருப்பார்கள்

மௌனமாய் துன்பப்பட்டு எல்லோருக்காகவும் கடன்தீர்ப்பார்கள்

மரணம் வரும், உன் கண்களைக் கொண்டு

மரணம் வரும், உன் கண்களைக் கொண்டு-

காலையிலிருந்து இரவுவரை நம்முடனிருக்கும் மரணம், உறக்கமற்று,

மூடத்தனமான தீயொழுக்கம் அல்லது

பழைய கழிவிரக்கத்தைப் போலோ. உன் கண்கள்

ஒரு வெற்றுச் சொல்லாகும்,

அமுக்கப்பட்ட ஒரு கதறலாகும்.

இப்படி ஒவ்வொரு நாள் காலையிலும்

நீ பார்க்கிறாய், நிலைக் கண்ணாடி மீது நீ சாய்கையில்.

போற்றிப் பேணிய நம்பிக்கையே,

அந்த நாளில் நாமும் கூட அறிவோம்

நீயேதான் வாழ்வும் வெறுமையும் என்பதை.

ஒவ்வொருவருக்கும் ஒரு தோற்றம் தருகிறது மரணம்.

மரணம் வரும், உன் கண்களைக் கொண்டு.

அது தீயொழுக்கத்தை நிறுத்துவது போலிருக்கும்,

கண்ணாடியிலிருந்து வெளிக்கிளம்பும்

ஒரு மரண முகத்தை கண்ணுறுவது போலிருக்கும்,

மூடிய உதடுகள் பேசுவது போலிருக்கும்.

நாம் மௌனத்தில் இறங்குவோம்.

0161

Posted in translated Poems | Tagged: , , , , , | Comments Off

அமி லோவல்/கவிதை உருவாக்கும் முறை

Posted by brammarajan on January 5, 2009

amy_lowellஅமி லோவல் (1874-1925)

1914-ல் எஸ்ரா பவுண்டினால் துவங்கப்பட்ட படிம இயக்கம் (Imagist Movement)கவிதையில் சாதாரண மொழியின் பயன்பாட் டையும் புதிய ஓசைமைகளையும் துல்லியமான படிமங்களை யும் வலியுறுத்தியது.

அமி லோவல் (1874-1925) என்ற பெண் கவிஞர் அமெரிக்க இமேஜிஸ்ட்டுகளில் மிக முதன்மையானவர். கவிஞர் என்பதை விடவும் அமெரிக்க கவிதை இயக்கத்தின் நடைமுறையாள ராகவே பிரபலமாக அறியப்பட்டிருக்கிறார். இவர் அமெரிக்கக் கவிதை இயக்கத்தின் மீது ஏற்படுத்திய பாதிப்பு, மிக பரந்து பட்டதாகவும் குறிப்பிடத்தகுந்ததாகவும் இருந்தது. எஸ்ரா பவுண்டின் கோபத்திற்கு உள்ளாகி இவ்வியக்கம் Amygists களின் இயக்கம் என்று பவுண்டால் பரிகாசத்துடன் அழைக்கப்பட் டது. ஏனென்றால் இமேஜிஸ இயக்கத்தின் தேக்கத்தையும் எல்லைப்பாடுகளையும் ஏற்கனவே உணர்ந்தறிந்துவிட்ட பவுண்ட் வோர்ட்டிஸிஸம் என்ற இயக்கம் மிகுந்த படிமக் கவிதையை நோக்கிச் சென்றுவிட்டார். அமிலோவல் எழுதிய புத்தகங்களில் முக்கியமானவை Tendencies in Modern American Poetry மற்றும் Poetry of John Keats.

கவிதை உருவாக்கும் முறை

தமிழில் பிரம்மராஜன்

கவிதைகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும்போது என் உள்ளுணர்வு பூர்வமான பதில் ஒரு தட்டையான ‘‘எனக்குத் தெரியாது” என்பதுதான். அவை எவ்வாறு உருவாகின்றன என்று சிறிதும் தெரியாதிருப்பினும் அதே போல் மற்றவர்களின் கவிதை உருவாக்கம் பற்றித் தெரியாத போதிலும், என்னைக் கேட்கப்பட்ட கேள்வி முழுவதும் என் கவிதைகள் சம்மந்தப்பட்டது என்றாலும் அவை எந்த வேறுபாட்டினையும் ஏற்படுத்துவதில்லை. அதைப் பற்றி எனக்குத் தெரிந்திருப்பது, தெரிந்து கொள்ளப்பட வேண்டியதின் ஒரு மில்லியன் பகுதியில் ஒரு பகுதிதான். என் பிரக்ஞைநிலையைத் தொடும்பொழுதுதான் நான் கவிதைகளைச் சந்திக்கிறேன். அது அதற்குள்ளாக அதன் பரிணாமப் பாதையில் வேண்டிய தூரம் வந்துவிட்டிருக்கும்.

திருவாளர் க்ரேவ்ஸ் கூறுவது போல கவிதை எதிரிடையான கருத்தாக்கங்களின் ஒருங்கிணைப்பு என்றாலும், உணர்ச்சிகளின் உறுத்தல்களுக்கும் Tensionக்கும் வடிகால் தருவதாய் ஏற்படும் விளைவு என்று Sara Teasdaleகூறியபோதிலும், பகற்கனவின் எல்லைக் கோட்டினைத் தொடும் ஒரு மனோவியல் நிலைக்கு நம்மை உட்படுத்துதல் என்று (பேராசிரியர் ப்ரெஸ்காட்) ஒரு முழு புத்தகமே எழுதி நிரூபித்த போதிலும் இறுதியான வரையறை தருவதற்கு யாராலும் இயலாது. தன்னம்பிக்கையு டன் என்னுடைய அனுபவங்களிலிருந்து அழுத்தமாக நான் கூறுவதெல்லாம், கவிதை ஒரு பகற்கனவு அல்ல என்பதே–மாறாக மிகவும் வித்தியாசமான, தனக்கே உரித்தான ஒரு மனோவியல் நிலை.

உண்மை என்னவென்றால் ஒரு மர்மம் இங்கு இருக்கிறது. கவிஞன் அளவுக்கு இதைப்பற்றி பிரக்ஞை எவருக்கும் இருக்க முடியாது. கவிஞன் ஒரு ரேடியோ ஏரியலைப் போன்றவன் என்பதை உடனே நாம் ஒப்புக்கொள்வோம்-ஒருவித அலைவரிசைகளில் செய்திகளைப் பெற்றுக்கொள்ளும் தகுதி அவனுக்கு இருக்கிறது. ஆனால் அவன் ஏரியல் என்பதற்கும் மேற்பட்டவன். இது ஏனெனின் இந்தச் செய்திகளை அந்த வார்த்தைகளின் அமைவுகள் என நாம் கூறும் கவிதைகளாக  மாற்றும் சக்தி படைத்தவனாகவும் கவிஞன் இருக்கிறான்.

ஒரு கவிஞனைப் பற்றிய அறிவியல் ரீதியான வரையறையை ஏறத்தாழ நாம் இவ்வாறு கூறலாம் என்று நினைக்கிறேன்: அதீதமான உணர்வுமிக்க ஒரு மனிதன், இயக்க பூர்வமான அடிமன ஆளுமை உடையவன், எதிர்ப்பற்ற பிரக்ஞையால் போஷிக்கப்பட்டும் அதற்கு உயிரளித்தபடியும் இருப்பவன். கவிஞர்களிடையே ஒரு பொதுவான சொல் வழக்கு உண்டு. ‘‘அது என்னிடம் வந்தது” என்பார்கள். இந்தப் சொற்பிரயோகம் சீரழிக்கப்பட்டுவிட்டதால் ஒருவர் கவனத்துடன் இதைத் தவிர்க்க முயல்கிறார். ஆனால் நிஜத்தில் ஒரு கவிதையின் பிரக்ஞைபூர்வமான வரவினைப் பற்றி எனக்குத் தெரிந்ததில் இதுதான் மிகச்சிறந்த விளக்கம்.

சிலசமயங்களில் ஒரு கவிதை உருவாக்கிய புறவயத் தூண்டுதல் தெரியும் அல்லது கண்டுபிடிக்கலாம். இரு ஒரு காட்சியாகவோ, அது ஒரு சப்தமாகவோ, ஒரு சிந்தனையாகவோ அல்லது ஒரு உணர்ச்சியாகவோ இருக்கலாம். தொடக்கத் தூண்டுதலைப் பற்றி சில நேரங்களில் நினைவு மனத்திற்கு ஒரு பிரக்ஞையும் இருக்காது. இந்தத் தூண்டுதல் மறக்கப்பட்டிருக்கலாம், அல்லது ஆழ்ந்த அறிந்து உணரப்பட்டிராத நினைவுகளிலி ருந்து எழலாம். இது என்னவாக இருந்தபோதிலும், உணர்ச்சி அறியப்பட்டிருந்தாலும், மறைக்கப்பட்டிருந்தாலும், இது அதன் ஒரு பகுதி. ஏனெனில் உணர்ச்சி மட்டுமே அடிமனதைச் செயலுக்குத் தூண்டுவது. எவ்வளவு கவனமாகவும், கச்சிதமா கவும் அடிமனம் இயங்குகிறது என்பதற்கு நானே என் எழுத்துக் களில் ஒரு காட்சியாக இருந்திருக்கிறேன். எந்த வெளிப்படை யான காரணத்துக்காகவுமின்றி ஒரு கருத்தாக்கம் என் சிந்தனைக்குள் வரும். எடுத்துக்காட்டாக The Bronze Horsesகுதிரைகளை ஒரு கவிதைக்கான விஷயமாக நான் மனதில் புரிந்து கொண்டேன். அவற்றை அவ்வாறு பதிவு செய்த பின்னர் இந்த விஷயம் பற்றி வேறு எதையும் நான் பிரக்ஞைபூர்வமாகச் சிந்திக்கவில்லை.  ஆனால் உண்மையில் நான் செய்தது என்னவென்றால் என் கருப்பொருளை ஆழ்மனத்திற்குள் போட்டு வைத்து விட்டதுதான்-தபால் பெட்டியில் ஒருவர் கடிதத்தைப் போடுவது போல. ஆறுமாதங்களுக்குப் பிறகு, அந்தக் கவிதையின் சொற்கள் என் மண்டைக்குள் வர ஆரம்பித்தன-அந்தக் கவிதை என் தனிப்பட்ட சொற்களைப் பயன்படுத்துவோமானால் ‘‘அங்கே இருந்தது”.

சில கவிஞர்கள் ஒரு குரல் அவர்களுடன் பேசுவதாகச் சொல்கிறார்கள். மேலும் அக்குரல் உச்சரிக்கும் வார்த்தைகளை அப்படியே எழுதுவதாகவும் கூறுகிறார்கள். இந்த முறை என்னுடையதிலிருந்து வேறுபடுவதாலோ அல்லது என் ஆரம்பகால அறிவியல் பயிற்சியின் காரணமாகவோ எனக்குத் தெரியவில்லை-எது குறைவான காட்சிபூர்வமான வார்த்தை களை பயன்படுத்துவதற்குக் காரணம் என- நான் குரல் எதையும் கேட்பதில்லை, ஆனால் வார்த்தைகள் உச்சரிக்கப்படுவதைக் கேட்கிறேன். உச்சரிப்பு மட்டுமே சப்தமற்றது. ஆனால் யாராலும் பேசப்படாமல் அவ்வார்த்தைகள் என் மண்டைக்குள் உச்சரிக்கப்படுகின்றன. இந்த விளைவு எனக்குப் பரிச்சயமான ஒன்று. ஏனென்றால் என் மனதிற்குள் நான் படிக்கும் பொழுது கூட நான் எப்போதும் வார்த்தைகளைக் கேட்கிறேன். கொஞ்சம் அதிகமாக நான் எழுதும் நேரத்தில் (இது அவசியமில்லை என்றாலும் கூட) எழுதும்போதும், பலசமயம் நான் எழுதியதை உரக்கப் படிப்பதற்கு நிறுத்தும் போதும். அவ்வளவு தெளிவாய் வார்த்தைகள் என் மண்டைக்குள் ஒலிக்கின்றன.

எனினும் இந்த ஆழ்மனம், மிகவும் தன் இஷ்டப்படி நடந்து கொள்ளும் ஒரு கூட்டாளி. நிறைய சமயங்களில் அது  தீவிரமான சூழ்நிலையில் வேலை நிறுத்தம் செய்யும். அதற்குப் பின் எந்த ஒரு சொல்லையும் அதனிடமிருந்து பெறுவதற்கு இயலாது. இங்குதான் கவிஞனின் பிரக்ஞைபூர்வமான பயிற்சி தேவையாகிறது. காரணம் ஆழ்மனம் விட்டுவிட்ட விஷயங்களை அவன் நிரப்ப வேண்டும். மற்ற வார்த்தைகளின் தன்மைக்கு ஒத்தவாறு, முடிந்தவரை நிரப்பவேண்டும். ஒவ்வொரு நீண்ட கவிதையும் இம்மாதிரியான இடைவெளிகளால் தெளிக்கப்பட்டிருக்கும். இந்தக் காரணத்தினால்தான் பெரும்பாலான கவிதைகள் எண்ணற்ற திருத்தங்களுக்கு உள்ளாகின்றன. சில நேரங்களில் இந்த கள்ளத்தனமான ஆழ்மனக் கூட்டாளி சிரமம்படும் கவிஞன் மீது கருணை கொண்டு அவனின் உதவிக்குத் திரும்பும். அந்தக் குறிப்பிட்ட பகுதியுடன் பல சமயங்களில் மீண்டும் எந்தத் தொடர்பும் இருக்காது அதற்கு. இக்காரணத்தினால்தான் ஒரு கவிஞன் என்பவன் பிறக்கவும், உருவாக்கப்படவும் வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அவனுக்காக எப்போதும் உழைக்கக்கூடிய ஒரு ஆழ்மனத் தொழிற்சாலையுடன் அவன் பிறக்க வேண்டும். இல்லையென்றால் அவன் என்றும் கவிஞனாக முடியாது. திருவாளர் க்ரேவ்ஸின் வெளிப்பாட்டு முறையைப் பயன்படுத்தினால்-அவனின் ஓட்டைகளை மெழுகி அடைக்க அறிவும் திறமையும் வேண்டிய அளவுக்கு இருக்க வேண்டும். இந்த (மெழுகி) அடைக்கும் முறையை யாரும் தாழ்வாக மதிப்பிட்டுவிட வேண்டாம். நல்ல கவிதையில் ஒரு நிலை இது. கடந்த 25 ஆண்டுகளாக என் கைகளுக்கு எட்டிய பல பெரும் கவிஞர்களின் முதல் கையெழுத்துப் பிரதிகளில் நான் ஒன்றிலும் ‘‘மெழுகி அடைத்தல்” பங்கினை பார்க்காமல் இல்லை. இதில் மிகவும் அடித்து எழுதப்பட்டிருந்தது கீட்ஸின் The Eve of St.Agnes.

நீண்ட கவிதைகள் ஆழ்மனதில் உருவாக மாதங்கள் ஆகும். சிறிய கவிதைகளைப் பொறுத்தவரை ஆழ்மனதில் கருக் கொள்ளும் காலம் ஒரு நாளாகவோ, ஒரு கணமாகவோ இருக்கலாம். திடீரென்று சில சொற்கள் அங்கே இருக்கும்  ஒரு வித ராஜரீகமான வற்புறுத்தலுடன் அவை எந்த தாமதத்தையும் பொறுக்காது. அவை உடனடியாக எழுதப்பட வேண்டும் இல்லையென்றால் ஒரு தீவிரமான துன்புறுதல் நேரும்–ஒரு உடல்ரீதியான வலி அளவுக்கு இது இருக்கும். கவிதைக்கு வழி கொடுத்தால் ஒழிய இந்த வலியிலிருந்து நிவாரணம் கிடைக்காது. கவிதைகள் வரும் காலத்தில் நான் அவற்றை நிராகரிப்பது கிடையாது. நான் என்ன செய்து கொண்டிருந்தாலும், நான் என்ன எழுதிக் கொண்டிருந்தாலும் அவற்றை விலக்கி வைத்துவிட்டு கவிதையின் வரவை நான் கவனிக்கிறேன். என்னுடைய இயல்பின் காரணமாக, நான் நண்பர்களுடன் இருக்கும்போதோ, வீட்டுக்கு வெளியில் உள்ளபோதோ கவிதைகள் வருவதில்லை. ஆனால் தனியாக இருக்கும்போது, நான் பார்த்த, அல்லது செய்த ஏதோ ஒன்றின் தொடர்பான கருத்தாக்கம்–வெளியில் இருந்த பொழுது தன்னை அறிவித்துக் கொள்ளும்–ஏதோ நான் மோனத்திலும், ஏற்புத்தகுதியுடனும் இருக்கும் காலத்திற்காகக் காத்திருந்தது போல்.

என் மண்டைக்குள் நான் உருவாக்குவது குறைவு. ஒரு கவிதையின் வருகை பற்றிய பிரக்ஞையை நான் அடையும்போது நான் செய்யும் முதல் காரியம் பேப்பரையும் பென்சிலையும் தேடிப் போவதுதான். ஒரு துண்டு வெள்ளைத் தாளை வெறுமனே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்ததே ஆழ்மனம் பற்றிய பிரக்ஞைக்கு ஹிப்நாட்டைஸ் செய்து விடுவதுபோலத் தோன்றுகிறது. அதே காரணத்துக்காக, நான் நடந்து கொண்டிருக்கும்போதோ, கார் ஓட்டிக் கொண்டிருக்கும் சமயத்திலோ கவிதைகளைத் திருத்தம் செய்வதில்லை. இதற்குத் தேவைப்படும் கூர்ந்த கவனம் ஒரு தியானத்தின் தன்மையதாய் இருக்கிறது. (இதற்கு இந்த வார்த்தை சற்று அதிகபட்சமானது என்றாலும் கூட) இந்தக் கூர்ந்த கவனம் (அ)தியானம் நான் எங்கே போகிறேன் அல்லது எந்த நிலையத்தில் இறங்க வேண்டும் என்பது பற்றிய அக்கறைகளால் சிதைக்கப்படுகிறது.

இந்த அரைத்தியான நிலை நாம் சிறிய கவிதைகளைப் பற்றிச் சிந்திக்கும்பொழுது ஆச்சரியப்படுத்துவதில்லை. விநோதம் என்னவெனில் இந்தத் தியானம் போன்ற நிலை நீண்ட கவிதைகளைப் பொறுத்தவரை, குறுக்கீடுகளுக்கு மேலாகத் தாக்குப் பிடிக்கக் கூடியது.  பல நாட்கள் அல்லது வாரங்கள் எழுதத் தேவைப்படும் அளவுக்கு ஒரு கவிதை நீளமாக இருக்கும் போது, அதைத் தொடர உட்காரும் ஒரு செயலே அதற்குத் தேவையான மனநிலையை உருவாக்குகிறது- இந்நிலை (நான் குறிப்பிட்ட இடைவெளிகள் தவிர) கவிதையின் திருத்தங்கள் வரை தாங்குகிறது.

அதற்கு மாறாக, ஆழ்மனநிலை மட்டும் தயாராக இல்லை என்றால் எந்த சக்தியாலும் அந்த நிலையை உருவாக்க முடியாது. எனவே சிருஷ்டி இல்லாத காலங்கள் எல்லாக் கவிஞர்களுக்கும் இருப்பது சகஜம்தான்.

கவிஞனால் முடிந்த எல்லாவற்றையும் அவன் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். எந்த துறையும் அவனுக்கு  அந்நியமானதல்ல. எந்தத் திசையிலும் அவன் அறிவு ஆழமானதாக இருந்தால், அவனுடைய கவிதைக்கும் நல்ல ஆழமிருக்கும். புதிய மற்றும் பழைய கவிதை வடிவங்களில் அவனுக்கு முழுமையான, அடிப்படையான பரிச்சயம் இருக்க வேண்டும். ஆனால் தீர்மானமாக என் நம்பிக்கை என்னவென்றால் பாரம்பரியத்திற்கு அவன் தன் உள்ளுணர்வின் சுயத்திற்கு மேலாக மரியாதை தரக்கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுடைய சுயநேர்மை பற்றி உறுதியாக இருக்க வேண்டும். பொது அங்கீகரிப்புகளுக்கு அவன் தலை பணியக்கூடாது-எவ்வளவு கவர்ச்சிகரமான வையாக அவை இருந்தபோதிலும். அதன் பின் அவனின் ஆழ்மனம் எதை உணர்த்துகிறதோ அதை அவன் சகல தைர்யத்துடன் எழுதட்டும்.

0161


Posted in translation-Essay | Comments Off

Contemporary World Poetry vs World Poetry (Samakala Ulagakavithai versus Ulagakavithai)

Posted by brammarajan on October 25, 2008

Contemporary World Poetry is an anthology of world poetry representing 48 poets from all the continents. There are of course some omissions. No English poet from England finds a place here and no representation for Australia and North America have been made. The common(shrewd) reader will easily manage poems of these countries because of the availability of texts. Zeroing on Central and Western Europe for poems by contemporary/modern seems to be a formidable task. Garnering information about their life or texts of their English translation is also a challenge with regard to poets of central Europe. Contemporary World Poetry is not an impetuous project. Its origins lie in the original anthology in Tamil published way back in 1989 when World Poetry Festival was conducted in Bharat Bhavan (Bhopal,MP) for the first time. World Poetry Project’ s seeds were strewn well in advance to the event. The then Cultural Secretary Shri. Ashok Vajpeyi had requested all those willing publishers of little magazines from Indian languages to prepare a sampler for the historic event. We all agreed to lend a hand. Shri Ashok Vajpeyi was gracious enough to send Xeroxed materials of full collections of poems of the participating poets. That is how we got the full text of Ernesto Cardinal and Miroslav Holub’s poems. While in some Indian languages the end product was just a skimpy pamphlet/booklet, it ended up as massive volume in Tamil. The Defacto Edition of Contemporary World Poetry is World Poetry (Ulagakkavithai) anthology published by Meetchi Books in 1989. When we attended the festival we were disappointed because of the absence of Tanikawa Shuntaro of Japan and Tadeuz Rosewicz of Poland.

On the third day of the function copies of World Poetry from regional languages were presented to the participating poets. This is the real story behind the current Contemporary World Poetry. For the original edition there were more than a dozen translators who worked for more than 6 months on the selections of single poet. All the scripts were collected and rechecked for errors by the Meetchi editorial members. For some reason even in the original anthology we had left out poets from Australia and England. The original World Poetry would not have been possible but for the magnanimous help from the Madhyapradesh government. We were supplied with good quality paper and partial printing assistance. I still feel thankful to those who worked for the World Poetry anthology.


Posted in Uncategorized | Tagged: , , , , , , | Comments Off

Nadodi Manam e-book (downloadable)

Posted by brammarajan on October 27, 2008

Nadodi manam-in e-book format(pdf)

This is the pdf form of the full book titled Nadodi Manam. Since the book is out of print for the past 4 years I am offering this download for a limited period of time for the readers who do not have a hard copy. I haven’t included the cover page since I didn’t design it.

Rough Index of Authors discussed:

1.Franz Kafka 2.T.S.Eliot.[Tradition and the Individual Talent] 3.Four Quartets(T.S.Eliot) 4.Ocatvio Paz (Poetry and History) 5.Amy Lowell and the process of creating poetry 6.Paul Valery and his poetics 7.Miraslav Holub 8.Antonin Bartusek 9.Cesar Pavese 10.Charles Bukowsky 11.Ivan Goncharov(Oblavmov) 12.Yasunari Kawabatta (The House of Sleeping Beauties) 13.Gabriel Garcia Marquez (General in the Labyrinth) 14.Herman Hesse (The Steppenwolf) 15.Albert Camus (The Plague) 16.Samuel Beckett(Watt) 17.William Faulkner (Sound and the Fury) 18.Alexander Solzhenitsyn (Cancer Ward) 19.Andre Gide(The Counterfeiters) 20.Primov Levi (The Periodic Table) 21.Jean Genet(works) 22.Henrich Boll 23.Salvador Dali 24.Poets,lovers and madmen 25.Arthur Koestler

NadodiManam-BklT


Posted in Uncategorized | Tagged: | Comments Off

Remebering poet Malathy(sathara)

Posted by brammarajan on October 27, 2008

,,,

Rememebering poet Malathi(sathara)
Some writers hone their skills in the little magazines and then sell them in the mass media market. Again the criteria is fame and money. But in the present situation excepting a few old writers no one seems to amaze money through writing. Perhaps this is very special to the Tamil language magazines and publications.There are a few exceptions like Malathi(sathara) who had strayed into the mass media magazines and after getting fed up with the insipidity and mediocrity of the mass magazines they find out the route to serious literature. So Malathi came to serious literature after writing potboilers in popular weeklys and monthlys. But she had no regrets about her literary past.I knew here from 1997 when we first arranged the Women Writers’s Meet in Dharmapuri during that winter. She couldn’t attend that meet for personal reasons and apologized for more than half an hour.
I had not met her. But we continued our conversations over phone. Discussions rambled from recipes to mythology and feminism. She was a postgraduate in Chemistry from Presidency college Madras. Though she was proficient in English often she would say that she preferred reading a translated book in Tamil than reading the original. She said she was saving time on dictionary consultations. She had expressed her strong opinions on womanist poets, feminist poets and women poets. She was perfectly aware of the nuances of these categories and would defend a male point of view if it is sensible. She was a feminist without the anti-male stance.Ofcourse she had so many grudges against men-especially middle class men-but expressed them without the least hostility.
When I anthologized Atamanam’s Complete works for a publisher, I decided to meet Atmanam’s family in person and get the agreement form signed for the publisher. Only this time I sought Malathi’s help to locate Atamanam’s brother Mr.Ragunandhan’s residence. We spent the evening with Atmanam’s brother and his daughters and his ageing mother.
In the mean while Malathy had put together her second book of poems(Thanal Kodi Pookkal) and wanted my introduction. Though I had accepted the assignment I was a bit hesitant because of the mixed quality of her diction and and uneven quality of her poems. But I did like atleast a bunch of them from that collection. But I had inordinately delayed writing the introduction becaue of my mood swings. I felt sorry that I had not done full justice to her work. But she said she was happy.
Before she left for Sathara(Maharashtra) on transfer she had given me a wonderful oppurtunity of listening to Andal’s Thiruppavai everyday over phone during Margazhi. I think we never missed a day or a pasuram. Her enunciation part of Andal will be more lively and enthralling. I heard that the recorded version of her rendering is available in cassette form. But I failed to get one from her. Now someone should enquire either her husband Mr.Valeeswaran or her daughter Ms.Chandni.
When she returned to Bangalore telephones circle after 3 years her health had deteriorated. She had nephrological complications and there were so many proscriptions in her diet. I felt sorry for her for she was a gourmet.
Her mother is a writer and an excellent cook. Her mother’s short stories can be read even now without the feeling of staleness.She is also a great host.
Before her last days she bought a flat in Bangalore and our families frequently met in her house. On one those evening meetings in her house she made me sit after coffee and read that small review she wrote for my book Nadodi Manam.
But I still feel sorry for missing her funeral.
*I should personally thank Mr.Taj for making me write this blog since I read Malathy’s review of my book which Mr.Taj re-blogged from Thinnai.

Posted in Uncategorized | Tagged: | Comments Off

Samakala Ulaga Kavithai-Contemporary World Poetry in Tamil Translation

Posted by brammarajan on November 6, 2008

சமகால உலகக் கவிதை

இந்தப் புத்தகத்தில் இடம்பெறும் கவிஞர்களின் பட்டியலை மட்டுமே இங்கே தர முடிகிறது. புத்தகம் 2007 புத்தக சந்தையில் வெளிவந்தது. ஏதோ காரணத்தால் அது வேண்டிய வாசகர்களைச் சென்றடைய வில்லை. இது போன்ற புத்தகங்களுக்கு மதிப்புரை எழுத ஆட்களும் குறைவு. தயக்கமும் அதிகம். 400 பக்கங்களும் கெட்டி அட்டையும் நல்ல தாள்களும் கொண்ட உருவாக்கம். வெளியீட்டாளரின் இணைய இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.

(1)பெர்டோல்ட் ப்ரக்ட்(ஜெர்மனி) (2)குந்தர் கூனர்ட்(கிழக்கு ஜெர்மனி) (3)பால் ஸெலான்(ரொமானியா) (4)டாமஸ் ட்ரான்ஸ்ரோமர்(ஸ்வீடன்) (5)செஸ்வா மிவோஷ் (6)ஸ்பிக்நியூ ஹெர்பர்ட்(போலந்து) (7)ததயூஸ் ரோஸ்விட்ஸ்ச்(போலந்து) (8)விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா(போலந்து)(9)அன்னா ஸ்வர்ஸைனிஸ்கா(போலந்து) (10)இங்போர்க் பாக்மன்(ஆஸ்திரியா)(11)வாஸ்கோ போப்பா(செர்பியா)(12)மிராஸ்லாவ் (13)ஹோலுப்(செக்கஸ்லோவாகியா) (14)யான் காப்லின்ஸ்கி(எஸ்டோனியா)(15)மாரின் ஸோரெஸ்க்யூ(ரொமானியா)(16)நினா கேஸியன்(ரொமானியா) (17)பிரைமோ லெவி(இதாலி) (18)பியர் பாவ்லோ பாஸோலினி(இதாலி) (19)ஃபெர்னான்டா பெசோவா(போர்ச்சுகல்) (20)ஃபிலிப் ஜக்கோட்டே(ஃபிரான்ஸ்) (21)ஹைன்ரிக் நார்பிராண்ட்(டென்மார்க்) (22)ஓசிப் மெண்டல்ஷ்டாம(ரஷ்யா) (23)மரீனா ஸ்வெட்டயேவா(ரஷ்யா)(24)ஆக்னநெஸ் நெமிஸ் நேகி(ஹங்கேரி) (25)பெரன்ஸ் யூஹாஸ்(ஹங்கேரி) (26)பாப்லோ நெருடா(சிலி)(27)ஆக்டேவியோ பாஸ்(மெக்ஸிகோ) (28)ராபர்ட்டோ யூவாரோஸ்(அர்ஜன்டீனா) (29)நான்சி மோர்யோன்(கியூபா) 30)டி மெலோ நேட்டோ(பிரேஸில்) (31)எஹூதா அமிக்ஹாய்(இஸ்ரேல்) (32)தாஹ்லியா ராவிகோவிச்(இஸ்ரேல்) (33)டேன் பேகிஸ்(இஸ்ரேல்) (34)மொஹமத் தர்வீஷ்(பாலஸ்தீனம்) (35)அடோனிஸ்(லெபனான்) (36)நஸீம் ஹிக்மெத்(துருக்கி) (37)கோஃபி அவூனோர்(கானா) (38)பெர்டோல்ட் ப்ரக்ட்(ஜெர்மனி) (39)பிரேட்டன ் பிரேட்டன்பாஹ்(தென்னாப்பிரிக்கா) (40)டென்னிஸ் ப்ருட்டஸ்(தென்னாப்பிரிக்கா) (41)டெரக் வால்காட்(கரீபியா) (42)யாங் லி யூஹாங்(சீனா)(43)சப்பார்டி ஜோக்கோ தமோனோ(இந்தோனீசியா)(44)ஸோ சோங் ஜு(கொரியா) (45)சோங் ஹ்யோன் ஜோங்(கொரியா) (46)ஏ.கே.ராமானுஜன் (இந்தியா) (47)ஜெயந்த மகாபாத்ரா(இந்தியா)(48)மைக்கேல் ஓன்யாட்டே(கனடா)

www.uyirmmai.com/


Posted in Uncategorized | Tagged: | Comments Off

ஆர்க்கிபால்ட் மேக்லீஷ்-கவிதைக் கலை(Archibald Macleish-Ars Poetica)

Posted by brammarajan on November 9, 2008

archibald-macleish2

Archibald Macleish

ஆர்க்கிபால்ட் மேக்லீஷ் (அமெரிக்கா)

கவிதைக் கலை-Ars Poetica

ஒரு கவிதை இருக்க வேண்டும்

உணர முடிவதாய்

உருண்டு திரண்ட பழம் போல மௌனமாய்

பேச்சற்று

புராதனப் பதக்கங்கள் கட்டைவிரலுக்குத் தட்டுப்படுவது போல்

பாசி வளர்ந்து படிந்த

கைப்பகுதிகளால் தேய்ந்த ஜன்னல் விளிம்புகளைப்

போல மௌனமாய்

ஒரு கவிதை வார்த்தையற்றிருக்க வேண்டும்

பறவைகளின் பறத்தல் போல

நிலா உயர்வதைப் போல்

காலத்தினுள் கவிதை இயக்கமில்லாதிருக்க வேண்டும்

இரவு பின்னலிட்ட மரங்களை குறுங்கிளை அடுத்த குறுங்கிளையாக நிலா

விடுவிப்பது போல

பனிக்காலத்து இலைகளின் பின்புறமிருந்து நிலா

ஞாபகம் ஞாபகமாக மனதை விடுவிப்பது போல

ஒரு கவிதை காலத்தினுள் சலனமில்லாதிருக்க வேண்டும்

நிலா உயர்வது போல்

ஒரு கவிதை சமானமாய் இருக்க வேண்டும்

நிஜத்திற்கு இணையாய் அல்ல

எல்லாத் துயரத்திற்கும்

ஒரு வெற்று வாசலைப் போல

மேப்பிள் மர இலையைப் போல

காதலுக்கு

தலைசாயும் புற்கள் மற்றும் கடலுக்கு மேலாக இரணடு வெளிச்சங்களைப் போல

ஒரு கவிதை அர்த்தம் தரக்கூடாது

இருக்க வேண்டும் கவிதையாக.


Posted in Uncategorized | Tagged: | 1 Comment »

நான்காம் பாதை 2வது இதழ் வெளிவந்துவிட்டது.(Nangam Pathai issue No.2 is out)

Posted by brammarajan on November 19, 2008

nangam-pathai-cover-final-2008-page1a1

நான்காம் பாதை 2வது இதழ் வெளிவந்துவிட்டது.
இதழின் சிறப்பம்சங்கள்
1.கர்னாடக இசைக்கலைஞர் நெய்வேலி சந்தானகோபாலனுடன் பேட்டி.
(பேட்டி கண்டவர்கள்-பிரம்மராஜன், ஆனந்த்,மையம் ராஜகோபால்,பழனிவேள்)
2.ரெய்னர் மரியா ரில்கே கவிதைகள்-அறிமுகக் கட்டுரையும் தேர்ந்தெடுத்த கவிதைகளின் மொழிபெயர்ப்பும்-பிரம்மராஜன்
3.கிளாட் லெவிஸ்ட்ராஸின் தக்சசீலம்-அறிமுகமும் மொழிபெயர்ப்பும்-ஆர்.முத்துக்குமார்
4.கவிதைகள்-குலசேகரன், கணேசசூரர்பதி, பழனிவேள்.
5.தேர்ந்தெடுத்த நூல்களின் விமர்சனம்-கண்மணி குணசேகரனின் நடுநாட்டு சொல்லகராதி(பழனிவேலு) தமிழவனின் வார்சாவில் ஒரு கடவுள் (ப.வெங்கடேசன்)
6.சிறுகதை-இரவு நடனம்-ஜே.கே.பிரதாப்

Editor:Brammarajan

Periodicity:Quarterly

Price(in India) per issue:Rs.50

Courier charges Rs.50 per issue
Annual subscription Rs.250+courier charges

Posted in Announcement(s) | Tagged: , , , , , , , , | Comments Off

ரெய்னர் மரியா ரில்கே: நாடற்ற-வீடற்ற ஒரு சர்வதேசக் கவி

Posted by brammarajan on November 20, 2008

ரில்கே கவிதைகள்-

மொழிபெயர்ப்பு பிரம்மராஜன்

rilke2

Rainer Maria Rilke-A short introduction to Tamil readers

ரெய்னர் மரியா ரில்கே:

நாடற்ற-வீடற்ற ஒரு சர்வதேசக் கவி

தலைசிறந்த ஜெர்மன் மொழிக் கவிஞரான ரெய்னர் மரியா ரில்கே ஒரு வீடில்லாதவராகவும் நாடில்லாதவராகவும் தன் வாழ்க்கையை வாழ்ந்து முடித்தார். சர்வதேசக் கவிஞர்களிலேயே மிகவும் சர்வதேசீயமானவர் ரில்கே. சகல எல்லைகளையும் கடந்த ஆனால் எந்த ஒரு நாடும் தனக்கென ஸ்வீகரித்துக் கொள்ளாத கவிஞனின் நிலைதான் ரில்கேவினுடையது. நவீன கவிஞர்களில் டி.எஸ்.எலியட் மற்றும் ஐரிஷ் கவிஞர் டபிள்யூ.பி.ஏட்ஸ்-க்கு இணையான சாதனையாளர். பிராக் நகரில்(ஆஸ்திரியா)1875ஆம் ஆண்டு தன் பெற்றோருக்கு ஒரே மகனாகப் பிறந்த ரில்கேவுக்கு தொடக்கத்தில் அவரது தாயார் பெண் பெயரை வைத்ததுடன் அல்லாமல் ரில்கேவுக்கு முன் பிறந்து இறந்து போன பெண் குழந்தையின் ஏக்கத்தினால் தன் மகனை ஒரு பெண் குழந்தையாகவே பாவித்து வந்தார்-இது எந்த அளவு அவரது ஆளுமையப் பாதிக்கப் போகிறது என்பதை அறியாமல். ரெனே கார்ல் வில்ஹெல்ம் ஜோஹன் ஜோஜப் ரில்கே. பெயரின் தொடக்கத்தில் உள்ள ரெனே இரு பாலருக்குமானது. இதுமட்டுமன்றி ரில்கேவுக்கு முடிந்த வரை பெண் பிள்ளைகளின் உடைகள் உடுத்தி சந்தோஷப்பட்டார் அவர் தாயார்.

ஒரு ‘டேன்டியின் அழகியல் பாரம்பரியத்தில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார் ரில்கே. ஆயினும் கவிதை வாழ்க்கையை மாற்றியமைக்கும் என்கிற உண்மை ஒரு வேளை ரில்கே என்கிற ஒரே ஒரு கவிஞனிடத்தில் மட்டுமே நம்மால் பார்க்க முடியும். தனக்கென்று ஒரு வீடில்லாதிருப்பதும் ஏறத்தாழ ஓய்வு ஒழிச்சலற்ற பிரயாணமும்தான் ரில்கே என்ற மனிதனிட மிருந்து அத்தகைய உள்மனப் பிரயாணக் கவிதைகளைத் தந்தது என்று சொல்லலாம். ஒரு வெளியாளின் வாழ்க்கை முறை அமைந்த காரணத் தினால் அவருக்கு பிறரின் வாழ்க்கையையும் தனது வாழ்க்கை யையும் அந்நியமான பார்வையுடன் அணுக முடிந்தது. பெரும்பான்மையான அவரது புரவலர்கள் பெண்கள் என்பதும் குறிப்பிடத் தகுந்த தகவல்.

ரில்கேவை ஒரு சிறந்த ஐரோப்பியர் என்று அவரது வார்த்தைகளிலேயே சொல்லலாம். ஆங்கில மொழியை வெறுத்த ரில்கே தனது வாழ்வின் மத்தியகாலங்களில் பிரெஞ்சுக் கவிஞர் பால் வெலேரியைச் சந்தித்த பிறகு தன்னை ஒரு பிரெஞ்சு எழுத்தாளராக ஆக்கிக் கொள்ளக் கூட முயன்றார். உரையாடல் மற்றும் கடிதங்களில் பிரெஞ்சு மொழியைக் கையாண்டார். இந்த நடவடிக்கை ஜெர்மானியர்களுக்கு வேண்டிய எரிச்சலைத் தந்ததால் ரில்கேவை ஜெர்மன் இலக்கியப் பத்திரிகைகள் ஒரு கலாச்சாரத் துரோகி என்று முத்திரை குத்தின. அவர் தான் ஒரு சிறந்த ஐரோப்பியனாக இருப்பதற்கு மாத்திரமே முயல்வதாகப் பதில் கூறினார். நிஜத்தில் ஐரோப்பியர் என்கிற அர்த்தத்தை முழுமனதுடன் கூறினாரா என்பது சந்தேகமே. அவர் பிறந்த ஆஸ்திரியாவை அவருக்குப் பிடிக்கவில்லை. பிராக் நகரம் ஆஸ்திரிய-ஹங்கேரியப் பேரரசின் ஒரு பிரதான நகரமாக அப்போதிருந்தது. அதன் பிரத்யேக குணாம்சங்களாய் இருந்தவை அதன் கலவையான தேசீய இனங்கள், மொழிகள், மக்கள். ஜெர்மானியர்கள், யூதர்கள், ஸெக்கஸ்லோவாகியர்கள். ஜெர்மன்மொழி அரசாங்க மொழியாக இருந்தது மட்டுமன்றி மேல்தட்டு மக்களின் மொழியாகவும் இருந்தது. இத்தகைய ஒரு காலகட்டத்தில் ஸெக்கஸ்லோவாகியர்கள் ஒரு படி கீழாக வைத்து நடத்தப் பட்டார்கள். ஏன், இளம் வயது ரில்கேவுக்கு ஸெக் நாட்டவர்கள் மீது கீழ்மையான அபிப்பிராயம் உருவாக அவரது பெற்றோர் காரணமாக இருந்தனர் என்பது ஒரு உறுத்தும் உண்மை.

ஒரு ஜெர்மானியராக இருப்பதையும் அவர் விரும்பவில்லை. ஒரு ஸெக் நாட்டவராக இருப்பதும் அவருக்கு உவப்பாக இருக்கவில்லை. ஒரு எதிர்முரண் என்னவென்றால் முதல் உலகப் போருக்குப் பிறகு அவர் பிறந்த இடம் ஸெக்கஸ்லோவாகியாவில் சேர்க்கப்பட்டு சிறிது காலம் ஸெக் பாஸ்போர்ட்டில் அவர் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டார். ஒரு இளைஞனாக இருந்த போது ஒரு heimatlos (homeless)என்று தன்னை சொல்லிக் கொள்ள ஆசைப்பட்டார். இந்த சொல் நாடற்றவர்-வீடற்றவர் என்ற இரு அர்த்தங்களையும் உள்ளடக்கி யதாக இருந்தது. தன் பூர்வீகத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் உரிமை ஒரு கவிஞனுக்கு உண்டு என்கிற உரிமையை அழுத்தம் திருத்தமாகக் கூறினார்:

ஒரு பேச்சுக்கு சொல்வதானால், நாம் பிறக்கிறோம், புரொவிஷனலாக, எங்கே என்பது ஒரு பொருட்டல்ல. நமக்குள்ளாக நாம் சிறிது சிறிதாய் நம்மை கம்போஸ் செய்து கொள்கிறோம், நமது பூர்வீகத்தின் நிஜமான பிறப்பிடத்தை-அதன் மூலம் நாம் பிறகு பிறந்து கொள்ளும்படியாக.

ரில்கேவின் கல்வி சரியாகத் திட்டமிடப்படாததும் கூறுபட்டதாகவும் அமைந்தது. ஒரு ராணுவ அதிகாரி ஆக முயன்று முடியாமல் போன அவரது தோல்வியைச் சரி செய்யவும் வீட்டின் நிதிநிலைமைகளை அனுசரித்தும் ரில்கேவின் பூர்ஷ்வா தந்தை ஜோஸப் ராணுவப் பள்ளியில் மகனைச் சேர்த்தார். அவர் அப்போது ஒரு மிகச் சாதாரண ரெயில்வே அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். St.Polten மற்றும் Mahrisch-Weisskrichen ஆகிய இடங்களில் செப்டம்பர் 1886ஆம் ஆண்டிலிருந்து ஜுன் 1891வரை மொத்தம் 5 வருடங்களை ராணுவப் பள்ளிகளில் அடிப்படைக் கல்வியும் பள்ளிக் கல்வியும் பயில வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தப் பள்ளிகளில் ரில்கே எதையும் கற்கவும் இல்லை எந்த நண்பர்களையும் உருவாக்கிக் கொள்ளவுமில்லை என்பதை தன் வாழ் நாளில் பிறகு நினைவு கூர்ந்தார்-மனதில் வடுக்களை உண்டாக்கிய அந்த ராணுவப்பள்ளி அனுபவங்களை. தொடர்ந்த உடல்நலக்குறைவு காரணம் காட்டப்பட்டு பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் தந்தையுடன் வாழ்ந்த காலங்களில் தனிப்பயிற்சி அளிக்கப்பட்டு பல்கலைக் கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற தயாரானார். ஆனால் அவர் தன் விதி கவிதை என்பதை மறந்துவிடவில்லை.

அவரது தந்தையைக் காட்டிலும் ஒரு அறிவுஜீவி என்கிற வகையில் ரில்கேவின் தாயார் ஃபியா என்கிற சோஃபியா தேவையான அளவு பாதிப்பைச் செலுத்தினார். மிக இளையவராக இருந்தபோதே ரில்கே பிரெஞ்சு மொழியைக் கற்கக் காரணமாக இருந்தார். மலிவான ஸெக் மொழிக்குப் பதிலாக எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் பிரெஞ்சு மொழியைப் பயன் படுத்தும்படி மகனுக்கு அறிவுறுத்தினார் ஃபியா. அவர் நடவடிக்கையில் ஒருவித பகட்டுக்காரியின்தன்மை இருந்த போதிலும் இளம் ரில்கேவின் அழகியல் மற்றும் இலக்கிய ஈடுபாடுகளுக்கு ஃபியாதான் காரணம். ஒருவித ரொமாண்டிக் மதத்தன்மையையும், புனிதர்களின் வாழ்க்கை பற்றிய ஈடுபாடும், புனிதச் சின்னங்களைப் பற்றிய மரியாதையையும் குழந்தையின் மனதில் பதியக் காரணமாக இருந்தார் ஃபியா.

ஆங்கில மொழி அவருக்கு உவப்பானதாய் இருக்கவில்லை என்பதை விட அமெரிக்காவை அவர் ஒரு நாடாகக் கருதவில்லை என்பது இன்னும் தீவிரமான ஒரு கொள்கை நிலைப்பாடு. திரள் உற்பத்தியில் பொருள்களைத் தயாரித்து நம் மீது வீசும் ஒரு நாடாகவே அவர் அமெரிக்காவைக் கண்டார். தொழில்மயமான-முதலாளீய சமுதாயத்தை அவர் விளாசிய விதத்தில் ஒன்றும் புதுமையில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அதற்குக் காரணமாக இருந்த சிந்தனையாளர்கள் ஆங்கிலக் கலை விமர்சகர் ஜான் கால்லைல், நீட்ஷே, ஜான் ரஸ்க்கின், வால்டர் பேட்டர் மற்றும் ஜேகப் பக்கார்ட். இந்த விமர்சன சிந்தனைகள் வெறும் கருத்துத் துருத்தல்களாகவன்றி நிஜமான கவித்துவ வரிகளாக அவரது கவிதைகளில் இடம் பெற்றன. இந்த சிந்தனையாளர்கள் தவிர ரில்கே, குறிப்பாக அந்த காலகட்டத்தில் லூ ஆன்ரியாஸ்-சலோமி என்ற பெண்ணின் ஆளுமைப் பிடியில் இருந்தார்.

லூ ஆன்ரியாஸ்-சலோமி(1861-1937) ஒரு ரஷ்ய ராணுவ படைத்தளபதிக்கு மகளாகப் பிறந்தவர். தத்துவம், இறையியல் மற்றும் கலை வரலாறு போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த சலோமி உடல்நலக்குறைவு காரணமாக ஜுரிச் நகரிலிருந்து இதாலிக்கு இடம் பெயர வேண்டியதாயிற்று. ரோம் நகருக்கு வந்த சிறிது காலத்திலேயே அவருக்கு நீட்ஷேவுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். 1882ஆம் ஆண்டு வரை நீட்ஷேவுக்கும் சலோமிக்கும் ஒரு இனிமையான நட்பு தொடர்ந்தது. 1894ஆம் ஆண்டு நீட்ஷேவைப் பற்றிய ஒரு ஆய்வு நூலை வெளியிட்ட போதிலும் அவர் நீட்ஷேவின் காதலை நிராகரித்தார். 1887ஆம் ஆண்டு எஃப்.சி.ஆன்ரியாஸ் என்ற கீழைநாட்டு அறிஞரைத் திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் அவருக்கு பெர்லினில் நிலையாகத் தங்குவதற்கு ஒரு வீடு கிடைத்தது. பெர்லினில் ஹாப்ட்மேன் உட்பட பல எழுத்தாளர்களுடன் சலோமி நல்ல உறவு ஏற்படுத்திக்கொண்டார். இரண்டு நாவல்களை வெளியிட்டதன் மூலம் (பெரும்பாலும் சுயசரிதம் சார்ந்தவை) தன்னை ஒரு நாவலாசிரியராகவும் ஸ்தாபித்துக்கொண்டார். தவிரவும் அவர் பெண்விடுதலை தொடர்பான இயக்க ரீதியான சில கட்டுரைகளையும் வெளியிட்டார்.

ரில்கேவைச் சந்தித்தபோது சலோமிக்கு வயது 36. சலோமிக்கு அருகாமையில் இருக்கும் பொருட்டு பெர்லின் நகருக்கு தன் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டார் ரில்கே. 22வயதான ரில்கேவுக்கு நம்பகமான ஆலோசகராகவும் பிறகு ரில்கேவின் முதல் காதலியாகவும் ஆனார். ஒரு காதலி என்கிற ஸ்தானத்தை விட ரில்கேவுக்கு ஒரு தாயாய் இருந்து அவரது வளர்பிராய இலக்கியக் கல்வியையும் பாதிப்புகளையும் நெறிப்படுத்தியவர் சலோமி. 1900ஆம் ஆண்டுக்குப் பிறகு சலோமியுடனான நெருக்கம் குறைவதை ரில்கே உணர்ந்தார். ஆனால் இதற்குப் பிறகும் தன் மனநெருக்கடிகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் கடிதங்கள் எழுதுவுதற்குமான ஒரு நம்பகமான ஆலோசகராக சலோமி தொடர்ந்து செயல்பட்டார். 1911ஆம் ஆண்டு ஸிக்மண்ட் ஃபிராய்டைச் சந்தித்த சலோமி தீவிரமாக மனோவியல் பகுப்பாய்வு பற்றிய புரிதலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஃபிராய்டுடனான சலோமியின் உறவு இறுதி வரை தொடர்ந்து நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. தவிரவும் மூன்றவாது சர்வதேச மனோவியலாளர்களின் மாநாட்டின் போது ஸிக்மண்ட் ஃபிராய்டைச் சந்திக்கும் வாய்ப்பினை ரில்கேவுக்கு ஏற்படுத்தித் தந்தார். ரில்கே ரஷ்ய இலக்கியங்களிலும் வரலாற்றிலும் ஆழ்ந்த படிப்பும் ஈடுபாடும் கொள்ளவேண்டும் என்றும் சலோமி வற்புறுத்தினார். இருபால் பெயர் தொனிப்பு கொண்ட ‘ரெனே என்ற பெயர்ப்பகுதியை ஆண்தன்மையான ரெய்னர் என்று மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும் என்று ரில்கேவை வற்புறுத்தியவர் சலோமிதான். திருமணமான இந்தப் பெண்ணுடனான தீவிரமான உறவு ஒரு வருடம் நீடித்தது.

சலோமியின் துணையுடன் 1899ஆம் ஆண்டின் வசந்தகாலத்தின் போது ரஷ்யாவுக்கு சென்றார் ரில்கே. அங்கே தால்ஸ்தாயுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். இந்த முறை சலோமியின் கணவரும் அவர்களுடன் பிரயாணம் செய்தார். இந்தப் பயணத்தைப் பற்றி பிறகு நினைவு கொள்ளும் போது “முதல் முறையாகத் தன் வாழ்வில் சொந்த இடத்தில் இருப்பது போலவும், யாருடனும் சேர்ந்திருப்பது போன்ற உணர்வும் ரஷ்யாவின் பரந்த நாட்டுப்புறப் பகுதிகளும் அதன் கிறித்தவக் கோயில்களும் அளித்ததாகப் பதிவு செய்தார் ரில்கே. மீண்டும் அடுத்த வருடமே(1900) ரஷ்யாவுக்கு இன்னொரு பயணம். இந்த முறை சலோமி ரில்கே இருவர் மாத்திரம். இரண்டாம் ரஷ்யப் பயணத்தின் போது போரிஸ் பேஸ்டர்நாக் குடும்பத்துடன் ஒரு அரிய சந்திப்பு ஏற்பட்டது. (சலோமி ரில்கேவைப் பற்றிய தனது நூலை ரில்கேவின் மறைவிற்குப் பிறகு 1928ஆம் ஆண்டு வெளியிட்டார். அதே போல அவர்கள் இருவருக்குமிடையிலான கடிதங்களையும் நூலாக வெளியிட்டார்.)

இதைத் தொடர்ந்த இலையுதிர்காலத்தின் போது உண்டான எதிர்பாராத உத்வேகத்தினாலும் அதன் தொடர்ச்சியினாலும் The Book of Monastic Life என்ற கவிதை நூலைப் படைத்தார் ரில்கே. இந்நூலே பிறகு The Book of Hours என்றழைக்கப்பட்டது. இதில் 67 சிறிய, கையடக்கமான கவிதைத்-தியானங்கள் அடங்கியிருந்தன. இவை ஒரு ரஷ்ய-கிறித்தவ பிக்குவுக்கு சொந்தமானவை என்று வாசிக்கப்பட வேண்டும்.

இதாலிய மறுமலர்ச்சிக்கால ஓவியங்களைப் பரிச்சயம் கொள்ளும் வகையில் ஃபிளாரென்ஸ் நகரில் ஒரு வருட காலத்தைக் கழித்தார் ரில்கே. இந்த அனுபவம் ரஷ்யப் பயணம் அளவுக்கு புத்துணர்ச்சி அளிக்கக்கூடியதாக இல்லையெனினும் ரஷ்யப் பயண அனுபவத்துடன் ஒன்றிணைந்து போகும் தகுதி வாய்ந்ததாய் அமைந்தது. கலையை வாழ்க்கையின் அதிசயம் அல்லது மர்மமாகப் பார்க்கும் தளைகளற்ற பார்வையை வளர்த்துக் கொள்ள ஃபிளாரென்ஸ் நகரம் உதவிற்று. குறிப்பாக ஓவியர்களும் கவிஞர்களும் நிஜமான வெளிப்பாட்டாளர்களாக(Revealers), ஒரு வகையில் சொல்லப் போனால் கடவுளர்களாக ஆகும் நிலை பற்றிய உள்ளுணர்வையும் நம்பும் உணர்வையும் பெற்றார். வாழ்வின் அருமையை அதிகரிக்கச் செய்யும் இவ்வுலக வாழ்வைப் பற்றிய அனுபவத்தையும் சொல்வதால் இந்தக் கவிதைகளில் ஒரு கிறித்தவனுக்கு தூய இறையனுபவமோ அல்லது மத அனுபவமோ கிடைக்க வாய்ப்பில்லை. காரணம் ரில்கேவின் கடவுளும், பிக்குகளும், தேவதூதர்களும் மதம்சாராதவர்கள்.

ரில்கேவின் தாயார் பாதிப்பு செலுத்திய குறுகிய எல்லைகள் கொண்ட கத்தோலிக்க மதக் கட்டுப்பாடுகளை உதறி எறிய நீட்ஷேவின் சிந்தனைகள் உதவின. சகலமும் அனுபவப்பட்டு அறியப்பட வேண்டியது இந்த உலகத்தில்தான்-இறந்த பிறகான உலகில் இல்லை என்பதை ரில்கேவின் சமகாலக் கலைஞர்கள் நீட்ஷேவின் உதவியுடன் நிரூபித்துக் கொண்டிருந் தனர். ரில்கே குறிப்பிடும் கடவுள் மதம் சாராதவர், மேலும் அவர் ‘பிரார்த்த னைகள் என்று குறிப்பிடுவது அவர் தனக்குத் தானே சொல்லிக் கொண்டவை.

1900ஆம் ஆண்டு மே-விலிருந்து ஆகஸ்ட் வரையிலான மூன்று மாதங்களை இரண்டாவது ரஷ்யப் பயணத்தில் கழித்தார் ரில்கே. இந்தப் பயணத்தின் முடிவில் வடக்கு ஜெர்மனியின் ஓவியக் குடியிருப்பு ஒன்றில் ப்ரெம்மன் என்ற இடத்தில் ஒரு ஓவிய நண்பருடன் தங்கிச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ப்ரெம்மன் என்ற நாட்டுப்புற பிரதேசத்திற்கருகில் Worpswede என்ற அந்த சிறிய கிராமத்தில்தான் அவரது எதிர்கால மனைவியையும் மற்றொரு காதலியையும் (பாவ்லா பெக்கர்)சந்தித்தார். தன் மென் உணர்வு களுடன் ஒத்திசைவு கொண்ட கலைஞர்களும் ஓவியர்களும் வாழும் அந்த கலைக்கிராமத்தின் புதிய வாழ்க்கை முறைகள் தன் கவிதை வாழ்வுக்கு இசைவாக இருக்கும் என்று ரில்கே நம்பினார். இந்த ஓவிய கிராமத்தில் ஆகஸ்ட் ரோதான்-இன் மாணவியும் சிற்பியுமான கிளாரா வெஸ்ட்டாஃப் என்ற பெண்ணைச் சந்தித்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். 1901இல் திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. என்ற போதிலும் தொடக்கத்திலிருந்தே இந்தத் திருமணம் அவரது வாழ்க்கையில் ஒரு சொற்பமான நிகழ்வாகத்தான் இருந்தது. இருவருக்கும் குடும்ப வருமானத்தின் பொருட்டு மிக அற்பமான வேலைகளையும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்த நெருக்கடி கணவன்-மனைவி இருவரின் கலை வாழ்க்கையின் ஆன்மாவை அழித்துவிடும் என்று நம்பியதால் நட்பு முறையில் கிளாராவும் ரில்கேவும் மணவாழ்க்கையில் பிரிந்தனர்.

William H.Gass என்ற மொழிபெயர்ப்பாளர்-படைப்பாளர் ரில்கேவின் தனிநபர் உறவுகள் பற்றிய ஒரு சர்ச்சையை அவரது குறிப்பிடத்தக்க நூலான Reading Rilke(1999))வில் பதிவு செய்திருக்கிறார். ரில்கே பெண்களை அணுகும் விதத்தில் ஒரு குறிப்பிட்ட முறைமை இருக்கிறது. அவர்களைக் காதலிக்கத் தொடங்கி அந்தப் பெண்கள் அவர் மீது ஈடுபாடு காட்டத் தொடங்கிய உடன் ரில்கே பின்வாங்கி விடுவது ஒரு மனோவியல் சிக்கல் என்றும் அவர் அந்தப் பெண்களில் அவர் தேடியது ஒரு “காதலியை அல்லவென்றும் தனது அம்மாவையே அவர்களில் தேடினார் என்றும் காஸ் வாதிட்டார். ஆனால் இந்த நோய்க்கூற்றுத் தன்மை பற்றிய சுயப்பிரக்ஞை ரில்கேவுக்கே இருந்திருக்கிறது. 1902ஆம் ஆண்டிலிருந்து 1910வரை அவர் ரோதானின் நேரடி பாதிப்பிலும் பிறகு ஓவியர் செஸான்-இன் பாதிப்பிலும் இருந்தார். ஆனாலும் தன் எந்தவித பிணைப்புகளுக்கும், தனிநபர் உறவுகளுக்கும், சொந்தங்களுக்கும் மட்டுமீறிய மதிப்பளிக்க இயலாது என்றார் ரில்கே. இவ்விதமான உறவுகள் மற்றும் பந்தங்களின் துறப்பினை அவரது கலை வேண்டி நிற்கிறது என்றார். தான் யாரிடமிருந்தும், எதையும் எதிர்பார்க்கவில்லை என்றும் அதனால் முன்பு எப்போதையும் விட மிகப் பெரிய காரியமாக இந்த உலகம் தன்னை நோக்கிப் பாய்ந்து வருகையில் அதற்கேற்ற தெளிவானதும் உறுதியானதுமான பதில்களை அளிக்க முடிந்தது என்றும் கூறினார் அவர். ரில்கே பீத்தோவனின் சொற்களை மேற்காட்டினார்:

எனக்கு நண்பர் எவருமில்லை. நான் என்னுடன் தனியாகத்தான் வாழ வேண்டும். ஆனால் என் கலையில் கடவுள் வேறு எவரிடமும் விட மிக நெருக்கமாக இருக்கிறார் என்பதைப் பற்றிய அறிதலுடன் இருக்கிறேன்.

பின்வாங்கல் என்பது பிரதானமாய் ஒரு அணுகு முறையாக ரில்கே என்ற மனிதனிடமும் கவிஞனிடமும் சரிசமமாய் இருந்தது.

இளம்பெண்களின் மரணம் ரில்கேவை சில சிறந்த நினைவாஞ்சலிக் கவிதைகளை எழுத வைத்திருக்கிறது. ஒன்று Requiem என்ற கவிதை. இந்தக் கவிதை ஓவியர்களின் கிராமத்தில் ரில்கே கிளாரா வெஸ்டாஃப்-உடன் சந்தித்த Paula Medorshon Becker என்ற இளம் பெண் ஓவியரின் நினைவில் எழுதப்பட்டது. கிளாராவும் பாவ்லாவும் மிக நெருக்கமான நண்பிகளாகவும் இருந்தனர். பாவ்லா பெக்கர் ஒரு குறிப்பிடத்தக்க ஜெர்மன் ஓவியராக இருந்தார். பாவ்லா பெக்கருக்கு ஓவியர் Otto Medorshon என்பவருடன் திருமணம் ஆனபின் ரில்கே கிளாராவிடம் தன் விருப்பத்தை வெளிப் படுத்தினார். ஆனால் இருவர் மீதுமே ரில்கே காதல் வயப்பட்டிருந்தார். பாவ்லாவின் வாழ்க்கைத் திசை வேறுமாதிரியாகச் சென்றது. அவர் திருமணம் செய்து கொண்ட Otto Medorshon ஒரு பெரிய ஓவியர். Otto Medorshon அந்த ஓவிய இயக்கத்தின் இயக்குநர். பாவ்லா தன் கணவரின் நிழலில்தான் வாழ முடிந்தது. பிறகு வீட்டு வேலைகளில் மூழ்கிப் போனவரானார். பாவ்லாவுக்கு ஏற்பட்ட அவரது கலைப் பயணத்திற்கான இக்கட்டைச் சரிசெய்ய வேண்டி ஒரு வருடம் வீட்டு வேலைகளிலிருந்து விடுவித்துக் கொண்டு பாரிஸ் நகருக்குச் சென்று தன் ஆத்மதிருப்திக்கு ஓவியங்கள் வரைந்து கொண்டிருந்தார். ஆனால் அந்த வருடமே அவரது கணவர் ஓட்டோ மெடோர்ஷான் மற்றும் பாவ்லாவின் பெற்றோர்கள் கடிதங்கள் எழுதி அவர் வீடு திரும்ப வேண்டுமென்றும், வீட்டு வேலைகளையும் ஒரு மனைவிக்கான பொறுப்புகளையும் ஏற்றுச் செய்ய வேண்டுமென்றும் நச்சரிக்கத் தொடங்கினர். இந்த வேண்டுதல்களையும், கெஞ்சுதல்களையும் நிராகரிக்க இயலாத பாவ்லா Worpswede திரும்பினார். கொஞ்ச நாட்களிலேயே கர்ப்பமாகி 1907ஆம் ஆண்டு ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து குழந்தைப் பிறப்பில் இறந்து போனார். Worpswedeஇல் இருந்த காலங்களில் ரில்கே பாவ்லாவுடன் நீண்ட நேரம் கலை மற்றும் ஓவியங்கள் பற்றிய விவாதங்கள்-பகிர்தல்களில் ஈடுபட்டிருப்பினும் கூட அவரது ஓவியங்களை சரிவரப் புரிந்து கொள்ளவில்லை. வெளிப்படை யாகவே பாவ்வலா இறந்த வருடத்தின்(1907) கோடை காலத்தில் நடத்தப்பட்ட செஸான்-இன் எல்லா ஓவியங்களும் அடங்கிய கண்காட்சிக்குச் சென்றார். செஸானின் இறுதிக்கட்ட ஓவியங்களைப் பார்த்த பிறகுதான் பாவ்லா எவ்வளவு சிறந்த ஓவியர் என்பது ரில்கேவுக்கு உதயமாயிற்று. பாவ்லாவின் இறப்பு அவருக்குள் மிக ஆழ்ந்த அதிர்ச்சிகளையும் தாக்கங்களையும் ஏற்படுத்தியது.

1902 ஆம் ஆண்டு பாரிஸ் நகருக்கு வருவதற்கு ஒரு மாதம் முன்னர் Book of Images என்ற கவிதை நூலை வெளியிட்டார். இக்கவிதைகள் 1898ஆம் ஆண்டுக்கும் 1901ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் எழுதப் பட்டவை. இக்கவிதைகளில் ஒருவித நியோ-ரொமாண்டிக்தன்மை காணப் பட்டது. அவற்றின் உச்சபட்சமான சில கவிதைகளில் விவரிப்புகளையும் குறியீடுகளையும் பிணைக்கும் தன்மையும் காணப்பட்டது. இந்த மாதிரியான கவிதைகளை அப்பொழுதைக்கப்பொழுது எழுதிவந்தார். இதன் இரண்டாவது பதிப்பில் கூடுதலாக 37 கவிதைகளைச் சேர்த்தார். ஆனால் பாரிஸ் நகர் வந்தடைந்தவுடன் பிரெஞ்சுக் கவிஞர் பாதலெர் மற்றும் சிற்பி ரோதான் ஆகியோரின் பாதிப்பிலும் பிரெஞ்சு உழைப்பின் அடிப்படையிலும் பிரெஞ்சு மொழியின் புறவயத்தன்மையிலும் மிகவும் வித்தியாசமான கவிதைகளை எழுதிப்பார்க்கத் தீர்மானித்தார்.

1902ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்பு நிறுவனம் ஒன்றுக்காக ஆகஸ்ட் ரோதான்-இன் வாழ்க்கை பற்றிய சிறுநூல் ஒன்றை எழுதும் பணியை மேற்கொண்டு பாரிஸ் நகருக்குச் சென்றார். அவரது மாணவியும் தனது முன்னாள் மனைவியுமான கிளாரா வெஸ்டாஃபின் மூலம் ரோதான் பற்றி அவர் அறிந்து வைத்திருந்த தகவல்கள் ரில்கேவுக்கு ரோதானிடம் அளவற்ற மதிப்பை உண்டாக்கியிருந்தன. மேலும் அந்தக் காலகட்டத்தில் ரோதான் உலகப் பிரசித்திபெற்ற சிற்பியாக விளங்கினார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஒப்பிட்டுப் பார்க்கையில் ரில்கே இப்போதுதான் எழுதத் தொடங்கியிருக்கும் ஒரு ஆரம்ப கட்டக் கவிஞர். ரோதான் என்ற கலைஞனையும் ரோதான் என்ற மனிதனையும் நெருங்கிப் புரிந்து கொண்டு தகவல்களைப் பதிவு செய்ய அவருக்கு அருகாமையில் இருப்பதற்காக பாரிஸ் பயணம் உதவிற்று. ஹெமிங்வே போன்ற பிற எழுத்தாளர்கள் பாரிஸ் நகர் பற்றிக் கொண்டிருந்த ரொமாண்டிக் மனப்பதிவு சிறிது கூட ரில்கேவுக்கு இருக்கவில்லை என்பது பிறகு தெரிந்தது. வாழ்க்கைக்கும் கலைக்குமிடையிலான எதிரிடைகளைப் பற்றிய அதீதப் பிரக்ஞையுடனிருந்த ரில்கேவுக்கு ரோதான் அவ்விரு எதிரிடைகளை இணைப்பவராகத் தோன்றினார்.

1902லிருந்து அடுத்த 12 வருடங்களில் ரில்கேவுக்கு பாரிஸ் நகர்தான் பூகோள மையமாக இருந்தது. ஆனால் 1903ஆம் ஆண்டு தொடங்கி அடிக்கடி பிற ஐரோப்பிய நகரங்களுக்கும் நாடுகளுக்கும் சென்று திரும்பியதற்கான காரணம் பாரிஸ் நகரின் பிறர் மீது அக்கறையற்ற வாழ்க்கைதான். அதன் குரூரத்தைத் தாங்கவியலாமல் மத்திய இதாலியின் ஒரு பகுதியான வியரெஜியோ பகுதியில் தங்கினார். வியரெஜியோவில் தங்கியபோதுதான் The Book of Hours இன் இறுதிப் பகுதியான The Book of Poverty and Death The Book of Hourஐ எழுதினார். 1903ஆம் ஆண்டு ரோம் நகரிலும் 1904ஆம் ஆண்டு ஸ்விட்சர்லாந்திலும் இருந்தார். 1906லும் 1908லும் திரும்பத் திரும்ப இதாலியத் தீவான கேப்ரிக்குச் சென்றார். பிறகு ஃபிரான்சின் தென் பகுதி, ஸ்பெயின், எகிப்து என பல பயணங்கள் மேற்கொண்டார்-நண்பர்களைச் சந்திக்க ஜெர்மனிக்கும் ஆஸ்திரியாவுக்கும் சென்று வந்தார்.

அவரே தேர்ந்தெடுத்துக் கொண்ட இரண்டாவது வீடாக பாரிஸ் அமைந்தது என்று சொல்வது மிகையாகாது. அதன் காட்சிபூர்வமான தன்மைக்கும் அறிவார்த்த சவால்களுக்கும் அது ரஷ்யாவுக்கு சமமாக ரில்கேவுக்கு இருந்திருக்க வேண்டும். சௌகரியங்களும் புலன் தூண்டுதல்களும் நிறைந்த கலாச்சாரத் தலைநகராக பாரிஸ் அவருக்குத் தோன்றவேயில்லை. பாரிஸ் நகர் வயோதிகர்களாலும், நோயாளிகளாலும், இறந்து கொண்டிருப்பவர் களாலும், முகமற்றவர்களாலும், வீடற்றவர்களாலும் நிறைந்த மனிதமை இழந்த நகரமாக இருந்தது ரில்கேவுக்கு. அது பீதியின், வறுமையின், மரணத்தின் தலைநகரமாய் காட்சியளித்தது. கலை மற்றும் படைப்பாக்கம் பற்றிய ரில்கேவின் கருத்துருவங்கள் அபார வளர்ச்சி பெற்றது ரோதான்-உடன் ஏற்பட்ட நெருக்கத்திற்கு பிறகு என்பதை ரில்கேவே ஒப்புக் கொண்டார். ரோதானுடனான இந்த நட்பு 1906ஆம் ஆண்டு வரை நீடித்தது. “இடைவிடாத கடின உழைப்பு என்ற கலையறம் பற்றிய தன் கருத்துக்களை இளம் ரில்கேவுக்கு தனது ஓய்வற்ற சிற்ப வேலைகள் மூலம் ரோதான் புரிய வைத்தார். ரோதானின் அணுகுமுறை மரபான படைப்பு உத்வேகம் கலைஞனை வந்தடையும் வரை கலைஞன் காத்திருக்க வேண்டும் என்கிற கருத்துருவாக்கத்துடன் அடிப்படையில் முரண்பட்டது. சார்ட்(ஸ்) திருக் கோயிலின் பொக்கிஷங்கள், லூவர் மியூஸியத்தின் பொக்கிஷங்கள் பற்றி சிறந்த அணுகல்கைளத் தந்தார் ரோதான். இலக்கிய முன்மாதிரியாக ரில்கே வுக்கு இருந்தவர் சார்ல்ஸ் பாதலெர். ரோதான் அளித்த உணவுக்கும் உறைவிடத்திற்கும் கைம்மாறாக அவருக்கு வரும் கடிதங்களுக்கு பதில் எழுதும் உதவியாளராக இருந்து பணி புரிந்தார் ரில்கே. ஆனால் ஒரு தவறான புரிந்து கொள்ளலினால் தவிர்க்க இயலாத பிரிவு இருவருக்கும் ஏற்பட்டது. குறிப்பாக ஒரு கடிதத்திற்கான பதிலை ரோதானைக் கேட்பதற்குப் பதிலாய் தானே முடிவெடித்து எழுதிவிட்டார் ரில்கே.

பாரிஸ் காலகட்ட வாழ்க்கையின் போது ரில்கே புதுவிதமான உணர்ச்சி வெளிப்பாட்டுக் கவிதைகளை உருவாக்கி வளர்த்தெடுத்தார். இவை பிறகு “வஸ்துக் கவிதைகள் (அ) “காணும் கவிதைகள் என்றும் அழைக்கப்பட்டன. ரில்கே தனது கவிதை இல்லாக் காலங்களைப் பற்றியும் கவிதை உருவாகும் மனநிலை வாய்க்காதிருப்பது பற்றியும் ரோதானுடன் பகிர்ந்து கொண்டார். பாரிஸ் நகரின் Jardin des Plantesக்கு சென்று அங்கே ஏதோ ஒன்றை- எடுத்துக் காட்டாக ஒரு விலங்கினைக்-கூர்ந்து பார்த்து அதிலிருந்து ஏன் ஒரு கவிதையை உருவாக்கக் கூடாது என்று கேட்டார் ரோதான். இந்த அறிவுரையை மதித்து ரில்கே Jardin des Plantesக்கு சென்று ஒரு சிறுத்தையைப் பார்த்ததன் விளைவாய் உருப்பெற்றதுதான் Panther என்ற அதிகம் மேற்கோள் காட்டப்படும் ஓர் அழகிய கவிதை.

இவற்றில் பல வெற்றிகரமான கவிதைகள் காட்சிக் கலைப் படைப்புகள் சிலவற்றின் கற்பனை ரீதியான சொற்களால் ஆன மொழிபெயர்ப்புகளாய் அமைந்தன. பிற கவிதைகள் நிலக்காட்சிகளையும், உருவப்படங்களையும், விவிலிய மற்றும் புராணிக அம்சங்களை கவிதைக் கருவாகக் கொண்டிருந்தன. 1907-08ஆம் ஆண்டு New Poems என்ற பெயரில் வெளிவந்த இந்தக் கவிதைகள் பாரம்பரிய ஜெர்மன் ‘லிரிக் கவிதையிலிருந்து முற்றிலும் தளையறுத்துக் கொண்டவை மட்டுமல்லாது நவீன ஜெர்மன் கவிதைக்கு புதிய திசைகளைக் காட்டின. அவ்வளவு தீவிர எல்லைகளுக்கும் நுட்பங்களுக்கும் ரில்கே தனது மொழியை நுண்மைப்படுத்தி வனைத்து வடிவமைத்துக் கொண்டதால் அப்போது புழங்கிய ஜெர்மன் இலக்கிய மொழியிலிருந்து முற்றிலும் புத்துணர்ச்சி கொண்டதாய் அமைந்திருந்தது. ஒரு கடிதத்தில் செஸானின் கலை முறை பற்றிக் குறிப்பிடுகையில் ரில்கே எழுதிய வார்த்தைகள் Using up of love in anonymous labour ரில்கேவின் கவிதைக் கலைக்கும் முற்றிலும் பொருந்தக் கூடியதாய் இருந்தது. making objects out of fearஎன்றும் சலோமிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் 1903ஆம் ஆண்டு குறிப்பிட்டார்.

New Poems தொகுதிக்கு இணையானதொரு உரைநடைப் படைப்பாக எழுதத் திட்டமிட்ட ரில்கேவின் நாவலின் பெயர் The Notebook of Malte Laurids Brigge . 1904ஆம் ஆண்டிலிருந்து இந்நூலை எழுதத் தொடங்கினார். கவிதைகளுக்குப் பின்னாலிருந்து இந்நூல் ஒரு கழுகு போல வட்டமிட்டுக் கொண்டிருந்தது. இது ஒரு தனிநபரைப் பற்றிய-குறிப்பாக பாரிஸ் நகரில் ஹோட்டல் அறையில் வசிப்பவன் ஒருவனின் பயங்கள், பீதிகள் பற்றிய பதிவாக இருக்கிறது. New Poems சிம்பலிஸ்டுகளின் “தூய கவிதைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்குமானால் ஒரு எக்ஸிஸ்டென்ஷியலிஸ்டின் உரைநடை எழுத்தாக அமையும் அந்த குறிப்பேடு. புலம்பெயர்ந்து பாரிஸ் நகர் வந்து வசிக்கும் ஒரு டேனிஷ் நாட்டவரின் நினைவுக் குறிப்புகளாய் விரிகிறது அந்த நூல். ரில்கேவின் பிரதான கருப்பொருள்களான காதல், மரணம், குழந்தைப் பருவக்காலத்து பயங்கள், பெண்களைப் போற்றுதல், மற்றும் கடவுள். மேலும் பாரிஸ் வாழ்க்கையைப் பற்றி கவிதையில் எழுத இயலாத விஷயங்களையெல்லாம் உரைநடையில் பதிவு செய்ய முடிந்தது. குறிப்பாக பாரிஸ் நகரில் அவர் கண்டவை அவரை ஏன் மிரள வைத்தன என்பதைப் புரிந்து கொள்ளும் ஒரு முயற்சியாக இந்த உரைநடைப் படைப்பு அமைகிறது. முகங்கள் தேய்ந்தழியக் கூடியவை என்பதை ரில்கே உணர்ந்து கொண்டதும் பாரிஸ் நகரில்தான். கடந்த காலங்களில் ஒரு வாழ்க்கை முழுவதற்கும் நீடிக்கக் கூடிய முகங்கள் இருந்தன. நவீன காலங்களில் அவை மெலிதாகத் தேய்ந்து முகமற்ற முகங்களாகி அவற்றின் பின்புறம் இருப்பவை தெரிய ஆரம்பிக்கின்றன. தொழில் புரட்சியைப் பற்றியும் அதன் தயவால் கிடைத்த தயார்-மரணங்களைப் பற்றியும் ஆழ்ந்து தியானித்தார்.

ஒரு விநோத வாழ்க்கை முறையை பாரிஸ் நகர் அவருக்கு வாழக் கற்றுத் தந்தது. செல்வந்தர்களின் கோட்டைகள் மற்றும் அவர்களின் வீடுகளுக்கு வருகை தரும் வழக்கம் ரில்கேவுக்கு உண்டு. இவை தவிர்த்து அந்தப் பெரிய நகரில் போதுமான வருமானமின்றி ஒரே ஒரு மரியாதையான உடையை மாத்திரம் உடுத்திக் கொண்டு, மிகவும் சந்தடியும் சப்தமும் நிறைந்த ஒரு தெருவில் ஒரு மிகச்சிறிய வாடகை அறையில் தங்கியபடி காலம் கழித்தார். ஏனென்றால் ஓசையின்மையை விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது. மிகச் சாதாரண பால்பொருட்கள் விற்கும் ஒரு உணவுவிடுதியில் தனியாக உணவருந்தியபடி, ஒரு வெளியாளாக, வேட்டையாடப்படும் விலங்காக அவர் பாரிஸில் வாழ்ந்தார். அவர் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கினால் அதன் பக்கத்து அறையில் வசிப்பவன் இரவில் மிக அகாலமாக வயலின் வாசிப்பான். இந்த அனுபவம் அவருக்கு பல நகரங்களில் ஏற்பட்டிருக்கிருக்கிறது:

விநோத வயலினே நீ என்னைப் பின்தொடர்கிறாயா?

எத்தனை தூரத்து நகரங்களில் ஏற்கனவே

உன் தனிமை இரவு என்னிடம் பேசியிருக்கிறது?

நூற்றுவர் உன்னை வாசிக்கின்றனரா? அல்லது ஒரே ஒருவரா? . . .

தம் பயத்தில் உன்னை வாசிக்கச் செய்து

இப்படி ஏன் எப்போதும் நான் அத்தகு மனிதர்களுக்கு அண்டையில்

இருப்பவனாகிறேன்: வாழ்வின் கனத்தன்மை

வஸ்துக்களின் கனத்தை விடக் கூடுதலானது.

ரில்கே இப்போது வஸ்துக்களில் பொதிந்த கனத்ததன்மையை கவனிக்கத் தொடங்கினார். ஒரு பார்வையற்றவனின் ஊன்றுகோலில் எத்தகு கோபமான, தீங்குத்தன்மையான சக்தி நிறைந்திருக்கிறது? மரச்சாமான்களுடன் அமைந்த ஒரு அறையை ஸ்வீகரித்துக் கொள்ளும்போது அதில் உள்ள நாற்காலியில் எத்தனை தொற்றிக்கொள்ளும்படியான மனக்கசப்பு நிரம்பியுள்ளது?-குறிப்பாக நாற்காலியின் பளபளக்கும் முதுகில், தோல்வியடைந்த பல உள்வயமான மனிதர்கள் தமது தலைகளைச் சாய்த்திருக்கின்றனர்? ஒரு நடுத்தர வர்க்க வாழ்வறையில் கொஞ்சமும் பொருத்தமற்றவராகிவிடுகிறார் ரில்கே. இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக ரில்கேவின் The Soliltary Personஎன்ற கவிதையை மேற்காட்டலாம்.

பாரிஸ் வாழ்க்கையின் முதல் நான்கு வருடங்களில் ஒரு தீவிரக் கவிதை நூலை எழுதுவதில் முனைந்தார். The Book of Images என்ற அத்தொகுதியில் சித்திரங்களைப் பற்றிய ஒரு இலக்கிய நூலை எழுத முயலவில்லை. அது ஒரு ஓவியத்தன்மையான நூல்-இதில் ஓவியத்தின் ஒழுங்குகளையும் சட்ட திட்டங்களையும் ரில்கே கைக்கொள்கிறார். இத் தொகுதியில் இடம்பெறும் From Childhood என்ற தலைப்பிலான கவிதை சிறுவயதில் அவர் அம்மாவுடனான பிணைப்பை சித்தரிக்கிறது- இதில் ஓவியர் ரெம்ராண்ட் எப்படி தன் ஓவியத்தை அமைப்பாரோ அப்படித் தன் கவிதையை அமைத்திருக்கிறார் ரில்கே. இந்தக் கவிதையில் ஒரு அம்மாவும் மகனும் உள்ளனர். அறையில் எத்தனையோ மரச்சாமான்கள் இருந்த போதிலும் ஒரு கண்ணாடித் தம்ளர் மீதும் ஒரு கரியநிற பியானோவின் மீது மாத்திரம் தன் குவிமையத்தை வைக்கிறார். தாயார் அவரது பெரிய விரல்களில் மோதிரங்களுடன் பியானோவை வாசிக்க ஆரம்பிக்கிறார்-சிறுவன் கவனிக் கிறான்.

இதை எழுதுவதற்கு அவர் நிறைய விலை கொடுக்க வேண்டியிருந்தது. ஏறத்தாழ 10 வருடங்கள் கவிதையில்லாக் காலத்தைக் கடத்த வேண்டி வந்தது. இந்த காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக எழுதுவதையே நிறுத்து விடலாம் என்று கூட யோசித்துக் கொண்டிருந்தார். New Poems தொகுதிக்குப் பிறகு அவர் குறிப்பிடத்தக்க கவிதை என்று எதையும் எழுதவில்லை. 1902ஆம் ஆண்டுக்குப் பிறகு 1912ஆம் ஆண்டுதான் கவிதை வந்தது.

The Notebook of Malte Laurids Brigge நாவலை எழுதி முடித்த 1910ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் அவரின் பாரிஸ் நகர வாழ்க்கை ஒரு முடிவுக் கட்டத்தை நெருங்கியது. அடுத்த நான்கு வருடங்களில் அவர் சுமார் 18 மாதங்களே பாரிஸில் தங்கினார். நிலைகொள்ளாத்தன்மையும், மனச்சோர்வும், உள்மன உளைச்சல்களும் அவரை ஒரு நாடு அடுத்த மற்றொரு நாடாக அலைய வைத்தன. புதிய பிராந்தியங்களை ஆராயும் பதற்றத்தில் அவர் வடக்கு ஆப்பிரிக்க கண்டத்தின் அல்ஜியர்ஸ், டூனிஸ், மற்றும் எகிப்து போன்ற பிரதேசங்களில் அலைந்து கொண்டிருந்தார். 1912லிருந்து 1913வரை ஸ்பெயனில் வசித்தார். இந்த வருடங்களின் ஆழ்ந்த நம்பிக்கையின்மை மற்றும் காரியமுனைவழிவுகள் இவற்றுக்கிடையே ஒரு நிகழ்வு அவரது இலக்கிய வாழ்க்கையையே மாற்றியமைக்கும்படியாக அமைந்தது. Princess Marie of Thurn and Taxis என்ற இளவரசி டால்மேசிய கடற்கரைப் பகுதியில் தனது டியூனோ கோட்டையில் ரில்கே தங்கி எழுதுவதற்கு வகை செய்தார். 1912ஆம் ஆண்டு டியூனோவில் அவர் இரங்கற்பாடல்களின் தொடர் ஒன்றினை எழுதத் தொடங்கினார். டியூனோ இரங்கற் பாடல்கள் ரில்கேவின் உச்சபட்ச கவிதைச் சாதனை என்று கருதப்படுகிறது. ஆனால் டியூனோ இரங்கற் பாடல்கள் எழுதி முடிக்கப்பட அடுத்த 10 ஆண்டுகள் தேவைப்பட்டன.

1914ஆம் ஆண்டு முதல் உலகப்போர் தொடங்கியவுடன் ரில்கே லீப்ஸிக் நகரில் சிக்கிக் கொண்டார். ராணுவ சேவைக்கு அழைக்கப்பட்டு 7 மாதத்திற்குப் பிறகு சிவில் வாழ்க்கைக்குத் திரும்பிய போதிலும் அவர் மியூனிக் நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலேயே இருக்க வேண்டி வந்தது. தொடக்கத்தில் 5 தேசாபிமான பாடல்களை எழுதிய போதிலும் போர் முடியும் தறுவாயில் ஜெர்மானியப் போர் யத்தனங்களுக்கு எதிராக அவர் மனம் திரும்பியது.

1919ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஸ்விட்சர்லாந்து நாட்டில் உரையாற்று வதற்கான அழைப்பினை ஏற்றார். இதாலிக்கும் ஜெர்மனிக்கும் வந்து போதல்களைத் தவிர்த்து அவர் தன் இறப்பு வரை ஸ்விட்சர்லாந்திலேயே இருந்தார். இந்த காலகட்டத்தில் அவர் தொடங்கி வைத்து இன்னும் முற்றுப்பெறாதிருக்கும் அந்தக் கவிதைத்(டியூனோ எலிஜி) தொடரை முடித்துவிட ஒரு புகலிடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். 1921ஆம் ஆண்டின் கோடை காலத்தில் அவர் “முஸோவைக் கண்டுபிடித்தார். அது வசிப்பதற்குத் தகுதியற்ற ஒரு மத்தியகாலக் கோட்டை. ஸ்விஸ் புரவலரின் விருந்தினராக ரோன் பல்லத்தாக்கில் அமைந்த Château de Muzot வில் குடியேறினார். தெற்கில் இதாலிக்கும் மேற்கில் பிரான்ஸ் தேசத்திற்கும் இடையில் அமைந்தது இந்தப் பிரதேசம். 1922ஆம் ஆண்டு பெப்ருவரி மாதத்தில் சில நாட்களிலேயே அவர் 1912இல் தொடங்கிய டியூனோ இரங்கற்பாடல்களை மீதிப் பகுதிகளை எழுதி முடித்தார். அவரது படைப்பாக்கத் திறன்கள் மீண்டும் அவரின் கட்டுப் பாட்டுக்குள் வந்தன. இந்தக் கவிதைத் தொடர்ச்சியை அவரது நலவிரும்பியும் உறைவிடம் அளித்து உதவியவருமான இளவரசி மேரிக்கு அர்ப்பணம் செய்தார். டியூனோ என்ற அவரது கோட்டையில் தொடங்கப்பட்டதால் ஒரு நன்றி உணர்வுடன் “டியூனோ எலிஜி என்றே பெயரிட்டார். முஸோவிலியே எதிர்பாராத விதமாகவும் ஏறத்தாழ யத்தனம் ஏதுமின்றியும் Sonnets to Orpheus என்ற தலைப்பிலான அற்புதமான கவிதைகளில் 55 எழுதி முடித்தார். 1922 பெப்ருவரியில் நிகழ்ந்த இந்தக் கவிதைப் பெருக்கெடுப்பு அவரது 10வருடக் காலக் காத்திருப்பு வீண் போகவில்லை என்பதை நிரூபணம் செய்தது.

இந்த நீண்ட கனமான கவிதைகளைத் தவிர சிறியதும் எளிமையானதுமான சில பாடல்களை அவர் தங்கியிருந்த முஸோவின் முன் விரிந்த Valais பள்ளத்தாக்கிற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக எழுதினார். முஸோ அவரது வீடாகத் தொடர்ந்து இருந்தது. ஆனால் அவரது பயணங்களை இப்போது ஸ்விட்சர்லாந்துக்குள் வைத்துக் கொண்டார். நண்பர்களைப் பார்க்கச் சென்றார்-அவரது பிரசித்தி பெற்ற கடிதங்களை எழுதுவதைத் தொடர்ந்தார். 1925ஆம் ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் பாரிஸ் நகருக்குச் சென்றார்-அதன் இலக்கிய வாழ்க்கையுடன் மிக நெருக்கமான தொடர்பைப் பேணிவந்தார். அவரது பழைய நண்பர்களான அந்ரே ழீத் மற்றும் பால் வெலரியும் மற்றும் புதிய ஆர்வலர்களும் அவருக்கு ராஜரீகமான வரவேற்பளித்தனர். அவர் வாழ்நாளிலேயே முதல் மற்றும் கடைசியாக ஐரோப்பியப் பெருநகரில் அமைந்த இலக்கிய சீஸனில் தன்னை ஒரு மையமாகக் கண்டார். ஆனால் இந்த வருகையின் சிரமங்கள் அவரது நொய்மையான ஆரோக்கியத்தை மிகக் கடுமையாகப் பாதித்தது. ஆகஸ்ட் 18ஆம் தேதி யாருக்கும் சொல்லிக் கொள்ளாமலேயே பாரிஸ் நகரிலிருந்து கிளம்பிச் சென்றார். அவர் 1923ஆம் ஆண்டிலிருந்தே உடல்நலம் சரியில்லாமலிருந்த போதிலும் அதன் காரணம் இன்னதென்று கண்டுபிடிக்க முடியாமலேயே இருந்தது. 1926ஆம் ஆண்டு அவரது இறப்புக்கு சில வாரங்களுக்கு முன்னரே அவரது நோய் குணப்படுத்த வியலாத லுக்கேமியா என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஜெனிவா ஏரியின் கரையில் அமைந்த Territet என்ற உடல்நலக் காப்பகத்தில் அவர் காலமானார்.

ரில்கே பல சமயங்களில் பரிசுகளைப் பெறுபவராக இருந்திருக்கிறார். அதில் குறிப்பிடத்தக்கது லாஜிக்கல் பாஸிட்டிஸவிச தத்தவவாதியான இளம் லுட்விக் வேன் விக்கென்ஸ்டீன் தன் பெயரை அறிவிக்காமல் அளித்த 20,000 க்ரோனன் தொகை. ஆனால் அத்தனை நலவிரும்பிகள் இருந்த போதும் அவர் என்றுமே பணவிஷயத்தில் பாதுகாப்பான உணர்வுடன் இருந்ததில்லை. தனக்கென்று ஒதுங்க ஒரு வீடு இருந்ததில்லை. அவரது கடைசி தனிமை வருடங்களை வாழ்ந்து முடித்த “முஸோவே கூட Weiner Reinhart என்பவருக்குச் சொந்தமானது. அதை ரில்கேவின் பொறுப்பில் அவரது வாழ்நாளுக்குப் பயன்படுத்திக் கொள்ள மட்டுமே ஒப்புவித்திருந்தார்.

உள்மன அமைதியையும் தனிமையும் தேடி அலைந்து கொண்டிருந்த ஓய்வில்லா நித்திய பயணி அவர். அவரது உள்மன உலைச்சல்களின் வெளிப்பாடுகளே அவரின் யாத்திரைகளாயின. புற உலகில் அவர் தேடியது உள்ளார்ந்த ஒத்திசைவின் ஒரு நிலை-ஆனால் இந்த ஒத்திசைவின் நிலையை அவர் கவிதை என்ற ஊடகத்தின் வாயிலாகவே எட்ட முடிந்தது. ஆனால் இது ஒரு நழுவலானதும் பிடிகொடுக்காததுமான நிலை. அதன் உக்கிரம் உள்வயமாய் அடர்த்தியும் செறிவும் பெற்றது. இக்காரணத்தினாலே கவிஞன் அதை அடைய முயலும் போது தொடர்ச்சியான தோல்விக் குள்ளாகிறான். அதிர்வுகளின் ஸ்தாயியை கவிஞன் விளிம்பெட்டித் தொட்டவுடன்தான் விஷயங்கள் ஆரம்பமாகும். முடுக்கி வைக்கப்படும் கணமும் அதிர்வுகளின் ஸ்தாயியும் ஒன்றுக்கொன்று ஒத்திசைவு கொண்டதாய் இருந்தால் மாத்திரமே புற உலகுகள் மற்றும் அக உலகுகளின் அதிர்வுகள் ஒன்றுபடும். கவிஞனின் உள்வயமான ஆன்டென்னா ஒரு ராடார் திரையைப் போல் இயங்க வேண்டும். ஒரு ‘ஸ்கேன் வெளியில் எங்கோ இருக்கும் கவிதையின் இருப்பிடத்தையும் கவிப்பிரக்ஞையின் ஓடுபாதையில் அது வெட்டிக் கொள்ளும் சாத்தியத்தையும் சொல்லும். கவிஞன் தன் உள் மனத்திரையில் நிகழ்சிகளை ஆராய்ந்து படித்துணர்ந்து அர்த்தம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்தப் பெரிய வெளிச்சச் சிதறல்கள் எப்போதும் முன்னெச்சரிக்கை இல்லாமல் தோன்றி மறையக் கூடியவை. அப்பொழுதுதான் மறைவாய்ப் படிந்திருக்கும் அனுபவ அடுக்குகளைப் பற்றிய பிரக்ஞையும் அறிதலுமே தோன்றுகின்றன. இவ்வனுபவ அடுக்குகள் கவிதையின் உருவாக்கத்தில் நனவிலி நிலையில் தொழிற்பட்டிருப்பவை. இந்த வெளிச்சச் சிதறல்களை ரில்கே quiet flashesஎன்றழைத்தார்.

ரில்கே, ஆழமானதும் இடைவெட்டுக்கள் இல்லாததுமான ஒரு நிச்சலனத்தைத் தேடிக் கொண்டிருந்ததால் அதைக் கவிதையின் ஆழ்குரல்களில் மாத்திரமே கண்டுபிடிக்க முடியும் என்று நம்பினார். மேலும் அந்த நிச்சலனத் திலிருந்துதான் கவிதையின் குரல் எந்தத் தடைகளும் கட்டுப்பாடுகளுமின்றி தன்னிச்சையாக வெளிப்பாடு காண்பதற்கு இயலும். ஆனால் நிச்சலனம் நிறைந்த தனிமை அவ்வளவு எளிதாய் கிடைப்பதில்லை. இது கவிஞனின் பதற்றத்தை அதிகரிக்கிறது. ரில்கேவிலும் சரி, அவர் மொழிபெயர்த்த பாதலெர் மற்றும் பால் வெலேரியிலும் சரி, கவிதை என்பது நுட்பமும் தூய்மையும் ஆக்கப்பட்ட சுயப்பிரக்ஞையின் கலையாக ஆகிறது.

ரில்கேவைப் பொறுத்தவரை ஞாபகம் ஒரு தனித்த செயல்பங்கினை ஏற்கிறது. அது ஒரு பண்புநிலை மாற்றத்தக்க ஒரு கருவியாக செயலாற்றுகிறது. அனுபவத்திற்குள் வந்து அனுபவமயமான விஷயங்களும் உட்கிரகிப்பட்ட விஷயங்களும் பிறகு கவிதையில் விவரிக்கப்படும் விஷயங்களாக மாற்றப்படும் தகுதியைப் பெறுகின்றன. மீள்வாழ்தலில் அனுபவத்தைப் பிரித்து ஒரு படி உயர்த்தி கவிதையாக்கும் இறுதிக் காரணிகளாகவே வார்த்தைகள் மாறுகின்றன.

இது தவிரவும் ரில்கே கவிதையாக்கம் பற்றிக் கூறும் கருத்துக்கள் ரஸவாதம் பற்றிய கருத்துக்களுடன் ஒத்துப் போகின்றன. கவிஞனால் பெறப்பட்ட விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட வேதிமாற்றத்தை அடைந்த பிறகே அவன் மனதிலிருந்து கவிதையாக வெளிப்படுத்தப்பட அனுமதிக்கப்படுகின்றன. உள்வயமாக நிகழும் இந்த உருமாற்றம் என்பது அனுபவரீதியாக அர்த்த முள்ளதற்கும் அற்பமானவற்றுக்கும் உள்ள வேறுபாட்டினை அழுத்தமாக்கி ஒரு கவிதையின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.

ஆனால் இப்படிப்பட்ட கவிதைக்காக காத்திருக்கும் காலங்களில் ஒரு கவிஞன் என்ன செய்ய வேண்டும்? பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். அறையில் குறுக்கும் நெடுக்கமாக நடக்கலாம். இரவிலும் மழையிலும் நனையலாம். புத்தகங்களில் தஞ்சமடையலாம். கவனத்திசைதிருப்பல் எங்கெல்லாம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் செல்லலாம். ஆனால் உறுத்தல் சற்றும் குறையாது. யேட்ஸ் கவிதை எழுதுவதின் மன-உடல்வலிகளிலிருந்து தப்பிக்க விரும்பினார். கவிதை எழுதுவதை காலவரையறையின்றி ஒத்திப் போட முயல்வார். அதன் கரு தாங்கும் அழுத்தம் அவ்வளவு தொடர்ச்சியாக உண்டாகும்போது கவிதையை உரக்க ஓங்கிச் சொல்வார். ரில்கேவைப் பொறுத்தவரை கவிதை தோன்றும் காலத்தின் போது எவ்வித முன்னறிவிப்பும் இராது. ஆனால் அதன் வருகை அத்தனை தீவிரமாய், தொடர்ச்சியாய் இருந்தாலும் அதன் நீட்டிப்பு மிகச் சொற்பமாய் இருக்கும்.

ரில்கே அளவுக்கு உள்மன யாத்திரை பற்றிய பிரக்ஞை கொண்ட கவிஞர்கள் மிகச் சொற்பமே. எந்தத் தடைகளுமில்லாது, சுதந்திரமாக எழுதுவதற்கான திறன் மீது சுமத்தப்படும் மனோவியல் ரீதியான கட்டுப்பாடுகளை உடைத்து வெளியேற அவர் கடிதங்களைப் பயன்படுத்தினார். கடிதங்கள் எழுதுவதே கூட சில சமயம் அவரை கவிதை எழுதவிடாமல் தடுத்தது. எனவே கடிதங்கள் என்பவை கவிதைகளுக்கான மறைமுக பதிலிகளே. கவிதையின் மொழியில் நமக்குக் கிடைத்திருக்கும் மிக ஆழமானதும் அழகானதுமான கடிதங்கள் மட்டுமல்லாது அவை கவிதை உருவாவது பற்றிய சூழ்நிலைகளை எதிரொலிக்கும் அதிகபட்ச பிரக்ஞையை வெளிப்படுத்துகின்றன. ஆங்கிலக் கவிஞர் கோல்ரிட்ஜைப் போல உள்மனக் கண்காணிப்பு கொண்டவராக இருந்தார் ரில்கே. அவ்வளவு உள்மன ஜாக்கிரதை உணர்வும் கூட ரில்கேவுக்கு கவிதையில்லாக் காலங்களைத் தந்திருக்க வேண்டும். இருவருமே கவிதைக்கே பிரத்யேகமான ஒரு பிரக்ஞைப் பிரதேசத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்தனர். ரில்கே தன் கவிதைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளித்தாரோ அதே அளவு முக்கியத்துவத்தை தன் கடிதங்களுக்கு அளித்தார். கடிதங்களும் கவிதைகளும் தனித்தனியாகப் பிரிக்க இயலாதவை:

எந்த ஒரு கடிதமும் எழுத வேண்டும் என்ற வெறும் நோக்கத்தினால் எழுதப்படுவதல்ல. ஒரு கடிதம் உங்களுக்கு ஒரு ஆச்சரியத்தைப் போல நிகழ வேண்டும், எங்கே பகலில் அதை எழுதுவதற்கு நேரம் இருந்தது என்று நீங்கள் யூகிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கக் கூடாது.

குறிப்பு-

இந்த அறிமுகக் கட்டுரை கூட முழுமை பெறாதது என்பதை மனந்திறந்து நான் ஒப்புக் கொள்கிறேன். விவாதிக்கப்பட வேண்டிய பல விஷயங்களும், சேர்க்கப்பட வேண்டிய தகவல்களும் மிச்சமிருக்கின்றன. இது ஒரு தொகுதியாக உருப்பெறும் சமயம் எல்லாவற்றையும் இணைத்து சரி செய்துவிட முடியும் என்ற நம்பிக்கையுடன்-பிரம்மராஜன்.

ரில்கே கவிதைகள்

ஒரேயொரு கவிதையின் பொருட்டு

, கவிதைகள் உங்கள் வாழ்வின் மிக ஆரம்பத்தில் நீங்கள் எழுதும்போது அவ்வளவு குறைவாக ஆகிவிடுகின்றன. ஒரு வாழ்நாள் முழுவதற்குமான உணர்வையும் இனிமையையும் சேகரித்துக் காத்திருக்க வேண்டும், முடிந்தால் ஒரு நீண்ட வாழ்நாள். பிறகு அதன் கடைக் கோடியில் ஒரு வேளை நீங்கள் எழுதக் கூடும் பத்து நல்ல வரிகளை. மனிதர்கள் எண்ணுவதைப் போல கவிதைகள் வெறும் உணர்ச்சிகளல்ல (ஆரம்பத்திலிருந்தே ஒருவருக்கு தேவையான அளவு உணர்ச்சிகள் உண்டு), அவை அனுபவங்கள். ஒரேயொரு கவிதையின் பொருட்டு நீங்கள் பல நகரங்களைப் பார்க்க வேண்டும், பல மனிதர்களை, மற்றும் பொருள்களை. நீங்கள் விலங்குகளைப் புரிந்து கொள்ள வேண்டும். எப்படிப் பறவைகள் பறக்கின்றன என்பதை உணர வேண்டும். சிறிய மலர்கள் விடியலில் மலர்கையில் செய்யும் இயக்கங்களை அறிய வேண்டும். முன்பின் தெரியாத தெருக்களுக்கு பின்னோக்கி யோசிக்க முடியவேண்டும், எதிர்பாராத சந்திப்புகளுக்கு, நீண்ட காலமாய் நீங்கள் வருமெனப் பார்த்திருந்த பிரிவுகளுக்கு. இன்னுமே விளக்கமூட்டப்படாத குழந்தைப் பிராய நாட்களுக்கு, ஒரு சந்தோஷத்தைக் கொணர்ந்த போது, அதை ஏற்காது நீங்கள் காயப்படுத்த வேண்டியிருந்த அந்தப் பெற்றோர்களுக்கு (அது வேறு எவருக்கோவான சந்தோஷம்) அத்தனை ஆழ்ந்த, கடின உருமாற்றங்களுடன் விநோதமாய்த் தொடங்கிய குழந்தைப் பிராய நோய்களுக்கு, அமைதியான நாட்களுக்கு, கட்டுப்படுத்தப்பட்ட அறைகள், கடல் மருங்கில் காலை வேலைகளுக்கு, கடலுக்கென்றே, பல கடல்களுக்கு, உங்கள் தலை மீது விரைந்தோடி எல்லா நட்சத்திரங்களுடன் கூடிய அந்த இரவுகளின் பயணங்களுக்கு,–ஆனால் இன்னும் கூட போதுமானதாய் இல்லை அவை பற்றியெல்லாம் எண்ணிப்பார்க்க. உங்களுக்கு அவசியம் தேவை பல இரவுகளின் காதல்கள், ஒவ்வொன்றும் மற்றவற்றை விட மாறுபட்டதாய், பிரசவ வலியில் வீறிடும் பெண்கள் பற்றிய நினைவுகளுக்கு, மேலும் லேசான, வெளுத்த, இப்போதுதான் பிரசவித்து மீண்டும் மூடிக் கொள்ளும், உறங்கும் இளம் பெண்களுக்காக. ஆனால் நீங்கள் இறப்போரின் அருகில் இருந்திருக்க வேண்டும், திறந்த கதவும் சிதறலான சப்தங்களும் கொண்ட ஒரு அறையில் இறந்தவரின் அருகில் அமர்ந்திருந்திருக்க வேண்டும். ஞாபகங்கள் கொள்வது மாத்திரம் இன்னும் போதுமானதாய் இல்லை. அவை கூடுதலாய் இருக்கையில் அவற்றை உங்களால் மறக்க இயல வேண்டும், மேலும் உங்களுக்கு அபாரப் பொறுமை வேண்டும் அவை திரும்பி வரும் வரை. ஞாபகங்கள் தம் அளவிலேயே முக்கியமானவையல்ல. அவை நம் குருதியாய் மாற்றப்பட்ட பிறகே, நம் பார்வையாய், அங்க அசைவுகளாய் மாற்றப்பட்டு, பெயரற்றதாகி, நம்மிலிருந்து இனி வேறுபடுத்த முடியாதிருக்க வேண்டும்–அப்பொழுதுதான் அது நிகழும், ஒரு அபூர்வ நேரத்தில் ஒரு கவிதையின் முதல் வரி அவற்றினிடையே உதிக்கிறது, அவற்றிலிருந்து கிளம்பிச் செல்கிறது

பிரார்த்தனை மணி நேரங்களின் புத்தகம்

1.

என் வாழ்வை வாழ்கிறேன் வளரும் சுழல்வட்ட பாதைகளில்

அவை உலகின் வஸ்துக்களின் மேலாக நகர்கின்றன.

ஒரு வேளை என் இறுதியை நான் அடையாமல் போகலாம்

ஆனால் அதுவே என் முயற்சியாய் இருக்கும்.

நான் கடவுளைச் சுற்றிச் வட்டமிட்டுக்கொண்டிருக்கிறேன்,

புராதன கோட்டையைச் சுற்றி,

நான் ஓராயிரம் ஆண்டுகளாய் வட்டமிட்டுவருகிறேன்

ஆனால் இன்னமும் நானறியேன்

நானொரு வல்லூறா, புயலா

அன்றி

ஓர் உன்னதப் பாடலாவென.

17.

திராட்சைத் தோட்டக் காவல்காரன் தன்கென ஒரு

குடிசை வைத்திருந்து கண்விழித்துக் காத்திருப்பது போல்

நான் உமது கைகளின் குடிசை இறைவா,

எனது இரவு உனது இரவிலிருந்து பெறப்பட்டது.

திராட்சைத் தோட்டம், புல்படுகை,

நேர்த்தியான சீதோஷ்ணநிலை கண்ட ஆப்பிள் தோட்டம்

ஒரு வசந்தத்தையும் கடந்துவிடாது வைத்திருக்கும்

வயல்

பூமியில் பளிங்கின் அளவு கடினமாய் வேர்பிடித்திருக்கும்

அத்தி மரம்,

இருப்பினும் நூறு அத்திப் பழங்களைத் தாங்கி நிற்கிறது.

உமது கிளைகளிலிருந்து வாசனை ஊற்றுகிறது,

ஆனால் நீரோ என்றுமே கேட்பதில்லை

நான் காவல் காக்கிறேனா இல்லையா என;

தன்னம்பிக்கையுடன், சாரங்களினால் கரைக்கப்பட்டு,

உமது ஆழங்கள்

என்னைக் கடந்து ஓசையின்றி மேலேறியபடி இருக்கின்றன.

20.

இந்த உலகின் வேந்தர் வயோதிகமடைகின்றனர்

வாரிசுகள் யாருமிலாது போகட்டும் அவர்கள்

பையன்களாயிருந்த போதே மரித்தனர் அவர் மகன்கள்saracen

அவர்தம் நரம்புநோயுற்ற மகள்கள் துறந்தனர்

சலித்த கிரீடத்தை ஜனத்திரளிடம்.

ஜனத்திரள் உடைக்கிறது அதை சின்னஞ்சிறு துண்டுகளாய்.

உலகின் உய்விப்பாளர், காலத்தின் எஜமானன்

அவற்றினை நெருப்பில் உருக்குகிறார் யந்திரங்களாய்.

தாழ்ந்த உறுமல்களுடன் கட்டளைகளை நிறைவேற்றுகின்றன அவை.

ஆனால் அதிர்ஷ்டம் அவை பக்கமில்லை.

வீட்டுக்கான ஏக்கம் கொள்கிறது உலோகத் தாது

அது காசடிக்கும் ஆலைகளையும்

அவ்வளவு சொற்ப வாழ்வே அளிக்கும் சக்கரங்களையும்

கைவிட்டு விட விரும்புகிறது.

உற்பத்திச் சாலைகளிலிருந்தும் பட்டுவாடா பெட்டிகளிலிருந்தும்

திறந்து கிடக்கும் மலைகளின் நரம்புகளுக்கு

திரும்பிச் செல்ல விரும்புகிறது.

அம்மலை மீண்டும் தனக்குப் பின்னால் மூடிக் கொள்ளும்.

23.

அந்த மாபெரும் நகரங்கள், இறைவா, என்ன அவை?

கைவிடப்பட்ட சிதைவுறும் இடங்கள்.

நானறிந்த நகரம் நெருப்பிலிருந்து தப்பியோடும் மிருகங்களை

ஒத்திருக்கிறது

அது தந்த தங்கிடம் இப்போது காப்பிடமல்ல

மேலும் நகரங்களின் காலம் முடிந்து விட்டது ஏறத்தாழ.

ஆண்களும் பெண்டிரும் வசிக்கின்றனர் திகைத்து, மெலிவடைந்து,

இருட்டறைகளில்,

எந்த மனித உடலசைவுக்கும் அஞ்சி

ஓராண்டிலே காயடிக்கப்பட்ட எருதுகளை விட பயங்கரமாய்.

உனது பூமி திறந்து கொள்கிறது கண்களை,

ஸ்வாசிக்கிறது

ஆனால் அவர்கள் இனியும் அறிவதில்லை அந்த ஸ்வாசிப்பை.

ஒரு குழந்தை தன் வளர் வருடங்களை வாழ்கிறது ஜன்னல்-பலகணி விளிம்பில்

நிழல் அதே கோணத்தை ஒவ்வொரு நாளும் போடுகிறது அங்கே

அது காட்டு ரோஜாக்களின் அழைப்பினை அறிவதில்லை

திறந்த இடங்களின் தினத்திற்கு — மற்றும் காற்றுக்கு.

அது குழந்தையாய் இருக்க வேண்டியதால்

சோகமான குழந்தையாய் ஆகிறது.

இளம்பெண்கள் மேல்நோக்கி மலர்கின்றனர் அறிந்திராதவற்றை நோக்கி

குழந்தைப் பிராயத்தின் அமைதிக்கான ஏக்கமுணர்கின்றனர்

எவ்வாறாயினும், அவர்கள் எதற்காகத் தகிப்பது எதற்கென்றால்

அது இவ்வுலகில் இல்லை

அவர்கள் உடல் மறுபடி மூடிக்கொள்ளும் போது நடுங்குகிறது

தாயாக இருந்து ஏமாற்றமடைந்த ஆண்டுகள்

கடந்து செல்கின்றன அபார்ட்மெண்ட்டுகளில் வெளிச்சத்திற்கப்பால்

இரவடுத்து இரவாக அவர்களுக்கெந்த விழைவுமில்லை

அழுகின்றனர்

எந்த நிஜமான போருமின்றி

உறைந்த ஆண்டுகள் கடக்கின்றன சக்தியற்று

மரணப்படுக்கை காத்திருக்கிறது இன்னும் இருண்ட அறையில்

அவர்கள் அதற்குள்ளாய் விழைகின்றனர் சிறிது சிறிதாய்

மேலும் நீண்ட காலம் எடுத்துக் கொள்கின்றனர் இறக்க

ஏதோ சங்கிலியால் பிணைக்கப்பட்டது போல்

பிச்சைக்காரர்கள் போல இறக்கின்றனர்

இன்னும் பிறரைச் சார்ந்து.

தனித்த ஒரு நபர்

தமது இல்லங்களில் ஆறுதலாய் இருக்கும் அத்தனை மனிதரிடையே

நானிருக்கிறேன் தூரத்து சமுத்திரங்களை ஆராயும் மனிதனென.

நிறை வயிற்றுடன் நாட்கள் அவர் தம் மேஜைகளின் மேல் நிற்கின்றன

நானொரு தொலை தேசத்தைக் காண்கிறேன் காட்சிகளால் நிறைந்து.

ஒரு வேளை நிலவில் வாழப்பட்டதை விட கூடுதலாய் வாழப்படாத

வேறொரு உலகினை உணர்கிறேன் என்னருகில்

எனினும் அவர்கள் ஓர் உணர்வினை சும்மா விடுவதில்லை

மேலும் அவர்களின் சொற்கள் பழகிச் சலித்தவை.

அவர்களின் உடைமைப் பொருள்களை ஒப்பு நோக்க

நான் என்னுடன் கொண்டு வந்த வாழ் உயிர்கள்

வெளியில் எட்டியும் பார்ப்பதில்லை.

அவற்றின் சொந்த தேசத்தில் அவை காட்டு ஜாதிஙீ

இங்கே அவை அவமானத்தில் மூச்சைப் பிடித்துக்கொள்கின்றன.

இலையுதிர் காலம்

இலைகள் வீழ்கின்றன, மேலே அப்பாலிலிருந்து வீழ்வது போல்

ஏதோ வானின் உயரத்தில் தோட்டங்கள் மரிப்பது போல்.

இல்லை என மறுக்கும் இயக்கத்துடன்

ஒவ்வோர் இலையும் வீழ்கிறது.

இன்றிரவு கனத்த இந்த பூமியும் பிற நட்சத்திரங்களிடமிருந்து

அப்பால் விலகி வீழ்கிறது தனிமையில்

நாம் எல்லோரும் வீழ்கிறோம். இங்கே இந்தக் கையும் வீழ்கிறது.

மற்றதைக் கவனி. . . . அவை எல்லாவற்றிலும் அது உள்ளது.

என்றாலும் யாரோ ஒருவர் இருக்கிறார்

அவர் கைகள் எல்லையில்லா அமைதியுடன்

இந்த சகல வீழ்வுகளையும் நிறுத்தி வைக்கின்றன.

பழம்

பூமியிலிருந்து புலனாகாது அது உயர்ந்தது மேலே மேலே

மேலும் தனது ரகசியத்தை வைத்துக் கொண்டது மௌனமான தண்டில்

தெளிந்த மலரில் ஒரு தீம்பிழம்பாய் ஆயிற்று

பிறகு தொடர்ந்தது தனது ரகசியத்தை.

முழுநீளக் கோடையினூடாய்க் கனிந்தது

பகலிலும் இரவிலும் மகப்பேறு வலிகொண்ட மரத்தினுள்

தன்னையே உணர்ந்தது

விடாப்பிடியான படுவிரைவாய்

எதிர்வினை தரும் புறவெளியைச் சந்திக்க.

அந்த முற்றுப் பெற்ற அழகிய வளைவினை மிச்சமும் புதியதாய்,

இப்போது அது அத்தனைப் பளபளப்புடன் புலப்படுத்தி னாலும்

அதன் புறத்தோலுக்குள் சரிகிறது விட்டுக்கொடுத்து

மீறி வளர்ந்த மையத்தை மீட்டு நோக்கியவாறு.

அடுத்த அறைவாசி

விநோத வயலினே என்னைப் பின்தொடர்கிறாயா?

எத்தனை தூரத்து நகரங்களில் ஏற்கனவே

உன் தனிமை இரவு எனதுடன் பேசியிருக்கிறது?

நுற்றுவர் உன்னை வாசிக்கின்றனரா? அல்லது ஒருவரா?

எல்லா ராட்சத நகரங்களிலும்

இப்படிப்பட்ட மனிதர் உண்டோ

நீயில்லாது போயின் ஏற்கனவே ஆற்றில் மறைந்திருப்பர்?

மேலும் நானொருவனே அதைக் கேட்பவனாயிருக்கிறேன்?

பயத்தில் உன்னைப் பாடக் கட்டாயப்படுத்தும்

அம்மனிதர்களுக்கு ஏன் எப்போதும்

நானே அடுத்த அறைவாசியாயிருக்கிறேன்?

அவர்கள் சொல்வர் வாழ்வின் பாரம்

வஸ்துக்களின் பாரத்தை விட அதிகம்.

பிணத்தைக் குளிப்பாட்டுதல்

அவர்கள் அவனுக்குப் பழகிவிட்டிருந்தனர்

ஆனால் இருண்ட காற்றில் சமையலறை விளக்கு

தாறுமாறாய் எரியத் தொடங்கிய சமயம்

அந்நியன் முற்றிலும் விநோதமானான்.

அவன் தொண்டையைக் குளிப்பாட்டினர்.

அவன் விதியைப் பற்றி ஏதும் அறியாததால்

பொய்கள் மூலம் வேறொன்றை உருவாக்கினர்

குளிப்பாட்டியபடி.

ஒருத்திக்கு இரும வேண்டியிருந்தது

இருமியபடி கனத்த வினிகர் பஞ்சிலிருந்து

சொட்டி விட்டாள் அவன் முகத்தின் மேல்.

இது ஓர் இடைவெளியை உருவாக்கியது இரண்டாமவளுக்கு.

விரைப்பான தேய்க்கும் பிரஷ்ஷிலிருந்து

துளிகள் பட்டென்று சொட்டியபோது

தான் இனியும் தாகமாயில்லையென

அந்த அறையை அறியச் செய்ய விரும்பியது போலிருந்தது

அவனது கோரமாய் விரைத்த கை.

அவன் அதை நிரூபித்தான்.

ஒரு சிறிய இருமலுடன்

அசௌகர்ய உணர்வடைந்தவர்கள் போல்

இப்போது இன்னும் கூடுதல் வேகத்துடன்

தொடர்ந்தனர் வேலையை

அதன் மூலம் அவர்களின் வளைந்த நிழல்கள்

சுவர்மறை காகிதங்களின் மேல்

துடித்துப் பின்வாங்கி வலையில் சிக்கியது போல்

அவனைக் குளிப்பாட்டி முடிக்கும் வரை

திரைச்சீலையற்ற ஜன்னல் சட்டத்தில்

இரவு கருணையற்றதாயிருந்தது.

பெயரற்றவன் அங்கே கிடந்தான்

சுத்தமாயும் நிர்வாணமாயும்

கட்டளையிட்டபடி.

பாண்ட் டு கேரூஸல்

கைவிடப்பட்ட ராஜ்யமொன்றின் சாம்பல் நிற எல்லைக்கல் போல்

கண்ணில்லாதவன் நின்றிருந்தான் பாலத்தின் மேல்

மாறுதலே இல்லாதிருக்கும் ஒரு பொருள்

ஒரு வேளை அவனாகத்தானிருக்கும்.

அதைச் சுற்றியே சுழல்கின்றன

நட்சத்திரங்கள் தம் நேரத்தை

நட்சத்திரக் கூட்டங்களின் நிச்சலன மையம் அவன்தான்–

காரணம் அவனைச் சுற்றிலும்

நகரம் தடுக்கி விழுந்தலைகிறது

தன் பிரம்மாண்டத்தைக் காட்டிக் கொண்டு.

பின்னலிட்டுக் கிடக்கும் பல தெருக்களினிடையில் பதிக்கப்பட்டு

அவன்தான் இயக்கமற்ற நியாயவாதி

மேலோட்டத் தலைமுறை மனிதரிடையே

அவன் பாதாள உலகின் இருண்ட வாசல்

சிறுத்தை

கம்பிகளைப் பார்த்துப் பார்த்து அதன் நோக்கு

அத்தனைக் களைப்புற்றதால் அது எதையும் இனி காண்பதில்லை.

நூறாயிரம் கம்பிகள்

கம்பிகளின் அப்பால் உலகம் ஏதுமில்லை அதற்கு.

லயமிகு எளிய நடையின் லகுவான அசைந்தாட்டம்

சின்னஞ்சிறிய மையம் வரை சுழன்றடைகிறது

ஒரு புள்ளியைச் சுற்றி சக்தியின் நடனத்தை அது நிகர்த்திருக்கிறது

அதில் ஓர் மகத்தான மனத்திட்பம் திகைத்து நிற்கிறது செயலற்று.

சிலநேரங்களில் கண்ணின் கருமணியின் திரைகள் உயர்கின்றன

ஓசையின்றி. . . பிறகு ஒரு உரு உள்நுழைகிறது

தோள்களின் இறுகிய மௌனத்தினூடாய் நழுவி

இதயத்தை அடைந்து மடிகிறது.

இசை

இசை-சிலைகளின் ஸ்வாசிப்பு.

ஒருவேளை-ஓவியங்களின் மௌனம்.

மொழி எங்கே முடிகிறதோ அங்கேயுள்ள மொழி நீ,

அநித்திய இதயங்களின் இயக்கத்தின் மீதாய்

செங்குத்து சமனில் நிற்பெறும் காலம் நீ.

யாருக்கான உணர்வுகள்? , மாறுதலே நீதான்

எதுவாய் ஆகும் உணர்வுகள்?–காதுணரும் நிலக்காட்சிவெளி?

அந்நியனே நீ : இசை.

எம்மை மீறி வளர்ந்து விட்ட வெளி,

இதய-வெளி.

எமக்குள்ளிருக்கும் படுஆழப் பிரதேசம்.

அது எம் எல்லைகளைக் கடந்து,

தன் வழியை வலிந்து வெளிப்படுத்துகிறது–

மிகுபுனித விடைபெறல்:

பயிலப்பட்ட தொடுவானாய்

எம் உள்ளாழ்ந்த புள்ளி எம்மை சூழ்ந்திருக்கும் அங்கே

காற்றின் வேறுபுறமாய்

தூய்மையாய்,

கட்டற்று

இனியும் உள் வாழப்படாததாய்.

ஸ்பானிய நடனக்காரி

அதன் மினுங்கும் வெண்ணிற நாக்குகள் தீப்பிழம்பாய் வெடிக்குமுன்

தீக்குச்சியின் எல்லாப்புறமிருந்தும் பாய்வது போல்

துரிதமாகி, வெப்பமாய், பார்வையாளர்கள் அவளைச் சூழ்ந்திருக்க

அவள் நடனம் இருட்டறையில் மினுங்கத் தொடங்குகிறது.

ஒரே சமயத்தில் எல்லாமும் முற்றிலும் தீயாகிறது.

மேல்நோக்கிய ஓர் பார்வை வீச்சில்

அவள் தன் கூந்தலைப் பற்ற வைக்கிறாள்

இன்னும் இன்னும் துரித கதியில் சுழன்றாடி

தன் உடையை உணர்ச்சிமிகு பிழம்புகளால் விசிறுகிறாள்

அது ஓர் உலைக்களமாய் ஆகும்வரை–

அதிலிருந்து திடுக்கிட்ட சங்கிலிப் பாம்புகளென

நீண்ட அம்மணக் கைகள் சுருள்விரிகின்றன

உணர்ச்சியேறி, சொடுக்கிக் கொண்டு.

பிறகு மிகவும் பிடிப்பாய் அந்த நெருப்பு அவள் உடலைச் சுற்றி

இருப்பது போல்

அதை எடுத்து வீசியெறிகிறாள்

திமிராய்,

ராஜரீக அங்க அசைவுடன் கவனிக்கிறாள்

அது கிடக்கிறது தரை மேல் சீறியபடி

இன்னும் பிழம்பு உயர்ந்து

மேலும் பிழம்புகள் சாக மறுக்கின்றன–

முழுமையான தன்னம்பிக்கையுடன்

இனிய, திளைப்புறும் புன்னகையில்

அவள் ஏறிட்டுப் பார்க்கிறாள் கடைசியில்

மிதித்தணைக்கிறாள்

சக்தி வாய்ந்த சிறி கால்களால்.

புலம்பல்

சகலமும் தொலைவாய்

நெடுங்கால முன்பே கடந்து போனது போல்.

என் மேல் மின்னும் அந்த நட்சத்திரம்

ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே

மரித்துவிட்டதென எண்ணுகிறேன்.

என்னைக் கடந்து சென்ற காரில்

கண்ணீர்த் துளிகள் இருந்ததென்றும்

ஏதோ பயங்கரமானது சொல்லப்பட்டதென்றும்

நினைக்கிறேன்.

சாலையின் அப்பக்கமிருக்கும் வீட்டில்

ஒரு கடிகாரம் ஓய்ந்துவிட்டது. . . .

எப்போது அது ஆரம்பித்தது?. . . .

என் இதயத்திலிருந்து கீழிறங்கி

பிரம்மாண்ட வானின் கீழ் நடந்து செல்லவும்

பிரார்த்தனை செய்யவும் விரும்புவேன்.

நெடுங்கால முன் மரித்த நட்சத்திரங்கள் அனைத்திலும்

ஒன்று இன்னும் உயிர்த்திருக்கிறது.

அது எதுவென

எனக்குத் தெரியுமென எண்ணுகிறேன்–

வானில் அதன் ஒளிக்கற்றையின் இறுதியில்

எதன் மேல் ஒரு வெண்ணிற நகர் அமைந்துள்ளதோ

அது. . . .

நேற்றின் மாலை

இரவு மற்றும் தூரத்து குமுறலோசை: இப்பொழுது

ராணுzxவத்தின் சரக்கு ரயில் வெளிக்கிளம்புகிறது, போருக்கு.

நவீனயாழிசைக் கருவியிலிருந்து தலையுயர்த்திப் பார்த்தான் அவன்,

அவன் வாசித்துச் செல்கையில் அப்புறம் அவளை நோக்கினான்.

ஏறத்தாழ ஒருவர் நிலைக்கண்ணாடியில் ஆழ்ந்து நோக்குவது போல்ஙி

அவளது ஒவ்வொரு அம்சமும் அவ்வளவு ஆழமாய்

அவனது இளமையான அம்சங்களால் நிறைந்தன

அவை அவன் வலியையும் கொண்டிருந்தன

ஒவ்வொரு ஓசைக்கும் அவை இன்னும்

அழகாயும் தீக்கவர்ச்சியுடனும் விளங்கின.

பிறகு திடீரென சிதைவுற்றது அக்காட்சி.

அவள் எழுந்து நின்றாள், கவனச்சிதைவுற்றவள் போல

ஜன்னலருகில்

தன் இதயத்தின் வன்முறையான மத்தள ஓசைகளை உணர்ந்தாள்.

அவன் வாசிப்பு நின்றது.

வெளியிலிருந்து புதிய காற்று வீசியது.

விநோத அந்நியத்துடன் நிலைக்கண்ணாடி-மேஜை மேல்

நின்றது கரிய ராணுவத் தொப்பி

அதன் பளிங்கு மண்டையோட்டுடன்.

கோடைமழைக்கு முன்

திடீரென, உங்களைச் சுற்றிலுமுள்ள எல்லாப்பச்சைகளிலிருந்தும்

ஏதோ–உங்களுக்குத் தெரிவதில்லை என்னவென்று–

காணாமல் போய்விட்டது.

முழுமையான மௌனத்தில்

ஜன்னலருகில் அது ஊர்ந்து வருவதாய் நீங்கள் உணர்கிறீர்கள்.

அருகாமைக் காட்டிலிருந்து நீங்கள் கேட்கிறீர்கள்

புலோவர் பறவையின் அவசர விசில் ஓசையை,

யாரோ ஒருவரின் ‘புனித ஜெரோமை அது நினைவூட்டுகிறது:

அத்தனைத் தனிமையும் பேருணர்வும்

அந்த ஒற்றைக் குரலிலிருந்து வந்ததென,

அதன் ஆக்ரோஷமான கோரிக்கையை

கடுமழை பூர்த்தி செய்யும்.

அந்த திரையோவியங்களுடன் சுவர்கள்

நம்மிடமிருந்து நழுவிச் செல்கின்றன

கவனத்துடன்

நாம் சொல்வதை அவை கேட்கக் கூடாததென்றபடியாய்.

இப்போது

சாயம்போன திரையோவியங்களில் பிரதிபலித்தவை:

கடுங்குளிர்,

நீங்கள் அவ்வளவு பயந்து போயிருந்த

அந்த நீண்ட குழந்தைப் பிராய நிச்சயமற்ற சூரிய ஒளி.

மீண்டும் மீண்டும்

மீண்டும் மீண்டும், காதலின் நிலப்பரப்பினை எவ்வளவு நன்றாய்

நாம் அறிந்த போதிலும்,

அதன் புலம்பும் பெயர்களுடன் மிகச் சிறிய கல்லறைக்காடு

மற்றும்

மேலும் மேலும் பீதியூட்டும் மௌனத்துடனிருக்கும்

சகலரும் சென்று முடியும் பாழ்வெளியைத் தெரிந்திருந்தாலும்

நாம் இருவரும் இணைந்து நடக்கிறோம்

புராதன மரங்களின் கீழே

மலர்களிடையே,

மீண்டும் கீழே படுக்கிறோம்

வானத்தை நோக்குகிறோம்.

தலைப்புக் கவிதை

செல்வந்தரும் அதிர்ஷ்டக்காரரும் சும்மா இருப்பது சரிதான்

யாரும் அவர்களைப் பற்றி அறிய விரும்புவதில்லை.

தேவை உள்ளோர் ஓரெட்டு முன்னெடுத்து வைக்க வேண்டும்

சொல்ல வேண்டும்: நான் கண்ணற்றவன்,

அல்லது நான் குருடாகப் போகிறேன்,

அல்லது எனக்கு ஒன்றுமே சரியாய் நடப்பதில்லை,

அல்லது எனக்கு சீக்காளிக் குழந்தை இருக்கிறது,

அல்லது இப்போது அங்கே ஒரு விதமாய் கெட்டியாய் ஒட்டியிருக்கிறேன். . .

சாத்தியத்தில் அதுவெல்லாம் எதையும் மாற்றிவிடுதில்லை.

அவர்கள் பாடவேண்டி இருக்கிறது

அவர்கள் பாடவில்லையென்றால்

எல்லோரும் வேகமாய்க் கடந்து விடுவர் நடந்து

அவர்கள் ஏதோ விளக்குக் கம்பம் அல்லது வேலி என்பது மாதிரி.

அங்கேதான் நீங்கள் நல்ல பாடலைக் கேட்க முடியும்.

மக்கள் நிஜமாகவே விநோதமானவர்கள்:

சிறார்களின் கூட்டுக்குரலிசையில் ‘கேஸ்ட்ரேட்டோக்களைக்

கேட்க விரும்புகின்றனர்.

ஆனால் கடவுளே வந்து

நீண்ட நேரமிருக்கிறார் சேர்ந்தாற்போல்

அரை-மனிதர்களின் உலகம் அவருக்கு சலிப்பைத் தர ஆரம்பிக்கையில்.

பறவைத்தீனி அளிப்பவர்கள்

நான் அதைக் குறைத்து மதிப்பிடவில்லை. அதற்கு தைர்யம் தேவை என்று நானறிவேன். ஒரு கணம் யாரோ ஒருவருக்கு அப்படி அது இருப்பதாய் நாம் கருதுவோமானால், இந்த டீலக்ஸ் துணிச்சல், எங்கே அவர்கள் ஊர்ந்து செல்கின்றனர் என்பதை என்றென்றைக்குமாய்த் தெரிந்து கொள்ள (யார் மீண்டும் அதை மறக்கவோ அல்லது மற்ற எதனுடனோ குழப்பிக் கொள்ள இயலும்) மேலும் நாளின் பாக்கி நேரங்களில் அவர்கள் என்ன செய்கின்றனர் மற்றும் இரவில் எங்கே உறங்குகின்றனர் என்பது போல. குறிப்பாக இது நிச்சயப்படுத்தப்பட வேண்டும்: அவர்கள் உறங்குகிறார்களா என. ஆனால் அதற்கு துணிச்சலை விடக் கூடுதலான ஒன்று தேவைப்படுகிறது. காரணம் அவர்கள் பிற மனிதரைப் போல வந்து போவதில்லை. இவர்களைப் பின்தொடர்வது ஒரு சிறுபிள்ளை விளையாட்டு. அவர்கள் இங்கேதானிருக்கின்றனர் ஆனால் திடீரென காணாமல் போய் விடுகின்றனர், வைக்கப்பட்டு வெடுக்கென எடுத்துக் கொள்ளப்பட்ட பொம்மை வீரர்களைப் போல. அவர்கள் இருக்குமிடம் கொஞ்சம் வழியிலிருந்து விலகியதானது, ஆனால் எந்த விதத்திலும் மறைக்கப்பட்டதில்லை. புதர்கள் பின் சென்றுவிடுகின்றன, புல்தரையைச் சுற்றி வழி வளைந்து செல்கிறது: அங்கேதான் அவர்கள் இருக்கின்றனர் அவர்களைச் சுற்றிலுமுள்ள ஒளி ஊடுருவம் இடப்பரிமாணத்துடன், அவர்கள் ஏதோ குவிமாடத்தினடியில் நின்றிருப்பது போல். தம் சிந்தனையில் ஆழ்ந்து அவர்கள் சென்று கொண்டிருப்பதாய் நீங்கள் எண்ணலாம், இந்த முக்கியத்துவமற்ற மனிதர்கள், அந்த அவ்வளவு சிறிய, எல்லா விதத்திலும் தற்பெருமையற்ற உடல்கள். ஆனால் நீங்கள் எண்ணுவது தவறு. அந்த இடது கை பழைய கோட்டின் சாய்வான பாக்கெட்டிலிருந்து எதையோ பற்றிக்கொள்வதை உங்களால் பார்க்க முடிகிறதா? எப்படி அது அதைக் கண்டு பிடித்து, வெளியே எடுத்து, சிறிய பொருளை காற்றில் நீட்டுகிறது, தடுமாற்றத்துடன், கவனத்தை ஈர்த்தபடி? ஒரு நிமிடத்திற்குள்ளாய் இரண்டு மூன்று பறவைகள் வருகின்றன, ஊர்க்குருவிகள், வருகின்றன ஆர்வத்துடன் தத்தித்தாவி. அவற்றின் இயக்கமறுதன்மையின் மிகக் கச்சிதமான கருத்தாக்கதிற்கு அம்மனிதன் ஒத்துப் போவதில் வெற்றியடைந்தால், அவை ஏன் இன்னும் கொஞ்சம் அருகில் வராமலிருக்கக் காரணமில்லை. கடைசியில் அவற்றில் ஒன்று உயரப் பறக்கிறது, கை உயரத்தில் சிறிது பதற்றத்துடன் சிறகடிக்கிறது, அந்தக் கையில் என்னவிதமான பயன்படுத்தப்பட்ட ரொட்டிப் பொருக்குகள் உள்ளன என்று கடவுளுக்குத்தான் தெரியும்-அந்த பாசாங்கற்ற, வெளிப்படையாய் துறக்கும் விரல்களில். எவ்வளவு கூடுதலாய் ஜனங்கள் அவனைச் சுற்றி கூடுகின்றனரோ–ஒரு பொருத்தமான தூரத்தில், வாஸ்தவமாக–அவர்களுடன் அவன் குறைவாய்த்தான் பொது அடையாளம் கொண்டவனாய் இருக்கிறான். ஏறத்தாழ தீப்பிடித்து அதன் சிறிய திரிகளின் மிச்சங்களுடன் எரியும் ஒரு மெழுகுவர்த்தி போல அவன் அங்கே நிற்கிறான், மற்றும் சகலமும் வெதுவெதுப்புடன் இருக்கிறது என்றுமே அகலாமல். அந்த எல்லா மடத்தனமான பறவைகளும் புரிந்து கொள்வதில்லை அவன் எப்படி அவற்றை ஈர்க்கிறான் என, எப்படி அவற்றைச் சபலப்படுத்துகிறான் என. பார்வையாளர்கள் எவரும் இல்லாது போனால், அங்கே அவன் நீண்ட நேரம் நிற்க அனுமதிக்கப்பட்டால், ஒரு தேவதூதன் தோன்றி, தன் அருவருப்பை வென்று, அந்த பழைய இனிக்கும் ரொட்டித் துணுக்குகளை அந்த வளர்ச்சி குன்றிய கையிலிருந்து உண்ணுவான் என்று நிச்சமாய் நான் எண்ணுகிறேன். ஆனால் இப்பொழுது, எப்போதும் போல, ஜனங்கள் அதை நிகழ விடுவதில்லை. பறவைகள் மாத்திரமே வர வேண்டுமென்பதை அவர்கள் நிச்சயப்படுத்துகின்றனர். வேறெதை இந்த வயோதிக மழைவெய்யிலில் தாக்குண்ட, ஒரு சரிவான கோணத்தில் பூமியில் சிக்குண்ட சீதோஷ்ணத்தில் சீரழிந்த பொம்மை எதிர்பார்க்க முடியும்? கப்பல் தலைவனின் தோட்டத்தில் தீட்டப்பட்டுள்ள தோணிமுகப்பு உருவங்களைப் போலிருக்கும் இவை எதிர்பார்க்க முடியும்? அது அப்படி நிற்கக் காரணம் அதுவும் கூட ஒரு காலத்தில் எங்கோ அதன் வாழ்க்கையின் முன்னோக்கிய நுனியில் வைக்கப்பட்டிருப்பதாலா? எந்த ஒரு புள்ளியில் இயக்கம் மிக அதிகமாய் உள்ளதோ அதில்? இப்போது அது சாயம் போயிருக்கக் காரணம் அது ஒரு காலத்தில் பளிச்சென்றிருந்ததுதானா? அதனிடம் சென்று நீங்கள் கேட்பீர்களா?

அவர்கள் பறவைக்கு இரையளிக்கும் போது அந்தப் பெண்களிடம் மாத்திரம் கேட்காதீர்கள். நீங்கள் அவர்களைப் பின்தொடரக் கூட செய்யலாம். அவர்கள் அதைக் கடக்கும் போது செய்கின்றனர். அது எளிமையாய் இருக்கும். ஆனால் நாம் அவர்களைத் தனிமையில் விடுகிறோம். அவர்களுக்குத் தெரிவதில்லை அது எப்படி நிகழ்கிறதென. திடீரென ஒரு பர்ஸ் நிறைய ரொட்டி அவர்களிடமிருக்கிறது. அவர்களின் லேசான சால்வைகளினடியிலிருந்து அவற்றை நீட்டுகின்றனர், சிறிதே மெள்ளப்பட்டதும், சொதசொதப்பதுமான துண்டுகள். இந்த உலகினுள் அவர்களின் உமிழ்நீர் பரவுகிறது என்பது அவர்களுக்கு நன்மை செய்கிறது, அந்த சிறிய பறவைகள் தம் வாய்களில் அந்த சுவையுடன் பறந்து செல்லுமென்பது. பிறகு இயல்பாக அவை அதை மீண்டும் மறந்து போனாலும் கூட.

முகங்கள்

ஏற்கனவே நான் அதைச் சொல்லியிருக்கிறேனா? நான் பார்க்கக் கற்றுக் கொள்கிறேன். ஆம், நான் ஆரம்பிக்கிறேன். இன்னும் மோசமாகத்தான் அது போய்க்கொண்டிருக்கிறது. பெரும்பான்மை நேரத்தை பயன்படுத்திக் கொள்ள உத்தேசிக்கிறேன்.

எடுத்துக்காட்டாக, முன்பு எனக்குத் தோன்றியதில்லை எத்தனை முகங்கள் இருக்கின்றனவென. எண்ணற்ற மனிதர் உள்ளனர், ஆனால் அதை விட அதிகமான முகங்கள் உள்ளன, காரணம் ஒவ்வொரு நபருக்கும் பல முகங்கள் உள்ளன. ஒரே முகத்தைப் பல ஆண்டுகளாய் அணியும் மனிதர்கள் உண்டு இயல்பாகவே அது தேய்மானமடைகிறது, அழுக்கடைகிறது, விளிம்புகளில் வெடிக்கிறது, ஒரு நீண்ட பயணத்தில் அணியப்பட்ட கையுறைகள் போல் விரிந்து விடுகிறது. அவர்கள் சிக்கனமானவர்கள், சிக்கலில்லாத மனிதர்கள் அவர்கள் என்றும் அதை மாற்றுவதில்லை, அதைச் சுத்தம் கூட செய்வதில்லை. அது போதுமானது என்றவர் சொல்கின்றனர், அதற்கு மாறுபட்டு யாரவர்க்கு நம்பச் செய்யவியலும்? வாஸ்தவமாய், அவர்களிடம் பல முகங்கள் உள்ளதால் நீங்கள் வியக்கலாம் பிறவற்றை என்ன செய்வரென்று? அவற்றை அவர்கள் சேமிப்பில் வைக்கின்றனர். அவர்களின் குழந்தைகள் அவற்றை அணிவார்கள். ஆனால் சில நேரங்களில் அவர்களின் நாய்கள் அவற்றை அணிவதும் நடக்கிறது. மேலும் ஏன் கூடாது? ஒரு முகம் முகம்தானே.

வேறு மனிதர்கள் நம்ப முடியாத வேகத்தில் முகங்களை மாற்றுகின்றனர், ஒன்றன் பின் ஒன்றாய், தேய்த்து பழையதாக்குகின்றனர். தொடக்கத்தில் அவர்களுக்கு முடிவற்ற அளிப்பு இருக்குமென எண்ணுகின்றனர் ஆனால் நாற்பதே வயதாகு முன்பே அவர்களின் கடைசி முகத்திற்கு வந்து சேர்கின்றனர். நிச்சயமாக இதில் வருந்தத்தக்க ஏதோ விஷயம் உண்டு. அவர்களுக்கு முகங்களைப் பாதுகாத்து பழக்கமில்லை ஒரு வாரத்தில் கடைசி முகம் தேய்ந்தவுடன், மெல்லிய தாளில் பல இடங்களில் உருவாவது போல் அதில் ஓட்டைகள் உண்டான பின், சிறிது சிறிதாய் ஓரத்தையல்கள் தெளித் தெரியத் தொடங்கி, அ-முகம் தோன்றுகிறது. அவர்கள் இதையணிந்து சுற்றி வருகின்றனர் நடந்து.

ஆனால் பெண்கள் பெண்கள்தான் அவள் முற்றிலுமாய் தனக்குள் விழுந்துவிட்டாள், முன்னோக்கி தனது கைகளுக்குள். அது .. .. .. .. தெருவின் திருப்பத்தில் உள்ளது. நான் அவளைப் பார்த்த மாத்திரத்தில் அமைதியாய் நடக்கத் தொடங்குகிறேன். ஏழை மக்கள் சிந்திக்கும் போது அவர்களை இடைஞ்சல் செய்யக் கூடாது. இன்னும் கூட ஒரு வேளை அவர்களின் கருத்தாக்கம் அவர்களுக்கு உதிக்கக் கூடும்.

தெரு மிகவும் வெறிச்சோடியிருந்தது. அதன் வெறுமை சலித்திருந்தது. அது என் காலடி எடுப்புகளை என் காலடிகளிலிருந்து இழுத்துவிட்டது அதில் சத்தமிட்டது சடசடத்து, தெரு முழுவதிலும், அவை ஏதோ மரமிதியடிகள் போல. அந்தப் பெண் எழுந்து நின்றாள், பீதியடைந்து, அவள் தனக்குள்ளிருந்து அவளைப் பிடுங்கிக் கொண்டாள், மிக விரைவாகவும், மிக மூர்க்கமாகவும், அதன் விளைவாய் அவள் முகம் அவளின் இரு கைகளில் விடப்பட்ட மாதிரி. அது அங்கே கிடப்பதை நான் கண்டேன் அதன் உள்ளீடற்ற வடிவம். அந்தக் கைகளுடனிருக்க விவரிக்கவொன்னாத யத்தனம் எனக்கு ஏற்பட்டது–அவற்றிலிருந்து எது பிடுங்கப்பட்டதென பார்க்காதிருப்பதற்கு. உள்புறம் ஒரு முகமிருப்பதைக் கண்டு திகைப்படைந்தேன். ஆனால் இன்னும் கூடுதலாய் பயந்திருந்தேன் முகமிழந்து காத்திருக்கும் தோலுரித்த தலைக்காக.


jeanbaptiste_monge

Note:

I have been keeping the drafts of Rilke’s poems with me for the past 5 years. Since I wasn’t satisfied with some of the renderings into Tamil I kept on revising them. A few of my friends might have the hard copies of the older versions of what has been posted here. They should tear off the older versions.

To be honest I tried my hand with the translations of Rilke’s poetry in 1982 when I bought a copy of J.B.Leishman’s book released in the Penguin Modern Poets series. But I couldn’t with confidence translate a single poem from J.B.Leishman’s collection.(Of course I did but tore them off because of utter dissatisfaction)  Even after reading C.M.Bowra’s The Heritage of Symbolism I didn’t dare touch a single poem. I felt more diffident after reading C.M.Bowra’s introduction to Rilke.

What ultimately triggered me to start the translations was Robert Bly’s book: Selected Poems of Rainer Maria Rilke. Bly’s translations gave me the confidence which I couldn’t get from J.B.Leishman.

Most of the poems from The Book of Hours are from Robert Bly. I acknowledge this with gratitude.

The rest are from Stephen Mitchell’s equally accessible book-The Selected Poetry of Rainer Maria Rilke

Though I got Galway Kinnell’s The Essential Rilke I have not used his book for translating any of these poems


Posted in Uncategorized | Tagged: , , , , , | Comments Off

James Joyce-The Writers’s writer: introduced by Brammarajan(ஜேம்ஸ் ஜாய்ஸ்-எழுத்தாளர்களின் எழுத்தாளர்)

Posted by brammarajan on November 21, 2008

jamejoyce1-introduced-by-brammarajan

ஜேம்ஸ் ஜாய்ஸ்-எழுத்தாளர்களின் எழுத்தாளர்

பிரம்மராஜன்

இருபதாம் நூற்றாண்டு ஆங்கில இலக்கியத்தில் மட்டுமன்றி பிற உலக இலக்கியங்களிலும் ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்று கருதப்பட்டதில் நியாமிருக்கிறது. இன்றைய பார்வையில் சம்பிரதாய மற்றும் நவீனத்துவ அடைமொழிகள் அவருக்குப் பொருந்தாதவை போலத் தோன்றினாலும் டி.எஸ்.எலியட்டுக்கு ஜாய்ஸ் நவீனராகத் தோன்றியதால்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டை துவம்சம் செய்த மனிதன்என்று எலியட் 1922ஆம் ஆண்டு எழுதினார். 1931ஆம் ஆண்டு அமெரிக்க விமர்சகரான எட்மண்ட் வில்ஸன் அவரது நூலான Axel’s Castle இல் ஜாய்ஸை மானுடப் பிரக்ஞையின் புதிய கட்டத்து மஹா கவிஞன் என்று வர்ணித்தார். மேலும் வில்சனுக்கு ஜாய்ஸ் ஒரு நவீன விஞ்ஞானியின் இணையுருவாய்த் தோன்றினார். 1920களிலும் 30களிலும் விளக்கமூட்டும் ஒப்புமைகளைத் தேடிக் கொண்டிருந்த பிற விமர்சகர்கள் ஜாய்ஸின் கலையை விவரிக்க க்யூபிஸம், மனோவியல் ஆய்வலசல், திரைப்படம், மற்றும் ஜாஸ் இசை போன்றவற்றை நாடினர். ஹங்கேரிய ஓவியர் மோஹோலி நேகி (Moholy Nagy) ஜாய்ஸை மெஷின் யுகத்து எழுத்தாளரென சிலாகித்துக் கூறினார்–அதாவது மொழியை நெறிப்படுத்தி தொழில்நுட்ப வல்லுநனைப் போல வார்த்தைகளைக் கையாண்டதற்காக. ஐய்ன்ஸ்டீனிய கால-வெளி குறித்த இயற்பியல் ஒற்றுமையும் ஜாய்ஸின் இரண்டாம் நாவலான ஃபின்னகன்ஸ் வேக் (Finnegan’s Wake)-குக்குப் பயன்படுத்தப்பட்டது.

யூலிஸிஸ் ஒரு நாவல் என்பதை விடக் கூடுதலாகக் கவிதை என்று சொல்லப்படுவது பொருந்தும்–அல்லது ஒரு நாவலுக்குள் வைக்கப்பட்ட மாபெரும் கவிதை என்று கூறுவது சிறப்பாக இருக்கும். இன்றைய தீவிர வாசகர்களுக்கு ஜாய்ஸின் உரைநடை அத்தனை சிரமத்தையும் தடங்கல் களையும் தராது. ஆனால் 50 வருடங்களுக்கு முன்னால் புத்திக்கூர்மையுள்ள வாசகர்களுக்கும் பிற படைப்பாளிகளுக்கும் தலைவலி கொடுத்தது. பெர்னாட் ஷா, ஹெச்.ஜி.வெல்ஸ், யேட்ஸ் போன்ற ஆங்கில எழுத்தாளர்களால் யூலிஸிஸ் நாவலைப் படிக்க முடியவில்லை. தாமஸ் உல்ஃப்-ம் விண்ட்ஹேம் லூயிஸும் படித்து தவறாக அர்த்தம் புரிந்து கொண்டனர். நோபல் விருது பெற்ற நவீன ஜெர்மானிய நாவலாசிரியர் தாமஸ் மன் அதைப் படிக்கப் பெரிதும் விரும்பினார். யூலிஸிஸ் நாவலில் இருந்த ஃபிளாபர்தன்மையான குணாம்சங்களில் எஸ்ரா பவுண்ட்டுக்கு இருந்த தொடக்ககால துருதுருத்த உத்வேகம் விரைவில் மறைந்து போயிற்று.

ஜாய்ஸ் தனது இரண்டாவது நாவலான யூலிஸிஸ்-ஐ(Ulysses) ஊலிசேஸ் (OOlysaze) என்றுதான் உச்சரித்தார் என்றறிகிறோம். மேலும் நீங்கள் யூலிஸிஸ் நாவலைப் படிக்க முடியாது. மாறாக வார்த்தைகளை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கலாம்–உங்களால் ஜாய்ஸின் எழுத்து உத்திகளைக் கற்றறிந்த பின்னரே படித்தலும் படித்ததை கிரஹித்தலும் சாத்தியம். ஒவ்வொரு சொல்லும் பல அர்த்தங்களின் உருகிய வார்ப்பின் விளைவால் உண்டான சித்திரமாய் நிற்கிறது. இருபொருட்தன்மைகளின் இருள், எதிர்மறைநிறைந்த இரட்டிப்பு, அர்த்தம் உலர்ந்து போன சொற்களுக்கு மறுஉயிர்ப்பூட்டல், அர்த்தம் தேங்கிய குறியீடுகள் ஆகியவை விதைகளென சரியான பருவகாலத்திலும் பொருத்தமான இடத்திலும் உயிர் பெறுகின்றன.

ஜாய்ஸ் தொடக்கத்தில் தன்னை ஒரு கவிஞன் என்றே எண்ணினார். வேறு எந்த இருபதாம் நூற்றாண்டு எழுத்தாளரை விடவும் உரைநடையின் கவித்துவ சாத்தியங்களை விஸ்தரிக்க ஜேம்ஸ் ஜாய்ஸ் பங்களித்தது அதிகம். Chamber Musicஎன்ற கவிதைத் தொகுதியை 1907ஆம் ஆண்டு வெளியிட்டார். இத்தொகுதியில் காணப்படும் ஒருவித மினுங்கும் அழகுக்கு அப்பால் அவற்றின் புராதனத்தன்மை உறுத்துவதாய் இருக்கிறது. அவை சம்பிரதாயமான, நன்கு வரையறுக்கப்பட்ட உணர்ச்சிப்பாடல்கள். ஆனால் அயர்லாந்தை விட்டு வெளியேறி ஐரோப்பாவுக்கு சென்ற சமயத்திலேயே அவரது வெளிப்பாட்டு ஊடகம் கவிதையல்ல என்றும் புனைகதைதான் என்றும் உள்ளுணர்வுபூர்வமாக உணர்ந்து கொண்டார். அவரது பிரதான படைப்புகளுடன் ஒப்பிடும் போது சுயசரிதைத்தன்மை நிறைந்த கவிதை களடங்கிய (Pomes Penyeach(1927)இரண்டாவது கவிதைத் தொகுதி–மார்ஜின் ஓரத்துக் குறிப்புகள் போலிருக்கிறது. ஜாய்ஸ் தன் இருபதாம் வயதிலேயே ஐரிஷ் கவிஞர் யேட்ஸ், பிரெஞ்சுக் கவிஞர் வெர்லெய்ன் மற்றும் மரபான ஆங்கிலக் கவிஞர்களின் தொழில்நுட்பங்களைக் கற்றறிந்தார்.

ஜாய்ஸின் இலக்கியப்பயணத்தின் தொடக்கத்தில் நார்வே நாடகாசிரியரான இப்ஸன்-ஐ முன்னுதாரணமாகக் கொண்டு ஐரிஷ் இலக்கியத்தை ஐரோப்பிய மயமாக்க நினைத்தார்.–அந்த மாபெரும் வெளிஉலகத்தைப் பற்றி அயர் லாந்து கூடுதல் தன்னுணர்வு பெறட்டும் என எண்ணினார். இந்தக் காரியம் ஜாய்ஸூக்கு இருபக்கச் சாத்தியங்கள்மிக்கதாய் அமைந்து விட்டது. அந்த மாபெரும் வெளிஉலகம் அயர்லாந்தை அறியச் செய்ய வேண்டிய பெருங்கடமை ஜாய்க்கு விதிக்கப்பட்டது. இது வேறெந்த ஐரிஷ் எழுத்தாளரும் இதுவரை சாத்தியப்படுத்தாத ஒன்று. அயர்லாந்து--குறிப்பாக தலைநகர் டப்ளின், அதன் தெருக்கள், துறைமுகங்கள், மக்களின் பழக்கவழக்கங்கள், வதந்திகள், வரலாறு மற்றும் நிலஅடையாளங்கள் போன்ற வற்றை தன் நாவலில் கொண்டு வருகிறார். ஜாய்ஸின் டப்ளின் நகரம் சார்ல்ஸ் டிக்கின்ஸின் லண்டன் போலவும், தாஸ்தாயெவ்ஸ்கியின் மாஸ்கோ போலவும் ஸ்தூலமானது, வலுவானது, செறிவானது. ஆனாலும் ஜாய்ஸ் அளிக்கும் அயர்லாந்தின் சித்திரம் பாரபட்சமானது. தனது பூர்வீக நகரத்து சமூக-பொருளாதார, கலாச்சார மற்றும் கட்டிடவியல் அம்சங்களைக் குறைத்து விடுகிறார் அல்லது புறக்கணித்துவிடுகிறார்.

ஜேம்ஸ் ஜாய்ஸ் டப்ளினிலிருந்து அவரது 22ஆம் வயதில் சுயமாய் சுமத்திக்கொண்ட வெளியேற்றத்தில் பல ஐரோப்பிய நகரங்களில் வசித்தார். ஆனாலும் அவரது படைப்புக்கு மையமாய் விளங்கியது டப்ளின் நகரம்தான். அவரது பாத்திரங்கள் அனைவரும் டப்ளின்காரர்கள். கதைகளின் பின்னணி டப்ளின். அவர் இளைஞனாய் இருந்த போது கைவிட்டுச் சென்ற நகரத்தின் சாராம்சத்தை சிம்பலிஸ யதார்த்தம் மூலமாய் உருவாக்க அசாத்தியமான மொழித்திறன்களைப் பயன்படுத்தினார்.

ஒரு எழுத்தாளன் என்ற வகையில் ஜாய்ஸின் வாழ்க்கையை நான்கு கட்டங்களாகப் பிரிக்கலாம். முதலாவது கட்டம் அவர் இன்னும் ஒரு பாத்திரமாகவும் பங்காகவுமிருந்த வாழ்க்கைச் சூழ்நிலைக்கு சிறுசிறு வடிவம் கொடுத்த Dubliners காலகட்டம். Dubliners இல் சித்தரிக்கப்பட்ட

அயர்லாந்தின் ஒரு பங்காய் ஜாய்ஸ் இருப்பது எப்படியென்றால் செகாவ் தான் சித்தரித்த நாடகங்கள் மற்றும் கதைகளின் ஊடாய் ஒரு அங்கமாய் இருக்கும் ஒரு மங்கலான வழியில் இருப்பது போல.

இரண்டாவது கட்டத்தில் தன் சுயசரிதைத்தன்மை மிகுந்த நாவலான Portrait of the Artist as a young Manஐ எழுதினார். தன்னை உருவாக்கிய சக்திகளுடனான அவரது உறவுகளை ஒளிவுமறைவின்றி அலசினார்.மூன்றாவது கால கட்டம் போர்ட்ரெய்ட் நாவலின் இறுதிப் பகுதி

தொடர்பானது. இதில் மொழியை மறுஉருவாக்கம் செய்யும் அவரது சுதந்திரத்தை உணரத் தொடங்குகிறார். அவர் கைவிட்ட வாழ்க்கையை யதார்த்த மற்றும் குறியீட்டுத்தளங்களில் எழுதிப் பார்க்கிறார். அந்தக் கைவிடலும் தியாகமும் ஒரு கலைஞனின் நேர்மைக்கு அத்தியாவசி யமானவை--அவருக்கு உணர்ச்சிக்கலப்பற்ற புறப்பார்வையை அளிக்கக்கூடியவை.

நான்காவது காலகட்டத்தில் அவரது படைப்பின் உச்சமென ஜாய்ஸ் கருதிய ஃபின்னகன்ஸ் வேக் (Finnegan’s Wake)-நாவலை எழுதினார். இதில் யூலிஸிஸ் நாவல் உருவான யதார்த்த தளத்தை முற்றிலுமாய் நிராகரித்து விட்டு ஆங்கில மொழியை ஆழப்படுத்தி அதன் உச்சபட்ச சாத்தியங்களை எட்டினார். ஆனால் விளாதிமிர் நபோகோவ் ஃபின்னகன்ஸ் வேக் பற்றிய மிக மோசமான கருத்தினைக் கொண்டிருந்தார். அவரது கருத்துப்படி வேக் நாவல்

. .author’s [Joyce] next and last novel, Finnegan’s Wake (1939), one of the greatest failures in literature

Vladimir Nabokov, Lectures on Literature, Picador(1983), p.349

ஜாய்ஸ் தன் இளமைக்காலத்திலேயே குறுகிய எல்லைப்பாடுகள் கொண்ட, பிற ஐரிஷ் இலக்கியவாதிகளான ஜே.எம்.ஸிஞ்ச், யேட்ஸ், போன்றோர் முனைப்பாகப் பங்கேற்றுக் கொண்ட ஐரிஷ் இலக்கிய மறுமலர்ச்சி இயக்கங்களில் சம்மந்தப்பட மறுத்ததோடு மட்டுமன்றி, அவர் அறிந்திருந்த ஐரோப்பிய இலக்கிய கலாச்சாரம் குறித்த பிரக்ஞை பற்றி தற்பெருமை கொண்டிருந்தார். ஒரு படைப்பாளி என்ற வகையிலும் ஒரு தனிநபர் என்ற வகையிலும் கலாச்சார-அரசியல் நிலைப்பாடுகளில் அவர் அதீதத் தனிமை கொண்டிருந்தார். அயர்லாந்துக்காரர்களுக்கு ஆங்கில மொழி

அந்நியமானது என்ற கருத்தை அவர் சிறிது காலம் கொண்டிருந்த போதிலும் ஜாய்ஸ் அன்றைக்கு ஃபேஷனாக இருந்த ஐரிஷ் மொழி கற்கும் விஷயத்தில் சிறிதும் ஈடுபாடு காட்டவில்லை. இதற்கு எதிர்நிலையில் நின்று அவரது ஆதர்ச நாடகாசிரியரான இப்ஸன் (Ibsen)-னின் நாடகங்களை மூலமொழியில் படிப்பதற்காக நார்வேஜிய மொழியைக் கற்றார். கத்தோலிக்க மதத்தைக் கைவிட்டு சிறிது காலம் பாரிஸ் நகரில் வசித்தார். சமரசம் செய்து கொள்ளத் தயாரில்லாத ஒரு பிடிவாத மனநிலையில், ஜாய்ஸின் தாயார் மரணப்படுக்கையிலிருந்த சமயம், அயர்லாந்துக்கு மறுவருகை புரிந்த போதிலும் கூட தாயாரின் இறுதி விருப்பத்தை நிறைவேற்ற மறுத்துவிட்டார். இந்தக் குற்றவுணர்ச்சியே ஜாய்ஸின் முதல் நாவலான Portrait of the Artist as A young Man க்கு வித்திட்டது. 1904ஆம் ஆண்டு நோரா பார்னகிள் என்ற பெண்ணுடன் பாரிசுக்குக் கிளம்பிச் சென்றார். நோரா ஒரு ஹோட்டலில் பணிப்பெண்ணாக வேலை பார்த்தவர். இலக்கிய ஈடுபாடுகளற்றவர். நோராவுக்கு ஜாய்சைப் புரிந்து கொள்ள முடியாத இயலாமை இருந்தது. நோரா அவரது இலக்குகளைச் சரிவரப் புரிந்து கொள்ளாதது அவருக்குப் பெரும் சுமையாக இருந்திருக்க வேண்டும். நம்பிக்கை வறண்டுபோயிருந்த ஒரு காலகட்டத்தில் ஜாய்ஸ் வாழ்ந்த போது, நீங்கள் ஏன் மக்கள் புரிந்து கொள்ள முடிகிற அர்த்தமுள்ள புத்தகங்களை எழுதக்கூடாது? என்று கேட்டிருக்கிறார். ஜாய்ஸ் தன் குடும்பத்தைக் காப்பாற்ற டிரியஸ்ட் மற்றும் ஜுரிச் நகரங்களில் சிரமப்பட்டு உழைக்க வேண்டியிருந்தது. வறுமை எப்போதும் அவர் வாசலை எட்டிவிடக் கூடியதாகவே இருந்தது. அவரது புத்தகங்களின் காப்புரிமைப் பணமும் பிற இலக்கியப் புரவலர்களின் ஆதரவும் அவரது பின்கட்ட வாழ்வில்தான் வந்தடைந்தன.

ஜாய்ஸ் தனக்களிக்கப்பட்ட ரோமன் கத்தோலிக்க கல்வி மற்றும் ஒழுக்கப் பயிற்சி பற்றிப் பெருமை கொண்டிருந்தார். ஜீஸஸ் சங்க(Jesuit)ரோமானியத் திருச்சபையினரில், குறிப்பாக புனித தாமஸ் அக்வினாஸ் என்பவரின் இறையியல் சட்டதிட்டங்களின் கடுமைக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டவர். ஒரு கவிஞன் என்ற முறையில் ஜாய்ஸ் வால்ட்டர் பேட்டரின்(Walter Pater) கலைக் கொள்கையைப் பின்பற்றினார். பேட்டர் சமூகத்தில் கூடுதல் சலுகைகள் உடைய தனிநபராக மாத்திரமின்றி கலைஞனை சமூக மற்றும் அறவியல் பொறுப்புகளுக்கும் கடமைகளுக்கும் அப்பாற்பட்டு இயங்குபவனாக எண்ணியவர். எனினும் தனிமைப்படுத்தப்பட்டுத் தெரியும் அறிவுநிலைவாதம் அவரது சிக்கலான ஆளுமையின் ஒரு பகுதிதான். ஐரிஷ் தேசீயவாதத்தின் புராணிகங்களுக்கு ஊட்டமளிக்கும் பொருட்டு ஒரு செயற்கையான கலாச்சாரத்தை உருவாக்க முனைந்த செல்டிக் மறுமலர்ச்சிக்கென்று ஒதுக்குவதற்கு ஜாய்ஸுக்கு நேரமிருக்கவில்லை. போர்ட்ரெயிட் நாவலின் நாயகனான ஸ்டீவென் டெடாலஸின் அழகியல் செவ்வியல் மரபிலிருந்து வேறுபடுகிறது. நாவலின் இறுதியில் குடும்பம், தந்தைநிலம், தேவாலயம் ஆகியவற்றின் கோருதல்களை நிராகரிக்கும் போது இதே விஷயங்களை முதன்மைப்படுத்தியும் பேசுகிறான் டெடாலஸ். குறிப்பாக அதில் மதம் பற்றிய கருத்துக்கள் சிக்கல் நிறைந்து காணப்படுகின்றன. மதம் மற்றும் குடும்பம் ஆகிய நிறுவனங்களின் மீதான கருத்துக்களில் ஜாய்ஸின் தாயார் ஒரு பிரதான பாதிப்பு செலுத்தினார். ஜாய்சின் ஏசுசங்கத்திய (Jesuit) பள்ளியாசிரியர்கள் ஜாய்ஸுக்கு தீர்க்கமானதொரு கத்தோலிக்க வளர்ப்பை உறுதிப்படுத்தினர். வளர்பிராயத்தின் போது அவர் ஒரு பாதிரியாக ஆவதற்கான தயாரிப்பு ஏற்பாடுகளிருந்தன. எனவே ஜாய்ஸின் முழுமொத்த மனோஇயங்கு முறையில் யேசுசங்கத்தினரின் பாதிப்பு வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால் பள்ளியை விட்டு வெளியேறிய போதே மதம் மீதான நம்பிக்கையை முற்றிலுமாய் இழந்துவிட்டார் ஜாய்ஸ். நேச்சுரலிஸ விவரணையின் அடிப்படையிலமைந்த போர்ட்ரெயிட் நாவலில் அதன் மையப்பாத்திரமான ஸ்டீவென் மூலமாக இலக்கியம் மற்றும் கலை ரீதியான கோட்பாடுகளுக்கு வடிவம் கொடுத்தார் ஜாய்ஸ். கலைஞன் எப்படி இருக்க வேண்டும் என்று ஜாய்ஸ் நினைத்ததை ஸ்டீவென் தன் சிந்தனையில் எதிரொலிக்கிறான்:

The artist, like the God of creation, remains within or behind or beyond or above his handiwork, invisible, refined out of existence, indifferent, paring his fingernails (Portrait of the Artist)

கலை ரீதியான இந்த வரையறையை நோக்கித்தான் ஜாய்ஸின் படைப்புகள் நகர்கின்றன. கலைஞன் கடவுள் மாதிரி இருக்க வேண்டும். அவனது படைப்பிலிருந்து பின்னாலோ, அப்பாலோ, மேலோ, அதற்கு உள்ளூடாகவோ இருக்க வேண்டும். ஆனால் இருப்பது புலனாகாமல் இருக்க வேண்டும். அவன் இருப்பு இந்த வாழ்விலிருந்து சுத்திகரிக்கப்பட்டிருக்க வேண்டும். வேறெதிலோ கவனம் கொண்டு அவன் தன் படைப்பு பற்றி விட்டேற்றியாக-சிரத்தையற்றவனாய் இருக்க வேண்டும். நாவலின் வேறு ஒரு இடத்தில் ஸ்டீவென் தன் அழகியல் கோட்பாடு பற்றிக் குறிப்பிடும் பொழுது அது ஒரு நடைமுறை அக்வினாஸ் தத்துவம் என்கிறான். அரிஸ்டாட்டில் மற்றும் அக்வினாஸ் ஆகியோரின் விமர்சன முறைகளுக்கு ஸ்டீவென் தன் தனிமுத்திரையை இடுகிறான். மிகக் குறைவான உருமறைத்தல் தவிர்த்து ஜாய்ஸின் முதல் இருபதாண்டு வாழ்க்கையை நேரடியாகப் பிரதிபலிக்கிறது போர்ட்ரெயிட். சுயசரிதைகளை விட கூடுதல் மனந்திறப்பு கொண்டதாயிருக்கிறது. நாயகனின் உணர்ச்சி ரீதியானதும் அறிவார்த்த ரீதியானதுமான துணிகரச் செயல்களுக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் நாவல் சுயசரிதையிலிருந்து உயர்ந்த கலைப்படைப்பாக வெகுவாய் மேலெழும்புகிறது. இந்த நாவலை அவர் 1904ஆம் ஆண்டு டப்ளினில் எழுதத் தொடங்கினார். டிரியஸ்ட் நகரில் 1914ஆம் ஆண்டு வரை சீர்திருத்தி எழுதியவண்ணமிருந்தார். இந்தச் செயல்பாட்டின் விளைவாய் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்கங்களை கூடுதலாய் சேகரித்திருந்தார். ஸ்டீவெனை பாரிஸ் செல்வதற்குத் தயார்ப்படுத்தும் வரை. அந்த சமயத்தில் போர்ட்ரெயிட் நாவலின் பெயர் Stephen Hero என்றுதானிருந்தது.

நனவோடை (Stream of Consciousness)உத்தியை அவர் தீவிரமாகக் கையாள்வதற்கு முன்னர் Epiphany என்ற கருத்தாக்கத்தினை தன் படைப்புகளுக்கு அடிப்படையாக முன்வைத்தார். எப்பிஃபனிக்கு ஒரு எளிய எடுத்துக்காட்டு கிறிஸ்து அந்த மூதறிஞர்களுக்கு காட்சியளித்த விதம். இது போன்ற கணத்தோற்றங்கள் அல்லது கணங்கள் நம் அனைவருக்கும் வெளிப்பட்டு தெரியத் தயாராய் இருக்கின்றன. ஆனால் நாம் அவற்றை உணர்வதில்லை. சில நேரங்களில் மிகவும் சிரமமான தருணங்களிலும் கூட அவை திடீரென நிகழ்ந்து தம் முகத்திரையை விலக்கிக் காட்டுகின்றன. மர்மத்தின் சுமை விலகி வஸ்துக்களின் உச்சபட்ச ரகசியம் வெளிப்படுத்தப் படுகிறது. ஒரு கோப்பை லிண்டன் தேநீரில் மேடலெய்ன்என்ற பெயர் கொண்ட ஸ்பாஞ்சு கேக்கை முக்கி எடுத்த போது நவீன ஃபிரெஞ்சு நாவலாசிரியரான மார்சல் ப்ரூஸ்ட்டுக்கு இது அனுபவமாயிற்று. இம்மாதிரியான கணத்தோற்றங்கள் ஸ்டீவெனுக்கு போர்ட்ரெயிட் நாவலில் நிகழ்கின்றன–குறிப்பாக எக்லஸ் தெருவினைக் கடந்து செல்கிற போது. இது போன்ற நொய்மையான, கணத்தில் நிகழ்ந்து முடிகிற மனநிலைகளைப் பதிவு செய்வது ஒரு எழுத்தாளனின் பிரதான கடமை என்றார் ஜாய்ஸ். இது போன்ற கணத்தோற்றங்களைத்தான் Epiphany என்றழைக்கிறார்கள். புதினங்களில் மட்டுமன்றி தனித்த அனுவத் தொகுதிகளாக இவற்றை ஜாய்ஸ் சேகரித்தார். ஒரேயொரு வார்த்தை ஒரு முழுக்கதையையும் சொல்லிவிட முடியும். ஒரு சிறு உடலசைவு மிகவும் சிக்கலான உறவுகளின் திட்டத்தை வெளிப்படுத்தி விட இயலும். ஒரு படைப்பாளன் ஒரு யோகி அளவுக்கே இந்த வெளிப்படு தோற்றங்களை கிரஹித்துக் கொள்ளத் தன்னை ஏதுவாக வைத்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு அற்பத்தகவல்கள் போலத் தோன்றக்கூடியவை படைப்பாளனுக்கு விசேஷ நிகழ்வுகளின் குறியீடுகளாக மாறிவிட முடியும். ஜாய்ஸ் தன் முதிர்ச்சிக் காலப் படைப்புகளிலுமே கூட அனுவங்களின் ஆழ்நிலைப் பார்வைகளை மறுகட்டுமானம் செய்பவராய்த் தோன்றுகிறார். மறைஞான நிலைக்கும் கடைவிரித்துக் காட்டலுக்குமிடையிலான ஜாய்ஸின் திடீர்க் கோண மாறுதல்கள் தலை சுற்றச் செய்யக் கூடியவை. அவ்வாறே மொழியியல் சோதனைக்கும் போர்னோகிராஃபித்தன்மையான மனந்திறப்புகளுக்கும் இடையில் ஏற்படும் திடீர் மாற்றங்களையும் நாம் ஜாய்ஸின் படைப்புகளில் பார்க்க முடியும். குறியீட்டுத்தன்மைகளுக்கும், நேச்சுரலிஸ அம்சங்களுக்கும், மதத்தின் வெளிப்படு உணர்வுக் காட்சி நிலைகளுக்கும் ஜாய்ஸ் இலக்கிய பதிலிகளை உருவாக்குபவராய் இருந்தார். Epiphany இறையியலில் வேர்கொண்டிருந்த போதிலும் இன்று ஒரு முழுமை பெற்ற இலக்கிய உத்தியாக மாறியிருக்கிறது. நவீன ஃபிரான்ஸின் சமுதாய மற்றும் மனோவியல் ஆய்வாக ஆகும் பொருட்டு, பால்ஸாக்கின் The Human Comedy நாவல் தொடர்களைப் பின்பற்றி எமிலி ஸோலா தனது Rougon-Macquart நாவல் தொடர்களை எழுதினார். டப்ளினர்ஸ் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் டப்ளின் மாந்தர்களைப் பாத்திரமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதைத் தொகுதி. கதைத் தலைப்புகளும் இடம் சார்ந்தவை. குறிப்பிட்ட கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த சித்திரத்தைத் தரும் பொருட்டு ஜாய்ஸ் எழுதியிருக்கக் கூடும். ஆனால் முன் குறிப்பிடப்பட்ட நாவல் தொடர்களுடன் ஒப்பிட்டால்

ஜாய்ஸின் கதைகள் சிறிய வரைபடங்கள் அல்லது குறு-மனப்பதிவுகள் போலவோ தெரிகின்றன. இத்தகைய மனப்பதிவுகளின் பிராபல்யம் இம்ப்ரஷனிஸ ஓவிய இயக்கத்துடன் தொடர்புடையது. குறிப்பாக அக்கதைகளின் உத்தி. இம்ப்ரஷனிஸ்ட்டுகளின் ஓவியப் பொருட்கள் ஸ்டுடியோக்களில் வடிவமைக்கப்பட்டு மறுகட்டுமானம் செய்யப்படுவதைத் தவிர்த்து கண்டுபிடிக்கப்பட்டன. ஏற்றுக் கொள்ளப்பட்ட சித்திர உருவாக்க முறை புறக்கணிக்கப்பட்டு ஓவியனின் மனப்பதிவு இழக்கப்படுமுன், ஓவியம் நுண்மைமிக்கதாயும் அதிவேகத்துடனும் தீட்டப்பட்டது. கணத்தைக் கைப்பற்றுதல் என்னும் இம்ப்ரஷனிஸ ஓவியனின் அக்கறைக்கு இலக்கியத்தில் சமமான முயற்சிதான் Slice of Life கதைகள் உருவாயின. இக்கதைகளில் குறிப்பிட்ட மன உணர்ச்சியின் சூழல் மறுகட்டுமானம் செய்யப்படுகிறது. ஃபிரான்சில் இதன் மிகப் பெரிய விற்பன்னராகக் கருதப்பட்டவர் மாப்பஸான். ஆனால் ஜாய்ஸ், மாப்பஸானின் சாதனை எல்லைகளைக் கடந்து சென்றவர். நகர்சார் யதார்த்தக் கதைகளின் முன்னோடிகளாய் Arthur Morrisonஎன்பவர் எழுதிய Tales of Mean Streets(1894), Arnold Bennet என்பவர் எழுதிய Tales of Five Towns(1905)போன்ற நூல்கள் ஏற்கனவே ஆங்கில மொழியில் வெளிவந்திருந்தன. அயர்லாந்தைப் பொருத்தவரை ஜாய்ஸின் முன்னோடியாகவும் அவரது போட்டியாள ராகவுமிருந்தவர் George Moore. மூரின் கதைகள் அயர்லாந்து விவசாயிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டிருந்தன.

ஜாய்ஸ் டப்ளினர்ஸ் சிறுகதைகளை எழுதிய காலகட்டத்தில் ஒரு இலக்கிய உத்தியாக சிம்பலிஸம் அதிகம் பேசப்பட்டது. யேட்ஸ்-ஐ தலைசிறந்த ஆங்கில சிம்பலிஸ்ட் என வர்ணித்தார் ஆர்தர் சிமென்ஸ். ஆர்தர் சிமன்ஸ் 1899ஆம் ஆண்டு சிம்பலிசத்தைக் கீழ்க்கண்டவாறு வரையறை

செய்தார்- ஒரு வகையான வெளிப்பாட்டு முறை, மிக உயர்ந்த விதத்தில் ஆனால் உத்தேசமாய் . . . பிரக்ஞையால் உணரப்பட்ட, கண்ணுக்குப் புலனாகாத ஒரு நிஜம்” (Arthur Symons, The Symbolist Movement in Literature, New York,(E.P.Dutton &co) 1958, p.1) சார்ல்ஸ் பாதலெரின் மிகப் பிரபலமான கவிதையான ‘Correspondences’ இயற்கையை குறியீடுகளின் வனமாக மனதின் முன் விரிக்கிறது. 50 வருடங்களுக்கு முன்னரே இந்தக் கவிதை வெளிவந்துவிட்டது. சிமன்ஸினால் விளக்கப்பட்ட பல கவிஞர்கள் பாதலெரைப் பின்பற்றி சிம்பலிஸக் கவிதை எழுதியவர்கள். அதன் கொள்கைகளைப் பின்பற்றி ஓவிய இயக்கமொன்றும் உருவாயிற்று. ஆஸ்கார் வைல்ட் தன் நாவலான Picture of Dorian Gray வுக்கு எழுதிய முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்:

“All literature is both surface and symbol”.

ஆஸ்கார் வைல்டின் மேற்கோள் சிம்பலிஸக் கருத்தாக்கம் பற்றிய பரந்துபட்ட பரிச்சயத்தை இலக்கிய உலகிற்கு உருவாக்க உதவிற்று. ஃபிளாபரும் எமிலி ஸோலாவும் மிகப் பிரத்யேகமாக சிம்பலிஸ நாவலாசிரியர்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும். நேச்சுரலிஸம் மற்றும் சிம்பலிஸ இலக்கிய இயக்கங்களிடமிருந்து ஜாய்ஸின் Epiphany பற்றி இலக்கிய கொள்கை கடன் பெற்றிருக்கிறது. எனினும் Epiphany முதன் முதலாக 1944ஆம் ஆண்டு ஜாய்சால் கைவிடப்பட்ட நாவலான ஸ்டீபென் ஹீரோ-வில்தான் அறிமுகம் செய்யப்பட்டது.

டப்ளினர்ஸ் சிறுகதைத் தொகுதி யதார்த்தமே உத்தியாகவும் இறுதி விளைபொருளாகவுமிருக்கும் ஒரு நிலையை ஆய்வு செய்கிறது. முதல் மூன்று கதைகளும் முதல்நபர் பார்வையில் சொல்லப்பட்டிருக்கின்றன. எல்லாக்கதைகளும் சுயப்பிரக்ஞையுடன் கவனமிக்க அமைவுபடுத்தல் மூலம் வடிவம்கொண்டிருக்கின்றன. An Encounter இன் விவரணைத் தொனி பீதியூட்டும் அமைதி கொண்டிருக்கிறது. Eveline இல் கடினத்தன்மை மிக்க தெளிவும் ஒழுங்குபடுத்தப்பட்ட சித்தரிப்பும் காணப்படுகிறது. A Littel Cloud இல் கவனத்துடன் சமன்படுத்தப்பட்ட உள்வயப் பிரதேசங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

ஜாய்ஸ் தன் சகோதரர் ஸ்டானிலாஸ்-க்கு விளக்கியபடி டப்ளினர்ஸ் தொகுதியின் முதல் மூன்று கதைகள் ஜாய்ஸின் குழந்தைப்பருவக் காலத்து அனுவங்களிலிருந்து உருவானவை. முதல்நபர் பார்வையில் சொல்லப்பட்ட இந்த மூன்று கதைகளும் மயக்கமகன்று போதலை கதைக் கருவாகக்

கொண்டுள்ளன. பாதிரியாக ஆக விரும்பிய ஒரு சிறுவன் கொண்டிருந்த வாழ்க்கை நோக்கம் (The Sisters)சிதைந்து போகிறது. சிறுவர்களின் தான்தோன்றித்தனமான விளையாட்டும் துணிகரச் செயல்களும் ஒரு பாலியல் வக்கிரக்காரானால் திடீரென நின்றுபோகின்றன(An Encounter). அரேபிய பஜாருக்குச்(Araby) சென்று பார்க்க நினைக்கும் சிறுவன் பஜாரை அடையும் சமயம் அதன் கடைகள் மூடப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான். வெறிச்சோடிய இருண்ட கூடங்களில் அச்சிறுவன் திரிந்தலைந்து தாமதமாக வீடு திரும்புகிறான். பிற கதைகளில் ஜாய்ஸ் மூன்றாம் நபர் பார்வைக்கு மாறிவிடுகிறார். ஜாய்ஸின் பெரும்பான்மையான பாத்திரங்கள் அவரது உறவினர்கள் அல்லது தெரிந்தவர்களை எடுத்துக்காட்டுகளாக வைத்து உருவானவை. குறிப்பாக (A Painful Case) கதையில் வரும் டஃபியின் பாத்திரம் ஜாய்ஸின் சகோதரரான Stanislausஐ முன்மாதிரியாக வைத்து உருவாக்கப்பட்டது.

திருமதி Sinico, Sydney Paradeஇல் ரயில்விபத்தில் இறக்கிறாள். ஒரு சம்பிரதாய புனைகதை எழுத்தாளர் இதில் இடம் பெரும் நிஜமான இடப்பெயர்களை மாற்றியிருப்பார். ஆனால் ஜாய்ஸ் கற்பனையாகக் கண்டுபிடிக்கப்பட்ட பெயர்களை இடங்களுக்குப் பொருத்துவதை நிராகரித்தார்.

ஜாய்ஸின் டப்ளினர்ஸ் சிறுகதைத் தொகுதியை வெளியிட வாக்குறுதியளித்திருந்த Mounsel &Co வைச் சேர்ந்த George Roberts என்ற ஐரிஷ் வெளியீட்டாளர் அத்திட்டத்திலிருந்து பின்வாங்கிக் கொண்டார். கடைகளுக்கும் விடுதிகளுக்கும் ஜாய்ஸ் நிஜப்பெயரை வைத்திருந்ததை அவர் ஆட்சேபித்திருந்தார். திருவாளர் டஃபி ஒரு பூங்காவில் காதலர்கள் சரசமாடுவதைக் கண்டும் காணாமலும் செல்கிறார். அவர் அந்த ஜோடிகளைப் பார்ப்பதாக வரும் Magazine Hill நிஜமாகவே Phoenix Park பூங்காவில் உள்ளது. புனைவாக்கப்பட்ட ஒரு அயர்லாந்தை தன் கதைகளின்

வழியாகப் படைப்பதில் ஜாய்ஸுக்கு விருப்பமிருக்கவில்லை. டப்ளின் வாழ்க்கையை ஜாய்ஸ் paralysis என்ற உருவகம் மூலமாக விவரித்தார்.

An Encounter கதையில் வரும் சிறுவன் பள்ளிக்குச் செல்லாமல் நாளெல்லாம் தெருக்களில் சுற்றித் திரிந்து இறுதியில் சிறுவர்களை பாலுறவுக்குப் பயன்படுத்தும் வயோதிகனுடனான சந்திப்பைப் பற்றிச் சொல்கிறது. இந்தக் கதையிலும் The Sisters கதையிலும் வளர்ந்த மனிதர் உலகத்திற்கும் குழந்தைகளின் உலகத்திற்குமிடையிலான மோதல் அல்லது குறுக்கீடு விவரிக்கப்படுகிறது. மதப்பிரச்சாரகரும், சிறுவர்களைப் பாலுறவுக்குப் பயன்படுத்துவோனும் ஒருவித விரிந்த மர்மத்தைக் கொண்ட ஆசாரமற்ற உலகினை விரிக்கின்றனர். அந்த மர்மம் கரைபடிந்ததாயும் அருவருப்பூட்டுவதாயுமிருந்த போதிலும் மனிதத்துவம் கொண்டதாயிருக்கிறது. இந்த இரு மனிதர்களுமே அந்த சிறுவர்களிடத்தில் பரிவினை மறுபேச்சுக்கிடமின்றி கோருபவர்கள். சிறுவன் சிறிது சிறிதாய் வளர்ந்தோர் உலகின் குற்றவுணர்வை அறிந்து கொள்கிறான். இம்மாதிரியான புனைவம்சத்தை போர்ட்ரெயிட் நாவலில் ஜாய்ஸால் முழுமைப்படுத்த முடிந்திருக்கிறது. Counterparts கதையில் செகாவ் கதையின் குணாம்சம் இருப்பதை வாசகர்கள் கவனிக்கத் தவறிவிட முடியாது. இவற்றில் இறுதிக் கதையான The Dead மற்ற கதைகளை விட ஜாய்சின் கலாபூர்வமான முழுமையை உள்ளடக்கியது மட்டுமன்றி தனக்கான ஒரு கதைத்திட்டத்தையும் (Plot) கொண்டிருக்கிறது. The Dead ஐ சிறுகதை என்று சொல்வதை விட குறுநாவல் என்றழைப்பதே பொருந்தும். The Dead கதையில் வரும் Gabriel Conroy சமூகத்திலிருந்து சற்றே அந்நியமான பிரஜை. இந்த நீள்கதை அடர்த்திச் செறிவான தீட்சண்யமிக்க சமூகக்காட்சியைப் பின்னணியாகவும் செயல்களமாகவும் கொண்டது. டப்ளின் நகரின் தீவிர இசைக் கலாச்சாரத்தை எந்த அளவுக்கு நுணுக்கமாய் ஜாய்ஸ் அறிந்து வைத்திருந்தார் என்பதற்கும் இக்கதை சான்றாகிறது. நாடகத்தன்மை மிக்க சில நிகழ்ச்சிகள் கதையை உயிரோட்டம் மிக்கதாய் ஆக்குகின்றன. எல்லாவற்றையும் விட தலைசிறந்த அம்சமாய்த் திகழ்வது அந்தக் கதையின் பெண் பாத்திரமான கிரேட்டா கோன்ராய்-உடன் ஜாய்சுக்கு இருந்த அத்யந்தமான புரிதல். டப்ளினர்ஸ் தொகுதிக் கதைகளில் வரும் ஏனைய பெண் பாத்திரங்கள் வெறும் நிழல்கள் போன்று தோற்றமளிக்கின்றன. அவர்கள் மீது விவரணையாளனுக்கு அதிகக் கரிசனம் கிடையாது. The Boarding Houseஇல் வரும் Pollyயின் மனோநிலையைச் சித்திரிப்பதற்கு ஜாய்ஸ் சற்றுக் கூடுதல் அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறார். The Deadஇல் Gretta Conroy திடீரென காசநோயில் இறந்து போன தன் பழைய காதலனை நினைவு கூர்கிறாள்–அவன் அவளது உணர்வுகளை தற்போதிருக்கும் கணவனை விடக் கூடுதலாகப் பெற்றிருந்தவன்.

ஜாய்சின் மொழிநடையில் ஏற்பட்ட மாற்றங்களும் வடிவப் பிரக்ஞையும் அதன் அடுத்த கட்ட நாவலான Portrait of the Artist as A young Man க்கு இட்டுச் சென்றது. ஸ்டீவென் ஹீரோ எழுதப்பட்ட வருடம் 1904. ஜாய்சும் நோரா பார்னகிளும் டப்ளின் நகரை விட்டு ஐரோப்பாவுக்குக் கிளம்பிச் சென்ற வருடமும் அதே.

மொழியாசிரியர் வேலை ஏற்று ஜாய்ஸ் 10 வருடங்களுக்கு மேலாக அட்ரியாட்டிக் பகுதியிலேயே தங்கிவிட்டார். முதல் உலகப் போர் தொடங்கியவுடன் அவர் ஸ்விட்சர்லாந்துக்குக் குடிபெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1913ஆம் ஆண்டு எஸ்ரா பவுண்டிடமிருந்து ஜாய்ஸூக்கு வந்த ஒரு யதேச்சைக் கடிதம்தான் ஜாய்சை இலக்கியப் பிரபலர் வரிசையில் வைக்கக் காரணமாயிற்று. Egoist இலக்கிய ஏட்டில் போர்ட்ரெயிட் நாவலைத் தொடராக வெளியிடுவதற்கு பவுண்ட் ஏற்பாடு செய்தார். 1914இல் Egoist ஒரு அரசியல் ஏடாகவும், இலக்கிய முன்னணிப் பத்திரிகை யாகவுமிருந்தது. 1914ஆம் ஆண்டில்தான் லண்டன் பதிப்பகத்தைச் சேர்ந்த கிராண்ட் ரிச்சர்ட்ஸ் டப்ளினர்ஸ் சிறுகதைகளை ஒரு தொகுதியாக வெளியிட்டார். போர்ட்ரெயிட் நாவலை எழுதுவதற்கு ஜாய்ஸ் எடுத்துக் கொண்ட காலம் 10 வருடங்கள். அகதியாகவும், மௌனமாகவும்,

தந்திரமாகவும்தன் நாயகனான ஸ்டீவென் டெடாலஸின் திட்டத்தை ஜாய்ஸ் கடைபிடித்தார் என்று சொல்வது அதிகபட்சமில்லை.

மேலதிக சமூக மற்றும் மனோவியல் தகவல்களை புதினம் கோரும் போது அவற்றை நாவலாசிரியன் தன் சொந்த அனுபவங்களிலிருந்து தர வேண்டியிருந்தது. எந்த சக்திகள் அவனை ஒரு வெளியாள்ஆக ஆக்குகின்றனவோ அவை அவனை தனக்குள்ளாகப் பார்க்கவும் வைக்கின்றன. அவன் தனது சொந்த நாயகனாகிறான். பிற பாத்திரங்களை பின்புலத்தில் இட்டு நிரப்புகிறான். பின்னணி அல்லது பின்புலம் புதிய முக்கியத்துவம் வாய்ந்ததாவதற்குக் காரணம் அது அவன் மீது செலுத்தும் பாதிப்பே. நாவலின் மையஓட்டம் நாவலாசிரியனின் ஆளுமை உருவாக்கப்பெறும் விதமாய் மாறுகிறது. இதை ஜெர்மானிய விமர்சனத்தில் Bildungsroman என்ற சொல் மூலம் குறிக்கிறார்கள். நாயகன் கல்வி பெற்று ஒரு ஆளுமையாய் உருவாகும் வகை நாவல்களை இவை. பிரத்யேகமாக ஒரு நாவலாசிரியனின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் நாவலாக ஆகும் பொழுது இதை Kunstelrroman என்று சொல்கிறார்கள். இரண்டாவது வகை நாவலுக்கு மிக முக்கிய எடுத்துக்காட்டுகளாக Goethe எழுதிய Wilhelm Meister ஐயும் Stendhal எழுதிய Vie Henri Brulard ஐயும் குறிப்பிடலாம்.Kunstelrroman வகை நாவல்கள் ஜாய்ஸ் தலைமுறை எழுத்தாளர்களுக்கு யதார்த்தவியலின் சில முறைகளைப் பயன்படுத்த உதவியது. மார்சல் ப்ரூஸ்(ட்)க்கு அவர் எழுதிய Remembrance of Things Past நாவலுக்கு உதவியது. ஆந்ரே ழீத்-க்கு அவர் எழுதிய The Counterfeiters மூலமாக உதவியது. ழீத் எழுதிய நாவலில் ஒரு நாவல் எழுதும் ஒரு நாவலாசிரியன் ஒருவன் எழுதும் டயரி பற்றிய குறிப்பு வருகிறது. அதில் ஒரு நாலாசிரியன் நாவல் எழுதுவது பற்றிய குறிப்புகள் அடங்கியுள்ளன. ஜாய்ஸின் சமகால ஆங்கில நாவலாசியரிரான டி.ஹெச்.லாரன்ஸின் Sons and Lovers நாவல் 1913இல் வெளிவந்தது.

லாரன்ஸ்-ம் ஜாய்ஸும் அடிப்படை முரண்கள் கொண்ட எதிர்துருவங்களைச் சேர்ந்த நாவலாசிரியர்கள் என்ற போதிலும் Sons and Lovers ம் போர்ட்ரெய்ட்-நாவலும் அடிப்படையான கருத்தொற்றுமை கொண்டிருந்தன. சம்பிரதாயத்தினாலும் வறுமையாலும் முடக்கிப் போடப்பட்ட இளம் திறன்களைப் பற்றியதாயிருந்தன அவை. இரண்டிலும் இடம் பெறும் அம்மாக்களால் அதன் நாயகர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அதன் நாயகர்கள் வேறுபட்ட அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கெதிராகத் தம் போர்க்கொடியை உயர்த்திய போதிலும் கூட–ஆங்கில புராட்டஸ்ட்டண்ட் மதத்திற்கெதிராக லாரன்ஸ், வைதீக ஐரிஷ் கத்தோலிக்க மதத்திற்கெதிராக ஜாய்ஸ்–லாரன்ஸ் வாழ்க்கையின் ஈர்ப்புகளைப் பற்றியே அக்கறை கொண்டவராக இருக்கிறார். மாறாக ஜாய்ஸ் வாழ்க்கை மீதான வெறுப்புணர்ச்சியையே முதன்படுத்துகிறார். முடிவற்ற தலைமுறைக் குழந்தைகள் கூட்டுப் பாடல் பாடுவதை சித்தரிக்கும்போது அவர்கள் எல்லோரும் வாழ்க்கையில் நுழையுமுன்னரே வாழ்க்கை பற்றிய சலிப்பையும் அயர்ச்சியையும் கொண்டிருப்பதான உணர்வு ஜாய்ஸுக்கு ஏற்படுகிறது. டப்ளினர்ஸ் சித்திரித்த திறந்த உலகிலிருந்து போர்ட்ரெயிட் நாவலின் உள்வயமான, நனவோடை உத்திக்கு சற்று முந்திய விவரணையோட்டத்திற்கு வந்து சேர்கிறான் வாசகன். பெரும்பாலும் போர்ட்ரெயிட்-இல் நமக்கு அனுபவமாகும் வாழ்க்கை என்பது பாத்திரங்களின் அனுபவங்களின் வழியாக வடிகட்டியதாகத்தான் இருக்கிறது.

ஸ்டீவென் கூறும் கடமையின் ஆரம்ப வேர்கள் வேர்ட்ஸ்வொர்த் மற்றும் ஷெல்லியின் உயர் ரொமாண்டிசிசத்தில் இருக்கின்றன. நிஜமான அனுவபத்தின் சாரத்தை போர்ரெயிட் கலாரீதியான புராணிகமாய் உருமாற்றம் கொள்ளச் செய்கிறது. இது தவிர வேர்ட்ஸ்வொர்த் தன்மையிலான அர்த்தத்திலேயே யூலிஸிஸ் நாவலுக்கும் ஃபின்னகன்ஸ் வேக் நாவலுக்குமான அடித்தளங்களை இடுகிறது. என்றாலும் கூட போர்ட்ரெயிட் நேரடி ரொமாண்ட்டிக் தன்மையான நாவல் அல்ல. ஷெல்லி கூறியது போல் கலைஞன் unacknowledged legislator of the world என்ற கருத்தாக்கத்தை ஸ்டீவென் டெடாலஸ் ஏற்று செயல்படுவதாக நாம் கொண்டாலும் கூட தனது கலையின் ரகசியங்களையும் அதன் நுண்மைகளையும் ஆராய்ந்தறியும் பொருட்டு இறுதியில் அவன் இந்த உலகின் பிடிகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள யத்தனிக்கிறான்- மீண்டும் நாம் ஆஸ்கார்

வைல்டின் நாவலான Picture of Dorian Gray விலிருந்து ஒரு மேற்கோளை இங்கு காட்டுவது பொருந்தும்.

“every portrait that is painted with feeling is a portrait of the artist.” (Picture of Dorian Gray)

எல்லாக் கலைஞர்களுமே ஆன்மா ஒன்றே அறியத்தக்க நிலைபேறுடையது என்னும் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர் என்றார் வைல்ட். கலைஞர்கள் இது பற்றிய பிரக்ஞை உடையவராய் இல்லாதிருந்தாலும் அவர்களின் சித்திரங்கள் எல்லாமும் அவர்களைப் பற்றியதாகத்தான் அமைந்து விடுகின்றன.நாவலின் காலம் என்னவோ ஒரு நாள்தான் என்ற போதிலும் யூலிஸிஸ் நாவலைப் பொருத்தவரை வாசகன் திமிலங்கிலத்தைத் தூண்டில் கொண்டு சமாளிக்கும் ஒரு சாதாரண மீனவனின் நிலையில் இருக்கிறான். ஹோமரின் ஓடிசி காவியத்தை நாவலின் அடியோட்ட அமைவுக்கு ஜாய்ஸ் பயன்படுத்தினார் என்பது உண்மை. அத்தியாயங் களுக்கு ஒடிசியின் பிரிவுத் தலைப்புகளையே வைத்திருந்தார். ஆனால் நாவல் அச்சுக்குப் போவதற்கு முன்னர் இந்த ஹோமர்தன்மையான தலைப்புகளை நீக்கிவிட்டார். மேலும் யூலிஸிஸ் நாவல் பற்றிய 1960கள் வரையிலான தலைசிறந்த விமர்சகர்கள் ஹோமரின் அடியோட்டச் சரடினை அனுசரித்தே விமர்சனம் செய்தனர். ஆனால் இன்றைய பார்வையில் ஹோமரிய அடிச்சரடினைப் பின்பற்றாவிட்டாலும் யூலிஸிஸ் நாவலைப் புரிந்து கொள்வதற்கான சாவிகள் நமக்குக் கிடைத்து விடுகின்றன. நாவலின் களமும் பின்னணியும் வழக்கப்படி டப்ளின் நகரம்தான். யூலிஸிஸ் நாவலின் தொடக்கப் பக்கங்கள் போர்ட்ரெயிட்நாவலின் உடனடி நீட்சி போலத் தெரிகின்றன.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு பாரிஸ் நகரிலிருந்து டப்ளின் திரும்பும் ஸ்டீவென் டெடாலஸின் வாழ்க்கை மீண்டும் யூலிஸிஸ் நாவலில் தொடரப்படுகிறது. ஜாய்ஸின் மொழி குறிப்பிடத்தக்க வகையில் மாற்றம் ஏதும் ஏற்பட்டிராதது போலத் தோன்றினாலும் விவரணை முறையில் அடர்த்தியும் சிக்கல்களும் தோன்றிவிட்டன. இந்த இடைவெளி ஸ்டீவெனின் அறிவுச் சேகரத்தில் புதிய விஷயங்களைச் சேர்த்திருக்கிறது. ஒரு வட்டார ஐரிஷ் சிறுவனாயிருந்த ஸ்டீவென் தற்போது ஒரு படித்த ஐரோப்பியனாய் மாறியுள்ளான். ஆனால் அவன் தாயாரின் இறப்பு அவன் மனதுக்கு ஒரு பளுமிக்க குற்றவுணர்வைத் தந்திருக்கிறது. ஆயினும் யூலிஸிஸ் நாவலின் நாயகன் லியோப்போல்ட் ப்ளூம் என்கிற விளம்பர சேகர நிர்வாகிதான். இது தவிர அவரது மனைவியான மோலி ப்ளூம் இன்னொரு முக்கிய கதாபாத்திரம். மிக எளிமைப்படுத்திச் சொல்வதானால் ஒரு நாள் முழுக்கவும் டப்ளின் நகரில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிற இரு ஆண்களுக்கிடையிலான யதேச்சையான சந்திப்பைப் பற்றியதே யூலிஸிஸ்ஸின் கதை. இந்தச் சந்திப்பின் சாத்தியமிக்க விளைவுகள் வாழ்க்கையை மேம்படுத்தக் கூடியவையாக இருக்கலாம். விளம்பர சேகர வேலையில் ஈடுபட்டிருக்கும் ப்ளூம் வேலையிலோ வாழ்க்கையிலோ வெற்றிகரமானவர் அல்லர். ஸ்டீவென் டெடாலஸ்ஸோ இனிமேல்தான் அவன் ஒரு கலைஞன் என்று நிரூபணம் செய்யப்பட வேண்டியவன். ஸ்டீவெனைப் பொருத்தவரை போர்ட்ரெயிட் நாவலில் கேலிக்கும் வேடிக்கைக்கும் உரியதாயிருந்த புற உலகம் யூலிஸிஸ் நாவலில் அவனது மன அமைதியைக் குலைக்கக் கூடியதாய் இருக்கிறது–அதன் காரணிகளாக அமைபவர்கள் அவனது தற்போதைய நண்பர்களான பக் மல்லிகன் மற்றும் ஹெய்ன்ஸ் ஆகியோர். ப்ளூம் முதல் பார்வைக்கு சாத்தியமில்லாததொரு மீட்பர் போலத் தோன்றுகிறார். அவரிடம் எந்தக் குறிப்பிடத்தக்க குணாதிசயமும் இல்லை. மிக நெருக்கமான குளோஸ் அப்+பில் ப்ளூம் காட்டப்படுகிறார். ஆண்மையற்ற ஒரு கணவரான அவரை பாலியல் ரீதியாக அவர் மனைவி வஞ்சகம் செய்கிறாள். அவர் ஒரு பரிதாபமான நபர் மட்டுமல்லாது சமூகத்திலிருந்து அந்நியப்பட்டவரும் கூட. அவர் ஒரு யூதர். அப்படிப்பட்டவர் நடைமுறை வாழ்க்கைக்கான உதவியையும் நட்பையும் மாத்திரமே ஸ்டீவெனுக்குத் தரவியலும். அவர் ஒரு தந்தை போன்ற நிலையில்தான் காட்சியளிக்கிறார். ஸ்டீவென் அவருடைய இறந்து போன மகனின்(ரூடி) பதிலியாக இருக்க முடியும். ஆனால் இதற்கான சாத்தியங்களும் கூடக் குறைவு. வளர்ந்து விட்ட ஸ்டீவெனுக்கு அதையும் கூட நிறைவேற்ற முடியுமா என்பது சந்தேகமே. ஒரு வகையில் ஸ்டீவென் தந்தையைத் தேடிக் கொண்டிருப்பவனாகவும் இன்னொரு வகையில் ப்ளூம் ஒரு மகனைத் தேடிக் கொண்டிருப்பவராகவும் இருக்கின்றனர்.

1906ஆம் ஆண்டு டப்ளினர்ஸ் தொகுதிக்கு கூடுதல் கதைகள் எழுதுவது பற்றிய திட்டத்திலிருந்தார் ஜாய்ஸ். அதில் ஒன்று ஆல்ஃபிரட் ஹண்ட்டர் என்கிற ஐரிஷ் நாட்டு யூதரைப் பற்றியதாக இருந்தது. ஆனால் ஜாய்ஸ் திட்டமிட்ட கூடுதல் கதைகள் ஒன்றைக் கூட எழுதவில்லை. யூலிஸிஸ் என்ற தலைப்பிலான ஆல்ஃபிரட் ஹண்ட்டர் பற்றிய சிறுகதைக்கும் இறுதியில் அதுதான் நடந்தது. சில மாதங்கள் கழித்து அதை ஒரு சிறு நூலாக எழுதி முடித்துவிடும் திட்டத்தில் இருந்தார்.ஆல்ஃபிரட் ஹண்ட்டருக்குப் பதிலாகத்தான் லியோப்போல்ட் ப்ளூம் நாயகனாக மாறினார்.

சிறுகதைக்குப் பதிலாக 780 பக்கங்கள் கொண்ட நாவலாக யூலிஸிஸ் புதிய உருக்கொண்டது. அது பற்றித் தன் சகோதரர் ஸ்டானிஸ்லாஸ்-இடம் கூறும் போது அது ஒரு ‘Dublin Peer Gynt’ ஆக இருக்கும் என்று குறிப்பிட்டார். Peer Gynt இப்ஸன் எழுதிய தேசீய காவிய நாடகம். அதன் உந்துணர்ச்சிக்கு இப்ஸனின் நாடகம் பாரம்பரிய நாட்டுப்புறவியலையும் கிராமப்புற வழக்க மரபுகளையும் சார்ந்திருந்தது. இருப்பினும் இப்ஸனின் நாடகங்களிலேயே மிகவும் தனித்துத் தெரிகிற பலதர இலக்கியப் பாணிகளின் சங்கமமாக அமைந்த நாடகம் அது. எனவே யூலிஸிஸ் ஒரு சிக்கலான ஒட்டுவீர்யமிக்க கலைப்படைப்பாக விளங்குகிறது-சம்பிரதாய காவியம், சுயசரிதை நாவல், நவீன சிறுகதை, மற்றும் கவிதை நாடகம் ஆகிவற்றின் கூட்டுச் சங்கமமாக அது வடிவெடுத்திருக்கிறது. ஜாய்ஸின் ஒரிஜினல் நோக்கம் என்னவாக இருந்த போதிலும் அப்படிப்பட்ட ஒரு ஒட்டுவீர்ய இலக்கிய வடிவமானது வேறு இலக்கிய வடிவங்களைப் பகடி செய்வதாகவும் நையாண்டி செய்வதாகவும் அமைவது இயல்புதான். அது மட்டுமின்றி ஜாய்ஸின் புதிய இலக்கிய வடிவம் முடிவற்ற விரிவெல்லைகள் மிக்கதாயும் அமைந்தது. ஜாய்ஸ் 1914ஆம் ஆண்டு போர்ட்ரெயிட் நாவலை முடித்த பின் யூலிஸிஸ்ஸை எழுதத் தொடங்கினார். ஆனால் நாவலின் மிக முக்கியமான பகுதிகள் புரூஃப் கட்டத்தை அடையும் சமயத்தில்தான் சேர்க்கப்பட்டன. 18 நிகழ்வுகள் கொண்ட இதில் ஆரம்ப நிகழ்வுகள் அளவில் சிறியதாயும் பிற்பட்ட நிகழ்வுகள் பெரியதாகவும் அமைந்திருக்கின்றன. 1918ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜாய்ஸ் யூலிஸிஸ் நாவல் பற்றிப் பேசும்போதெல்லாம் நாவல் என்று குறிப்பிடாமல் காவியம்என்றோ என்சைக்குளோபீடியாஎன்றோதான் சொன்னார். தனித்தனி நிகழ்வுகள் தமக்கானதொரு வாழ்வினை எடுத்துக்கொள்ளவாரம்பித்தன. முதல் மூன்று அத்தியாயங்கள் (அ) நிகழ்வுகள் வெளிப்படையான கவித்துவத்துடன் கூடிய சிறுகதைகள் போலத் தோற்றமளிக்கின்றன. ஜாய்ஸ் கொடுத்திருக்கும் உட்பொதிந்த அர்த்தங்களைப் புரிந்து கொள்வதற்கு ஹோமரின் காவியத்திற்கிணையாக Thom’s Dublin Directory இருந்தது. ஜாய்ஸ÷ம் டப்ளின் நகர டைரக்டரியைப் பயன்படுத்தினார் என்பது பிறகு தெரிய வந்தது. எனவே Paul Jordan Smith என்பவர் A Key to the ‘Ulysses’ of James Joyce என்ற பெயரில் டப்ளின் நகர வரைபடத்தை மறுபதிப்பு செய்தார். நாவல் முழுவதற்கும் ஜூன் 16, 1904 ஆம் தேதி வெளிவந்த Evening Telegraph செய்தித்தாளின் பிரதியையும் ஜாய்ஸ் பயன்படுத்தியிருக்கிறார். மேற்குறிப்பிட்ட செய்தித்தாளில்தான் Astot Gold Cup ன்குதிரை ரேஸ் பற்றிய செய்தியும், அமெரிக்கக் கப்பலான General Slocum தீப்பிடித்து எரிந்தது பற்றிய செய்தியும் Gorden Bennet Cup க்கான ஜெர்மனியின் Homburg பகுதியில் நடந்த கார் ரேஸ் பற்றிய செய்தியும் வெளிவந்தது.

ஒடிசி மற்றும் டப்ளின் நகர வரைபடம் ஆகிய இரண்டையும் சிபாரிசு செய்பவர்கள் ஒருவருக்கொருவர் முரண்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டுமே யூலிஸிஸ் நாவலைப் புரிந்து கொள்ள உதவக்கூடிய ஆவணங்கள்தான். ஆனால் நிஜமான சாவி ஜாய்ஸின் கடைசி நாவலான ஃபின்னகன்ஸ் வேக்-இல் கிடைக்கிறது. அதில் வரும் ஒரு உடைந்த சொற்றொடர் சொல்கிறது: “The Keys to”. இதைக் கொண்டு நாம் புராணிகத்தையும் சாவிகளையும் தக்கபடி பயன்படுத்திக் கொள்ள முடியும். யூலிஸிஸ் நாவலில் லியோபோல்ட் ப்ளூம் விளம்பர நிறுவனங்களுக்காக வேலை பார்க்கிறார். அவர் தன் திறன்களைக் கொண்டு Alexander J.Keyes என்ற நிறுவனத்திற்காக ஒரு டிரேட்-மார்க் உருவத்தை யோசிக்கும் பொழுது குறுக்காக வைக்கப்பட்டுள்ள புனித பீட்டரின் சாவிகள் நினைவுக்கு வருகின்றன. மனிதத் தனிமையின் இரட்டைச்சின்னங்களாகவும் இவை பங்காற்றுகின்றன. மார்ட்டெல்லோ கோட்டையில் பக் மல்லிகன் என்ற நண்பனுடன் தங்கியிருந்து மனஸ்தாபத்தினால் அக்கோட்டையின் சாவியைக் கொடுத்து விட்டு இடத்தைக் காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது ஸ்டீவெனுக்கு. நிஜவாழ்க்கையில் பக் மல்லிகன் என்ற பாத்திரம் ஜாய்ஸின் ஒரு காலத்து நண்பரான Dr.Oliver Saint John Gogarty யை வைத்து உருவாக்கப்பட்டது. கோகார்ட்டியின் கூற்றுப்படி நிஜமான சாவி ஒன்றறையடி நீளமுள்ளதாக இருந்ததென்று தெரிகிறது. மேலும் குடிபோதையில் ஏற்படும் மனநிலைப் பிறழ்வில் லியோபோல்ட் ப்ளூம் டப்ளின்

நகர மேயராக ஆக்கப்படுவதாகக் கனவு காண்கிறார். அப்பொழுது அவருக்கு டப்ளின் நகரத்தின் சாவிகள் வழங்கப்படுகின்றன. போதை தெளிந்து ஸ்டீவெனை அழைத்துக் கொண்டு ப்ளூம் தன் வீட்டை அடையும் போது முன்கதவுத் தாழ்ப்பாளுக்கான சாவியை மறந்து விட்டு வந்திருப்பதை

உணர்ந்து பின்பக்க நுழைவாயில் வழியாக அழைத்துச் செல்கிறார். தத்தமது சாவிகளை இழந்து போன இந்த நாயகர்களை இணைப்பது நாவலின் பிரதான நோக்கம் என்று கூறுவது தவறில்லை. யூலிஸிஸ் நாவலில் கலைஞனின் பிரக்ஞையை அவனிடமிருந்து அகற்றி பூர்ஷ்வாக் குடிமக்களைப் பற்றிய அறிதலுக்குத் தள்ளுகிறது. இது ஜாய்ஸைப் பொருத்த வரை மிக முக்கியமான நிகழ்வாகும். உணர்ச்சி ரீதியான ஈர்ப்பு மையம் ஸ்டீவெனுக்கும் ப்ளூமுக்கும் சரிசமமான தூரத்திலும் சரிநிகரிலும் இருக்கிறது என்று சொல்ல முடியும். மேலும் ஸ்டீவென் டெடாலஸ் என்ற கலைஞனை டப்ளின் நகருக்கு மறுஅறிமுகம் செய்கிறது நாவல்.

யூலிஸிஸ் நாவலில் கதையம்சம் என்பது ஏதுமில்லாதிருக்கலாம். ஆனால் (செப்படம்பர் மாதம் 16ஆம் தேதி வியாழக்கிழமை 1904ஆம் ஆண்டு) நிறைய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. காலையில் கிளாஸ்நெவின் இடுகாட்டில் பேட்ரிக் டிக்நாம் என்பவரின் உடல் புதைக்கப்படுகிறது. நடு இரவில்

ஹோலஸ் தெருவில் பிரசவ ஆஸ்பத்திரியில் திருமதி.மினா ப்யூர்ஃபாய் என்ற பெண்மணிக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. இந்த இரு நிகழ்வுகளின் போதும் ப்ளூம் இருக்கிறார்-அவர் எந்தப் பங்காற்றாத போதிலும். அன்று மதியம் 7 எக்லஸ் தெருவில் அவர் வீட்டிலேயே அவர் மனைவிக்கும் பிளேஸஸ் பாய்லான் என்ற பாடகனுக்கும் இடையே நடக்கும் ரகசியப் புணர்ச்சி பற்றி அறிந்திருந்தும் அவரால் தடுக்க முடிவதில்லை. இதே அளவில் ஸ்டீவெனுக்கும் அந்த குறிப்பிட்ட நாள் சொல்லிக் கொள்ளும்படியான நடப்புகள் கொண்டதாக அமைவதில்லை. ஆறு மாதம் புலம் பெயர்ந்து பாரிஸில் இருந்த சமயத்தில் அவன் தாயார் இறக்கும் தறுவாயில் இருப்பதால் அயர்லாந்து திரும்பிவிட நேர்கிறது. பக் மல்லிகன்-உடன் ஏற்பட்ட தகராறுக்குப் பிறகு மார்ட்டெல்லோ கோட்டையிலிருந்து காலி செய்து விட எண்ணியிருக்கிறான். ப்ளூம் வீடு திரும்புகையில் அவருடன் வீடு திரும்புகிறான்.

முழுமுற்றான ரியலிசம் சாத்தியமில்லை என்று ஜாய்ஸ் ஒரு முறை குறிப்பிட்டிருந்த போதிலும் ஆங்கில நாவலாசிரியர்களான ஆர்நால்ட் பென்னட், ஜார்ஜ் கிஸ்ஸிங் போன்றோர் செய்ததை விடக் கூடுதலான யதார்த்த சித்தரிப்பை செய்திருக்கிறார். ஜாய்ஸின் நாயகன் எல்லா மனிதர்களின் பிரதிநிதியாக இருக்கிற பட்சத்தில் அவன் அனுபவம் கொள்ளும் சகலமும் ஈடுபாடுமிக்கதாய் ஆக முடியும் என்று நினைத்தார் ஜாய்ஸ். டப்ளின் நகரத்தின் ஒவ்வொரு கலாச்சார அம்சமும்–அதன் உயர்ந்த இலக்கிய மற்றும் தத்துவார்த்த பாரம்பரியத்திலிருந்து அன்றைய நாளின் விளையாட்டு நிகழ்ச்சிகள் உட்பட–நாவலில் இடம் பெறுகின்றது. டப்ளினர்ஸ் சிறுகதைகளின் ஆவணப்படுத்தும் முறையைப் பின்பற்றி யூலிஸிஸ் நாவலில் உரைகள், ஜோக்குகள், கடிதங்கள், தெருப் பெயர்ப்பலகைகள், மற்றும் அச்சிடப்பட்ட சில்லறை விவகாரங்கள் போன்ற எல்லாமும் வருகின்றன. பேசப்பட்ட மற்றும் அச்சிடப்பட்ட அற்ப விஷயங்கள் பிரக்ஞையின் நிலையற்ற வஸ்துக்கள், ஞாபகங்கள் ஆகியவை, புனைவுமன நிலைகளுடனும், விரைந்து மறையும் மனப்பதிவுகளுடனும் அருகருகே வைக்கப்பட வேண்டும். சாதாரணமாக விலக்கப்படுகிற இத்தகைய விஷயங்கள் விவரணையுடன் எப்படி இணைப்பது? ஹெச்.ஜி.வெல்ஸ் நாவலான Tono Bungay வின் விவரணையாளன் குறிப்பிடுகிற மாதிரி அவை ‘agglomeration’ அல்லது ‘a vast hotch-potch of anecdotes and experiences’ ஆகத்தான் இருக்க முடியும்.

எரிக் ஆயர்பாக் என்ற ஐரோப்பிய விமர்சகர் யூலிஸிஸ் நாவலைப் பற்றிக் குறிப்பிடும் போது அது வாசகனின் அறிவையும் பொறுமையையும் அதன் மயக்கமுறச் செய்யும் சுழற்சி மிக்க கலைப் பண்புக் கூறுகளால் சோதிக்கக் கூடியதென்று குறிப்பிட்டார். அவ்வளவு மேலோட்டமான யதேச்சைத்தன்மைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஒழுங்கமைப்பு என்னவாக இருக்க முடியும் என்ற கேள்வியையும் எழுப்பினார் ஆயர்பாக். இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் எழுதிக் கொண்டிருந்த ஆயர்பாக், ரோலான் பார்த் மற்றும் ழாக் தெரிதா போன்ற பிந்தைய ஸ்ட்ரக்சுரலிஸ

விமர்சகர்கள் அவர்(ஆயர்பாக்) எழுப்பிய கேள்விகளுக்காகவே யூலிஸிஸ் நாவலை பாராட்டுவார்கள் என்பதை முன்னூகித்திருக்க முடியாது. ஆனால் நாவல் வெளியிடப்பட்ட காலத்திலிருந்து அதன் hotch-potch தன்மைக்காகவன்றி அதன் உள்ளார்ந்த ஒழுங்குக்காகப் பெரும்பான்மையான விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. ஒழுங்கமைவுகள் கொண்ட பல வேறுபட்ட குரல்களின் ஒத்திசைவை நாவலில் கேட்க முடிகிறது.

1922ஆம் ஆண்டு யூலிஸிஸ் வெளியிடப்பட்ட பொழுது அது இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் தடைசெய்யப்பட்ட புத்தகமாக இருந்தது. பாரிஸ் நகரிலிருந்து கடத்தி வந்த பிரதிகளைத்தான் வாசகர்களோ விமர்சகர்களோ படித்தனர். இருப்பினும் கூட யூலிஸிஸ் ஒரு வெற்றிகரமான இலக்கியப் பரபரப்பை ஏற்படுத்தியது. யூலிஸிஸ் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளிலேயே மிக முக்கியமானதாய் அமைந்தது டி.எஸ்.எலியட் எழுதிய ‘Ulysses, Order and Myth’(1923). பெருங்குழப்பம் அல்லது யதேச்சைத்தன்மை போன்றதில் எது யூலிஸிஸ் நாவலில் இருப்பதாய் எவர் நினைத்தாலும் அத்தன்மைகள் சமகால வரலாற்றிலிருந்து நாவலுக்குள் இடம் பெயர்ந்தவையே என்பதால் நாவலாசிரியனைக் குற்றம் சொல்ல முடியாது. ஹோமரின் ஒடிசி காவியத்தை வைத்து ஜாய்ஸ் செய்த அடிப்படைக் கட்டமைப்பு ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் கொண்டதென்று எலியட் குறிப்பிட்டார்.

எலியட் விஞ்ஞானக் கண்டுபிடிப்புஎன்று குறிப்பிட்டது காவியத்தன்மையான கதை சொல்லல் தவிர பிற கட்டமைப்புகள் இருக்கின்றன என்பதை உள்ளுணர்த்துவதாயிருக்கிறது. யூலிஸிஸ் நாவலின் பாத்திரங்களுக்கும் ஹோமரியப் பாத்திரங்களுக்குமிடையிலான ஒப்புமைகளுக்கப் பாற்பட்டு வேறு இரண்டாம் நிலைப் புராணிக அடியோட்டங்கள் உள்ளன. அதில் ஹேம்லட் மற்றும் ஷேக்ஸ்பியர் பற்றியது முதன்மையானது. ப்ளூம் சிந்துபாத் என்கிற மாலுமியாக மாறினால் ஸ்டீவென் கெட்டுத் திரும்பிய குமாரனாக இருக்க முடியும். இதில் ஹேம்லட் மற்றும் ஷேக்ஸ்பியர் பற்றிய துணை அடியோட்டம் விரிவாகப் பேசப்பட வேண்டிய அளவுக்கு பல தளங்களிலும் நாவலின் பல இடங்களிலும் எதிரொலிக்கிறது. தொடக்க காலத்து விமர்சகர்கள் ஒவ்வொரு அத்தியாயத்திற்குமான பிரத்யேக வர்ணம், மொழி நடை, மற்றும் உடல் பாகம் இருப்பதைக் கண்டுபிடித்துக் கூறியுள்ளனர். பகடி செய்யும் மொழிநடைகளில் எழுதப்பட்ட நாவலின் பிற்பகுதிகளில் காணப்படும் நனவோடை உத்தி எளிதில் ஏமாற்றிவிடக் கூடியதாய் அமைந்துள்ளது. தொடக்க அத்தியாயங்களும் கூட அலங்காரப் படிமங்களாலும் அர்த்ததொனிகளாலும் சிக்கலுற்றுக் கிடக்கின்றன. இவற்றை முன்அறிமுகமற்ற எளிய வாசகனால் கிரஹித்துக் கொள்ளவியலாது. இந்த நாவலைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் எழுதப்பட்ட Stuart Gilbert இன் நூலுக்கு ஜாய்ஸ் துணை புரிந்தது பற்றி கடுமையான ஆட்சேபங்களைத் தெரிவித்தவர் ரஷ்ய நாவலாசிரியரான Vladimir Nabokov. “அது நாவலுக்கான விளம்பரம் போல அமைந்து போனது மட்டுமன்றி அது ஒரு மாபெரும் தவறுஎன்று கருதினார் விளாதிமிர் நபக்கோவ். காரணம் சிரமம் தரக்கூடிய நாவலின் உத்திகள் குறித்து ஸ்டூவர்ட் கில்பர்ட் கருத்துத் தெரிவித்ததோடு நில்லாமல் ஒவ்வொரு அத்தியாயத்தையும் எந்த மனநிலையில் வாசிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். கில்பர்ட்டின் தெரிவிப்பின்படி ஸ்டீவென் டெடாலஸ்ஸினால் யூலிஸிஸ் நாவல் எழுதப்பட்டிருக்க முடியும். இதே மாதிரியான ஒரு கருத்தை எட்மண்ட் வில்சன் என்ற அமெரிக்க விமர்சகரும் கூறியிருப்பதை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம்

“it is certain that Stephen, as a result of this meeting, will go away and write Ulysses”

மானுட இருப்பினைப் பற்றிய முழுமொத்த காட்சிப்படுத்தலாக யூலிஸிஸ் அமையாது போனாலும் கூட ஜாய்ஸின் கிண்டலும் பகடியும் அவற்றுக்கே உரித்தான தார்மீக நியாயப்படுத்தல் உடையனவாய் இருக்கின்றன. மனித மதீப்பீடுகளை காலவதியாக்க முந்தும் வைதீக மதம் மற்றும்

ஒழுக்கவியல் கட்டுப்பாடுகள் ஆகியவை கலைஞனுக்கு எத்தகைய சவால்களை வழங்குகின்றன என்பதையும் தீர்க்கமாய் ஆராய்கிறது நாவல். எனவேதான் மேற்கத்திய (குறிப்பாக ஆங்கிலேய) கலாச்சாரத்தை வெறுத்த ஒருவரால் எழுதப்பட்ட அசிங்கமான புத்தகம்என்று சில ஆங்கில விமர்சகர்களால் கண்டனம் செய்யப்பட்டது. ஹென்ரி ஹேம்ஸின் நண்பரான Edmund Gosse என்பவர் தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு ஜாய்ஸைக் கண்டனம் செய்தார்.

“Its author[Joyce] was ‘perfect type of the Irish fumiste, a hater of England, more than suspected of partiality for Germany, where he lived before the war”

லியோப்போல்ட் ப்ளூம் அறிமுகப்படுத்தப்படும் பொழுது திருவாளர் என்ற அடைமொழியுடன் அறிமுகப்படுத்தப்படுகிறார். திருவாளர் என்கிற முன்னொட்டு பூர்ஷ்வா வர்க்கத்தினர்-மத்தியதர குடும்பத்தினருக்கான அடையாளமாய்க் காணப்பட வேண்டும். அவர் மனைவி மோலி ப்ளூம்

அவரைச் செல்லமாக போல்டிஎன்றழைக்கிறாள். உணவைப் பொருத்தவரை அவர் விலங்குகளின் உட்பாகங்களை விரும்பி உண்பவராக இருக்கிறார்–குறிப்பாக விலங்குச் சிறுநீரகங்கள். விழித்தெழுந்து அவரே கசாப்புக்கடைக்குச் சென்று பன்றிக் கறி வாங்கிக் கொண்டு வருவதிலிருந்து மோலிக்குக் காலை உணவு தயாரித்து பரிமாறுவது, பிறகு தனக்கான உணவுத் தயாரிப்பில் பன்றிச் சிறுநீரகம் தீய்ந்து போய் விட அதை சரியான சமயத்தில் காப்பாற்றிச் சாப்பிட்டு முடித்து மலங்கழித்து பேடி டிக்னேம் என்பவரின் சவஅடக்கச் சடங்கில் கலந்து கொள்ளச் செல்கிறார். மேற்குறிப்பிட்ட உணவு வகைகளை விரும்பிச் சாப்பிடுபவராக இருப்பதால் அவரது மேலன்னத்திற்கு ஒருவித சிறுநீர் வாசனை வந்துவிட்டதென குறிப்பிடப்படுகிறது. பிறகு தன் மனைவிக்கு கூடுவிட்டுக் கூடுபாய்தல் (Metempsychosis) என்ற வார்த்தைக்கான பொருளை விளக்குகிறார். அவர் ஒரு எழுத்தாளர் அல்ல. ஆனால் எழுத வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர். மலங்கழிக்கச் செல்லும் போது எதையாவது படிக்கும் பழக்கம் உள்ளவராய் இருப்பதால் பரிசுக் கதை எழுதி பரிசு பெறும் நண்பரான Philip Beaufoy எழுதிய Matcham’s Masterstroke கதை வெளிவந்த பழைய செய்தித்தாளை கழிப்பறைக்கு எடுத்துச் சென்று படித்துவிட்டு, காரியம் முடிந்தவுடன் அதை இரண்டாகக் கிழித்து ஆசனவாயைத் துடைத்துக் கொள்கிறார். ப்ளூமுக்கு அத்தகைய பரிசுக் கதை எழுதுபவர்கள் மீது பொறாமை இருக்கிறதென்றாலும் அவர் எழுத வேண்டுமென்று நினைப்பதைக் கூட ‘prize tidbit’ என்றுதான் குறிப்பிடுகிறார். அவர் எழுதி இதுவரை வெளியானதெல்லாம் Irish Cyclist என்ற செய்தித்தாளில் வெளிவந்த ஒரு கடிதம் மாத்திரமே. மோலி அவருக்கு பாலியல் துரோகம் செய்வதை மனமறிந்து தடுக்கவியலாதவராக இருந்தபோதிலும் அவருமே கூட கறாரான ஒழுக்கத்தைக் கடைபிடிப்பவராகக் காட்டப்படுவதில்லை. இறைச்சிக் கடைக்கு வரும் பக்கத்து வீட்டு வேலைக்காரப் பெண்ணை காமக்கண்களுடன் ரசிக்கிறார். என்றாலும் அவர் ரசனையில் ஒரு கோளாறு: அந்தப் பெண்ணின் அசையும் பிருஷ்டங்களையும் இறைச்சி என்று குறிப்பிடுவதோடு நிறுத்தாமல் வேலை முடிந்து ஓய்விலிருக்கும் ஒரு போலீஸ்காரனால் அவள் அணைத்துக் கொஞ்சப்படுவதாகக் கற்பனை செய்கிறார். பக்கத்து வீட்டுப் பெண்ணைப் பற்றிய சிந்தனைகளுடன் விலங்குப் பண்ணை பற்றிய எண்ணங்களும் கலந்து விடுகின்றன. உடலியல் ரீதியாக இல்லையென்றாலும் அவருக்கு வேறு இரு பெண்கள் மீது காதல் இருக்கிறது. மார்த்தா க்ளிஃபோர்ட் என்கிற பெண்ணுடன் ஹென்ரி ஃபிளவர் என்கிற புனைப்பெயரில் காதல் கடிதத் தொடர்பு கொள்கிறார். கெர்ட்டி மேக்டோவல் என்கிற கால் ஊனமுள்ள இளம் பெண்ணுக்கு அவர் கவர்ச்சிமிக்கவராய்த் தெரிகிறார். கடற்கரையில் அவளது நிர்வாணம் உந்த சுயமைதுனம் செய்து கொள்கிறார். இது தவிர வேசியர் இல்லங்களுக்குச் செல்பவராக இருக்கிறார். வானவியல் மற்றும் பொது விஞ்ஞானம் ஆகியவற்றில் ஈடுபாடு இருந்த போதிலும் அவரது அறிவியல் ஞானம்

ஆழமற்றது. ஐந்தாறு ஏக்கரில் ஒரு தோட்டப் பகுதியில் கருத்தியலான ஒரு பங்களாவைக் கட்டிக் கொள்வது அவரது எதிர்காலக் கனவுகளில் (நிறைவேறாத) ஒன்று.

பல இடங்களில் நாவல் குறுக்கெழுத்துப் புதிர் போலவும் சதுரங்க ஆட்டம் போலவும் சிரமங்களைத் தருகிறது. ஆனால் நவீன பாதிரிகள் மற்றும் தீர்க்தரிசிகள் தர முடியாத நிலைகுலையச் செய்யும் தீர்க்கப் பார்வைகளை அளிக்கிறது. யூலிஸிஸ் நாவலின் இறுதி நோக்கித் திசைப்படுத்தப்படாத விவரணைஎன்ற குற்றச்சாட்டினை ஜார்ஜ் லூகாக்ஸ் போன்ற மார்க்சீய விமர்சகர்கள் முன் வைத்தனர். அறிவு மற்றும் ஞாபகத் தகவல்களின் நித்தியமான ஊசலாட்டம் யூலிஸிஸ்ஸில் திசையற்றதாகவும் இலக்கற்றதாகவும் இருக்கிறதென்றார் லூகாக்ஸ். நாவலின் காவிய வடிவம் இயக்கமிழந்து போனதாகவும் உள்ளதென்றார். காரணம் இல்லாமல் இல்லை. நாவலும் சரி, நாவலின் நாயகனான ஸ்டீவெனும் சரி வரலாற்றை நிராகரிக்கின்றனர். வரலாற்றை ஒரு பீதிக்கனவென்று விவரிக்கும் ஸ்டீவென் அதிலிருந்து தான் விழித்தெழ முயல்வதாகவும் கூறுகிறான்.

“History . . . is a nightmare from which I am trying to awake”(Ulysses.p.40). வரலாறு பற்றிய புராட்டஸ்டண்ட் மதம் சார்ந்த பார்வையையும் ஸ்டீவென் ஏற்றுக் கொள்வதில்லை. படைப்புச் செயல்–அறிவார்ந்ததோ அல்லது கலை சார்ந்ததோ-வரலாற்றின் வெறுஞ்சுமையை எதிர்க்கிறது. இப்ஸன், ஹோமர், ஷேக்ஸ்பியர் ஆகியோர் பிரதான பாதிப்புகளாக இருக்கும் அதே தீவிரத்தினளவு துணை இலக்கியப் பின்புலமாய் அமைவது நவீனகால செய்தித்தாள். இதற்கு ஒரு முக்கிய காரணம் லியோப்போல்ட் ப்ளூம் விளம்பர நிறுவனங்களுக்காக செய்தித்தாள்களுக்கு

பணியாற்றுவது. இது மட்டுமன்றி அன்றைய சக்தி வாய்ந்த ஊடகமாக தினசிரிப் பத்திரிகைகளே இருந்தன. செய்தித்தாள் மொழியின் பகடியும் கிண்டலும் யூலிஸிஸ்ஸில் நிறைந்து காணப்படுகின்றன. பகடி செய்வதற்கு மட்டுமன்றி நிஜத்தகவல்களை அறியவும் பயன்படுகிறது. ஐரிஷ் மொழியின் மீட்டளிப்பினை டப்ளின் நகர கார்ப்பரேஷன் தீர்மானம் நிறைவேற்றிய நாள் 16 ஜுன் 1904 என்பதை நாம் தெரிந்து கொள்கிறோம். பெரும்பாலான தினசரி அறிக்கைகள் மூலமாய் வரலாற்றின் இலக்குகளைப் பற்றிய ஒரு மங்கலான தெரிவிப்புதான் செய்யவியலும். ஒரு நாளின் நடப்புகளை வைத்து அவ்வளவுதான் அவதானிப்பது சாத்தியம். இதே கருத்துதான் யூலிஸிஸ் நாவலுக்கும் பொருந்துகிறது. எலியட் சொன்னதை நாம் பின்வருமாறு புரிந்து கொள்ள முயலலாம்– சமகால வரலாற்றின் முக்கியத்துவத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்படியான மீள்பார்வை கொண்ட விவரணையாகவன்றி ஒரு தனிநபரின் பிரக்ஞையுள் நடக்கும் அந்தயந்தமான ஆராய்ச்சியாக ஜாய்ஸ் சாதித்திருக்கிறார். ஜாய்ஸ் வரலாற்றுக்குத் தரும் அர்த்தங்கள் தனிநபர் சார்ந்தவை மாத்திரமன்றி அரசாங்க ரீதியான பொய்மைகளை நிராகரணம் செய்யக் கூடியவையாகவும் இருக்கின்றன. முதல் உலகப் போர் சமயத்தில் ஜாய்ஸ் யூலிஸிஸ் நாவலை எழுதிக் கொண்டடிருந்த சமயத்தில் மனோவியல் அறிஞரான யூங்கின் தலைமையில் சர்வதேச மனோவியல் ஆய்வலசல் இயக்கம் ஜூரிச் நகரில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கியது. மனோவியல் ஆய்வலசலின் பாதிப்புகளை ஜாய்ஸ் தவிர்த்திருக்க இயலாது. ஆனால் உலகப் போர் பற்றிய மறைமுகமான எதிரொலிகளைக் கூட ஜாய்ஸ் தன் நாவலில் பதிவு செய்யவில்லை. எனினும் மனோவியல் ஆய்வைப் பற்றிய தனது அவநம்பிக்கை குறித்து எழுதியிருக்கிறார். ஸிக்மண்ட் ஃபிராய்ட் மற்றும் கார்ல் யூங் ஆகிய இருவர் பற்றியும் ஜாய்ஸ் பகையுணர்வே கொண்டிருந்தார். இரு மனோவியல் அறிஞர்கள் மீதும் அவருக்குக் கிஞ்சித்தும் மரியாதை இருந்ததில்லை. என்றாலும் கூட யூங்குக்கும் அவருக்கும் கொஞ்சம் தொடர்புகள் இருந்திருக்கின்றன-அவை உவப்பானவையாய் இருக்கவில்லை என்றாலும் கூட. நான் எப்போது வேண்டுமானாலும் என்னை மனோவியல் ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்வேன்என்று (“I can psoaknooaloose myself any time I want. . .”) என்று ஃபின்னகன்ஸ் வேக் நாவலில் ஜாய்ஸ் எழுதிய போதிலும் அறிவுத்தளத்தில் இந்த இரு அறிஞர்களின் சிந்தனைகளுக்கும் கடன்பட்டிருக்கிறார் என்பது ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய நிஜம். யூலிஸிஸ் நாவலின் ஜெர்மன் பதிப்புக்கு கார்ல் யூங் முன்னுரை எழுதியது ஜாய்சுக்கு அவ்வளவு மனநிறைவளிக்கவில்லை என்பது தெரிகிறது. யூலிஸிஸ் நாவலை யூங் புரிந்து கொள்ளவே இல்லை என்று குற்றஞ்சாட்டினார் ஜாய்ஸ்.

Robert Scholes மற்றும் Robert Kellog ஆகிய இருவரும் சேர்ந்து 1966ஆம் ஆண்டு எழுதிய The Nature of Narrative என்ற நூலில் இலக்கிய நனவோடை என்பது மிகப் பழைய விவரணை வடிவமான உள்மனத் தனிமொழியுடன் (interior monologue) இயல்பான தொடர்புள்ளது என்ற விவாதத்தை முன்வைத்தனர். பேரிலக்கிய ஆசிரியர்களான அப்போல்லினியஸ், வர்ஜில் மற்றும் ஓவிட் போன்றோர் காதலில் சிக்குண்டு தடுமாறும் நாயகியின் மனச்சுமையை வெளிக்காட்டப் பயன்படுத்தினர். ஒரு கதாபாத்திரத்தின் மௌனமான தொடர் சிந்தனைகள் எதிர்வினையற்ற தன்மையாலும் சுயகாதலாலும் அதிகமாக பெண்ணிய-பாலியல் தொடர்பானதென பார்க்கப்பட்டது. இந்தப் பாரியம்பரியத்தில்தான் ஜாய்ஸின் நாயகியான மோலி ப்ளூமின் நனவோடை அமைந்திருக்கிறது. ஆனால் இந்தப் பாரம்பரியத்திலிருந்து ஜாய்ஸ் விலகுமிடங்கள் ஆண் பாத்திரங்களுக்கு நனவோடையை அமைத்துத் தரும்போதுதான். ஜாய்ஸின் உள்மனத் தனிமொழியின் அடித்தளம் நவீன அனுபவம்சார் மனோவியலின் அடிப்படையில் வேர்கொண்டது. பழைய வகை தனிமொழிகளில் வாக்குவாதங்களோ விவாதங்களோ நடந்ததற்கப்புறம் இறுதியில் ஒரு வித தீர்மானம் எய்தப்பட்டிருக்கும். சில விமர்சகர்கள் இத்தகைய பேசப்படாத விவாதங்கள் அடங்கிய பகுதிகள் ஜேன் ஆஸ்டின் என்ற 19ஆம் நூற்றாண்டு பெண் நாவலாசிரியரின் நாவல்களில் இடம் பெறுவதை சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் ஸ்டீவெனோ ப்ளூமோ இத்தகைய முறைப்படுத்தப்பட்ட (அ) கிரமமான, திசைப்படுத்தப்பட்ட சிந்தனையில் ஈடுபடுவதில்லை. முன்னூகிக்கவியலாத, உள்ளுணர்வுசார்ந்த, ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கான மனதின் தாவல்களையே அவர்களிடம் காண்கிறோம். இதைத்தான் ஏற்கனவே அவர் போர்ட்ரெயிட் நாவலில் ஸ்டீவென் இடம்பெறும் பகுதிகளில் வெற்றிகரமாய் சாதித்திருக்கிறார். இலக்கண ரீதியாகப் பார்க்கும் போது ஜாய்ஸின் உள்மனத் தனிமொழி ஒரு வகையான நேரடிப் பேச்சினைஸ்வீகரித்துக் கொள்கிறது. மறக்கப்பட்டுவிட்ட ஸிம்பலிஸ பிரெஞ்சு நாவலாசிரியரான Dujardin (Les Lauriers sont coupes(1887)இன் நாவலிலிருந்து ஜாய்ஸ் இவ்வுத்தியைக் கற்றுக் கொண்டதாய்க் கூறினார். உள்மனத் தனிமொழியானது தொடர்புபடுத்தல்கள்மற்றும் பிரக்ஞையின் கசடுகள்ஆகிவற்றிலிருந்து உருவாக்கப்படுவதாக நாம் கூறும் போது மனோவியல் களஞ்சியச் சொற்களில் தஞ்சமடையாதிருக்க வேண்டும். எப்போதுமே மூன்றாம் நபர் பார்வையிலிருந்து சிந்தித்து எழுதப்பட்டதல்ல ஸ்டீவென் மற்றும் ப்ளூம் ஆகியோரின் தனிமொழிகள். பேசப்படாத செயல்களின் மூலமே அவர்களின் ஆளுமை விரிக்கப்படுகிறது. ஸ்டீவெனைப் பொருத்தவரையில் அவனது செயல்கள் யாவுமே இருப்பின் தொடர்ச்சிகளும் குரல்களின் தொடர்ச்சிகளுமேயாகும். போர்ட்ரெயிட் நாவலில் இடம் பெற்றது போலவே முரண்படும் குரல்களின் பிரதேசத்தின் வழியாக வழி கண்டுபிடிக்க முயல்பவனாக இருக்கிறான் ஸ்டீவென். அவன் இறையியல் மற்றும் தத்துவப் பாரம்பரியங்களின் குரல்களை மறுஒழுங்குபடுத்தும் நிகழ்முறையிலிருக்கிறான். எனவே ஸ்டீவெனின் மனதை படிக்கிற வாசகன் ஒரு மொழியியல் கொல்லாஜைப்(collage)புதிர் அவிழ்ப்பது போல செய்ய வேண்டியிருக்கும். மொழி பற்றிய மேலதிகமான பிரக்ஞை யூலிஸிஸ்ஸில் எல்லாப் பாத்திரங்களுக்குமே இருக்கிறது. ஜாய்ஸூக்கான இந்த மொழிப்பிரக்ஞையை அவர் எல்லாப் பாத்திரங்களுக்கும் தருவது சரிதானா என்ற கேள்வியும் எழுகிறது. மோலி ப்ளூமின் உள்மனத் தனிமொழியில் இடம் பெறும் சில வார்த்தைகள் இதற்கு முன்பு தீவிர இலக்கியப் படைப்புகள் எதிலுமே இடம் பெறாதவை. மோலியின் தனிமொழி இயல்பானதல்ல. 45 பக்கங்களுக்கு நிறுத்தற்குறியில்லாது நிகழும் மோலியின் நனவோடையில் காணப்படும் பல வார்த்தைகளை வாசகன் பொதுக்கழிப்பறைக் கிறுக்கல்களில் பார்த்திருக்க முடியும். இலக்கிய சம்பிரதாயம் என்ற வகையில் அச்சொற்களை எளிமையாகவும் இயல்பெழுச்சியுடனும் ஜாய்ஸால் அறிமுகப்படுத்த இயலவில்லை. அச் சொற்களுக்கான உணர்வுகளை தீவிரமான புனைகதையில் இடம் பெறச் செய்ய ஜாய்ஸ் மிகுந்த சிரமங்களை எதிர் கொண்டிருக்கிறார். ஆங்கிலப் பெண் நாவலாசிரியரான டோரதி ரிச்சர்ட்ஸன் பெண்களின் உள்மனத் தனிமொழியை மையப்படுத்தி பல நாவல்களை எழுதியிருக்கிறார். அவரது வாதப்படி ஒரு ஆண் நாவலாசிரியர் என்றைக்குமே பெண்ணின் மனம் இயங்கும் விதம் பற்றி திருப்தி தரும் வகையில் ஊடுருவி எழுதிவிட முடியாது. மார்ஸல் ப்ரூஸ்(ட்)டுமே கூட விவரணையாளராக இருக்கும் அவரைத் தவிர வேறு பாத்திரங்களுக்கு நனவோடை உத்தியைப் பயன்படுத்தவில்லை.

யூலிஸிஸ் நாவல் மொழிநடைகளின் என்சைக்குளோபீடியாஎன்று சில விமர்சகர்களால் (Arnold Goldman, The Joyce Paradox, London(Routledge &Kegan Paul),p.96) அழைக்கப்பட்டிருக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட மொழிநடைகளைக் கையாள்வது ஒரு புனைகதை எழுத்தாளனுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும்பட்சத்தில் ஜாய்ஸ் ஏன் இந்தத் திட்டத்தில் ஈடுபட்டார்? நாவல் தொடக்கத்தில் மூன்றாம் நபர் பார்வையிலமைந்த விவரணையில் உள்மனத்தனிமொழிகள் பயன் படுத்தப்பட்டுள்ளன. பிறகு ஹோமரிய இணைகளை அனுசரித்து ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒரு பிரத்யேக மொழிநடையைப் பிரயோகித்தார். அத்தியாயங்களுக்கு மட்டுமில்லாது பாத்திரங்களுக்குப் பொருந்தி வரும்படியும் மொழியை லாகவமாக ஜாய்ஸ் மாற்றினார். ஸ்டீவென் சிந்திக்கும் மொழியும் அவனது தனிமொழியும் ஒரு கவிஞனின் மொழியாகவும் லியோப்போல்டு ப்ளூமின் மொழி உரைநடையாகவும் அமைந்துவிடுகின்றன. In the Heart of the Hibernian Metropolis என்ற அத்தியாயம் செய்தித்தாள்களின் துணைத்தலைப்புகளைப் பகடி செய்து அமைக்கப்பட்டிருக்கிறது. பிரசவ வார்டை சித்தரிக்கும் அத்தியாயத்தில் தொடக்க காலத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலான ஆங்கில மொழிநடைகளின் வரலாறு கருணையற்று கிண்டல் செய்யப்பட்டிருக்கிறது. இது தவிர இறுதி அத்தியாயங்கள் தம்மளவிலேயே மொழிநடைகளின் என்சைக்குளோபீடியாக்களாகவும் விளங்குகின்றன. நூற்றுக் கணக்கான இசை வடிவங்களை (உயர்ந்த, மத்திய, சாதாரண) நேரடி இசைக்குறிப்பு வடிவத்திலும், பாடல்களாகவும் ஜாய்ஸ் சைரன்ஸ்அத்தியாயத்தில் எடுத்தாண்டிருக்கிறார். ஜாய்ஸ் தன்னை குரலிசைப் பாடகராக ஆவதற்குத் தயார்ப்படுத்திக் கொண்டு ஆனால் இசைத்துறைப் பக்கம் போகாமல் விட்டுவிட்ட ஒரு நுண்மையான கலைஞன் என்பதை வாசகன் அறிவது பயனுள்ளதாயிருக்கும். ஒப்புமை நோக்கில் பார்க்கையில் தொடக்க அத்தியாயத்து மொழிநடை எளிமையாய்த் தோன்றினாலும் 1920களில் அது மிக சோதனை ரீதியானது என்று கருதப்பட்டு வில்லியம் ஃபாக்னர் மற்றும் வர்ஜினீயா வுல்ஃப் மற்றும் பிற சோதனைப் புனைகதை எழுத்தாளர்களுக்கு அவசியமான பாதிப்பாய் அமைந்தது. மூன்றாம் நபர் பார்வை-தொடக்க விவரணையாளன் தனிநபரைச் சுட்டாத கலாபூர்வமான ஃபிளாபர்தன்மைமிக்கவனாய் உள்ளான். நாவலின் முதல் வரி அதற்குச் சான்றாகிறது. ஸ்டீவெனின் இலக்கிய மொழியுடன் ஒப்பிட்டு நோக்கும் போது ப்ளூமின் மொழி சற்றே மேலோட்டமானது மட்டுமன்றி, உலகாயதமானதும் உரைநடைத்தன்மைமிக்கதும்கூட. செய்தித்தாள்களின் விளம்பரங்கள் ப்ளூமின் சிந்தனைக் குள்ளாக நுழைகையில் அது வேறு சில ரஸவாதங்களை உருவாக்குகிறது. காட்சிப் புலன் மற்றும் ஓசை ஆகியவை பிணையும் போதும் சில கிண்டலான கவிதை போன்ற வரிகள் உருவாகின்றன. நாவலின் மொத்த சட்டகத்து சம்பிரதாய மொழியின் செயற்கைத்தன்மையை வாசகனுக்கு இவை நினைவூட்டப் பயன்படுகின்றன. வார்த்தைகளின் விகுதிகளையும் எச்சங்களையும் எடுத்து புதிய சொற்கள் உருவாக்கப்படுகின்றன. அவற்றை அகராதியில் சரிபார்க்கவியலாது. இசையாகப் பாட வேண்டிய வரிகளை பக்கத்தின் மீது அச்சிடப்பட்ட சொற்களாக வாசகன் படிக்கும் போது அபத்தமாகத் தோன்றும் வாய்ப்புண்டு.(எ.கா.பக்.279).

காரணம் விவரணையே ஒரு சில இடங்களில் இசைக்குறிப்புகள் போல எழுதப்பட்டிருக்கிறது. Cyclops பகுதி டப்ளின் நகர பெயரற்ற கடன் வசூல் அலுவலன் ஒருவனின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் ஜாய்ஸின் அரசியல் ரீதியான கருத்துக்களை வெற்றிகரமாகப் பதிவு செய்கிறது. பிரிட்டீஷ் இம்பீரியலிஸம் மற்றும் ஐரிஷ் தேசீயவாதம் ஆகிய இரண்டையும் சரிசமமான அளவு எள்ள முடிகிறது ஜாய்ஸால். தேசீயவாத செய்தித்தாள்களின் மொழியை கருணையற்று கிண்டல் செய்யதுள்ளார் ஜாய்ஸ். கெர்ட்டி மேக்டோவல் என்கிற கால் ஊனம் கொண்ட இளம் பெண்ணின் மொழி அவளுக்கே உரித்தான நடையில் புதினத்தின் அந்த அத்தியாய விவரணையாகிறது. தனது நண்பிகளுடன் ஒரு பீச்சில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும்(?) ஒரு இளம் வயது பெண்ணுக்குரிய மனப்பதிவுகள் கிராமியத்தன்மைகள் மிக்கவையாகக் காட்டப்பட்டிருப்பது கச்சிதமாகப் பொருந்துகிறது. அவளின் முதல் வாக்கியம்ஙி கோடை மாலைப் பொழுது தனது மர்மமான அணைப்பில் உலகினை அணைத்துக் கொள்ளத் தொடங்கியது” (பக்.344). கெர்ட்டி மேக்டோவல்-இன் விவரணைக்கான மூலப்பாதிப்புகள் குறித்து ஆங்காங்கே ஜாய்ஸ் குறிப்புகளை நட்டுச் சென்றிருக்கிறார். கெர்ட்டி படிக்க ஆசைப்படும் இளம் பெண்களுக்கான நாவல் எழுதும் ஆசிரியர்களை வைத்து இந்த விவரணைக்கு (விவரணையின் கிண்டலுக்கும்) உதவிய எழுத்தாளர்களை அடையாளம் காணலாம். ஆனால் கெர்ட்டி மேக்டோவல் தன் விவரணையில் எந்த இடத்திலும் ஊனம்என்ற சொல்லை அனுமதிப்பதில்லை. அவளது விவரணை முடியுமிடத்திலிருந்து ப்ளூம் தனதை எடுத்துக் கொள்கிறார். இரவு நகர அனுபவத்தை விவரிக்கும் பகுதி மொழிநடைகளின் மியூஸியம் எனலாம். தலைமறைவு வாழ்க்கையின் களியாட்டங்களும், விருந்துகளும், கனவு ஊர்வலங்களும் யதார்த்தத்தையும் புனைவு மனநிலையையும் பிரித்தறிய அனுமதிப்பதில்லை.

உலகப் பெருநகரங்களில் ஒன்றின் ஜனத்திரள் கலாச்சாரம் யூலிஸிஸ் நாவலை முழுக்க முழுக்க ஆக்கிரமிக்கிறது. செய்தித்தாள் விளம்பரங்கள், விற்பனை நிறுவன பெயர்ப்பலகைகள் மற்றும் உணவுகள் (தயாரிப்பு முறைகள்) போன்றவற்றிலிருந்து ஜாய்ஸுக்கான கச்சாப் பொருள் கிடைத்து விடுகிறது. அவர் காலத்திய மிகப் பெரிய ஜனத்திரள் ஊடகமாக செய்தித்தாளே இருந்தது. தாமஸ் பின்ச்சன் இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் வைன்லேண்ட்(Vineland) நாவலில் முழுக்க முழுக்க தொலைக்காட்சியை வைத்து அமெரிக்க சமுதாயத்தை ஊடுருவி ஆராய்ந்தார். அதற்கான முன்னோடியாக அமைவதும் யூலிஸிஸ்தான். பாப் ஆர்ட்என்றழைக்கப்படும் கலைக்கு இணையான நிலையை ஜனத்திரள் கலாச்சாரம் பற்றிய அப்பட்டமான விமர்சனங்களில் ஜாய்ஸ் முன்னூகித்து எய்திவிட்டதாக மார்ஷல் மக்லூஹன் ஜாய்ஸைப் பாராட்டினார். தினசரி மொழியின் ஓரம் கிழிந்துபோன பகுதிகளான கொச்சைப் பிரயோகங்கள், கடைப் பேச்சுக்கள், பட்டப் பெயர்கள், பெயர்களின் முதல் எழுத்துக்களின் சுருக்கப்பட்ட வடிவங்கள், கச்சேரிப் பாடல்களின் இறுதி மடக்குவரிகள் போன்றவை ஜனத்திரள் மொழிக்கு பங்களிக்கின்றன. சாண்ட்விச் தாயரிப்பாளரான ஹெலிஸ் (H.E.L.Y.S)என்ற நிறுவனத்தின் ஆட்கள், அலெக்ஸாண்டர் கீய்ஸ்(Alexander Keys) நிறுவனத்தின் சாவிகள், ப்ளம் ட்ரீ (Plum Tree)என்ற நிறுவனத்தின் டின்னில் அடைக்கப்பட்ட இறைச்சி பற்றி விளம்பர வாசகங்கள் போன்ற பிரதான ஊடுருவல்கள் விளம்பர உலகிலிருந்து பெறப்பட்டவை. பிற மூலாதாரங்களாக பொதுநபர் அறிவியல், ரொமாண்டிக்(பெண்களுக்கான) குறுநாவல்கள், வெளிர்ந்து போன டாகுரோடைப்பு கள்(பழையகால புகைப்படங்கள்), பரிச்சயமான மேற்கோள் கள், புதிர்கள், ஜோக்குகள் போன்றவை. ஜனத்திரள் கலாச்சாரத்திலிருந்து இலக்கிய முன்னணி எழுத்தாளர்கள் தமக்கான கச்சாப் பொருள்களை எடுத்தாள்வது புதிதல்ல. ஏற்கனவே ஆர்தர் ரைம்போ A Season in Hell என்ற உரைநடை விவரணையில் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார்:

I loved absurd pictures, inscriptions over doorways, stage scenery, fairground paintings, signboards, cheap coloured prints; out-of-date literature, church Latin, pornographic books full of spelling mistakes, the kind of novels our grandmothers used to enjoy, children’s story-books, old operas, nonsensical refrains, simple rhythms.

(Arthur Rimbaud, A Season in Hell)

மோலி ப்ளூமின் தனிமொழி குறைந்தபட்சம் மூன்று விதமாக அணுகப்பட முடியுமென கருத்துத் தெரிவித்திருக்கின்றனர் விமர்சகர்கள். ஜாய்ஸின் ஸிம்பனியின் இறுதிப் பகுதியாக அது கருதப்பட முடியும். அதற்கு முன்னுரைக்கப்பட்ட பகுதிகளைக் கொண்டே மோலியின் தனிமொழிக்கு அர்த்தம் கிடைக்கிறது. தன்னளவில் இயங்கும் ஒரு இலக்கியப்பகுதியாகவும் அது இயங்கும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது. ஆண்களின் நகர அலைச்சல்கள் இறுதியாக ஒரு பெண்ணின் ஆழ்ந்த இருண்ட நீரோட்டத்தில் முற்றுப் பெறுவது மிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. மோலி ஒரு கருத்தியலான பெண்ணே ஒழிய இயல்பான வாழ்க்கையிலிருந்து உருவானவள் அல்ல. மிகவும் உணர்ச்சிரஸம் ததும்பக் கூடிய, உள்ளுணர்வுபூர்வமான, நீருக்கடியிலான ஒரு பெண்ணின் குரல் அது. இலக்கணங்களைப் பற்றிய கவலையின்றிப் பதிவு செய்யப்பட்ட முடிவற்ற வற்றாத ஓடை. நாவலின் இந்தக் கட்டத்தில் மோலிக்கு மாதவிலக்கு ஏற்பற்பட்டிருப்பதையும் வாசகன் படித்தறிய முடியும். இலக்கியத் துப்பறியும் வேலையை அவன் செய்வானானால் பிளேஸஸ் பாய்லான்-என்ற பாடகனால் அவள் கர்ப்பமடையவில்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள முடியும். பாய்லான் மூலம் மோலிக்கு பால்வினை நோய்கள் ஏதும் ஏற்பட்டுவிடுமோ என்கிற லியோப்போல்ட் ப்ளூமின் பயத்திற்கு யாரிடமும் எந்த உத்தரவாதமும் கிடையாது. எட்மண்ட் வில்ஸன் கருத்துப்படி ஒரு ஆழ் சமுத்திரத்தின் வீங்குபகுதியென விரிகிறது மோலியின் சிந்தனையோட்டம்: long unbroken rhythm of brogue, like the swell of some profound sea. மேஜர் ட்வீடியின் மகளான அவளது சிந்தனை ஐரிஷ் மத்தியதர குடும்பத்துப் பெண்களின் மொழியில் அமைந்திருப்பதால் அதை brogue என்று கருத முடியாது என்று கூறும் விமர்சகர்களும் உண்டு. மனதின் அலைச்சல்களுக்கு புகைப்பட வடிவம் கொடுத்தது போன்ற சித்தரிப்பினால் ஜாய்ஸ் மாண்டேஜ் உத்தி கொண்ட ஒரு திரைப்படத்தைக் காணும் அனுவத்தை அளிக்கிறார். மோலியின் இந்தப் பகுதியை மிகவும் சிலாகித்துக் கூறியவர் கார்ல் யூங். தன் ஒரே ஆண் குழந்தையை இழந்தவள் ஆதலால் (அவளுக்கு மில்லி ப்ளூம் என்கிற 15 வயது மகள் இருக்கிறாள்) எல்லா ஆண்களின் மீதுமான அவளது அணுகுமுறை தாய்மை நிரம்பியதாக இருக்கிறது. தனக்குப் பெண் மனம் பற்றி இதுவரை தெரியாத இருண்ட பகுதிகளை ஜாய்ஸ் காட்டியிருப்பதாக ஜாய்ஸ÷க்கு எழுதிய ஒரு கடிதத்தில் எழுதினார் யூங். பெனிலோப்பி என்றழைக்கப்படும் அந்த அத்தியாயம் பற்றிய யூங்கின் கடித வரிகள் பின்வருமாறுஙி

. . . a string of veritable psychological peaches. I suppose the devil’s grandmother knows so much about the real psychology of woman, I didn’t.

உருவகக் கதைச் சித்தரிப்பில் மோலியை ஒரு பெண் கடவுளாகவும், நேச்சுரலிஸ விவரணையில் ஒரு பெண்ணாகவும் சித்தரிக்க வேண்டிய கட்டாயம் ஜாய்ஸூக்கு இருந்தது. மோலியின் தனிமொழி ஆம் என்ற சொல்லில் தொடங்கி ஆம் என்ற சொல்லில் முடிகிறது. பூமிப் பெண் கடவுள் (Gea Telles) என்று மோலி கருதப்பட்டாலும் கூட பெண்ணிய விமர்சகர்கள் இன்று தெரிவிக்கும் கருத்துக்களையும் நாம் கணக்கில் எடுத்துக் கொண்டால் மோலி ஒரு கருத்தியலான பெண் பிம்பம் மாத்திரமே. Marilyn French என்ற பெண்ணிய விமர்சகரின் கூற்றுப்படி மோலி ஆண்களின் புனைவின் மொத்த வடிவமாகவே இருக்கிறாள். (Marilyn French, The Book as World: James Joyce’s ‘Ulysses’, Cambridge, Mass (Harvard University Press)1976,p.106. ஜாய்ஸின் மனைவியான நோரா பார்னகிள் ஜாய்ஸூக்கு பெண்களைப் பற்றி எதுவுமே தெரியாது என்று கருத்துத் தெரிவித்திருந்தாலும் கூட அவர் ஜாய்ஸின் எழுத்துக்களைப் படித்தவரல்லர் என்பதால் அதை இலக்கியத்திற்கு அப்பாற்பட்ட கருத்தென்று கருதி ஒதுக்கிவிடலாம்.

தொடக்கத்திலிருந்தே ஜாய்ஸின் படைப்புகளுக்கு ஆங்கிலேயே-அமெரிக்க பெண் வெளியீட்டாளர்களின் ஆதரவு கிடைத்திருக்கிறது. லண்டனைச் சேர்ந்த ‘ஈகோயிஸ்ட்’ இதழின் ஆசிரியரான ஹேரியட் ஷா வீவர், பாரிஸ் நகரில் ஷேக்ஸ்பியர் அண்ட் கம்பெனி”யின் உரிமையாளரான சேர்ந்த சில்வியா பீச், யூலிஸிஸ்ஸின் அமெரிக்கப் பதிப்பாளர்களான மார்கரெட் ஆண்டர்ஸன் மற்றும் ஜேன் ஹீப் ஆகிய பெண்கள் ஜாய்ஸூக்கு பண உதவியும் வெளியீட்டு வசதியும் செய்தவர்கள். 1920களிலும் 30களிலும் நவீனத்துவ சோதனைப் படைப்புகளில் ஈடுபட்ட பல பெண் எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக விளங்கினார் ஜாய்ஸ்.

வர்ஜீனியா வுல்ஃப் யூலிஸிஸ்ஸின் கவித்துவமான வாக்கியங்களால் கவரப்பட்டதாக ஒப்புக் கொண்டாலும் நாவலின் கோர்வையின்மையால் எரிச்சலூட்டப்பட்டார். பெண் நாவலாசிரியர் டோரதி ரிச்சர்ட்ஸன் ஃபின்னகன்ஸ் வேக்நாவலின் விவரணையால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். ஃபிரான்சில் 1960களில் யூலியா கிறிஸ்த்தேவா ஜாய்ஸுக்கு சார்பான விமர்சனக் கட்டுரைகளை எழுதி (Word, Dialogue and Novel) பிற பெண்ணிய விமர்சகர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டார். பாலிஃபோனிக் (polyphonic) நாவலை உருவாக்கியதற்காக ஜாய்ஸை பாராட்டினார்

கிறிஸ்த்தேவா. மிகைல் பக்தின் (ஙண்ட்ஹண்ப் இஹந்ற்ட்ண்ய்) குறிப்பிட்ட மேனிப்பியன் (Menippean) வகை நாவல்களில் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த எடுத்துக்காட்டுக்கள் யூலிஸிஸ் மற்றும் தாமஸ் பின்ச்சனின் Gravity’s Rainbow. Sandra Gilbert, Susan Gubar ஆகிய இரு அமெரிக்கப் பெண்ணிய விமர்சகர்கள் நவீனத்துவ நாவாலாசிரியர்களின் பெண்வெறுப்பைக் (ஜாய்ஸ் உள்பட) கடுமையாகக் கண்டனம் செய்தனர். அவர்கள் யூலியா கிறிஸ்தேவா மற்றும் Hélène Cixous போன்ற பிரெஞ்சு பெண்ணிய விமர்சகர்களையும் கண்டனம் செய்தனர்-நவீனத்துவ ஆண் எழுத்தாளர்களை ஆதரித்த காரணத்துக்காக.

ஜாய்ஸுக்கும் பிக்காஸோவுக்குமான ஒப்புமை மேலோட்டமானதல்ல. நவீனத்து ஓவியத்தில் பிக்காஸோவின் சாதனைகளைக்கு இணையாக ஆங்கில மொழிப் புனைகதையில் சாதித்தார் ஜாய்ஸ். சில மணி நேர வேலைக்கு ஆயிரக்கணக்கான பணத்தை பிக்காஸோவால் பெற முடிகிறதென்றும் தன் எழுத்து வரிக்கு ஒரு காசு கூடக் கிடைப்பதில்லை என்றும் வருத்தப்பட்டு ஆங்கில-ஓவியர்-நண்பரான ஃபிரான்க் பட்ஜன் என்பவருக்குக் கடிதம் எழுதினார் ஜாய்ஸ். பொறாமையும், இயலாமையும் வருத்தமும் தொனிக்கும் அந்த வரிகள்ஙி

My position is a farce. Picasso has not a higher name than I have, I suppose, and he can get 20,000 or30,000 francs for a few hours work. I am not worth a penny a line. . . (Sel. Let. 327).

ஜாய்ஸின் உருவப்படத்தை பிக்காஸோ வரைய மறுத்தார் என்ற செய்தியும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது. ஏறத்தாழ சமகாலத்தவரும் அதே காலகட்டத்தில் ஒரு தடைசெய்யப்பட்ட நாவலை (Lady Chatterly’s Lover) எழுதியவருமான டி.ஹெச்.லாரன்ஸ் ஜாய்ஸின் போர்னோகிராஃபியைக் கண்டனம் செய்ததோடு மட்டுமின்றி தன்னால் யூலிஸிஸ் நாவலைப் படிக்க முடியவில்லை என்று எழுதினார். காரணம் அது அதிகபட்ச மூளை உழைப்பைக் கொண்டதென லாரன்ஸ் எண்ணினார். சின்னஞ்சிறு மனித உணர்ச்சிகளைச் சித்தரிக்க ஆயிரக்கணக்கான பக்கங்களை வீணடிக்க வேண்டுமா என்பதுதான் லாரன்ஸின் கேள்வியாக இருந்தது. லாரன்ஸின் தொகுக்கப்பட்ட கடிதங்களிலிருந்து ஒரு சில வரிகளை மேற்காட்டலாம்-

“I am sorry, but I am one of the people who can’t read Ulysses. Only bits.”

லாரன்ஸின் கருத்தை வைத்துப் பார்த்தாலும் சரி ஒரு சாதாரண வாசகனின் பார்வையிலிருந்து பார்த்தாலும் சரி, படைப்புக்கான ஜாய்ஸின் அணுகுமுறை செய்தித்தாளுக்கு செய்தி சேகரிப்பவனுடைதல்ல. மாறாக ஒரு படிப்பாளியினுடையது. அறிவார்ந்த படைப்புப் பகுதியைப் பற்றிய கூர்ந்த பிரக்ஞை ஜாய்ஸூக்கு இருந்திருக்கிறது. டேனிய-நார்வேஜிய மொழியை கற்று ஜாய்ஸ் இப்ஸனின் நாடகங்களைப் படிக்கத் தயாராக இருந்த போது கூர்ந்த, பொறுப்புணர்வு மிக்க, நவீனத்துவ கிளாஸிக்குகளைப் படிக்க எண்ணம் உள்ள ஒரு வாசகன் ஜாய்ஸின் மொழியான Djoystch ஐப் படித்து ஜாய்ஸின் படைப்புகளுக்குள் செல்வது நல்லது.

•••

(இந்தக் கட்டுரை முழுமையற்றது. ஜாய்ஸின் “பின்னகன்ஸ் வேக்” நாவலைப் பற்றி எழுதத் தேவையான இடமும் கால அவகாசமும் போதாததால் குறிப்புகள் இடம் பெறவில்லை. மேலும் ஜாய்ஸின் ஒரே நாடகமான Exiles பற்றிய குறிப்பும் தரப்படவில்லை. தனிக்கட்டுரையாக எழுதப்பட வேண்டிய ஃபின்னகன்ஸ் வேக் பற்றிய செய்திகள் அபரிமிதமாக இருக்கின்றன. யூலிஸிஸ்ஸின் பல வேறுபட்ட பதிப்புகள் பற்றிய வரலாற்றையும் இதில் சேர்க்கவியவில்லை. இந்தக் கட்டுரைக்கான ஒப்பு நோக்குக்கும் மேற்கோள்களுக்கும் பயன்படுத்தப்பட்ட பதிப்பு Modern Library Edition, New Your (1961) இதில் அமெரிக்க நீதிபதி உல்ஸி யூலிஸிஸ் போர்னோகிராஃபித்தன்மையான புத்தகம் அல்ல என்று அறிவித்த தீர்ப்பின் நகல் உள்ளது.)

அச்சு வடிவில் பன்முகம் இதழில் வெளிவந்ததின் சீரமைக்கப்பட்ட வடிவமே இங்கு பதிவேற்றப்பட்டுள்ளது.

OBSERVATION:1

As far I know, a very few have read James Joyce’s Ulysses in Tamil. Most of the time if your ask them(the notorious critic and the opinion spller) the embarrassing question whether they have read the book( I mean the whole novel) they might answer in the way Italo Calvino said in Why Read the Classics? - “that they are re-rereading the novel”. It doesn’t matter of course. Not everybody can read a tough world classic. But those who pride themselves talking about modernism and postmodernism should have read. Further when it comes to Joyce’s Finnegan’s Wake the condition might be much more deplorable.

Posted in Uncategorized | Tagged: | Comments Off

Italo Calvino and Modern Fiction-introduced by Brammarajan-இடாலோ கால்வினோவும் நவீன புனைகதையும்

Posted by brammarajan on November 22, 2008

italo-calvino-bw1-frm

இடாலோ கால்வினோவும் நவீன புனைகதையும்

பிரம்மராஜன்

ஜியோவனி வெர்கா(Giovanni Verga), எலியோ விட்டோரினி (Elio Vittoroni) மற்றும் சேசரே பவேஸே (Cesare Pavese) ஆகிய மூன்று இதாலிய புனைகதை ஆசிரியர்கள் இணையும் சங்கமத்திலிருந்தே போருக்குப் பிற்பட்ட நவீன இதாலிய இலக்கியம் உருவாகிறதென குறிப்பிட்டார் இடாலோ கால்வினோ. பதிப்பகத்துறை, பத்திரிகைத்துறை ஆகியவற்றி லும் தீவிரமாக இயங்கிய கால்வினோ யதார்த்த புனைகதையாளராகத் தன் எழுத்து வாழ்க்கையைத் தொடங்கி இறுதியில் பின்நவீனத்துவ நாவாலாசிரியாக மாறினார். என்பினும் இதாலியின் நாட்டுப்புறக் கதைகளில் தீவிர ஆர்வம் காட்டியவர். தனது இடதுசாரிக் கருத்துக்களுக்கு எந்தவித குந்தகமும் வந்துவிடாமல் அவரது விஞ்ஞானப் புனைகதைகளை மெய்ம்மை கடந்த தன்மையுடன் அவரால் எழுத முடிந்தது.
1923 ஆம் ஆண்டு கியூபாவில் Santiago de las Vegas என்ற இடத்தில் பிறந்தார். கால்வினோவின் இளமைக் காலத்தின் போது அவரது பெற்றோர் இதாலியின் சான் ரெமோ என்ற பகுதிக்கு வந்து குடியேறினர். கால்வினோ ட்யூரின் பல்கலைக் கழகத்திலும் ராயல் ஃபிளாரென்ஸ் பல்கலைக் கழகத்திலும் படித்தார். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் இளம் பாஸிஸ்டுகள் (Young Fascists) அணியில் வலுக் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டார். அதிலிருந்து தப்பித்து கம்யூனிசத்திலும் பிறகு போர் எதிர்ப்பு இயக்கத்திலும்(Resistance Movement) சேர்ந்தார். இந்த அனுபவம் அவரது ஆரம்ப காலக் கதைகள் உருவாகக் காரணமாக அமைந்தது. போருக்குப் பிறகு ட்யூரின் பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்பை முடித்தார். கம்யூனிஸ்ட் பத்திரிகையான L’Unitá வில் 1945ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றத் தொடங்கினார். சேசரே பவேஸேவின் அடியொற்றி Einaudi என்ற பதிப்பக நிறுவனத்தில் 1948ஆம் ஆண்டிலிருந்து 1984ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். சேசரே பவேஸேவும் எலியோ விட்டோரினியும்தான் கால்வினோவுக்கு இடதுசாரி அரசியலையும் நியோ-ரியலிசத்தையும் அறிமுகப்படுத்தியவர்கள். L’Unitá தவிர La Nostra Lotta, Il Garibaldino, Voce della Democrazia, போன்ற பத்திரிகைகளுக்கு தொடர்ந்து எழுதினார். 1959ஆம் ஆண்டிலிருந்து 1967வரையிலான காலகட்டத்தில் எலியோ விட்டோரினி என்பவருடன் இணைந்து Il Menabo di litteratura என்ற இலக்கிய ஏட்டை நடத்தினார். 1952ஆம் ஆண்டு சோவியத் யூனியனுக்கு பயணம் செய்தார். 1957ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகினார். 1959-60 இல் அமெரிக்காவுக்குப் பயணம் செய்தார். எஸ்ட்டர் ஜுடித் ஸிங்கர் என்பவரை 1964ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு 1967ல் பாரிஸ் நகருக்குச் சென்றவர் 1979இல்தான் ரோம் நகருக்குத் திரும்பினார். 1985ஆம் ஆண்டு கால்வினோ காலமானார்.

அவர் கதை எழுதும் முறையை வைத்து அவரது கதைகளை Speculative புனைகதைகள் என்று கூறமுடியும். இதாலிய மேஜிக்கல்ரியலியசத்தின் ஆரோக்கியமான அடுத்த கட்ட வளர்ச்சி நிலையே Speculative புனைகதை ஆகும். உணர்ச்சிகளைப் பற்றிய அலசல்கள், மற்றும் மனோவியல் ஆகியவற்றால் தான் ஈர்க்கப்படவில்லை என அவர் அறிவித்திருந்த போதிலும் கூட அவருடைய பாத்திரங்கள் மனித மனதின் அடியாழங்களுக்கு பயணம் மேற்கொண்டவண்ணமிருக்கின்றனர்.
அறநெறிசார்ந்த பிரச்சனைகளுக்கு கால்வினோவைப் பொறுத்தவரை இலக்கியத்தில் இடம் இல்லை. வாசகனின் மீது இலக்கியம் ஏற்படுத்தும் பிரதிபலிப்பின் மூலமாகவே அறநெறிகள் குறித்த பிரச்சனைகள் அடையாளம் காணப்பட முடியும். இலக்கியம் உள் உணர்த்தலை மட்டுமே செய்யும். இதன் காரணமாகவே “அறநெறிகளைக் கடைபிடித்தல், “கற்றுத்தருதல்”, “மேன்மைப்படுத்துதல்” போன்ற விஷயங்களை முன் நிறுத்தி எழுதப்படும் இலக்கியங்களின் ஏமாற்றுத்தன்மையை கவனமான வாசகன் அடையாளம் கண்டுவிடுவான் என்கிறார் கால்வினோ.
டைம்ஸ் இலக்கிய இதழின் இணைப்புக்கு எழுதிய கட்டுரையில் (செப்டம்பர், 28, 1967) “தத்துவமும் இலக்கியமும் நித்தியமாய் சண்டையிட்டுக் கொள்ளும் எதிரிகள்” என்று குறிப்பிட்டார். தத்துவத்திற்கும் இலக்கியத்திற்கும் இடையிலான சண்டை ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் கருதினார். எழுத்தாளராகவும் தத்துவவாதியாகவும் இருந்த ழீன் பால் சார்த்தர் எழுதிய La Nausea நாவலின் மையப்பாத்திரமான ராக்வென்ட்டின் ஒரு முறை கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்ளும் பொழுது புத்தம்புதிய தத்துவார்த்தப் பார்வை பார்த்துக் கொள்ள முடிகிறதே யொழிய அப்படித் தொடர்ந்து இறுதிவரை இருக்க முடிவதில்லை. எக்ஸிஸ்டென்ஷியலிச நாவல்கள் ஏன் வெற்றியடைவில்லை என்பதற்கான காரணத்தையும் நாம் இதிலிருந்து கண்டு பிடிக்க முடியும். ஒரே தனிநபரில் தத்துவவாதியும் இலக்கியவாதியும் இணைந் திருக்கிற பட்சத்தில் அதில் உள்ள இலக்கியவாதி தத்துவாதியை முந்திக்கொண்டு எழுதினால்தான் வெற்றி பெற முடியும். இதை சாதித்துக் கொண்ட நால்வர் தாஸ்தாயெவ்ஸ்கி, காஃப்கா, ஆல்பெர் காம்யூ (Albert Camus) மற்றும் ழீன் ஜெனே (Jean Genet)ஆவர். தத்துவமும் இலக்கியமும் பொருதும் போது ஒவ்வொன்றும் உண்மையை வென்றெடுப்பதற்கான பயணத்தில் ஒரு படி முன் சென்று விட்டதான ஒரு தன்னம் பிக்கையில் செயல்படுகின்றன. எனவே இந்த சச்சரவு நித்தியமானது மட்டுமன்றி ஓய்வற்றது. இந்த எதிரெதிர் முகாம்கள் இரண்டும் தமது கட்டுமானங்களுக்கான கச்சாப் பொருள்களாகப் பயன்படுத்துவது வார்த்தைகளைத்தான்.

லூயி கரோலுக்குப் பிறகுதான் இலக்கியத்திற்கும் தத்துவத் திற்குமிடையே ஒரு புதிய உறவு உண்டாயிற்று. கற்பனையின் தூண்டுதலுக்கு ஒரு கருவியாக தத்துவத்தைப் பார்ப்பவர்கள் இலக்கியத்தில் உருவானார்கள்ஙி ரேமண்ட் க்வேனூ (Raymond Queneau), ஜோர்ஜ் லூயி போர்ஹே, ஆர்னோ ஷ்மிட் (Arno Schmidt) ஆகிய மூவரும் வெவ்வேறு தத்துவங்களில் வேறுபட்ட உறவுகள் கொண்டு இவற்றைத் தமது பன்மையும் வேறுபாடும் மிகுந்த மொழியியல் உலகங்களுக்கு ஊட்டமளிப்பளிப்பதற்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். இந்தக் குடும்பத்தின் எல்லையோரத்தில் நவீனத்துவ ஐரிஷ் நாவலாசிரி யரான சாமுவெல் பெக்கட் மற்றும் இதாலிய நவீனத்துவ புனைகதையாளர் Carlo Emilio Gadda ஆகிய இருவரைப் பார்க்க முடிகிறது. எமிலியோ க(ட்)டா இதாலியின் ஜேம்ஸ் ஜாய்ஸ் என்று கருதப்படுபவர். ஆனால் மொழிபெயர்ப்பதற்கு அவரது எழுத்து நடை சிரமம் அளிப்பதாய் இருப்பதால் அதிக ஆங்கில மொழிபெயர்ப்புகள் (ஓரிரு சிறுகதைகள் தவிர) வெளிவரவில்லை.

“திரைப்படமும் நாவலும்” என்ற கட்டுரையில் சில தனித்துவமான பார்வைகளை முன் வைக்கிறார் கால்வினோ. காலத்தின் சமன்குலைவுகளை எக்காலத்திலும் சினிமாவால் சாதிக்க முடியாது. ஒரு பார்வையாளனாக சினிமாவை ரசித்திருக்கிற கால்வினோ கார்ட்டூன் திரைப்படங்கள் தன்னை வெகுவாகப் பாதித்திருப்பதாகக் கூறுகிறார். எண்ணி எடுத்த இரண்டு, அல்லது மூன்று கோடுகளில் கதாபாத்திரங்களை எப்படி வரையரை செய்வது என்பதைக் கற்றுத் தருகிறது கார்ட்டூன் சினிமா. சினிமா என்ற ஊடகத்திற்கு எப்போதுமே நாவல் என்கிற இலக்கிய வகைமை மீது பொறாமை இருந்து வந்திருக்கிறது. என்ன இருந்தாலும் சினிமா இறுதியில் “எழுதவே” விரும்புகிறது என்பதுதான் அதற்குக் காரணம்.

கிளாசிக்குகளைப் பற்றி ஈர்ப்பானதொரு விவாதத்தை முன்வைக்கும் கால்வினோ கிளாசிக்குளை முதல் முறையாகப் படித்த போதிலும் சிறந்த படிப்பாளிகளிலேயே சிலர் தாங்கள் “மறுவாசிப்பு” செய்வதாகவே சொல்ல விரும்புகின்றனர் என்கிறார். நவீன பிரெஞ்சுக் கவிஞரான மல்லார்மே (Mallarme) இத்தகைய புத்தகங்களை “Total Book” என்றழைத்தார். இத்துடன் நூலகம் குறித்து வேறு ஒரு முக்கிய கருத்தை கால்வினோ முன் வைக்கிறார். Northrop Frye என்ற அமெரிக்க விமர்சகர் Anatomy of Criticism என்ற நூலின் “என்சைக்குளோபீடிய வடிவங்கள்” என்கிற அத்தியாயத்தில் பைபிளை ஒரு நூல் என்று கூறுவதற்குப் பதிலாக ‘நூலகம்’ என்று குறிப்பிடுகிறார். இலக்கிய விமர்சன நோக்கில் இது ஆட்சசேபத்திற்குரிய கருத்தாகுமென்றாலும் கூட கால்வினோ Frye யின் அணுகு முறையை வரவேற்கவே செய்கிறார். கூர்ந்த வாசகர்கள் பைபிளை ஒன்றன் மீது ஒன்றாய் அடுக்கப்பட்ட புத்தகங்களின் தேர்வுகள் என்றும் அதை ஒட்டி சாத்தியமுள்ள பிற நூல்களை தாம் வைத்துக் கொள்ளலாம் என்றும் உணர்கின்றனர். ‘நூலகம்’ பற்றிய கருத்து Frye யின் சுயமான அவதானிப்பல்ல என்றாலும் அந்தச் சொல்லாக்கம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது. இலக்கியம் வெறுமனே பல புத்தகங்களால் உருவாவதன்று –மாறாக அமைவுகள் மற்றும் நூலகங்களால் உருப்பெறுகிறது என்பது கால்வினோவின் வாதம்.

Fantasy (புனைவு) என்ற சொல்லின் அர்த்தப்பாடுகள் பற்றியும் கால்வினோ சந்தேகம் எழுப்புகிறார். இச்சொல் முதல் வாசிப்பில் அதன் பத்தொன்பதாம் நூற்றாண்டு அர்த்தத்தையே உணர்த்துகிறது. இருபதாம் நூற்றாண்டு ஃபாண்டஸி, மற்றும், மறுமலர்ச்சிக்கால ஃபாண்டஸி ஆகிய இரு வகைகளை மாத்திரமே தீர்மானமாய் பேச முடியும். ஏனெனில் சமகால ஃபிரெஞ்சு இலக்கியத்தில் Fantastique என்பது பிரதானமாக பயங்கர கதைகளை (Horror) உணர்த்தவே பயன்படுகிறது. இது உணர்ச்சி ரீதியான பிணைப்பினை வாசகனிடமிருந்து எதிர்பார்க்கிறது. ஆனால் நவீன இதாலிய இலக்கியத்தில் Fantasia மற்றும் Fantastico வகைமைகள் வாசகனின் தரப்பிலிருந்து உணர்ச்சிரீதியான ஈடுபாட்டினை கட்டாயப்படுத்துவதில்லை. ஆங்கிலத்தில் Fantastic (அதிகம் சிதைவுக்குள்ளான பிரயோகம்) இதாலிய மொழியில் இருப்பதைப் போலவே அர்த்தப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு ஃபாண்டஸி ரொமாண்டிக் இலக்கிய இயக்கத்தின் சுத்திகரிக்கப்பட்ட விளைபொருளாக உருவாகி பிறகு வெகுஜன இலக்கியத்தை அடைந்தது. விஞ்ஞானக் கதைகளில் வருவது போல இருபதாம் நூற்றாண்டில் அறிவார்த்தமான ஃபாண்டஸிகள் (Intellectual Fantasy) மிகவும் ஓங்கி நிற்கின்றன. இவற்றில் முரண்களும், விளையாட்டும், கண்ணாமூச்சியும் மறைக்கப்பட்ட விழைவுகளின் தியானமும் நவீன மனிதனின் பீதிக் கனவுகளும் உள்ளடங்கும். குறிப்பிடத்தகுந்த ஃபாண்டஸி எழுத்துக்களைப் பற்றிச் சொல்லும் போது Bruno Shulz என்ற போலந்து நாவலாசிரியரின் நாவலையும், உருகுவே நாட்டைச் சேர்ந்த Felisberto Hernandez என்பவரின் சிறுகதைகளையும் குறிப்பிடுகிறார் கால்வினோ.

இரண்டாம் உலகப் போரைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட அவருடைய முதல் நாவலான Path to the Spider’s Nest(1947)க்கு 1964ஆம் ஆண்டு அளித்த முன்னுரையில் சில தெளிவான விளக்கங்களைத் தந்திருக்கிறார் கால்வினோ. வன்முறையும் செக்ஸும் புனைகதைக்கு இன்றியமையாத கூறுகள் அல்லவென்று கண்டுபிடித்துக் கொள்வதற்கு இந்த நாவல் அவருக்கு உதவியிருக்கிறது. இந்த நாவல் எழுதுவதற்கு ஹெமிங்வேயின் For Whom The Bell Tolls (1940) தூண்டுதலாய் அமைந்தது பற்றியும் ஒப்புதல் செய்கிறார். ஹெமிங்வே குறித்த ஒரு சிறந்த மறுமதிப்பீடாக அமைகிறது கால்வினோவின் மற்றொரு கட்டுரையான Hemingway and Ourselves (1954). Path to the Spider’s Nest நாவலில் ‘எதிர்ப்பு இயக்கத்தை’ ஒரு சிறுவனின் பார்வையில் வெளிப்படுத்தியிருக்கிறார். இதில் பிரதேச மொழியையும் கொச்சையான பிரயோகங்களையும் யதார்த்த சித்தரிப்புக்காகப் பயன்படுத்தினார் கால்வினோ. ஹெமிங்வே தவிர வேறு இரண்டு முக்கிய பாதிப்புகளாக அமைந்த இரு ரஷ்ய எழுத்தாளர்களைக் குறிப்பிடுகிறார். ஒருவர் ஐஸக் பேபல். அவரது The Red Cavalry என்ற நாவல் புரட்சிகர வன்முறையை சந்திக்கும் ஒரு அறிவுவாதியின் அனுபவங்களை விவரிக்கிறது. மற்றவர் The Rout நாவலை எழுதிய ஒரே உருப்படியான ஸ்டாலினிஸ்ட் எழுத்தாளாரான Alexander Fadeye. ஐஸக் பேபல் ஸ்டாலினியக் களையெடுப்புகளில் பலியான முக்கியமான எழுத்தாளர் களில் ஒருவர். இது பற்றிய குற்ற உணர்வின் காரணமாக அலெக்ஸாண்டர் ஃபெடயேவ் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொடக்க காலத்தில் கால்வினோ “நியோ ரியலிஸ்ட்” என்றே கருதப்பட்டார், அழைக்கப்பட்டார். “நியோ ரியலிசம்” (Neo Realism) பற்றிய கருத்துக்களை அவரே தெளிவுபடுத்தினார். “நியோ ரியலிசம்” என்ற பெயர் திரைப்படத் துறையிலிருந்து பெறப்பட்ட ஒன்றாகும். நியோ ரியலிஸம் ஒரு இயக்கமோ அல்லது குழுவோ அல்ல. மாறாக இதாலிய இலக்கியத்தின் வேறுபட்ட பிரதேச இலக்கியவாதிகளின் கூட்டுக் குரல்களின் வெளிப்பாடு. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எழுதத் தொடங்கிய பல இதாலிய இலக்கியவாதிகள் நியோ ரியலிஸ்டுகள் என்றே அழைக்கப்பட்டனர். ஆனால் இதாலிய இலக்கியம் முதல் உலகப் போர்க்காலத்தின் இடைவெளியில் எக்ஸ்பிரஷ னிசத்தைத் தவற விட்டு, பிறகு இரண்டாம் போர் சமயத்தில் அதற்கு ஈடு செய்தபடியால் இந்த இயக்கத்திற்கு நியோ எக்ஸ்பிரஷனிசம் (Neo Expressionism) என்ற பெயரே சாலப் பொருந்தும் என்று கருதினார் கால்வினோ.

1950களில் இதாலிய இலக்கியம், அதிலும் குறிப்பாக, நாவல் இலக்கியம் சமகால இதாலியின் தார்மீக, சமூக மனசாட்சியை பிரதிநிதித்துவம் செய்ய யத்தனித்தது. 60களில் அது இரண்டு பக்கங்களிலிருந்து தாக்குதல்களைச் சந்திக்க வேண்டி வந்தது. ஒன்று இலக்கிய வடிவத்தில் உண்டான மாற்றம். மற்றது மொழியில் ஏற்பட்ட வன்மையான மாற்றம். இவ்விரண்டுடன் மூன்றாவதாய் அணி சேர்ந்து கொண்டவை மனிதனின் அறிவுத் துறைகளில் ஏற்பட்ட இன்றியமையாத மாற்றங்கள். மொழியியல், தகவல் தொடர்பு, மானுட ஆய்வியல், புராணிகங்கள் பற்றிய வடிவவியல் ஆய்வுகள், குறியியல், மனோவியலில் புதிய பயன்பாடுகள், மார்க்சீயத்தில் ஏற்பட்ட புதிய பயன்பாடுகள் ஆகியனஙி இவையனைத்தும் விமர்சனக் கருவிகளாக ஒன்றிணைக்கப்பட்டு ஒரு இலக்கியப் படைப்பை அதன் தனித்தனிப் பகுதிகளாக உடைத்துப் பார்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன.

எதிர்ப்பு இயக்கம் (Resistance Movement) மற்றும் போர் சம்மந்தப்பட்ட பொதுவான கதைக் கருக்களை விடுத்து புதிய புனைவுத்தன்மை கொண்ட நாவலான The Cloven Viscount(1952) ஐ எழுதினார். இந்த நாவலின் வெளியீட்டுக்குப் பிறகு இதாலிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரியலிஸம் பற்றிய ஒரு தீவிர விவாதத்தை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முதன் முதலாக நியோ ரியலிஸத்திற்கு மாற்றான ஒரு இலக்கிய வகைமையாக, நிஜமான புனைவாக, கால்வினோவின் இந்த நாவல் அமைந்தது. இந்த நாவலின் புனைவுத் தொடர்ச்சியாக மேலும் இரண்டு நாவல்களை அவர் (The Baron in the Trees[1957], The Nonexistent Kinght[1959]) எழுதினார்.
Adam One Afternoon என்ற சிறுகதைத் தொகுதியில் உள்ள பல கதைகள் (Fear on the Footpath, Animal Wood, Hunger in Bavera, Going to Head Quarters, The Crow Comes Last) போரைப் பின்னணியாகவோ, அல்லது, கதைக்களமாகவோ வைத்து இயங்குகின்றன.

கால்வினோவின் தொடக்க காலக் கதைகளுக்கும் பிற்கால புனைகதைகளுக்கும் முதிர்ச்சி ரீதியான வகையில் மட்டுமன்றி வகைமை ரீதியிலும் நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. யதார்த்தவியலில் தொடங்கி, நாட்டுப்புறக் கதைகளுக்குச் சென்று, தொல் கதைகள் போன்றவற்றை எழுதி, முழுமுற்றான புனைவுகளை எழுதத் தொடங்கி இறுதியில் பின் நவீனத்துவ பாணி எழுத்துக்களை வந்தடைந்தார்.

அவருடைய தொடக்க கால, அறிவியல் புனை கதைகளின் (Cosmicomics[1965]) விவரணையாளனாய் வரும் Qfwfq இந்தப் பிரபஞ்சம் உருவான சமயத்திலோ அல்லது அதற்கு முற்பட்ட காலத்திலோ இருந்த ஒரு பிரபஞ்ச பிரக்ஞையையும் ஞாபகத்தையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறான். Cosmicomics சிறுகதைகள் எல்லாவற்றுக்கும் அவன்தான் கதை சொல்லியாக இருக்கிறான். கதையின் ஒட்டு மொத்த பார்வையும் (point of view) அவனது பார்வையாகவே அமைந்துள்ளது. Qfwfq வின் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பெயர்கள் உச்சரிக்கவே இயலாதவையாக இருக்கின்றன: Xlthlx, Mrs.Vhd Vhd, Mrs.Ph(i)Nk0, Z’zu, DeXuaeauX போன்றவை சில எடுத்துக் காட்டுக்கள். மானுட உருவமில்லாதவையாக அவை (அவர்கள்) சித்தரிக்கப் பட்டிருந்தாலும் சலிப்பு, போட்டி மனப்பான்மை, நரம்புத் தளர்ச்சி போன்றவை அவற்றுக்கு (அவர்களுக்கு) இருப்பதாய்த் தோன்றுகிறது. இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயம் அல்லது கதையின் தொடக்கமும் புவியியல் மற்றும் வானவியல் தொடர்பான ஒரு மேற்கோள் அல்லது உப்புச் சப்பற்ற பாடப்புத்தகத் தனமான மேற்கோள் தகவல்களுடன் தொடங்குகிறது. நிலா தனது சுழல்பாதையை மாற்றிக் கொண்டது பற்றி, எவ்வாறு டினோசர்கள் அழிந்து போயின என்பது பற்றி, எப்படி புவி வெளி வளைவாக இருக்கிறது என இப்படிப் பல. பிரபஞ்ச வாழ்வு தொடங்கு முன்னரே பிறந்துவிட்டவன் மாதிரித்தான் Qfwfq தோன்றுகிறான். வண்ணங்களும் வாழ்வுயிரிகளும் உருவாகும் முன்பான ஒரு காலத்தை விவரிக்க அவனால் மாத்திரமே முடியும். இந்தப் புத்தகம் வெளிவந்த பிறகு மனித இனத்தை விடுத்து செல்களைப் பற்றிய அக்கறை அதிகம் உள்ளவர் என்றும் இதயத்தின் காரணங்களை விடுத்து கணிதவியல் கணக்கீடுகளில் மூழ்கிவிடுபவர் என்றும் சிலர் கால்வினோ மீது விமர்சனம் வைத்தனர்.

Marcovaldo (1963) நீதிக் கதைகளின் ஒரு தொகுதியாகவோ அல்லது மார்க்கோவேல்டோ பற்றிய ஒரு நாவலாகவோ பார்க்கப்படலாம். மார்க்கோவேல்டோ சார்லி சாப்ளின் தன்மையான ஒரு பாத்திரம். இந்தக் கதைகள் நகர் சார்ந்த வாழ்க்கை முறைகளைக் கேலி செய்கின்றன. 1950களின் தொழிற்சாலைகள் நிறைந்த இதாலியின் பின்னணியில் நாம் மார்ககோவோல்டோ என்கிற இயற்கை ரசிகனையும் கனவுக்காரனையும் காண்கிறோம். இதில் உள்ள இருபது கதைகளும் வசீகரம் மிகுந்தவை. மார்க்கோவேல்டோ தனது அபார்ட்மெண்ட் மாடியில் பறவைகளுக்குக் கண்ணி வைத்து பிடிக்கப் பார்க்கும் முயற்சிகளும், நெடுஞ்சாலை விளம்பரப்பலகைகளை விறகுக்காக வெட்டப் பார்ப்பதும் ‘சாப்ளின்’தனமான துணிகரச் செயல்களாய் விரிகின்றன. மார்க்கோவேல்டோ தன் குடும்பத்தாருடன் சூப்பர்மார்க்கெட் சென்று ஒன்றையும் வாங்க முடியாமல் திரும்பி வருவதும் கூட ரசனை மிக்க அனுபவமே. மார்க்கோவேல்டோ அழகுக்காக ஏங்குகிறான், பகல் கனவுகள் காண்கிறான். ஆகஸ்ட் மாதத்தில் சகலரும் நகரத்தை விட்டு விடுமுறையைக் கழிக்கச் சென்றிருக்கையில் அவன் தன் நகரின் காலியான தெருக்களை ரசிக்கிறான். அவனுடைய அமைதி கெடுவது அவனை பேட்டி காண வரும் டெலிவிஷன் குழுவினரால் மட்டுமே.
கால்வினோவின் மொழி நடை ஃபிரெஞ்சு ‘புதிய நாவல்’ (nouveau roman) எழுத்தாளரான அலென் ராப் கிரியே (Allain Robbe-Grillet)வின் மொழிநடையுடன் ஒப்பிட்டுப் பேசப்பட்டிருக்கிறது. சில சமயம் மிஷல் ப்யூட்டர் என்பவரின் எழுத்து நடையுடனும். ராப்கிரியே தனது புனைகதையின் உள்தளத்தில் அமைந்த அடர்த்தி மிகுந்த உட்பார்வைகளை மேல் தெரியும்படி செய்ய வலிந்த சித்தரிப்புகளை விவரணையில் கொண்டு வந்து சேர்க்கிறார். ஆனால் கால்வினோ “பொதுப் புத்தி”யிலிருந்து தன்னை எப்போதும் துண்டித்துக் கொள்வதில்லை. அடிப்படையில் கால்வினோ ஒரு நேச்சுர லிஸ்டாகவே இருக்கிறார். ராப் கிரியே மானுட மைய உலகத்திற்கு (Anthropomorhphic) எதிராய்த் தனது புனைவுலகத்தில் இயங்குகிறார்.

எதுவெல்லாம் சமூக (Social Unconscious) மற்றும் தனிமனித நினைவிலி (Individual Unconscious) யில் வெளிப்படுத்தப் படாமல் நின்று போயிருக்கிறதோ அதற்கு ஒரு குரல் கொடுக்கத் தயாராக இருப்பதில்தான் நவீன இலக்கியத்தின் சக்தி அடங்கியிருக்கிறது என்ற கருத்து கால்வினோவுக்கு உண்டு. நினைவிலி என்பது சொல்லக்கூடாதவற்றின் ஒரு சமுத்திரம்–மொழியின் நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்டவை, புராதன தடை உத்தரவுகளால் விலக்கிவைக்கப்பட்டவை. நினைவிலியானது கனவுகளின் வாயிலாக வும், வார்த்தைத் தடுமாற்றங்களிலும், திடீர் இணைவுகளிலும், கடன் பெற்ற சொற்களைக் கொண்டு, திருடப்பட்ட குறியீடுகளைக் கொண்டு, மொழியியல் கள்ளச் சரக்குகளைக் கொண்டு பேசுகிறது-நனவுலகின் மொழியில் இலக்கியம் இந்தப் பிரதேசங்களை சேர்த்துக் கொள்ளும் வரை. இலக்கியம் தன்னால் சொல்ல முடியாத ஒன்றைச் சொல்ல யத்தனிக்கும் போது அது தனக்குத் தெரியாததையும் சொல்ல யத்தனிக்கிறது. இங்கேதான் ஸர்ரியலிஸ்டுகளின் ஆட்டோ மேடிக் எழுதுதல் (automatic Writing) பற்றி நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். வார்த்தைகள் மற்றும் படிமங்களின் தன்னிச்சையான தொடர்பு படுத்தல்களில் ஸர்ரியலிஸ்டுகள் நமது அறிவார்த்த தர்க்கத்திற்கு முற்றிலும் எதிர்ப்பான ஒரு புறவய தர்க்கத்தைக் கண்டுபிடிக்கின்றனர். அறிவற்றதின் (Irrational) வெற்றியைக் குறிக்கிறதா இது என்று கேட்கிறார் கால்வினோ. இதன் மூலம் படைப்பாக்கத்தில் நினைவிலியின் பங்கு கூடுதலாக வலியுறுத்தப்படுகிறது. வார்த்தை விளையாட்டுகளிலும் தொடர்புபடுத்தல்களிலும் மனிதனுக்கு இருக்கும் ஈடுபாட்டினை மனோவியல் ரீதியாக நியாயப்படுத்துகிறார். இதற்காக எர்ன்ஸ்ட் க்ரிஸ் (Ernst Kris) மற்றும் எர்னஸட் கோம்ரிக் (Ernst Gmbrich)ஆகிய ஃபிராய்டிய கலை விமர்சகர்களை துணைக்கு அழைத்துக் கொள்கிறார். இந்த விவாதப் புள்ளிகளிலிருந்து தான் இலக்கிய-யந்திரத்திற்கான (The Literature Machine) வரையறையை நோக்கிச் செல்கிறார் கால்வினோ.

கால்வினோவின் மென் உணர்வுகள் அவரின் மிக விரிவானதும் வேறுபட்டதும் அதே சமயத்தில் ஆழ்ந்த கிரகிப்புமிக்கதுமான வாசிப்பிலிருந்து உருவாயின. மறுமலர்ச்சிக்கால ஆசிரியர்களிலிருந்து சமகாலத்தவர்கள் வரையிலான அவரது வாசிப்பின் வீச்சு மிகவும் ஆச்சரிய மிக்கதாய் இருக்கிறது. இதாலிய இலக்கியத்தின் மிகப் பெரிய இலக்கியாசிரியர் கலீலியோ என்று ஒரு முறை குறிப்பிட்டார். இதற்கான எதிர்ப்பும், மாற்றுக் கருத்தும் அவரது சமகால நாவலாசிரியரான கார்லோ கசோலாவிடமிருந்து புறப்பட்டது. மிகப்பெரிய இதாலிய இலக்கிய ஆசிரியர் தாந்தேவாகத்தானே இருக்க முடியும் என்று கசோலா கேட்டார். உரைநடையாசிரியர் என்று தான் குறிப்பிட்டதாக ஒரு பேட்டியில் தெளிவுபடுத்தினார் கால்வினோ. குறிப்பாக கலீலியோ பயன்படுத்திய மொழியின் கச்சிதத்தன்மை, கவித்துவ-விஞ்ஞான கற்பனைத்திறன் போன்றவை இன்றைய எழுத்தாளனையும் வியக்கச் செய்யக் கூடியதாக இருக்கிறது. மேலும் கலீலியோவை ஒரு விஞ்ஞானி என்று மாத்திரம் கசோலா சொல்வதை நிராகரிக்கிறார் கால்வினோ. தாந்தே பிரபஞ்சத்தன்மையானதும் என்சைக்குளோபீடியத் தன்மையானதுமான ஒரு படைப்பினை உருவாக்கிய போதிலும் (டிவைன் காமெடி) அந்தப் பிரபஞ்சத்தின் படிமத்தை எழுதப்பட்ட வார்த்தைகளின் வழியாகவே உண்டாக்கினார். தாந்தேவிலிருந்து தொடங்கி கலிலீயோ வரையிலான இவ்வகை எழுத்துக்கான அர்ப்பணிப்பு மிக ஆழமாய் வேரூன்றிய ஒன்றாகும்ஙி இந்தப் பாரம்பரியம் எல்லா ஐரோப்பிய இலக்கியங்களிலும் காணக் கிடைக்கிறது. பின் வந்த நூற்றாண்டுகளில் இத்தன்மை மங்கிப் போய் மீண்டும் இருபதாம் நூற்றாண்டில் தனது முழுவீச்சினை அடைந்திருக்கிறது. ஏறத்தாழ இதே அளவு உக்கிரத்துடன் இயற்கை விஞ்ஞானம் என்ற நூலை எழுதிய முதிய பிளினி (Pliny The Elder) பற்றி தனது கருத்துக்களை முன் வைத்திருக்கிறார் கால்வினோ.

சேர்மானம் (Combination), வார்த்தை விளையாட்டு (Word-play), அறிவை மிஞ்சி விகசிக்கும் படைப்புக் கூறு ஆகிய அம்சங்களில் கால்வினோவுக்கு இருந்த ஈடுபாடுதான் அவரை ரேமண்ட் க்வேனூ தலைமையில் இயங்கிய OULIPO (le Ouvroir de Litterature Potentielle) இயக்கத்துடன் தன்னை அடையாளம் காண வைத்தது. அவரது ஓய்வற்ற, துணிகரமான சோதனைப் புதினங்களுக்கு OULIPOவும் பக்கபலமாய் அமைந்தது. தொடக்க காலத்தில் கால்வினோ எழுதியவை அத்யந்தமான நேச்சுரலிச புதினங்கள் என்று கூறுவதே சரியாக இருக்கும். எனினும் அவர் ரகசியமாக புனைவு எழுத்துக்களை எழுதிக் கொண்டிருந்தார். சிறிதுசிறிதாய் அவருக்கு மெட்டாஃபிக்ஷனிலும் ஈடுபாடு உண்டாயிற்று. ரேமண்ட் க்வேனூ 1960களில் OULIPO பள்ளியை தொடங்கினார். அதில் எவ்வளவு எழுத்தாளர்கள் இருந்தனரோ அவ்வளவு கணிதவியலாளர்களும் இருந்தனர். OULIPO இயக்கம், நாவல் ஒரு சமூதாய ஆவணம் (Social Document) என்பதை ஏற்க மறுத்தது. அதற்குப் பதிலாக சில விரிவான வார்த்தை விளையாட்டுக்களை யதேச்சையான கணிதவியல் சட்டங்களை அனுசரித்து நாவலில் எழுத வேண்டும் என்று விரும்பினர் OULIPO இயக்கத்தினர்.
ஒரு பிரதி எழுதப்படவிருக்கும் தொடக்கத்தில் ஒரு எழுத்தாளனுக்கு சாத்தியமுள்ள வார்த்தைத் தேர்வுகள் அளவற்றதாய் இருப்பதால் அவனது தேர்வைச் சுருக்கிக் கொள்ளும் பொழுது ஒரு தனித்தன்மை கிடைக்கிறது. இதனால் நாவலாசிரியனுக்கு புதினத்தின் சட்டகத்தை நேரடியாகக் கையாண்டு கட்டுப்படுத்தும் அனுகூலம் உண்டாகிறது. இதற்கு சிறந்த உதாரணமாக ஜார்ஜ் பெரக் (Georges Perec) எழுதிய ஆ A VOID நாவலைக் குறிப்பிடலாம். அவர் ‘e’ என்ற எழுத்தே இல்லாமல் முழு நாவலையும் எழுதியிருக்கிறார். இந்த வடிவாக்கத் தேர்வு அதன் விளைவாய் உண்டாகும் சாராம்சத்தை நேரடியாகப் பாதிக்கக் கூடியதாக இருக்கும். வேறெந்த யதார்த்தப் புனைகதையை விட உள்வயமான ஒருங்கிணைப்பைக் கொண்டிருக்கிறது பெரக்கின் A VOID நாவல். பாத்திரங்கள், சூழ்நிலைகள், மற்றும் உரையாடல்கள் மனோவியல் ரீதியாக அன்றி தர்க்க ரீதியாக அமைந்துள்ளன. கால்வினோ OULIPO இயக்கத்தைத் தழுவிய போதிலும் பிற வடிவங்களை முயன்று பார்ப்பதை நிறுத்தி விடவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

கால்வினோவின் OULIPO திட்டங்களின் உச்சகட்ட மாகத்தான் அவருடைய The Castle of Crossed Destinies(1969) வெளிப் பட்டிருக்கிறது. சொல்லுக்கும் படிமத்திற்கும் இடையிலான இடைவெளியை இந்த நூலில் அகற்ற முயல்கிறார் கால்வினோ. வழிதவறிப் போன பயணிகள் ஒரு காட்டின் மத்தியில் அமைந்துள்ள கோட்டைக்கு வந்து சேர்கின்றனர். ஆனால் தமது பேச்சாற்றலை அனைவரும் இழந்து போயிருப்பதையும் கண்டு பிடிக்கின்றனர். ஒரு மேஜையின் முன்னால் அமர்ந்து கொள்கிற அவர்கள் அங்குள்ள டேரோ கார்டுகளை வைத்து தங்கள் துணிகரப் பயணங்களை மற்றவர்களுக்கு விளக்க முயல்கின்றனர். இதன் விளைவாக வாசகனுக்குக் கிடைப்பது மண்டலம் போன்ற, ஒன்றுக்குள் ஒன்று பிணைந்த சிக்கலான கதைகள். ஒன்றுக்கும் மேற்பட்ட அர்த்தப்பாடுகளும் இந்தக் கதைகளில் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார் கால்வினோ. டேரோ சீட்டுக் கட்டுக்களில் அமைந்த சாத்தியமுள்ள சகல கதைகளையும் கால்வினோ சொல்ல முயல்கிறார். சீட்டுகளின் யதேச்சை அமைப்புகளின் வழியாக அவரால் ஏற்கனவே பிரபலமான பல தொல்கதைகளையும் புராணிகங்களையும் அடையாளம் காண முடிகிறது: ஃபாஸ்ட் (Faust) இடிபஸ் (Oedipus) ஹேம்லட் (Hamlet) பார்ஸிஃபல் (Parsifal), மார்க்விஸ் த சேடின் ஜஸ்ட்டின். நாவலின் முதல் பாகம் அரியோஸ்டோவின் ஆர்லாண்டோ ஃபியூரியோசோ (Orlando Furioso) விலிருந்து இரண்டு கதைகள் நாவலின் மையச் சட்டகமாக அமைத்துக் கொள்கிறது. கால்வினோ எழுதிய புதிய கதைகள் ஒரு மொசைக்தளமாய் உருவாகி தொல்கதைகளின் உள்பார்வைகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடியனவாக இருக்கின்றன. 1969ஆம் ஆண்டில் இந்த நாவலின் முதல் பகுதியை கால்வினோ எழுதினார். நான்கு வருடங்கள் கழித்து எழுதப்பட்ட இரண்டாவது பகுதி முதலாவதை விட அடர்த்தி மிகுந்தும் சிக்கலாகவும் அமைந்தது. மேஜையின் முன்னால் அமர்ந்திருக்கும் விருந்தினர்கள் ஒவ்வொருவராய்க் கதை சொல்வதில் சற்றுப் பொறுமையிழந்து எல்லோருமே தம் கதையை ஒரே நேரத்தில் சொல்லத் தொடங்குகின்றனர்.
இத்தகைய ஒரு முயற்சிக்குப் பிறகுதான் Invisible Cities என்ற மற்றொரு OULIPO திட்டத்தை எழுதி முடித்தார். 1972இல் வெளிவந்த Invisible Cities Invisible Cities கால்வினோவின் மிகப் பிரபலமான நாவல் என்று சொல்வது தவறில்லை. இந்த முயற்சி கால்வினோவை போர்ஹே மற்றும் மிலோராட் பாவிக் (Milorad Pavic) ஆகியோருடன் ஒப்பிட்டுப் பேச வைத்தது.

Invisible Cities (1972)என்ற நாவல் பல அம்சங்களில் கற்பனைப் பூகோளமாக அமைந்திருக்கிறது. இதில் பிரதான பாத்திரங்களாக இடம் பெறுபவர்கள் இருவர். முதலாமவர் தார்த்தார் மன்னனும் நாடுகளை வெல்பவனுமான குப்ளை கான். மற்றவர் குப்ளை கானுக்கு கதை சொல்பவராக வரும் வெனிஸ் தேசத்து பயணியும் கடல் மார்க்கமாகப் புதிய வழிகளைக் கண்டுபிடித்தவருமான மார்க்கோ போலோ. குப்ளை கான் ஒரு மகா பிரக்ஞையைத் தேடிக் கொண்டிருக்கிறார். வேறு எந்த ஒரு தூதுவன் சொல்வதை விடவும் கூடுதல் கவனத்துடனும் தேடலார்வத்துடனும் இந்த இளம் வெனிஸ் கடல் பயணி சொல்வதைக் உற்றுக் கேட்கிறார். ஒவ்வொரு படையெடுப்பு முடிந்து ஓய்வு கொள்ளும் போதும் மார்க்கோ போலோவிடம் அவன் சந்தித்த நகரங்களைப் பற்றி சொல்லச் சொல்கிறார். மார்க்கோ போலோ தன் பயண அனுபவங்களின் நகரங்களைப் பற்றி விளக்கமாகச் சொல்கிறான். அவன் சொல்லும் ஒவ்வொரு நகரமும் பெண்களின் கவர்ச்சிகரமான பெயர்களால் அழைக்கப்படுகிறது–அவற்றைச் சொல்லத் தொடங்கி யவுடன் மத்தியகால கையெழுத்துப் பிரதிகளில் உள்ளது போல கவர்ச்சிகர மான ஆபரணங்களைப் போலத் தோன்றுகின்றன. சிறிதுசிறிதாய் கதைகள் நவீன அம்சங்களைத் தொட ஆரம்பிக்கும் பொழுது காட்சிகள் கறைபடிந்தவையாய், ஈர்ப்பற்றவையாய் மாறுகின்றன. பல நகரங்களைப் பற்றிச் சொன்ன மார்க்கோ போலோ ஏன் சொந்த நகரான வெனிஸ் பற்றிக் கூறவில்லை என்று கேட்கப்பட்டவுடன் சொல்லப் பட்ட எல்லா நகரங்களும் வெனிஸ் நகரின் ஏதாவது ஒரு அம்சத்தினைக் கொண்டுதான் இருக்கின்றன என்கிறான். அவன் சொல்லும் சிதைவுபட்ட கதைகளில் ஏதோ ஒருவிதமான அர்த்தத்தைத் தேடுகிறார் வயோதிக குப்ளை கான். அதிகாரத்தின் மீது சலிப்படைந்திருக்கும் கான் உறுதியளிக்கப்பட்ட ஒரு விமோசன நகரினை இந்த நகரங்களுக்குள் கண்டுபிடிக்க முயல்கிறார். மார்க்கோ போலோ சொல்வதனைத்தையும் கான் நம்புவதில்லை. சில நேரங்களில் தனக்கு கனவில் வந்த ஒரு நகரம் நிஜத்தில் எங்காவது இருக்கிறதா என்றும் கேட்கிறார். இதை ஒரு விதமான மெட்டாஃபிக்ஷன் (கதைபற்றிய கதை அல்லது கதை மீறும் கதை) என்று சொன்னோமானால் இதை விடத் தீவிரமான மெட்டாஃபிக்ஷன் என்று சொல்லக் கூடிய If On a Winter’s Night A Traveller நாவலை 1979ஆம் ஆண்டு எழுதினார்.

இந்த நாவல் முழுக்க முழுக்க தன்னைத் தானே சுட்டிக் கொள்ளும் ஒரு புனைகதை. இதை ஒரு எதிர்நாவல் (Anti-Novel) என்று சொன்னாலும் தவறில்லை. இதில் வாசிப்பின் செயல்பாடே கதைத்திட்டமாய் இருக்கிறது. பிரதான பாத்திரமாக வாசகனை ஆக்குவதன் மூலமும் நாவலின் செயல்-காலத்தை நிஜ-காலத்துடன் பொருத்துவதன் மூலமும் நாவல் மிகவும் அறிவார்த்தமாக ஆவதைக் குறைத்திருக்கிறார் கால்வினோ. எந்த அளவு வாசிப்பு-வாசகன் பற்றியதாய் இருக்கிறதோ அதே அளவு எழுதுவது-எழுத்தாளன் பற்றிய தாகவு மிருக்கிறது.

மேலும் பொருள்கோளியலும்(hermeneutics)செக்ஸுவாலிட்டியும் சரிசம அந்தஸ்தைப் பெறுகின்றன. பிரபல ஐரிஷ் நாவலாசிரியர் சைலாஸ் ஃபிளானரி நாவலின் மையப்பகுதியை ஆக்கிரமித்துக் கொள்கிறார். சுயப்பிரக்ஞையாலும் எழுதுதலின் ஆரம்பத் தடங்கலாலும் பெரும் இன்னலுறும் ஃபிளானரி தன்னால் எழுத முடியாத ஒரு கருத்தியலான-முழுமையான நாவலின் தோற்றங்களினால் துன்புறுத்தல் உணர் வடைகிறார். அவர் எழுதிய நாவல்கள் மொழிபெயர்ப்பாளர்களால் சிதைக்கப்பட்டு, இலக்கியத்திருடர்களால் நாசமாக்கப்பட்டிருக்கின்றன. இது போதாதென்று ஃபிளானரி யின் நூல்களை கம்ப்யூட்டரில் தயாரித்து விட ஒரு ஜப்பானிய சதி பற்றி தெரிய வருகிறது. இதை விட மோசமான ஒன்றும் தெரிவிக்கப் படுகிறது–அவரது புத்தகங்கள் அனைத்துமே விண்கலங்களில் உலவும் சிறிய பச்சை நிற மனிதர்களால் எழுதப்பட்டிருக்கலாம் என்கிற தெரிவிப்பு இறுதி அவமதிப்பாய் வருகிறது. ஃபிளானரியை வைத்து எழுத்தாளனின் பாசாங்குகளைக் கருணையின்றி கிண்டல் செய்யும் கால்வினோ தன்னையுமே அத்தகைய கிண்டலுக்கு உட்படுத்திக் கொள்கிறார். வாசகனின் உரிமைக்கான புரட்சியில் கால்வினோவுக்கு ஆதரிப்புகள் இருந்த போதிலும் இந்தப் புரட்சியில் இருக்கும் எல்லைப் படுத்தல்கள் பற்றி கால்வினோ அறிந்திருந்தார். ஆசிரியர்களும் எழுத்தாளர்களும் தம் பீடத்திலிருந்து சரித்துவிடப்பட்டிருந்தாலும், அவர்கள் பரிதாபமானவர்களாய்க் காட்சியளித்த போதிலும், தாங்கள் விரும்பிய எந்த அர்த்தத்தை வேண்டுமானாலும் ஒரு பிரதிக்கு வழங்கிவிட நினைக்கும் வாசகர்களும் தேவையான அளவுக்கு பரிகசிக்கப் பட்டுள்ளனர். ஆசிரியன் சொன்னதும் பல்கலைக் கழக கருத்தரங்குகளில் உருவாக்கப் படுவதும் சரிசம அளவுக்கு அர்த்தமற்றவையாக இருக்கின்றன.
நவீனத்துவ-பின்நவீனத்துவ இலக்கிய மற்றும் வாசிப்புக் கொள்கைகளைப் பற்றி விவாதிக்கும் அளவுக்கு இந்த நாவல் சாதாரண வாசகனின் உணர்வுக்கு நெருக்கமாய் இருக்கக்கூடிய பழைய அக்கறைகளையும் விவாதங்களையும் அலசுகிறது. இலக்கியத்தின் பாரம்பரிய செயல்பாடு பற்றி பழைய ரோமானிய கவி ஹோரேஸ் பின்வருமாறு வரையறை செய்தார்- “Utile et dulce” பயனுடையதாயும், சந்தோஷம் அளிப்பதாகவும் இருக்க வேண்டும். சந்தோஷம் என்கிற அம்சம் பயன்படு தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. படிக்காமலே வாசகன் வைத்து விடக் கூடிய நூல்கள் பயனற்றவை என்றார் டாக்டர் ஜான்சன். இந்த விவாத அடிப்படையைப் பின்பற்றிச் செல்வோமானால் வாசகனுக்கு அதிர்ச்சி கொடுத்து, நிலை குலையச் செய்து, ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒழுங்கினை நாசமாக்குவது ஆகிய அம்சங்களை மாத்திரம் வலியுறுத்தும் புரட்சிகரமான வாசிப்புக் கொள்கையை மடத்தனத்தின் உச்சம் என்று சொல்ல வேண்டி வரும். ஆனால் கால்வினோ நாம் எப்போதும் பிரதானமாய் சந்தோஷம் பெறுவதற்காக படிக்கிறோம் என்பதை ஒப்புக்கொள்கிறார். அறிவுறுத்தப் படுவதற்காய் நாம் படிப்பதில்லை என்பதை ஏற்கிறார். வேண்டுமானால் ஒருவர் மகிழ்ச்சியின் வாயிலாய் அறிவுறுத்தப் படலாம்-அந்த சந்தோஷம் சிக்கலானதாய், நுணுக்கமிக்கதாய், புரட்சிகரமான வகையில் நிலை குலைவிக்கச் செய்வதாகவும் இருக்கலாம். அத்கைய தீவிர சந்தோஷத்தைத்தான் ரோலான் பார்த் (Roland Barthes)‘jouissance’ என்று அதன் புணர்ச்சி உணர்த்தல் களுடன் குறிப்பிட்டார். ‘jouissance’ என்ற பிரெஞ்சு வார்த்தைக்கு இணையான ஆங்கிலச் சொல் இல்லை என்று சொல்கிறார்கள்.
நாவல் ஒரு ரயில் நிலையத்தில் தொடங்குகிறது. வாசகன் தவிர பிற வாசகன்(கி) வாசிக்காதவன்(வள்) ஆகியோரைப் பற்றிய குறிப்பும் நாவலில் இல்லாமல் இல்லை. கால்வினோவின் வாசகன் கால்வினோ எழுதிய நாவல் இதுவென நினைத்து வாங்கிச் சென்று படிக்கும் பொழுது இரண்டாவது அத்தியாயத்திற்குப் பதிலாக வேறு ஒரு நாவலின் முதல் அத்தியாயம் அத்துடன் இணைக்கப் பட்டிருப்பதைக் கண்டுபிடிக்கிறான். புத்தகக் கடைக்குச் சென்று பாக்கிப் புத்தகம் எங்கே என்று கேட்கும் பொழுது கால்வினோவின் புத்தகம் Tazio Bazakbal என்ற போலந்து நாட்டு எழுத்தாளரின் புத்தகமான Outside the Town of Malbork உடன் கலந்து போய்விட்டதாகத் தெரிகிறது. இதே அளவு கால்வினோவின் புத்தகத்தால் ஏமாந்து போன லுட்மிலா என்ற ஒரு வாசகியை சந்திக்கிறான். இருவருமே தொடக்கத்தைத் தாண்ட முடியாதவர்களாகி இருப்பதை ஒரு விதமான சதி என்று கண்டு பிடிக்கின்றனர். இந்த சதியானது கோர்வையைத் தவிர்ப்பதற்காகச் செய்யப் பட்டிருக்கிறது. கையெழுத்துப் பிரதிகளை போலி செய்து குழப்பத்தை உண்டாக்குபவன் மொழிபெயர்ப்பாளனாக இருக்கலாம். ஒவ்வொரு அத்தியாயமும் தொடக்கத்திலேயே நின்று போய்விடுகிறது. பல கதைகள் தொடங்கப்படுகின்றன. ஆனால் எதுவுமே முடிவுக்கு வருவதில்லை. மூன்றாவது நபர் யார்? நூலகர்களாக இருப்பவர்கள் போலீசாராக இருக்கலாமோ? கதைகளின் தந்தை என்ற ஒருவர் லத்தீன் அமெரிக்காவில் எங்காவது இருக்கிறாரா? அல்லது இவை எல்லாமே ஒரு கம்ப்யூட்டரால் எழுதப்பட்டவையா?

ஒரு கருத்துப்படி லத்தீன் அமெரிக்காவில் எங்கோ எட்ட முடியாத ஒரு பிரதேசத்தில் மிக மூத்த அமெரிந்திய வயோதிகன் இருக்கிறான். பார்வையில்லாத அவன் நிறுத்தலே இன்றி கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறான்–தன் நாட்டினுடைவை மட்டுமன்றி அவன் இதுவரை பார்த்திராத சகல கலாச்சாரங்களிலிருந்தும் கதைகள் அவன் வாயிலிருந்து பீறிட்டுக் கொண்டிருக்கின்றன. அவனை ஒரு அசாத்திய நிகழ்முறை யாகக் கருதி ஆராயும் பொருட்டு மானுட ஆய்வாளர்களும் சார்பு-மனோவியலாளர்களும் அவன் வசிக்கும் குகையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர். அவன் ஒரு பிரபஞ்ச மனதுடன் உரையாடல் கொண்டவனாய் இருப்பதற்கு அவன் உண்ணும் போதை தரும் காளான்கள் கூட காரணமாக இருக்கலாம். அந்த வயோதிகன் நவீன ஹோமர் போலத் தோற்றமளிக்கிறான். எனவே அச்சில் வெளிவந்திருக்கிற பல நவீனப் புதினங்கள் அவனது கதைகளுக்கு எழுத்து வடிவம் கொடுக்கப் பட்டவையாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
அந்த பத்து அத்தியாயங்களும் சமகாலத்தின் நாவல் எழுதும் முறைகளைக் கிண்டல் செய்கின்றன. போர்ஹே, ஜேம்ஸ் ஜாய்ஸ், சார்த்தர், தாஸ்தயெவ்ஸ்கி, காஃப்கா, நெபக்கோவ், தாமஸ் மன், தாமஸ் பின்ச்சன் ஆகியோரின் மொழி நடைகளையும் எதிரொலிகளையும் கால்வினோவின் நாவலில் படிக்க முடிகிறது. ஒரு மொழிபெயர்ப் பாளனின் வெற்றிகரமான கனவாக இந்த நாவல் ஆக முடியும். அதிலும் பல நவீன நாவலாசிரியர்களை ஒரே தளத்தில் இணைக்கும் துணிச்சல் கால்வினோவுக்கு மாத்திரமே உண்டு.

இதில் வரும் மொழிபெயர்ப்பாளன், போலிகள் கள்ளச்சரக்குகள், வெட்டி ஒட்டல்கள், விலக்கப்பட்ட பிரதிகள் ஆகியவற்றால் உருவாக்கப்படும் ஒரு இலக்கியத்தை கனவு காண்கிறான். ஜப்பான், லத்தீன் அமெரிக்கா, பெல்ஜியம், அயர்லாந்து, போன்ற நாடுகளின் கதைகளுடன் மூன்று கற்பனையான நாடுகளின் கதைகளும் இந்த நாவலில் காணப்படுகின்றன. ஆனால் இவை யாவும் தடைபடு வதற்குக் காரணம் ஆசிரியனின் தற்கொலை அல்லது புத்தகம் திருடுபோதல் அல்லது தீடீரென்று கைது செய்யப் பட்டிருத்தல் காரணமாக இருக்க முடியும். வாசகனும் வாசகியும் இணையும் பொழுது நாவல் முற்றுப் பெறுகிறது.

1977ஆம் ஆண்டு Fantastic Tales என்ற கதைகளைத் தொகுத்தார். 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அதீதப் புனைவுக் கதைகள் அடங்கியது இந்த நூல். இதில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க எழுத்தாளர்களின் இருபத்தாறு “கிளாஸிக்” புனைவுக் கதைகள் சேர்க்கப் பட்டுள்ளன. கால்வினோ இந்த நூலுக்கு ஒரு முன்னுரையும் எழுதி கதைகளுக்கு சிறுகுறிப்புகளும் தந்திருக்கிறார். இந்த நூல் அதீதப் புனைவின் ஜெர்மானிய தொடக்கங்களில் ஆரம்பித்து ஹென்ரி ஜேம்ஸின் பிசாசுக் கதைகள் வரை விரிகிறது. பால்ஸாக், டிக்கன்ஸ், துர்கனேவ், ராபர்ட் லூயி ஸ்டீவென்சன் போன்ற பிரபலமான எழுத்தாளர்கள் முதல் அதிகம் பிரபலமாகாத யான் போட்டோக்கி, வெர்னன் லீ வரை இதில் சேர்க்கப் பட்டிருக்கின்றனர். இ.ட்டி.ஏ. ஹாஃப்மேனின் மிக இன்றியமையாத கதையான “சாண்ட் மேன்” இதில் இடம் பெற்றுள்ளது. தவிரவும் கால்வினோவுக்கும் பிற ஐரோப்பிய இலக்கியவாதிகளுக்கும் மிகவும் அத்யந்தமான எட்கர் ஆலன் போவின் கதைகளும் உள்ளன.

மிஸ்டர் பலோமர் (Mr.Palomar) 1985ஆம் ஆண்டு வெளிவந்தது. மிஸ்டர் பலோமர் கால்வினோவின் படைப்பு களிலேயே மிகவும் நினைவு கூறத் தக்கவர். மிஸ்டர் பலோமர் தனது விடுமுறைக் காலத்தை எப்படிக் கழிக்கிறார் என்பதுதான் புதினத்திற்காக கதைகளாய் ஆகிறது. இந்தக் கதைகளின் நீண்ட உரைநடைப் பகுதிகளில் கடினமான உருவகங்கள் ஆங்காங்கே செருகப்பட்டிருக்கின்றன. இந்த உலகின் நிகழ்முறைகளை உற்றுக் கவனித்து பதிவு செய்வதற்கான ஒரு லென்ஸ் கருவியாக மிஸ்டர் பலோமர் கால்வினோவுக்குப் பயன்படுகிறார். பலோமரின் பெயரில் ஒரு வானவியல் தொலை நோக்கி இருக்கிறது. அலைகளை, நட்ஷத்திரங்களை, பால்வெளி மண்டலத்தை, ஒட்டகச் சிவிங்கிகளைப் பற்றியெல்லாம் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடுகிறார் மிஸ்டர் பலோமர். இந்தக் கதைகள் “விடுமுறையில் மிஸ்டர் பலோமர்”, “நகரத்தில் மிஸ்டர் பலோமர்”, “மிஸ்டர் பலோமரின் மௌனங்கள்” என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மொலாய் (Molloy) என்கிற சாமுவெல் பெக்கட்டின் பாத்திரத்தின் பாதிப்பையும் நம்மால் மிஸ்டர் பலோமரிடம் பார்க்க முடிகிறது. மிஸ்டர் பலோமரை நாம் ஏன் பின் தொடர வேண்டியிருக்கிறது என்றால் அவரது அவதானிப்புகள் சகலமும் நிலையாகக் கச்சிதமிழந்தும் கச்சிதம் அடைந்தும் காணப் படுகின்றன. இந்தக் கதைகளைப் பற்றி கால்வினோவின் கருத்துக்களை இங்கே மேற்காட்டுவது பயனுள்ள தாய் இருக்கும்:
It[Mr.Palomar] is a kind of diary with minimal problems of knowledge, ways of establishing relationships with the world, and gratifications and frustrations in the use of silence and words.
(“Exactitude” in Six Memos for the Next Millennium p.75) Difficult Loves (1985)

தொகுதியில் உள்ள பல கதைகளுக்கு சாகசங்கள் அல்லது துணிகரச் செயல்கள் என்று கால்வினோ பெயரிட்டிருக்கிறார். ஒரு மத்தியதர வர்க்கத்துப் பெண்மணி முதல் முறையாகக் கடலில் நீந்தும் பொழுது தனது நீச்சல் உடையின் கீழ்ப்பாகம் கழன்று கடல் நீரில் காணாமல் போயிருப்பதைக் கவனித்து மன உளைச்சல் அடைகிறாள். எதையுமே புகைப்படமாய் மாற்றினால்தான் அதன் அழகினை ரசிக்க முடியும் என்ற மனோபாவம் வந்துவிட்ட ஒருவன் தன் காதலியை இழக்கிறான். வாசித்தலில் ஆழ்ந்த ஈடுபாடு கொள்கிறவனுக்கு எதிர்பாராது வந்து கிடைக்கும் காதலும் செக்ஸும் கூட இடைஞ்சலாகவே இருக்கிறது. திருமணமான பெண் ஒருத்தி, தன் வீட்டை விட்டு வெளியில் இரவு முழுவதும் ஒரு விருந்தில் கழித்த பின் ஒரு காஃபி விடுதியில் பொழுது விடிவதை நேர்கொள்வது சாகச செயலாகவே கருதப்பட வேண்டுமா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. ராணுவ வீரன் ஒருவனின் விடுமுறையில் வீடு நோக்கிய ரயில் பயணமும் பயணத்தில் கிடைக்கும் ஒரு விதவைப் பெண்ணின் அருகாமையும் அந்த அருகாமையை அவன் இம்மி இம்மியாக அடைய முயல்வதும் மிக நேர்த்தியான சித்தரிப்புகள். ஸ்மாக் (Smog) என்ற குறுநாவலும் A Plunge into Real Estate என்ற மற்றொரு குறுநாவலும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. ஸ்மாக் என்ற கதை இன்றைய சூழல் சுகாதாரச் சீரழிவினை அன்றே துல்லியமாக எதிர் கொண்டிருக்கிறது.
Numbers in the Dark (1943-1985) இதுவரை சேகரிக்கப் படாமலிருந்த கால்வினோவின் கையெழுத்துப் பிரதிகளை ஒருங்கிணைத்து தொகுக்கப்பட்ட ஒரு பிரதிநிதித்துவ தொகுதி. 1943ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி 1985ஆம் ஆண்டு வரையிலான அவரது மிகச் சிறந்ததும் மிக சாதாரண மானதுமான படைப்புகளை உள்ளடக்கியிருக்கிறது-ஒரு முடிக்கப்படாத நாவல் உட்பட. யதார்த்தக் கதைகள், நீதிக் கதைகள், சோதனைக் கதைகள் என நிறைய வகைமைகளைப் பார்க்க முடிகிறது இந்தத் தொகுப்பில். இதில் மிகவும் துணிகரமான முயற்சி என்று சொல்லப்படக் கூடியது The Burning Of The Abominable House இது கம்ப்யூட்டரால் எழுதப்பட்டிருக்க முடியக் கூடிய கதை. IBM என்ற பிரசித்தி பெற்ற கம்ப்யூட்டர் நிறுவனத்திற்காக இந்தக் கதையை கால்வினோ எழுதியதாகத் தெரிகிறது. இதன் நாயகன் மற்றும் துப்பறியும் நிபுணனாக இருப்பவன் ஒரு புரோகிராமர். 1973ஆம் ஆண்டில் ஒரு டேட்டா புராசசிங் யந்திரத்தைப் பயன்படுத்தும் வசதி அசாத்தியமான காரியமாய் இருந்த போதும் இந்தத் திட்டத்திற்காக கால்வினோ தனது தனிப்பட்ட நேரத்தை செலவிட்டார். கதை கடைசியாக “பிளேபாய்” பத்திரிகையின் இதாலியப் பதிப்பில் வெளிவந்தது. கால்வினோ இந்தக் கதையை எழுதுவதென்பது தனது கணிதவியல் திறன்களுக்கான சவால் என்று எடுத்துக் கொண்டார். ஞமகஒடஞ வில் சேர்மானக் கலையின் (Ars Combinatoria) எடுத்துக் காட்டாக இது அமைய வேண்டு மென்பதுதான் அவரது ஒரிஜினல் திட்டாமாக இருந்தது. Memoirs of Casanova என்ற கதை ஏறத்தாழ புலனாகா நகரங்கள் (Invisible Cities) அளவுக்கு ஒரு நாவலாக எழுத கால்வினோ திட்டமிட்டிருந்தார். “புலனாகா நகரங்களில்” ஒரு வெனிஸ்காரரை மையப்பாத்திரமாக ஆக்கியது போல உத்தேசத் திட்டத்திலிருந்த இந்த நாவலின் நாயகனாக மற்றொரு வெனிஸ்காரரான கியாகோமோ காசனோவா என்பவரை கால்வினோ தேர்ந்தெடுத்தார். ஆயினும் சிறு கதையாகவே இது நின்று போயிற்று. மேஸிமோ கேம்ப்பிக்ளி (Massimo Campigli) என்ற ஓவியரின் உலோகச் செதுக்குருவப் படங்களுடன் 1981ஆம் ஆண்டு Salomon and Torrini பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. மூன்றாம் நபர் பார்வையில் கால்வினோ கொடுத்த குறிப்பு பின்வருமாறு:
After Invisible Cities, a catalogue of imaginary cities visited by a resurrected Marco Polo, Italo Calvino begins another series of short stories attributed once again to a famous Venetian, in this case Giacomo Casanova. Like the previous book, this too is a “catalogue”, but this time of “amours”.
இவை தவிர தொகுதியில் Qfwfq பற்றிய புதிய தொல்கதைகளும் உள்ளன-இந்தப் பிரபஞ்சத்தின் பிறப்பையும் இறப்பையும் குறிக்க ஏதுவாய். The Queen’s Necklace என்ற நெடுங்கதையையும் ஒரு நாவலாக எழுத கால்வினோ திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது. மிக வேறுபட்ட அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் வேண்டு கோளுக்கு இணங்கி பல கதைகளை எழுதியிருக்கிறார். அதில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது Glaciation என்பது. இந்த மிகச் சிறிய கதையை Suntori என்ற ஜப்பானிய மது தயாரிப்பு நிறுவனத்தின் வேண்டுகோளின் பேரில் எழுதினார். 1975ஆம் ஆண்டு ஏப்ஹஸ்ரீண்ஹற்ண்ர்ய் கதை முதலில் நேரடியாக ஜப்பானிய மொழிபெயர்ப்பில் வெளி வந்து, பிறகு Corrier della Sera இதழில் 1975ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மூல இதாலிய வடிவம் வெளியிடப்பட்டது

The Road to San Giovanni(1993),Under the Jaguar Sun (1992), Six Memos for the Next Millennium(1996) போன்ற மூன்று புத்தகங்களும் கால்வினோவின் இறப்புக்குப் பின்னரே வெளிவந்தன.
1972ஆம் ஆண்டு கால்வினோ ஐந்து புலன் உணர்வுகளைப் பற்றி கதைகள் எழுதத் திட்டமிட்டு தொடங்கினார். 1985இல் அவர் இறப்பின் போது ‘Under the Jaguar Sun’, ‘The King Listens’, ‘The Name, The Nose’ ஆகிய மூன்று கதைகள் மாத்திரமே எழுதி முடிக்கப்பட்டிருந்தன. தொடுதல் மற்றும் பார்வை ஆகிய இரண்டு புலன்கள் பற்றிய கதைகள் மாத்திரம் எழுதப்படாமல் நின்று போய்விட்டன. ‘The King Listens’ இல் வரும் கொடுங்கோல் அரசன் தனது அதிகாரத்தினாலே சிறைபட்டுப் போயிருப்பது மட்டுமன்றி அவனது கேட்கும் உணர்வுகளால், காதுகளினால் சிறைபட்டுப் போயிருக்கிறான். அவனது அரண்மனையே ஒரு மாபெரும் காது போல இயங்குகிறது, முரண்படும் செய்திகளை விடுதலை, காதல், காட்டிக் கொடுத்தல் என மாற்றி மாற்றித் தந்த வண்ணம். ‘The Name, The Nose’ கதை நனவோடை உத்தியைப் பயன்படுத்துகிறது. இந்தத் தொகுப்பின் மிகச் சிறந்த கதையாக இதைக் கூறலாம்.

The Road to San Giovanni(1993) சுயசரிதைக் கட்டுரைகள் அடங்கியது. தலைப்புக் கட்டுரை கால்வினோவின் குழந்தைப் பருவக்கால வீட்டினைப் பற்றிய சித்தரிப்பாய் அமைகிறது. அவரது விடலைப் பருவக் காலத்திலிருந்து அவருக்கு திரைப்படம் பார்ப்பதில் இருந்த ஈடுபாட்டினைப் பதிவு செய்கிறது ‘A Cinema-Goer’s Autobiography’.

Six Memos For the Next Millennium (1996) கால்வினோவின் முதிர்ச்சிக் காலத்தில் எழுதப்பட்ட மிக முக்கியமான கட்டுரைகளாக இருக்கின்றன. 1984ஆம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் Charles Eliot Norton Lectures இல் பேசுவதற்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கான உரைகளாக கால்வினோ தயாரித்த கட்டுரைகள்தான் Six Memos For the Next Millennium. பிறகு நூலாக ஒன்று சேர்க்கப்பட்டது. அவர் மொத்தம் எட்டு உரைகள் நிகழ்த்துவதற்கான திட்டம் கொண்டிருந்ததாக கால்வினோவின் மனைவி எஸ்தர் கால்வினோ தெரிவிக்கிறார். இந்த உரைகள் நிகழ்த்த ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு செல்ல ஆயத்தமாய் இருந்த சயமத்தில்தான் கால்வினோ திடீரென மூளையில் ஏற்பட்ட ஸ்ட்ரோக் காரணமாக காலமானார். இந்தக் கட்டுரைகள் மூலமாய் நமக்குத் தெரிய வருகிற கால்வினோ மறுமலர்ச்சிக் கால இலக்கியங்களிலிருந்து இன்றைய மானுடவியல் வரையில் ஊன்றிப் படித்தவராக, பழைய இலக்கியங் களுக்கும் நவீன இலக்கியங்களுக்கும் ஒரு தொடர்ச்சியைக் காண்பவராக இருக்கிறார். முதல் கட்டுரையான “லேசுத்தன்மை” கிரேக்கப் புராணிகத்திலிருந்து தொடங்குகிறது. கால்வினோவைப் பொருத்தவரை எல்லாப் பெரிய இலக்கியமும் ஒரு விதமான என்சைக் குளோபீடியத்தன்மையை தன்னுள்ளே கொண்டிருக்கும். லேசுத்தன்மைக்கு எடுத்துக் காட்டாக மறுமலர்ச்சிக் கால இதாலியக் கவிஞரான கேவல்கான்ட்டியைச் சுட்டுகிறார். லேசுத்தன்மை அளவுக்கே “விரைவுத்தன்மை”யும் இலக்கியத்தில் முக்கியமானது. இதற்கடுத்த முக்கியப் பண்பாக அவர் சுட்டுவது “கச்சிதத்தன்மை”. அடுத்து வருபவை “புலனாகும் தன்மை”யும், “பன்முகத்தன்மை”யும். இந்தக் கட்டுரைகளின் வழியாக கால்வினோவுக்கு போர்ஹே மீதிருந்த தனி மதிப்பைப் பார்க்க முடிகிறது. போர்ஹே பற்றிய கால்வினோவின் கருத்து பின்வருமாறு:

What I particularly wish to stress is how Borges achieves his approach to the infinite withou the least congestion, in the most crystalline, sober, and airy style.
(“Quickness” in Six Memos for the Next Millennium p.50)
கால்வினோ அளவுக்கே நவீன இதாலிய இலக்கியத்தில் சாதனை படைத்திருக்கிற பிரைமோ லெவி தான் கால்வினோவுடன் பகிர்ந்து கொண்ட நேரங்களையும் இணைந்து ஈடுபட்ட மொழிபெயர்ப்பு வேலையையும் பற்றி ஒரு கட்டுரையில் நினைவு கூர்கிறார். ரேமண்ட் க்வேனூவின் The Portable Little Cosmogony யை கால்வினோ மொழிபெயர்த் திருக்கிறார். அப்போதிருந்த மொழிபெயர்ப்பைப் பற்றிய அதிருப்தியால் கால்வினோ முதலில் அதை சீர்திருத்தினார். ஆனால் பிறகு அவர் செய்த திருத்தங்களிலேயே கால்வினோவுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. க்வேனூவின் இந்த புனைவுக் கவிதையானது பிரபஞ்சத்தின் தொடக்கத்தில் ஆரம்பித்து கம்ப்யூட்டர்களில் முடிகிறது. இதில் ஒரு பகுதி முழுக்க முழுக்க ரசாயனம் பற்றி அமைந்திருக்கிறது. இவ்வளவு சீர்திருத்தங்களுக்குப் பிறகும் சில முடிச்சுகள் இந்த இதாலிய மொழிபெயர்ப்பில் இருந்து கொண்டே யிருந்தன. அவற்றை க்வேனூவாலேயே அவிழ்க்க முடியாமலிருந்தது. அந்த நூல் எழுதப்பட்ட பத்து வருடங்கள் கழித்து அது பற்றிக் கேட்கப்பட்ட பொழுது தான் அதில் என்ன சொல்ல வந்தார் என்பது மறந்து போய்விட்டதாகக் கூறிவிட்டார் க்வேனூ. இந்த சமயத்தில்தான் க்வேனூவின் கவிதை மொழிபெயர்ப்பைச் சீர் மொழியாக்கம் செய்வதற்கு பிரைமோ லெவி கால்வினோவுடன் இணைந்து செயல் பட்டிருக்கிறார். கால்வினோவின் தனித்தன்மை என பிரைமோ லெவி குறிப்பிடுவது ஒரு தியானிக்கும் நிலையிலும் அவை நகைச்சுவை உணர்வு கொள்ளத் தூண்டுவனங:
I would say that this meticulous touch, worthy of a scientist, is present in the literary fabric of all Calvino’s books. Although he didn’t have a degree in science, he was in fact a scientist. A reader of “Cosmicomics” senses that it is no mere amusement, but an extremely profound book, one to be meditated on, page by page. And this ability to make one laugh and meditate at the same time is the disctinctive mark of Calvino.
(Primo Levi)
சுருங்கச் சொல்லும் தெளிந்த மொழியைத் தேர்ந்து கொண்ட விஷயத்தில் பிரைமோ லெவிக்கும் கால்வினோ வுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. கால்வினோவின் தெளிந்த மொழி நடைக்குப் பாதிக் காரணம் அவரது தனிப்பட்ட தேர்வாகவும் மிச்சப் பாதிக் காரணம் அவர் புனைவுக்கென எடுத்துக் கொண்ட விஷயங்கள் என்று சொல்வது பொருந்தும். லெவியைப் போலவே கால்வினோவும் ஒரு மினிமலிஸ்ட். கால்வினோவின் எந்த ஒரு நாவலும் 200 பக்கங்களுக்கு மேல் நீள்வதில்லை. கால்வினோ எஃப். ஆர். லீவிஸ் குறிப்பிட்ட “பெரிய பாரம்பரியத்” திலிருந்து (Great Tradition) பெரிதும் விலகி தனது உத்வேகத் தூண்டுதல்களை செர்வான்ட்டிஸ், லாரன்ஸ் ஸ்டெர்ன், ராபர்ட் லூயி ஸ்டீவென்சன், பொக்கேஷியோ போன்றோரிடம் கண்டு பிடித்துக் கொண்டார்.
கால்வினோவை ஜோர்ஜ் லூயி போர்ஹேவுடன் ஒப்பிட்டுப் பேசிய நவீன அமெரிக்க நாவலாசிரிரான ஜான் பார்த்தும் ஏறத்தாழ பிரைமோ லெவியின் கருத்துக்களை வேறு ஒரு வகையில் எதிரொலிக்கிறார்:
Here, I thought, was a sort of Borges without tears, or better, a Borges con molto brio: lighter-spirited than the great Argentine, often downright funny (as Sr. Borges almost never is), yet comparably virtuosic in form and language, comparably rich in intelligence and imagination.
(“The Parallels!” Italo Calvino and Jorge Luis Borges-John Barth.)
ஒரு எழுத்தாளனின் பெரிய சவால் எதுவாக இருக்க முடியும் என்று கேட்கப்பட்ட பொழுது கதாபாத்திரத்தை உருவாக்குவதே என்று போர்ஹே கூறினார். ஆனால் நினைவில் நிற்கும்படியான கதாபாத்திரங்கள் என்று போர்ஹே எதையும் சிருஷ்டிக்கவில்லை. இதற்கு மாறாக விசேஷமாய் ஞாபகம் கொள்ளும்படியான குப்ளைகான், மார்க்கோ போலோ, மார்க்கோவேல்டோ மற்றும் மிஸ்டர் பலோமர் போன்ற பாத்திரங்களை கால்வினோ உருவாக்கியிருக்கிறார். இது தவிர நகைச்சுவையுணர்வுக்கு போர்ஹேவிடம் இடமில்லை. ஆனால் தீவிரத்தன்மை எதுவும் குறைந்து விடாமல் நகைச்சுவை உணர்வினை உண்டாக்குபவை கால்வினோவின் கதைகள். குறிப்பாக சார்லி சாப்ளின் தன்ûமான மார்க்கோவேல்டோவின் அனுபவங் களைக் குறிப்பிடலாம்.
நீதிக் கதைகள் போலத் தெரியக் கூடிய சிறிய சிறுகதைகள் பற்றி தனித்த அபிப்பிராயம் கொண்டிருந்தார் கால்வினோ. அவற்றை ‘raccontini’ என்ற இதாலியச் சொல்லால் அழைத்தார். ஃபாஸிஸ அடக்கு முறைக் காலத்தில் வெளிப்படுத்துவதற்கு உகந்த ஒரு வடிவமாய் இந்த சிறிய சிறுகதைகளை கால்வினோ தேர்ந்தெடுத்தார். அடக்கு முறைக் காலங்கள் முடிந்தவுடன் இம் மாதிரியான சிறுகதை வடிவங்களுக்கான தேவை இல்லாது போய் விடும் என்றும் அவர் கருதினார்:
One writes fables in periods of oppression. When a man cannot give clear form to his thinking, he expresses it in fables. These little stories correspond to a young man’s political and social experiences during the death throes of Fascism..
ஆனால் அவரது இளமைக்காலத்திற்குப் பிறகும் தொல்கதைகள் எழுதுவது தொடர்ந் திருப்பதை நம்மால் பார்க்க முடியும்.

jeanbaptiste_monge1

25-09-2003 அன்று கால்வினோ கதைகள் என்ற மொழிபெயர்ப்பு நூலின் முன்னுரையாக இதை நான் எழுதினேன். இந்தப் புத்தகம் அதற்குப் பிறகு மறுபதிப்பு செய்யப்படவில்லை. எந்தப் பதிப்பகமும் இதுவரை முன்வரவில்லை. கால்வினோவின் 18 சிறுகதைகளும் ஏன் கிளாஸிக்குகளைப் படிக்க வேண்டும்? என்ற ஒரு மிக முக்கியமான கட்டுரையும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இடாலோ கால்வினோவும் நவீன புனைகதையும்
நிலவின் தொலைவு
பெட்ரோல் நிலையம்
வாத்துக்களின் பறத்தலைப் போல
ஒரு திருடனின் சாகசம்
ஒரு எழுத்தரின் சாகசம்
ஒரு கவிஞனின் சாகசம்
ஒரு திருமணமான தம்பதியினரின் சாகசம்
நாய்களைப் போலத் தூங்குதல்
தேனீக்கூடுகளின் வீடு
கேண்ட்டீனில் பார்த்தது
வீட்டின் சேய்மையிலிருந்து காதல்
காசனோவாவின் நினைவுக் குறிப்புகள்
நிலைக் கண்ணாடி, இலக்கு
ஒரு நகரத்தில் காற்று
தெரசா என்று கத்திய மனிதன்
செய்ய வைத்தல்
தெறிப்பு
மனசாட்சி
ஏன் கிளாசிக்குகளைப் படிக்க வேண்டும்?

[Already Posted]

Posted in introduced by brammarajan | Tagged: , , , , , , , , , , , , | Comments Off

The Approach to Al-Mutasim-Jorge Luis Borges-தமிழில் பிரம்மராஜன்

Posted by brammarajan on November 22, 2008

Approach to Al-Mutasim-Jorge Luis Borges

Approach to Al-Mutasim-Jorge Luis Borges

அல் முட்டாசிம்: ஓர் அணுகல்/ ஜோர்ஜ் லூயி போர்ஹஸ்-தமிழில்

பிரம்மராஜன்

ஜோர்ஜ் லூயி போர்ஹஸ்

அல் முட்டாசிம்: ஓர் அணுகல்

பாம்பே பாரிஸ்டரான மீர் பஹதூர் அலி எழுதிய The Approach to A1-Mutasim என்ற நாவலைப் பற்றி Philip Guedella நமக்குத் தெரிவிக்கிறார்: ““அதன் மொழிபெயர்ப்பாளர்களை ஈர்க்கவே தவறாத இஸ்லாமிய தொடர் உருவகங்கள் மற்றும் டாக்டர் வாட்சனின் கதைகளையும் மிஞ்சக் கூடிய துப்பறியும் கதைத் தன்மையையும் இசகு பிசகாக இணைக்கிறது. இரண்டாவது தன்மை பிரைட்டனின் மிகக் கௌரவமான விடுதிகளில் தென்படக் கூடிய மனித வாழ்வின் பயங்கரங்களையும் மிஞ்சி விடுகிறது”. இவருக்கு முன்பே, வில்கி காலின்ஸ் மற்றும் 12 ஆம் நூற்றாண்டு பாரசீக எழுத்தாளரான பரித் எத்தின் அத்தார் ஆகிய இருவரின் விவரிக்க முடியாத இரட்டைப் பாதிப்பாக பஹதூரின் புத்தகம் இருக்கிறது என சிசில் ராபர்ட்ஸ் விளாசியிருக்கிறார். மிகக் கோபமான மொழியில் சொல்லப்பட்ட போதிலும் Guedella வினுடையது மிகச் சாதாரணமான பிறரின் கருத்துக்களைத் திரும்பச் சொல்லலே ஆகும். நூலின் துப்பறியும் கதை அமைப்பையும் அதன் அடியோட்டமாக இருக்கும் இறைமைத்துவத்தையும் சுட்டும்போது சாராம்சத்தில் இரு புத்தக மதிப்புரையாளர்களும் ஒத்துப் போகின்றனர். இந்த ஒட்டுவீரியத் தன்மை செஸ்ட்டர்டனுடனான ஒருவித உறவினை சந்தேகிக்கவும் வைக்கிறது; எனினும் அத்தகைய பிணைப்பு இல்லை என்பதை நாம் இப்போது கண்டுபிடிக்கலாம்.

The Approach to A1-Mutasim புத்தகத்தில் முதல் பதிப்பு 1923 ஆம் வருடத்தின் இறுதியில் பம்பாயில் வெளியிடப்பட்டது. எனக்கு கிடைத்த தகவலின்படி அந்தப் பதிப்பு நியூஸ்பிரிண்ட் காகிதத்தில் அச்சிடப்பட்டது. பம்பாய் நகரவாசி ஒருவரால் எழுதப்பட்ட முதல் துப்பறியும் நாவல் என்பதையும் புத்தகத்தின் கழற்றக் கூடிய அட்டை அறிவித்தது. சில மாதங்களுக்குள் 4 பதிப்புகள்–ஒவ்வொன்றும் 1000 பிரதிகள் விற்றுத் தீர்த்தன. The Bombay Quarterly, Bombay Gazette, Calcutta Review , Hindustani Review (of Allahabad) Culcutta Englishman போன்ற பத்திரிக்கைகள் புத்தகத்தின் புகழ் பாடின. சித்திரங்கள் கொண்ட பதிப்பு ஒன்றையும் பஹதுர் வெளியிட்டார். இந்த பதிப்பு அல்முட்டாசிம் என்ற மனிதனுடனான உரையாடல்’என்ற திருத்திய தலைப்பிடப்பட்டு A Game With Shifting Mirrors என்ற அழகிய துணைத்தலைப்புடன் வெளிவந்தது. இந்த பதிப்பைத்தான் லண்டனில் உள்ள Victor Gollancz என்ற வெளியீட்டு நிறுவனம், Dorothy L.Sayers இன் முகவுரையுடன் மறுவெளியீடு செய்தது. கருணைமிக்க வகையில் இந்த வெளியீட்டில் சித்திரங்கள் இடம் பெறவில்லை. இந்தப் பதிப்புத்தான் என் வசமிருக்கிறது. இதன் முந்தைய பதிப்பின் பிரதியை என்னால் பெறுவதற்கு இயலாமல் போய்விட்டது. அது நல்ல புத்தகம் என்ற கணிப்பு எனக்கு உண்டு. எனக்கு ஏற்பட்ட இந்த சந்தேகத்திற்கு காரணம் 1932 மற்றும் 1934ம் வருஷங்களின் பதிப்புகளின் வித்தியாசங்களை தொகுத்துத் தந்த அனுபந்தமே. நாவலை பற்றிய விவாதத்தைத் தொடங்கு முன் பொது கதைக் திட்டம் பற்றிய ஒரு வித தெரிவிப்பினைத் தருவது நல்லதாக இருக்கும்.

நாவலின் பிரதான பாத்திரம்–பெயர் நமக்குச் சொல்லப்படுவதே இல்லை–அவன் பம்பாயில் சட்டம் பயிலும் மாணவன். தெய்வநிந்தனை கொண்ட அவன் அவனது முன்னோரின் இஸ்லாமிய நம்பிக்கைகளை சந்தேகிக்கிறவனாக இருக்கிறான். எனினும் முஹரம் காலத்து பத்தாவது நிலா இரவில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான கலவரத்தின் மத்தியில் இருக்கிறான். அது மேளங்கள் மற்றும் பிரார்த்தனைகளின் இரவு. நம்பிக்கையற்ற ஜனங்களுக்கு இடையில் முஸ்லிம் ஊர்வலத்தின் பெரிய காகித விதானங்கள் வழி ஏற்படுத்திச் செல்கின்றன. ஒரு மாடியின் மேலிருந்து இந்துக்கள் வீசிய சரமாரியான செங்கற்கள் பறந்து வந்து விழுகின்றன. ஒரு கத்தி ஒரு வயிற்றில் செருகப்படுகிறது– யாரோ? முஸ்லிமா? இந்துவா?–சாகிறான். செத்தவனை மிதித்துச் செல்கிறது கும்பல். மூவாயிரம் மனிதர்கள் சண்டையிடுகிறார்கள்–ரிவால்வரை எதிர்த்து தடி, சாபத்திற்கு எதிராக கெட்டவார்த்தை, கடவுள் என்ற பிரிவுபடாத ஒருவருக்கு எதிராக பல கடவுள்கள். உள்ளுணர்வின் தூண்டுதலால் மாணவ சுதந்திர சிந்தனையாளன் சண்டையில் கலந்து கொள்கிறான். அவனது வெறுங்கைகளால் ஒரு இந்துவை கொன்று விடுகிறான். (அல்லது கொன்று விட்டதாக நினைக்கிறான்) குதிரை மீதமர்ந்து, இடி முழக்கத்துடன், ஏறத்தாழ தூக்கக் கலக்கத்துடன், பாரபட்சமற்ற சவுக்கடிகளைக் கொடுத்து அரசாங்க போலீஸ் தலையிடுகிறது. குதிரைகளின் கால்களுக்கிடையில் இருந்து தப்பித்து, மாணவன் நகரின் மறுகோடியை நோக்கிச் செல்கிறான். இரண்டு ரயில் பாதைகளைக் கடக்கிறான். அல்லது ஒரே பாதையை இரண்டு தடவை. பராமரிக்கப்பட்டிராத ஒரு தோட்டத்தின் சுற்றுச்சுவர் மீதேறிக் குதிக்கிறான். தோட்டத்தின் ஒரு மூலையில் சுழல் கோபுரம் எழும்பி நிற்கிறது. “மெலிந்த, தீவினை மிக்க நிலாநிறத்து வேட்டை நாய்களின் கும்பல்” கறுப்பு ரோஜாப் புதர்களில் இருந்து அவனை நோக்கிப் பாய்கிறது. துரத்தப்பட்ட அவன் கோபுரத்தில் தஞ்சமடைகிறான். இரண்டு அல்லது மூன்று குறுக்குச் சட்டங்கள் இல்லாத இரும்பு ஏணியில் ஏறி கோபுரத்தின் மட்டத்தரையை அடைகிறான். அதன் மத்தியில் அமைந்திருக்கும் கரிய பள்ளத்திற்கு வருகிறான். நிலா ஒளியில் அங்கு குந்திய நிலையில் தீவிரமாக சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும் அழுக்கான மனிதனைப் பார்க்கிறான். பார்ஸி இனத்தவர் அந்த கோபுர தளத்தில் விட்டுச் செல்லும், வெள்ளை கோடித்துணியால் மூடப்பட்ட பிணங்களில் இருந்து தங்கப் பற்களைத் திருடுவது அவனது தொழில் என்று அந்த மனிதன் இவனிடம் கூறுகிறான். பலவித நிஷ்டூரமான விஷயங்களைக் குறிப்பிட்டுச் செல்கையில், அவன் தன்னை எருமைச் சாணி கொண்டு சுத்தப்படுத்தி பதினான்கு இரவுகள் ஆகிவிட்டன என்றும் கூறுகிறான். ‘ “நாய்களையும், பல்லிகளையும் தின்கிற–சுருக்கமாக நம் இருவரைப் போலவே வெறுக்கத் தக்க மனிதர்கள்”’ என்று குஜராத்தைச் சேர்ந்த, குதிரைகளைக் களவாடுகிற திருடர் கூட்டத்தைப் பற்றி வெளிப்படையான கோபத்துடன் கூறுகிறான். பொழுது விடிகிறது. உண்டு பெருத்த பிணந்தின்னிக் கழுகுகள் காற்றில் தாழப்பறக்கின்றன. அதீதமான களைப்பில் மாணவன் படுத்து உறங்கிப்போகிறான். அவன் கண்விழித்துப் பார்க்கையில் சூரியன் உச்சியில் இருக்கிறது. திருடன் போய் விட்டுருக்கிறான். மாணவனின் திருச்சிராப்பள்ளி சுருட்டுகளும் பல வெள்ளி ரூபாய்களும் இருப்பதில்லை. முந்தைய இரவின் நடப்புகளினால் பயமுறுத்தப்பட்ட மாணவன் இந்தியாவின் எல்லைகளுக்குள் தன்னை இழக்கத் தீர்மானிக்கிறான். தன்னால் ஒரு தெய்வநம்பிக்கை அற்றவனைக் கொல்ல முடியும் என்பதையும் உணர்கிறான். ஆனால் அவனது நம்பிக்கைகளின் மூலம் தெய்வ நம்பிக்கை இல்லாதவனை விட ஒரு முஸ்லிம் எந்தவகையில் நியாயபடுத்தப்பட்டவன் என்பதை தீர்மானத்துடன் அவனால் அறிய முடியவில்லை. குஜராத் என்ற பெயர் அவனில் அலைபாய்கிறது. அவ்வாறே, பிணங்களை சேதப்படுத்தும் அந்த மனிதனின் வெறுப்புக்கும் வசவுக்கும் ஆளான பாளன்பூரை சேர்ந்த மல்கா–சான்சி (திருடர் இனத்தைச் சேர்ந்த பெண்)யின் பெயரும் அவனை ஆக்ரமிக்கிறது. அவ்வளவு முற்றான தீவினையுடைய மனிதனின் கோபமானது அதன் அடிப்படையிலேயே ஒருவித புகழ்ச்சி ஆகுமென மாணவன் காரணப்படுத்துகிறான். நம்பிக்கை இல்லாதிருந்தும் அவளைக் கண்டுபிடிக்க முடிவெடுக்கிறான். தொழுகை செய்த பிறகு நிதானமாகவும் திட்டமிட்டும் தனது பயணத்தைத் தொடங்குகிறான். இவ்வாறு முடிகிறது நாவலின் இரண்டாம் அத்தியாயம்.

மற்ற பத்தொன்பது அத்தியாயங்களில் அவன் ஈடுபடும் துணிகரச் செயல்களை கோடிட்டுக் காட்டுவது சாத்தியமில்லை. கதாபாத்திரங்களின் எண்ணிக்கையில் பெருகும் குழப்பம் திகைக்க வைக்கிறது. இந்தியாவின் விரிந்த நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் புனித யாத்திரை மற்றும் மனித மனதின் விஸ்தீரணத்தையே தீரச்செய்யும் ஒரு வாழ்க்கைச் சரிதம் ஆகியவை பற்றிச் சொல்லவே வேண்டாம். பம்பாயில் தொடங்கிய கதை பளான்பூரின் தாழ்நிலங்களுக்குச் செல்கிறது. காட்மாண்டுவில், குழப்பும் வழிகளைக் கொண்ட மாளிகையில் சதித்திட்டம் ஒன்றில் கதாநாயகன் பங்கு பெறுகிறான். கல்கத்தாவில் மச்சுவா பஜாரில், பெருநோயின் நாற்றத்தில் பிரார்த்திக்கிறான், புணர்கிறான். மதராசின் சட்ட அலுவலகம் ஒன்றிலிருந்து கடலில் உதயமாகும் நாளைப் பார்க்கிறான். திருவாங்கூர் சமஸ்தானத்து பால்கனியில் இருந்து சாயுங்காலங்கள் கடலில் மாய்வதை பார்க்கிறான். தடுமாறி இந்தாப்பூரில் கொலை செய்கிறான். “நிலா நிறத்து வேட்டை நாய்களின்” தோட்டத்திற்கு சில அடிகளுக்கு அப்பால் பம்பாயில் தொடங்கிய இந்த துணிகரச்செயலின் மைல்கள் மற்றும் வருஷங்களின் ஆரம் முற்றுப் பெறுகிறது. அடியோட்டமான கதைத் திட்டம் இதுதான்: ஒரு மனிதன்–சுதந்திர சிந்தனையுள்ள மாணவன் நமக்கு முன்னரே தெரிந்த, மிகவும் தாழ்ந்த ஜாதி மக்களுடன் பழகி, தீவினை செய்வதில் போட்டி மாதிரி தெரியும் காரியத்தில், அவர்களுடைய வழிகளை மேற்கொள்கிறான். மணலில் ஒரு மனிதனின் காலடித் தடங்களைக் கண்டுபிடித்த ராபின்சன் குரூசோ அடைந்ததற்கு இணையான வியப்புடனும் பீதியுடனும் தனது குரூர உலகில் திடீரென ஒரு குறுகிய விழிப்புணர்வைப் பெறுகிறான். ஒருவித மன நெகிழ்வையும், சந்தோஷ கணத்தையும், மன்னிக்கும் மௌனத்தையும் தனது வெறுக்கத்தக்க சகாக்களிடம் காண்கிறான். “அது ஏதோ ஒரு அந்நியன், ஒரு மூன்றாம் மனிதன், நுணுக்கமானதொரு ஆள், அந்த உரையாடலில் கலந்து விட்டது போலத் தோன்றியது.”:’தன்னுடன் பேசிக்கொண்டிருக்கும் கேடி, இப்பேர்ப்பட்ட திடீர் மாற்றத்திற்குத் தகுதியற்றவன் என்பதை அறிகிறான் கதாநாயகன். இதன் மூலமாய் அந்த கேடி ஒரு நண்பனையோ அல்லது நண்பனின் நண்பனையோ அல்லது வேறு எவரையோ எதிரொலிக்கிறான் என யூகிக்கிறான். பிரச்சனையை மீண்டும் சிந்தித்து, இந்த பூமியின் முகத்தில் எங்கோ இந்த ஒளிக்கு நிகரான மனிதன் வாழ்கிறான்’என்ற மர்மமான முடிவுக்கு வருகிறான். அந்த மனிதனைத் தேடுவதில் தனது வாழ்க்கையைச் செலவழிக்கத் தீர்மானம் செய்கிறான் மாணவன்.

கதையின் கோட்டுருவம் இப்போது தெளிவாகிறது. இந்த ஆன்மாவினால் பிறர்களில் வீசப்பட்ட அதிகம் புலனாகாத பிரதிபலிப்புகளைத் தேடும் ஒரு சலிப்பற்ற மனித ஆன்மாவின் தேடல்–ஆரம்பத்தில் புன்முறுவலின் மெல்லிய நகல் அல்லது ஒற்றைச்சொல்; இறுதியில் நேர்மைத்தன்மையுடையதும், அறிவார்த்தத்தினுடையதும்,கற்பனையுடையதுமான பிரமிக்கவைக்கும் மாறுபாடுகளும் கிளைபிரிதல்களும். அவர்கள் யாவருமே கண்ணாடிகள் என்பது புரிந்து கொள்ளப்பட்டிருந்த போதிலும் .அல்முட்டாசிமினால் சோதிக்கப்படுகிற மனிதர்கள் எவ்வளவு நெருங்கி வருகிறார்களோ அந்த அளவுக்கு தெய்வீகத்தில் அவர்களுடைய பங்கு அதிகமாகும்–ஒரு கணிதவியல் ஒப்புமை இங்கு பிரயோஜனமாக இருக்கும். பஹதூரின் கதைமாந்தர் நிறைந்த நாவல் ஒருநிலை எண் படிமுறை வளர்ச்சியாகும் ( Ascendant Progression ). அதனுடைய கடைசி எண்ணுறுக்கூறு “அல்முட்டாசிம் என்று அழைக்கப்படும் மனிதனில்”’ கோடிகாட்டப்படுகிறது. அல்முட்டாசிமின் மிகச் சமீப சந்ததியைச் சேர்ந்தவர் விசேஷ மகிழ்ச்சியும் பணிவும் நிறைந்த ஒரு பாரசீக புத்தக வியாபாரியும் புனிதரும் ஆவார். இறுதியாக, பல ஆண்டுகள் கழித்து மாணவன் ஓரிடத்தை அடைகிறான். காரிடாரின் முடிவில் மலிவான மணிகளுடன் கூடிய திரைச்சீலைக்குப் பின்புறம் வெளிச்சம் ஒளிர்கிறது. மாணவன் இரண்டு அல்லது மூன்று முறை கைகளைத் தட்டி அல்முட்டாசிம் எங்கே என்று கெட்கிறான். ஒரு மனிதனின் குரல்–கற்பனையே செய்வதற்கரிய அல்முட்டாசின் குரல்–உள்ளே வரச்சொல்லி வேண்டுகிறது. திரைச்சீலையை விலக்கி மாணவன் முன்னால் அடி எடுத்து வைக்கிறான். இந்த இடத்தில் நாவல் முடிந்துவிடுகிறது.

நான் தவறாகப் புரிந்து கொள்ளவில்லை எனின், கதைக் கட்டுமானத்தின் சரியான கையாளல் நாவலாசிரியனை இரண்டு கட்டாயங்களுக்கு உட்படுத்துகிறது. தீர்க்கதரிசனத்தன்மைகளுடன் அடர்ந்து பெருக வைப்பது ஒன்று. இவ்விதமான வீச்சுகளினால் முன்பாகவே கோடிகாட்டப்படும் நபரானவர் வெறும் சம்பிரதாயம் அல்லது ஆவி என்பதற்கு அப்பாற்பட்டவர் என நம்மை நம்ப வைப்பது இரண்டாவதாகும். பஹதூர் முதலாவதினைப் பூர்த்தி செய்கிறார். எவ்வளவு தூரத்திற்கு இரண்டாவதினை சாதிக்கிறார் என்பது தெரியவில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், கேட்கப்பட்டிராத, பார்க்கப்பட்டிராத அல்முட்டாசிம், ஒரு நிஜமான கதாபாத்திரத்திற்கு உரிய மனப்பதிவுகளை நம்மிடத்தில் விட்டுச் செல்ல வேண்டுமே தவிர சாரமற்ற உயர்ச்சொற்களின் உடைசல்களை அல்ல. 1932ஆம் வருஷப் பதிப்பில் சில மந்திரத்தன்மையான அடித்தளங்கள் உள்ளன. சில தனிமனிதக் குணாம்சங்கள் அவனுக்கு இருந்த போதிலும்‘“அல்முட்டாசிம் என்று அழைக்கப்படும் மனிதன்” வெளிப்படையான ஒரு குறியீடு. சில தனிமனிதத் தன்மைகள் இல்லாமலும் இல்லை. துரதிர்ஷ்டவசமாய் இந்த இலக்கிய நன்னடத்தை தொடர்ந்து நீடிப்பதில்லை. 1934ஆம் வருஷப் பதிப்பில் நாவலானது உருவகக் கதையாகச் சரிந்து விடுகிறது. அல்முட்டாசிம் கடவுள் என்றும், கதாநாயகனின் பல்வேறுபட்ட நாடோடித் தன்மைகளும் ஏதோ ஒரு வகையில் புனிதமான சங்கமத்தை நோக்கிய ஆன்மாவின் மேல்நோக்கிய பயணம் என்றும் தெரிகிறது. வருத்தமளிக்கக் கூடிய சில தகவல்களும் இருக்கின்றன: கொச்சினைச் சேர்ந்த ஒரு கருப்பு யூதன், அல் முட்டாசிமினுடைய கருப்பு சருமத்தை பற்றிப் பேசுகிறான். கைகளை விரித்தபடி அவன் உயரத்தில் நிற்பதாக ஒரு கிறிஸ்தவன் விவரணை செய்கிறான். ஒரு சிவப்பு லாமா, “நான் தாச்சில்ஹன்போவில் உள்ள பிக்குகளின் இல்லத்தில் “காட்டெருமையின் வெண்ணையில் வடிவமைத்து வழிபட்ட உருவத்தைப் போல” அல் முட்டாசிம் அமர்ந்திருப்பதாக நினைவு கூறுகிறான். பலவிதங்களில் வேறுபடும் மனித இனத்துடன் தன்னை சமரசப்படுத்திக் கொள்ளும் ஒரே ஒரு கடவுளை இந்த சொற்பாடுகள் யாவும் உணர்த்துவதாகத் தோன்றுகிறது. என் கருத்துப்படி, இந்த கருத்து அப்படி ஒன்றும் விருவிருப்பூட்டுவதாய்த் தெரியவில்லை.

இன்னொரு கருத்துரு பற்றி நான் அப்படிச் சொல்ல மாட்டேன்–பேரிறைவன் யாரோ ஒருவனைத் தேடிக் கொண்டிருக்கிறான், அந்த யாரோ ஒருவன் தனக்கு மேலான யாரோ ஒருவனை (அல்லது வெறுமனே தவிர்க்க இயலாத சரிநிகரான ஒருவனை) இப்படியாக, காலத்தின் இறுதி வரை (அல்லது முடிவின்மை வரை) ஒரு வேளை சுழற்சித் தன்மையிலும் கூட . . . அல் முட்டாசிம் (இப்பெயர் அந்த எட்டாவது அப்பாஸித் காலிஃப்பினுடையது. அவர் எட்டு போர்களில் வெற்றி பெற்று, எட்டு மகன்களையும் எட்டு மகள்களையும் பெற்றெடுத்து, எட்டு வருஷங்கள், எட்டு நிலவுகள், எட்டு நாட்கள் ஆட்சி புரிந்து, எட்டாயிரம் அடிமைகளை விட்டுச் சென்றவர்) என்றால், வேர்ச்சொல் அர்த்தப்படி ““உதவியை நாடிச் செல்பவர்” என்பது பொருள். 1932ஆம் வருஷப் பதிப்பின்படி புனித யாத்திரையின் நோக்கமே புனித யாத்ரீகரான அவரேதான் என்கிற உண்மை, அவரைக் கண்டடைவதில் உள்ள சிரமத்தினால் நன்றாக நியாயப்படுத்தப்படுகிறது. பிறகு வந்த பதிப்பானது நான் முன்னரே குறிப்பிட்ட புராதன இறையியலைத் தருகிறது. இருபதாவது அத்தியாத்தில் அல் முட்டாசிமுக்கு சொந்தமான சொற்கள் என அந்தப் பாரசீக புத்தக வியாபாரி கூறுவது, கதாநாயகனால் பேசப்பட்டவற்றின் வெறும் உயர்ச்சிப்படுத்தலே ஆகும். இதுவும், உள்தொக்கி நிற்கும் பிற ஒப்புமைகளும் தேடுபவனுக்கும், தேடப்படுவதற்குமான அடையாளங்களாக ஆகலாம். இவை இறைத்துவத்தின் மீதான மனிதனின் பாதிப்புகளைச் சொல்வதாகவும் இருக்கலாம்… மாணவன் தான் கொன்று விட்டதாய், நம்பிக் கொண்டிருக்கிற ஹிந்துவே அல் முட்டாசிம்தான் என மற்றொரு அத்தியாயம் குறிப்பு உணர்த்துகிறது. மீர் பஹதூர் அலி கலையின் அடிமட்டமான சபலமான மேதையாய் இருப்பது பற்றிய சுயப்பிரக்ஞையைத் தவிர்க்க முடிவதில்லை.

இந்தப் பக்கங்களைப் படித்ததற்குப் பிறகு, நான் இந்த நாவலின் பல நல்ல குணாம்சங்களுக்குக் கவனத்தை கோராமல் விட்டு விட்டேனோ என அஞ்சுகிறேன். அவற்றில் நுண்மையான சில வேறுபடுத்திக் காட்டும் பண்புகள் அடங்கும். பத்தொன்பதாவது அத்தியாயத்தில் ஒரு உரையாடல் வருகிறது. அல் முட்டாசிமின் நண்பன் வேறு ஒருவனிடம் பேசிக்கொண்டிருக்கிறான். “வெளிப்படையாகவே சரியின் பக்கம் இருக்க வேண்டாம் என்பதன் பொருட்டு”’அந்த வேறு ஒருவனின் வார்த்தை விளையாட்டுகளை சுட்டிக் காட்டாமல் இருக்கிறான்.

சமீப காலத்தில் நவீன நூல் ஒன்றின் வேர்கள் புராதன நூல் ஒன்றில் இருப்பது பாராட்டுதற்கு உரியதாய்க் கருதப்படுகிறது. ஏன் என்றால் (Dr. ஜான்சன் கூறியது போல ) எவருமே தமது சமகாலத்தவர் ஒருவருக்குக் கடன் பட்டிருப்பதை விரும்புவதில்லை. ஹோமரின் Odyssey க்கும் ஜாய்சின் Ulysses க்கும் இடையே உள்ள பல, ஆனால் மேலோட்டமான உறவுகளை சில விமர்சகர்கள் பாராட்டுவது ஏன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியாது. பஹதூரின் நாவலுக்கும், பிரசித்தமான பரீத் உத்தீன் அத்தாரின் Parliament of Birds நூலுக்கும் இடையே உள்ள தொடர்புப் புள்ளிகள் இதே அளவு ஏற்புகளை லண்டன், அலகாபாத் மற்றும் கல்கத்தாவில் உண்டாக்கி இருக்கிறது. என் அறிவுக்கு எட்டிய வரை இந்த இரு நூல்களுக்கும் இடையே உள்ள தொடர்புப் புள்ளிகள் அதிகமில்லை. பிற தோற்றுவாய்கள் இருக்கின்றன. யாரோ ஒரு பேரார்வக்காரன் நாவலின் தொடக்க அத்தியாயத்திற்கும் Kipling இன் கதையான On the City Wall க்கும் இடையே உள்ள சில ஒற்றுமைகளைப் பட்டியலிட்டிருக்கிறான். பஹதூர் இதை ஒப்புக்கொள்கிறார். ஆனால் முஹரத்தின் பத்தாவது இரவினைப் பற்றிய இரண்டு விவரணைகள் ஒன்றுக்கொன்று வேறுபடுமானால் அது முரணாகத்தெரியும் என பஹதூர் வாதிடுகிறார். முற்றுப் பெறாத உருவகக் கதைப் பாடலான The Faerie Queen இல் உள்ள எழுபது கேண்டோப் பாடல்களிலும் அதன் கதாநாயகி குளோரியானா ஒரு முறை கூடத் தோன்றாமல் இருப்பது எலியட்டின் நினைவுக்கு வந்திருப்பது பொருத்தமாய் இருக்கிறது– இந்தத் தவறினை ஏற்கனவே Richard William Church (Spenser, 1879) சுட்டிக் காட்டியிருக்கிறார். நான் மிகுந்த பணிவுடன் ஒரு தூரத்து, ஆனால் சாத்தியமிக்க முன்னோடியான, ஜெருசலத்தைச் சேர்ந்தகப்பாலிஸ்ட் ஆன ஐசக் லூரியாவை இங்கு குறிப்பிடுகிறேன். இந்தப் பதினாறாம் நூற்றாண்டு ஆசிரியர் ஒரு கருத்தை முன் வைக்கிறார்: துயரங்களை அனுபவித்த ஒருவரைத் தேற்றவோ அல்லது அறிவுறுத்தவோ அவருடைய முன்னோர் அல்லது எஜமானரின் ஆவி அவருடைய ஆவியில் புகுந்துவிடும். இவ்வகைப்பட்ட கூடுவிட்டு கூடுபாயும் ஆன்ம நிகழ்வுக்கு இபுர் என்பது பெயராகும். «

« இந்த புத்தக மதிப்புரையின் ஊடே பாரசீக மெய்ஞானியான பரீத் உத்தீன் அபு தாலிப் மொகம்மது இபின் இப்ராகிம் அத்தார் எழுதிய The Parliament of Birds என்ற நூல் பற்றிக் குறிப்பிட்டேன். நிஷாபூரின் மீது தாக்குதல் தொடுத்தபோது செங்கிஸ்கானின் புதல்வர்களில் ஒருவரான தூலுய் என்பவரின் வீரர்களால் அவர் கொல்லப்பட்டார். அவர் எழுதிய கவிதையின் பொழிப்புரையைத் தருவது உபயோகமாக இருக்கும்.பறவைகளின் தொலை தூரத்து அரசனான சிமுர்க் தனது அற்புதமான இறகுகளில் ஒன்றினை மத்திய சீனப் பிரதேசத்தில் எங்கோ ஓரிடத்தில் போடுகிறார். இதைக் கேள்விப்பட்ட, தமது யுகாந்திர அராஜகத்தினால் சலிப்படைந்த பறவைகள் தமது அரசனை கண்டுபிடிக்கத் தீர்மானிக்கின்றன. அரசனின் பெயருக்கு அர்த்தம் முப்பது பறவைகள்” என்பது அவற்றுக்குத் தெரிகிறது. பூமியை வளையமிடும் காஜ் என்கிற மலைத் தொடர்ச்சியில் அரசனின் கோட்டை அமைந்திருக்கிறது என்பதும் தெரிகிறது. ஏறத்தாழ முடிவற்ற வீரச் செயல்களில் தொடங்கி, ஏழு சமவெளிகள் அல்லது கடல்களைக் கடந்து பேரழிவு’என்று பெயருள்ளதற்கு முந்தைய பெருந்திகைப்பு’என்ற இடத்திற்கு வந்து சேர்கின்றன; பல கை விட்டு ஓடிவிடுகின்றன; இதில் பல பறவைகள் இறக்கின்றன. தமது துயரங்களால் தூய்மைப்படுத்தப்பட்ட முப்பது பறவைகள் சிமுர்க்கின் மலை உச்சியை அடைகின்றன. கடைசியில் அவனுடைய தரிசனம் கிடைக்கிறது. அவைதாம் சிமுர்க் என்பதையும், ஒவ்வொருவரும் மொத்தமாகவும் அனைவருமாகவும் சிமுர்க் என்பதையும் அறிகின்றன. (Plotinus என்பவர் [Enneads, V, 8, 4) மேலும் கூறுகிறார். “ஒரு தெய்வீக அடையாளத் தத்துவத்தின் விரிவாக்கம் பற்றி: எல்லா புரிந்து கொள்ளப்படக்கூடிய சொர்க்கங்கள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன. எந்த ஒரு பொருளும் எல்லாப் பொருள்களும் ஆகும். சூரியனே எல்லா நட்சத்திரங்கள் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரமும் மற்ற எல்லா நட்சத்திரமும் சூரியனும் ஆகும்.”) Mantiq Ut Tair அல்லது Parliament of Birds பிரெஞ்சு மொழியில் Garcin de Tassy என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டது. அதன் சில பகுதிகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் Edward Fitzgerald ஆவார். இந்த அடிக்குறிப்புக்காக Burton எழுதிய Arabian Nights இன் 10 வது தொகுதியும் Margaret Smith இன் ஆய்வான The Persian Mystics: Attar (1932) என்ற நூலும் எனக்கு உதவி இருக்கின்றன.

Translated by Norman Thomas di Giovanni in Collaboration with the author

Posted in Uncategorized | Tagged: , | Comments Off

எம்மா சுன்ஸ்/ ஜோர்ஜ் லூயி போர்ஹஸ்-தமிழில் பிரம்மராஜன்-Emma ZunZ translation by Brammarajan

Posted by brammarajan on November 22, 2008

jlborgescollectedfic

எம்மா சுன்ஸ்-ஜோர்ஜ் லூயி போர்ஹஸ்

டார்பக் மற்றும் லோவன்த்தால் ஆலையிலிருந்து, 1922 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி அன்று வீடு திரும்பிய எம்மா சுன்ஸ் முன் கூடத்தின் பின்பகுதியில் ஒரு கடிதம் கிடப்பதைக் கண்டாள். ப்ரேஸீல் நகரில் அஞ்சல் செய்யப்பட்ட அக்கடிதம் அவளின் தந்தை இறந்துவிட்டார் என்பதைத் தெரிவித்தது. தபால்தலையும், உறையும் முதலில் அவளை ஏமாற்றின : பிறகு முன்பு பார்த்திராத கையெழுத்து அவளைச் சங்கடப்படுத்தியது, ஒன்பது அல்லது பத்து வரிகள் பக்கத்தை நிரப்ப முயன்றன. திருவாளர் மேய்யர், தவறுதலாக வெரோனால் என்ற தூக்கமாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு அந்த மாதத்தின் மூன்றாம் நாள் பேஜில் உள்ள மருத்துவமனையில் இறந்திருக்கிறார். அவள் அப்பாவுடன் விடுதியில் தங்கியிருந்த, ரியோகிராண்டைச் சேர்ந்த ஒரு நண்பர் ஃபெய்னோ அல்லது ஃபைனோ–கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தார். இறந்து போனவரின் மகளுக்கே அந்தக் கடிதத்தை எழுதுகிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள எந்த வழியும் இன்றி அவர் எழுதியிருந்தார்.

தன் வயிற்றிலும், கால் முட்டிகளிலும் உணர்ந்த பலவீனமான தன்மையே அவளின் முதல் உணர்வுப்பதிவாக இருந்தது : பிறகு கண்மூடித்தனமான குற்றவுணர்வு, பொய்த்தோற்றம், குளிர், பிறகு பயம் : அதற்குள்ளாக அது அடுத்த நாளாக ஆகியிருக்க வேண்டும் என்று விரும்பினாள். பிறகு உனடியாக அந்த விருப்பம் பயனற்றது என்பதை உணர்ந்தாள்–ஏன் எனில் இந்த உலகில் நிகழ்ந்த ஒரே நிகழ்வு அவள் அப்பாவின் சாவு, மேலும் அது முடிவற்று நிகழ்ந்து கொண்டேயிருக்கும். கடிதத்தை எடுத்துக்கொண்டு தன் அறைக்குத் திரும்பினாள். ரகசியமாக மேஜையின் இழுப்பறையில் அதை மறைத்தாள்–எப்படியோ, முன்பாகவே, இறுதி உண்மைகளை அறிந்திருந்தாற்போல ஒரு வேளை, அவள் அதற்குள்ளாக அவற்றைச் சந்தேகிக்க ஆரம்பித்திருக்க வேண்டும்: அவள் எந்த நபராக ஆக வேண்டுமோ அவளாக இப்போதே ஆகிவிட்டாள்.

அதிகரிக்கத் தொடங்கிய இருளில், பழைய மகிழ்ச்சியான நாட்களில் இமானுவெல் சுன்ஸாக இருந்து பிறகு மேனுவல் மேய்யராக மாறிய அவர் தற்கொலை செய்து கொண்டதற்காக அந்த நாளின் இறுதிவரை எம்மா அழுதாள். குவெல்குவேவுக்கு அருகில் ஒரு சிறிய பண்ணையில் அவள் கழித்த கோடை விடுமுறை நாட்களை நினைத்துக் கொண்டாள் : அவள் அம்மாவை (ஞாபகப் படுத்திக் கொள்ள முயன்றாள்) நினைவு கூர்ந்தாள். லானூஸில் இருந்த, ஏலத்திற்குப் போய் விட்ட சிறிய வீட்டைப் பற்றி நினைத்தாள்: ஜன்னல்களின் மஞ்சள் நிற சாய்சதுரங்களை கைது செய்யப்பட அனுப்பப்பட்ட வாரண்ட்டை, பெரும் அவமானத்தை நினைத்தாள். காசாளரின் கையாடல் பற்றிய செய்திப்பத்திரிக்கையின் விவரணையையும், அது குறித்த வாசகர்களின் அநாமதேயக் கடிதங்களையும் நினைவு கூர்ந்தாள். கடைசி இரவு, அவள் அப்பா அவளிடம் திருடன் லோவன்த்தால்தான் எனச் சத்தியம் செய்ததை அவள் நினைத்தாள். (ஆனால் இதை அவள் எப்போதும் மறக்கவில்லை). லோவன்த்தால், ஏரான் லோவன்த்தால், ஒரு காலத்தில் மில்லின் மானேஜர், இப்போது எஜமானர்களில் ஒருவன். 1916லிருந்து எம்மா இந்த ரகசியத்தைப் பாதுகாத்து வருகிறாள். அதை அவள் எவரிடமும் சொல்லியதில்லை, அவளின் மிக நெருக்கமான சிநேகிதியான எல்ஸா யுர்ஸ்டீனிடம் கூட. ஒரு வேளை அவமதிப்புக்குரிய அவநம்பிக்கையை அவள் தவிர்த்துக் கொண்டிருந்திருக்கலாம்: ஒரு வேளை அந்த ரகசியம் அவளுக்கும், இப்போது இல்லாத அவள் தந்தைக்கும் இடையிலான ஒரு பிணைப்பு எனக் கருதியிருக்கலாம். அவளுக்குத் தெரியும் என்பது லோவன்த்தாலுக்குத் தெரியாது : எம்மா இந்த சாதாரண உண்மையிலிருந்து, வலிமையைப் பற்றிய உணர்வை அடைந்தாள்.

அந்த இரவு அவள் தூங்கவே இல்லை. ஜன்னலின் செவ்வகம் விடியலின் முதல் வெளிச்சத்தில் தெளிவாகியபோது, அவளுடைய திட்டங்கள் அதற்குள் முழுமைப் படுத்தப்பட்டிருந்தன. முடிவே இல்லாதது போல் தோன்றிய அந்தப் பகல் தினத்தை, வெறு எந்த ஒரு நாளையும் போல ஆக்குவதற்கு முயற்சி செய்தாள். மில்லில் ஒரு வேலை நிறுத்தம் பற்றிய வதந்திகள் இருந்தன. எம்மா எப்பொழுதும் போல, தன்னை எல்லா வன்முறைகளுக்கும் எதிராக அறிவித்துக் கொண்டாள். வேலை முடிந்ததும் ஆறு மணிக்கு, எல்ஸாவுடன் பெண்கள் மன்றத்திற்குப் போனாள். அதில் ஒரு உடற்பயிற்சிப் பிரிவும், நீச்சல் குளமும் இருந்தன. அவர்கள் பெயர்களைக் கையெழுத்திட்டார்கள்; அவளுடைய முதல் மற்றும் கடைசிப் பெயர்களை எடுத்து எழுத்து எழுத்தாக, திரும்பத் திரும்ப சொல்ல வேண்டி வந்தது. மருத்துவ பரிசோதனையின் போது வந்த விரசமான ஜோக்குகளுக்கு அவள் மறுவினை தர வேண்டி இருந்தது. எல்ஸாவுடனும், க்ரான்ஃபஸ் பெண்களில் இளையவளுடன் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் எந்த சினிமாவுக்குப் போகலாம் என்பதைப் பற்றிப் பேசினாள். பிறகு அவர்கள் ஆண் சிநேகிதர்கள் பற்றிப் பேசினார்கள். அதிலும் எவரும் எம்மா பேசுவாள் என்று எதிர்பார்க்கவில்லை. ஏப்ரல் வந்தால், அவளுக்குப் பத்தொன்பது வயதாகும், ஆனால் ஆண்கள் ஏறத்தாழ ஒரு நோய்க்கூறான பயத்தையே உருவாக்கினார்கள் … வீட்டுக்கு வந்தபிறகு மரவள்ளிக் கிழங்கு சூப்பையும், சில காய்களையும் தயாரித்து, சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு, சீக்கிரம் படுக்கப்போய், தன்னைத் தூங்குவதற்கு உட்படுத்திக் கொண்டாள். இந்த வகையில், களைப்புடனும், அற்பமாகவும், பதினைந்தாம் தேதி வெள்ளிக்கிழமை, அந்த நாளின் முன்தினம் மறைந்தது.

பொறுமையின்மை அவளை ஞாயிற்றுக்கிழமை எழுப்பியது. பொறுமையின்மைதான் அது, மன அமைதியின்மை அல்ல — மேலும் கடைசியாக அந்த நாளாக அது இருந்ததனால் உண்டான பிரத்தியேக மனநிம்மதி. அவள் இனி திட்டமிடவோ, கற்பனை செய்யவோ வேண்டியதில்லை : சில மணி நேரங்களுக்குள் தகவல்களின் எளிமையே போதுமானதாயிருக்கும். மால்மாவிலிருந்து Nordstjarnan என்ற கப்பல் அந்த மாலை, கப்பல் நிறுத்து தளம் எண்.3 லிருந்து பயணமாகும் என்பதை La Prensa பத்திரிகையில் அவள் படித்தாள். அவள் லோவன்த்தாலுக்கு ஃபோன் செய்தாள் : மற்ற பெண்கள் அறியாமல், அவனிடம் ரகசியமாக, வேலை நிறுத்தம் தொடர்பான சிலவற்றைச் சொல்லவேண்டுமென மறைமுகமாகக் குறிப்பிட்டாள் : அவனுடைய அலுவலகத்தின் முன்னால் இரவு தொடக்கத்தில் வந்து நிற்பதாக உறுதி கூறினாள். அவள் குரல் நடுங்கியது : காட்டிக்கொடுப்பவர்களுக்கே பொறுத்தமானதாக இருந்தது அந்த நடுக்கம். குறிப்பிடத்தக்க வேறு எதுவும் அந்தக் காலையில் நிகழவில்லை. 12மணிவரை வேலை செய்த பிறகு, எல்ஸா மற்றும் பெர்லா க்ரான்ஃபஸ் உடன் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை ஊர்சுற்றல்கள் பற்றிய விவரங்களை முடிவு செய்தாள். மதிய உணவுக்கு பிறகு, படுத்துக் கொண்டு, தன் கண்களை மூடியபடி அவள் உருவாக்கியிருந்த திட்டத்தை பரிசீலித்தாள். இறுதிக்கட்டம், முதல் கட்டத்தை விட பயங்கரம் குறைவாய், சந்தேகம் இன்றி வெற்றியினுடையதும், நீதியினுடையதுமான சுவையைத்தரும் என்று நினைத்தாள். திடீரென, பீதியடைந்து, எழுந்து, உடையணியும் மேஜைக்கு ஓடினாள். இழுப்பறையைத் திறந்தாள். மில்டன் ஸில்ஸின் படத்துக்கு அடியில், அதற்கு முந்திய இரவு அவள் விட்டுச் சென்ற ஃபெய்னின் கடிதம் இருந்தது. யாரும் அதைப் பார்த்திருக்க முடியாது: அவள் அதைப் படிக்கத் தொடங்கி, பின் கிழித்தெறிந்தாள்.

அந்தப் பிற்பகலின் நிகழ்வுகளை கொஞ்சம் யதார்த்தத்துடன் விவரிப்பது மிகவும் கடினமானது, ஒரு வேளை நேர்மையற்றதாகவும் கூட இருக்கலாம். நரகத்தன்மையான ஒரு அனுபவத்தின் இயல் குணமானது நேர்மையற்றது, மற்றும் அந்த இயல் குணம் அந்த அனுபவத்தின் பயங்கரங்களை மட்டுப்படுத்துவதாகவும் தோன்றுகிறது. ஆனால் நிஜத்தில் அது பன்மடங்கு அவற்றை அதிகப்படுத்தக்கூடும். செயல்படுத்திய நபரினாலேயே சிறிதும் நம்பப்படாத ஒரு செயலை, எப்படி ஒருவர் நம்பத்தக்கதாக ஆக்குவது? இன்று எம்மா சுன்ஸின் ஞாபகம் குழப்பியும், மறுதளிக்கவும் செய்யும் அந்த சுருக்கமான, ஒழுங்கற்ற பெருங்குழப்பத்தை மீட்டுச் சொல்வது எப்படி? எம்மா, அல்மேக்ரோவில், லினியர்ஸ் தெருவில் வசித்தாள். மதியத்தில் அவள் நீர்முகப் பகுதிக்குச் சென்றாள் என்பது பற்றி நமக்கு உறுதியாகத்தெரியும். ஒருவேளை கேவலமான பாஸியோ த ஜூலியோவில் தன் உருவத்தைக் கண்ணாடிகள் பலமடங்கு பெருக்கிக் காட்டுவதை விளக்குகளால் விளக்கமூட்டப்பட்டும், பசிமிகுந்த கண்களால் நிர்வாணமாக்கப்பட்டும் அவள் தன்னைக் கண்டிருக்கலாம். ஆனால் ஆரம்பத்தில் எவரும் கவனிக்காதபடி, கேட்பாரற்ற முகப்பின் வழியாகத் திரிந்திருப்பாள் என எடுத்துக்கொள்வது மேலும் ஒப்புக்கொள்ளக் கூடியதாக இருக்கும். . . இரண்டு மூன்று மதுபானப் பிரிவுகளில் நுழைந்து மற்ற பெண்களின் உத்தியையோ அல்லது வழக்கமான நடவடிக்கைகளையோ கவனித்திருப்பாள். இறுதியாக Nordstjarnan லிருந்து வந்த ஆண்களைச் சந்தித்தாள். அவர்களில் ஒருவன், மிக இளைஞன், அவளுக்குள் ஏதும் மென்மையை உருவாக்கிவிடலாம் என்று அவள் பயந்து வேறு ஒருவனைத் தேர்ந்தெடுத்தாள்–பயங்கரத்தின் தூய்மை குறைவுபட்டு விடக்கூடாது என்பதற்காக அவளை விட உயரத்தில் குறைவாகவும், முரட்டுத்தனமாகவும் இருந்தவனை. அவன் முதலில் ஒரு கதவுக்கருகில், பிறகு ஒரு இருட்டான நுழைவுக் கூடத்திற்கும், அதன் பின்னர் குறுகலான படி வழியிலும், பிறகு ஒரு முன் கூடத்திற்கும் (அதில் ஜன்னல்களின் சாய்சதுரங்கள் லேனஸில் இருந்த வீட்டினுடையவற்றுடன் ஒத்திருந்தன) பின் ஒரு கதவுக்கு அழைத்து சென்றான்–அது அவளுக்குப் பின்புறம் சாத்தப்பட்டது. அதன் மிக அண்மையான கடந்த காலம் எதிர் காலத்திலிருந்து துண்டிக்கப்பட்டது போன்றிருந்ததாலோ, அல்லது இந்த நிகழ்வுகளை உருவாக்கிய பகுதிகள் தொடர்ச்சியானவை போலத் தோன்றாததன் காரணத்தாலே, அந்த மிகக் கடினமான நிகழ்வுகள் காலத்திற்கு வெளியில் இருந்தன.

காலத்திற்கு வெளியில் இருந்த அந்த காலத்தில், தொடர்பறுந்ததும், அட்டூழியமானதுமான உணர்ச்சிகளின் ஒழுங்கற்ற குழப்பத்தில், எம்மா சுன்ஸ், இந்த தியாகத்தைச் செய்யத் தூண்டுதலாயிருந்த இறந்து போன மனிதனைப் பற்றி ஒரு முறையாவது நினைத்தாளா? அவள் ஒரு முறை நினைக்கவே செய்தாள் என்பது என் நம்பிக்கை — மேலும் அந்த ஒரு கணத்தில் அவளின் அபாயகரமான கடும் பொறுப்பை ஆபத்துக்குள்ளாக்கினாள். அவளுக்கு அப்போது நடந்து கொண்டிருந்த பயங்கரமான அருவருக்கும் செயலை அவள் தந்தை அவள் அம்மாவுக்கும் நிகழ்த்தியிருக்கிறார் என்று அவள் நினைத்தாள் (அவளால் நினைக்காமல் இருக்க இயலவில்லை) அதைப் பற்றிய ஒரு பலவீனமான திகைப்புடன் சிந்தித்து, அவசரத்துடன் தலைசுற்றலில் தஞ்சம் புகுந்தாள். அவன், ஸ்வீடன் தேசத்தவனோ, ஃபின்லாந்துக்காரனோ–ஸ்பானிய மொழி பேசவில்லை. அவள் எப்படி அவனுக்கு இருந்தாளோ அது போன்றே எம்மாவுக்கு அவன் ஒரு கருவியாக இருந்தான் : ஆனால் அவள் அவனுக்கு சந்தோஷத்திற்காக பயன்பட்டாள், மாறாக அவன் அவளுக்கு நீதிக்காகப் பயன்பட்டான்.

எம்மா தனியாக இருந்தபோது, உடனடியாகக் கண்களைத் திறக்கவில்லை. சிறிய இரவு மேஜை மீது அந்த மனிதன் வைத்து விட்டுப் போன பணம் இருந்தது: எம்மா எழுந்து உட்கார்ந்து, முன்பு கடிதத்தைக் கிழித்தெறிந்ததைப் போலவே அந்தப் பணத்தைச் சுக்கல் சுக்கலாக கிழித்தெறிந்தாள். ரொட்டியை வீசியெறிவது போலவே பணத்தைக் கிழிப்பதும் ஒரு பாவச்செயல். அதைச் செய்து முடித்த அடுத்த கணத்தில் அதற்காக எம்மா மனம் வருந்தினாள். பெருமைக்குரிய ஒரு செயல் மற்றும் அந்த நாளில். . . .அவள் உடலின் துக்கத்திற்குள்ளும், அவளின் அருவருப்புணர்விலும் அவளுடைய பயம் மறைந்து போயிற்று. துக்கமும், வாந்தி வருவது போன்ற உணர்வும் அவளை சங்கிலியிட்டுக் கொண்டிருந்தன. ஆனால் எம்மா மெதுவாக எழுந்து உடையணிந்து கொள்ளத்தொடங்கினாள். அந்த அறையில் அதற்குப் பின் எந்தவிதமான பளிச்சென்ற வர்ணங்களும் இருக்கவில்லை: அந்தியின் கடைசி வெளிச்சம் மெலிதாகிக் கொண்டிருந்தது: யாரும் அவளைப் பார்க்கும் முன்பாக எம்மா அந்த இடத்தை விட்டுச் செல்ல முடிந்தது: தெருமுனையில், மேற்கு நோக்கிச் சென்ற ஒரு லெக்ரோஸ் ட்ராமில் ஏறிக்கொண்டாள். அவளுடைய திட்டத்திற்கு ஏற்பவும், அவள் முகம் பார்க்கப்படாமலிருப்பதற்காகவும், முன் கோடியில் ஒரு இருக்கையைத் தேர்ந்தெடுத்தாள். தெருக்களின் வழியாக ட்ராம் ஓடும்போது உண்டான ஈர்ப்பற்ற ஓட்டத்தில், இதுவரை நிகழ்ந்தவை, விஷயங்களைக் கறைப்படுத்தி விடவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவளுக்கு ஆறுதலாக இருந்திருக்கலாம். வெளிச்சம் குறைந்து கொண்டிருந்த புறநகர்ப் பகுதிகளின் வழியே, அவற்றைப் பார்த்த அதே கணத்தில் மறந்தபடியும் ட்ராமில் பிரயாணம் செய்தாள் : வார்னஸின் பக்கவாட்டுத் தெருக்களில் ஒன்றில் இறங்கிக் கொண்டாள். அவளின் சோர்வு அவளின் வலிமையாக மாறிக் கொண்டிருந்தது. காரணம் துணிகரச் செயல்பாட்டின் அம்சங்களில் ஆழ்ந்த கவனம் செலுத்த வைக்க கடமைப்படுத்தி, அவளிடமிருந்து, அதன் பின்னணியையும், இலக்கினையும் மறைத்தது.

ஏரன் லோவன்த்தால் எல்லோருக்கும் ஒரு பொறுப்புணர்ச்சி மிக்க மனிதன் : அவனுடைய நெருக்கமான நண்பர்களுக்கு அவன் ஒரு கஞ்சன். மில்லின் மேற்பகுதியில் தனியாக வசித்து வந்தான். நகரத்தின் பொட்டலான வெளிப்புறப் பகுதியில் மில் அமைந்திருந்ததால், அவன் திருடர்களுக்காகப் பயந்தான். மில்லின் முற்றத்தில் ஒரு பெரிய நாய் இருந்தது : அவனுடைய மேஜை இழுப்பறையில் ஒரு ரிவால்வர் இருப்பது பற்றி அனைவரும் அறிவர். அந்த வருடத்திற்கு முந்திய வருடத்தில், திடீரென்று இறந்துபோன அவனுடைய மனைவியின் மரணம் குறித்து ஆழ்ந்த துக்கம் அனுசரித்தான்– அவள் ஒரு காஸ் இனப்பெண், ஏராளமான வரதட்சிணையைக் கொண்டு வந்தவள் — ஆனால் அவனின் உணர்ச்சிமிக்க நிஜமான ஈடுபாடு பணம்தான். அதைச் சேமிப்பதில் விடவும் அவன் பணம் சம்பாதிப்பதில் சமர்த்தம் குறைந்தவனாயிருந்தான் என்பதை மிக உள்ளார்ந்ததொரு மன இக்கட்டில் உணர்ந்தான். அவன் தீவிர மதப்பற்று கொண்டவன். அது கடவுள் பற்றுக்கும், வழிபாட்டுக்கும் பதிலியாக, அவனை நல்லது செய்வதிலிருந்தது விலக்கு அளித்த ஒப்பந்தம் என — அவனுக்கும் கடவுளுக்கும் இடையிலான ஒரு ரகசிய ஒப்பந்தம் என– நம்பினான். வழுக்கைத் தலையும். பருத்த உடம்புடனும், துக்கம் தெரிவிக்கும் பட்டையை அணிந்தபடி கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு, செம்பட்டை தாடியுடன், ஜன்னலுக்கு அருகில் நின்று கொண்டு, தொழிலாளி எம்மாவின் ரகசிய அறிக்கைக்காகக் காத்திருந்தான்.

அவள் இரும்பு கேட்டைத் தள்ளித் திறந்து (அவளுக்காக அவன் கேட்டைப் பூட்டாமல் வைத்திருந்தான்) இருளடைந்த முற்றத்தைக் கடந்து வருவதைப் பார்த்தான். சங்கிலியில் கட்டப்பட்ட நாய் குரைத்தவுடன் அவள் சிறிது சுற்றி வளைத்து வருவதைப் பார்த்தான். அடிக்குரலில் கடவுள் துதி செய்பவர் ஒருவரைப் போல, எம்மாவின் உதடுகள் மிக வேகமாக அசைந்தன: அவை சோர்வடைந்து, திருவாளர் லோவன்த்தால் சாகும் முன்னர் கேட்கப் போகும் வாக்கியத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தன.

எம்மா எதிர்நோக்கியது போல் நிகழ்ச்சிகள் நடக்கவில்லை. முந்திய காலையிலிருந்தே, கனமான ரிவால்வாரைக் கையாளுவதைப் பற்றித் தனக்குத் தானே கற்பனை செய்திருந்தாள். கேவலமான அந்த மிருகத்தைத் தன் கேவலமான குற்றத்தை மனம் விட்டு ஒப்புக் கொள்ளச் செய்யக் கட்டாயப் படுத்துவதைப் பற்றியும், மேலும் கடவுளின் நீதி மனிதனின் நீதியை வெல்வதற்காக, துணிகரமான யுக்தியை அம்பலபடுத்துவதற்கும் நினைத்தாள், (பயத்தினால் அல்ல, ஆனால் நீதியின் கருவியாக இருந்த அவள் தண்டிக்கப்படுவதை விரும்பாத காரணத்தால்). பிறகு, நெஞ்சில் மத்தியில் ஒரே ஒரு துப்பாக்கி ரவை லோவன்த்தாலின் விதியை முடித்துவிடும். ஆனால் விஷயங்கள் அந்த விதத்தில் நிகழவில்லை.

ஏரன் லோவன்த்தால், தன் முன் இருக்கும் போது, அவள் தந்தைக்காகப் பழிதீர்க்க வேண்டும் என்ற அவசரத்தைவிட, எம்மா தான் அனுபவித்த அவமானத்திற்காகத் தண்டனை அளிக்க வேண்டிய தேவையை உணர்ந்தாள். அந்த முழுமையான அவமானத்திற்கு பிறகு அவனைக் கொல்லாமலிருக்க அவளால் முடியவில்லை. நாடகத் தன்மையான செயல்களுக்கு நேரம் இருக்கவில்லை. பயந்தபடி, உட்கார்ந்து, அவள் லோவன்த்தாலிடம் பொய்க் காரணங்கள் சொன்னாள். தான் நம்பிக்கையுடன் நடத்தப்படுவோம் (காட்டிக்கொடுப்பவருக்கு உரிய தனித்தகுதி) என்ற விசுவாசக் கட்டுப்படுதலை அவள் வேண்டிக்கொண்டாள். ஏதோ அவளை அச்சம் ஆட்கொண்டு விட்டது மாதிரி, சில பெயர்களைக் கூறினாள், மற்ற சிலரை யூகம் செய்தாள்: பிறகு ஸ்தம்பித்தாள். அவளுக்காக ஒரு கண்ணாடித் தம்ளர் நீரைக் கொண்டுவரும்படி லோவன்த்தாலை அங்கிருந்து போகச் செய்தாள். அந்த மாதிரியான ஒரு வெற்றுப் படபடப்பில் லோவன்த்தால் நம்பிக்கையற்றிருந்த போதிலும், விட்டுக் கொடுத்து, தண்ணீருடன் உணவருந்தும் கூடத்திலிருந்து திரும்பியபோதே எம்மா கனத்த ரிவால்வாரை இழுப்பறையிலிருந்து எடுத்துக் கொண்டு விட்டாள். துப்பாக்கியின் விசைப்பகுதியை இரண்டு முறை அழுத்தினாள். பெரும் உடம்பு, சப்தமும் புகையும் அதனைச் சிதறடித்து விட்டதுபோலச் சரிந்தது : கண்ணாடித் தம்ளர் நொறுக்கப்பட்டு, லோவன்த்தாலின் முகம் அவளை கோபத்திலும், அதிர்ச்சியிலும் பார்த்தது, முகத்தின் வாய் அவளை நோக்கி ஸ்பானிய மொழியிலும், யூத மொழியிலும் சூளுரைத்தது. கெட்ட வார்த்தைகள் குறையவே இல்லை: எம்மா மறுபடியும் சுட வேண்டியிருந்தது. முற்றத்தில் சங்கிலியில் கட்டப்பட்டிருந்த நாய் குரைக்க ஆரம்பித்தது திடீரென்று. ஆபாசமான உதடுகளிலிருந்து பிரவாகிக்க ஆரம்பித்த முரட்டுத் தனமான ரத்தம், தாடியையும், உடைகளையும் கறைப்படுத்தியது. எம்மா தான் தயாரித்து வைத்திருந்த குற்றசாட்டுகளைத் தொடங்கினாள். (என் தந்தைக்காகப் பழி வாங்கி விட்டேன், அவர்கள் என்னைத் தண்டிக்க முடியாது…) ஆனால் அவள் முடிக்கவில்லை, காரணம் லோவன்த்தால் இறந்து போயிருந்தான். அவன் புரிந்து கொள்ள முயன்றிருப்பானா என்று அவளுக்குத் தெரியவில்லை.

வலிந்த குரைப்புகள் அவள் இன்னும் ஓய்வெடுக்க முடியாது என்பதை நினைவூட்டின. போடப்பட்டிருந்த திண்டின் ஒழுங்கைச் சிதைத்தாள். இறந்த மனிதனின் சட்டைப் பித்தான்களைக் கழற்றிவிட்டாள். உடைந்த மூக்குக் கண்ணாடியை ஃபைல்கள் அடுக்கும் காபினட் மீது வைத்தாள் பிறகு தொலைபேசியை எடுத்து பின்வரும் பிற வார்த்தைகளுடன் அவள் எவற்றை பல தடவைகள் மீண்டும் மீண்டும் கூறுவாளோ அவற்றையும் சேர்த்துக் கூறினாள்: நம்ப முடியாத ஒன்று நடந்து விட்டது. . . . திருவாளர் லோவன்த்தால் வேலை நிறுத்தத்தைப் பொய்க் காரணமாக வைத்து என்னை இங்கே வர வைத்தார். . . அவர் என்னை தவறாக பயன்படுத்தினார், நான் அவரைக் கொன்றேன். . .

நிஜத்தில், கதை நம்பமுடியாததாக இருந்தது, ஆனால் எல்லோரையும் அது பாதித்தது, காரணம் கணிசமான அளவில் அது உண்மையாக இருந்தது, எம்மா சுன்ஸின் தொனி உண்மையானது, அவளின் அவமானம் உண்மையானது, அவளின் வெறுப்பும் உண்மையானது. அவள் அனுபவித்த அவமானச் செயலும் உண்மையானது. சூழ்நிலைகளும், நேரமும், ஓரிரண்டு பெயர்களும் மாத்திரமே பொய்யானவை.

Translated by Donald A.Yates.

Posted in Uncategorized | Tagged: , , , , , | Comments Off

Available Tamil translations of Borges’s stories-தமிழ் மொழிபெயர்ப்பில் தற்போது கிடைக்கும் போர்ஹே கதைகளின் பட்டியல்

Posted by brammarajan on November 22, 2008

List of Borges stories availabe in Tamil translation

List of Borges Stories available

List of Borges stories available in Tamil translation

தமிழ் மொழிபெயர்ப்பில் தற்போது கிடைக்கும் போர்ஹே கதைகளின் பட்டியல்

மொழிபெயர்ப்பாளர்-பிரம்மராஜன்

1. அல் முட்டாசிம் : ஓர் அணுகல்
2. வாளின் வடிவம்
3. ரகசிய அற்புதம்
4. எம்மா சுன்ஸ்
5. கிளைபிரியும் பாதைகளின் தோட்டம்
6. நுழைவாயிலில் ஒரு மனிதன்
7. மரணமும் காம்பஸ் கருவியும்
8. குறுக்கீட்டாளர்
9. ரோசென்டோவின் கதை
10. அலெஃப்
11. வட்டச் சிதிலங்கள்
12. நித்தியமானவர்கள்
13. பரிசுகளின் இரவு
14. மணல் புத்தகம்
15. பேரவை
16. மரணத்தில் ஒரு இறையியல்வாதி
17. தள்ளிப் போடப்பட்ட மந்திரவாதி
18.. மாற்கு எழுதிய வேதாகம்
19. அவெலினோ அரிடோன்டோ
20. மான்க் ஈஸ்ட்மேன், அநீதிகளை விநியோகிப்பவன்

NOTE:

All these translations were published in book form in 2000 by the publisher Sneha. Currently there are no willing publishers for this classic collection. Apart from these stories there is a special section on Borges’s poems. I can dare say there are no takers for Borges or Calvino in the present sensationlist Tamil publishing world. The Tamil publishing industry is more involved in kitsch and pillow sized novels and writers who cannot stop where they ought to.

Posted in Index | Tagged: , , | Comments Off

ரகசிய அற்புதம் (Secret Miracle)Jorge Luis Borges-translation by Brammarajan

Posted by brammarajan on November 22, 2008

ரகசிய அற்புதம்

Secret Miracle-Jorge Luis Borges-translation by Brammarajan

horizontal-line3

மேலும் கடவுள் அவனை நூறு வருடங்களுக்கு இறந்து போகச்செய்து,

பிறகு உயிர்ப்பித்து அவனிடம் கேட்டார் :

எவ்வளவு காலமாய் நீ இங்கிருக்கிறாய்?

ஒருநாள் அல்லது ஒரு நாளின் பகுதி

அவன் பதில் அளித்தான்.

குர் ஆன். II,261


1943 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் தேதி இரவு ப்ராக் நகரின் ட்செல்ட் நெர்கஸெவில் ஒரு தங்கும் விடுதியில், The Enemies, or Vindication of Eternity  என்ற முடிக்கப்படாத நாடகத்தின் ஆசிரியனும், யாக்கோப் பாமெவின் மறைமுக யூதப் பின்னணியைப் பற்றிய ஆய்வை எழுதியவனும் ஆன யரோமிர் ஹ்லாடிக் மிக நீண்டதொரு சதுரங்க ஆட்டம் பற்றிய கனவைக் கண்டான். விளையாடுபவர்கள் இரண்டு நபர்களாக இல்லாமால் இரண்டு பிரசித்தமான குடும்பங்களாக இருந்தன. சதுரங்க விளையாட்டு பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருந்தது. பணயங்கள் என்னவென்று எவருக்கும் நினைவில்லை. ஆனால் அவை மிகப்பெரிய அளவிலும், ஒருவேளை முடிவற்றும் இருக்கக் கூடும் என்ற பேச்சு அடிபட்டது. சதுரங்கக் காய்களும், சதுரங்கப் பலகையும் ஒரு ரகசிய கோபுரத்தில் இருந்தன. யரோமிர் (தன் கனவில்) போட்டியிடும் குடும்பங்களில் ஒன்றின் முதல் மகனாக இருந்தான். தள்ளிப் போடவே முடியாத, அந்த விளையாட்டிற்கான நேரத்தைக் கடிகாரம் ஒலித்தது. சதுரங்கக் காய்களைப் பற்றியோ, ஆட்டத்தின் விதிமுறைகளைப் பற்றியோ நினைவு கொள்ள இயலாமல், கனவு காண்பவன் மழைசார்ந்த பாலைவன மணலின் மீது தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தான். அந்த கணத்தில் அவன் உறக்கத்திலிருந்து விழித்தான். மழையினுடையதும், பயங்கரக் கடிகாரங்களினுடையதுமான அலையலையான உலோக ஓசை நின்றது.  ஒருங்கிசைவான, வேறுபாடற்ற சப்தம், இடையிடையே ஆணைகள் பிறப்பிக்கப்படும் குரலினால் குலுக்கிடப்பட்டு ட்செல்ட் நெர்கஸெவிலிருந்து கேட்கத் தொடங்கியது. அதிகாலை நேரம். கவச மோட்டார்களுடன், மூன்றாம் ரைக்கின் முன்னணிப் படை ப்ராக் நகரில் நுழைந்து கொண்டிருந்தது. பத்தொன்பதாம் தேதி அதிகாரிகளுக்கு பொது மன்றக் குற்றச்சாட்டு பற்றிய தகவல் கிடைத்தது. அதே நாள், மாலை நேரம் நெருங்கும் போது யரோமிர் ஹ்லாடிக் கைது செய்யப்பட்டான். மால்டவ் நதியின் கரைக்கு எதிர்ப்புறம் அமைந்த தூய்மையான, வெண்மையான, போர் வீரர் குடியிருப்புக்குக் கொண்டு செல்லப்பட்டான். கெஸ்டெப்போவின் குற்றச்சாட்டுகளில் ஒன்றைக் கூட அவனால் மறுக்க முடியவில்லை — அவன் அம்மாவின் குடும்பப் பெயர் யரோஸ்லாவ்ஸ்கி, அவன் யூதப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவன். பாமெ’ பற்றி அவன் செய்த ஆய்வில் யூதத்தன்மை பற்றிய வெளிப்படையன முக்கியத்துவம் இருந்தது, சிறு நாடுகளின் இணைப்பை எதிர்த்துக் கையெழுத்திட்டவர்களுடன் அவன் கையொப்பமும் இருந்தது. ஹேர்மன் பார்ஸ்டார்ஃப் என்ற வெளியீட்டு நிறுவனத்திற்காக 1928 இல் அவன் Sepher Yezirah  வை மொழிபெயர்த்திருந்தான். விளம்பர நோக்கங்களுக்காக வெளியீட்டு நிறுவனத்தின் அலுப்பூட்டும் புகழ்ந்துரை கொண்ட புத்தகப் பட்டியலில், மொழி பெயர்ப்பாளனின் மதிப்பு அளவுக்கு அதிகமாய் மிகைப்படுத்தப்பட்டிருந்தது.   ஹ்லாடிக்கின் விதியைத் தன் கைவசம் வைத்திருந்த அதிகாரிகளில் ஒருவரான யூலியஸ் ராட்டே, புத்தகப் பட்டியலை பரிசீலித்துப் பார்த்தார். தன்னுடைய பிரத்யேகத் துறையில் தவிர, எந்த ஒரு மனிதனும் நம்பப்படக் கூடியவன் அல்லன். பட்டியலில் காணப்பட்ட, முரட்டு அச்செழுத்துக்களில் அச்சிடப்பட்டிருந்த இரண்டு  மூன்று குணச்சொற்கள் ஹ்லாடிக்கின் முக்கியத் துவத்தை யூலியஸ் ராட்டே நம்புவதற்குப் போதுமானதாக இருந்தது. மற்றவர் களையும் ஊக்குவிக்கும் பொருட்டு மரண தண்டனைக்கான ஆணையை அறிவித்தான். ஆணை நிறைவேற்றப்பட வேண்டிய தேதி மார்ச் மாதம் 29 ஆம் நாள் காலை 9 மணி எனத் தீர்மானிக்கப்பட்டது.  இந்தத் தாமதம் (முக்கியத்துவத்தை வாசகன் பின்னர் புரிந்து கொள்ள முடியும்) காய்கள், தாவரங்களின் முறையைப் பின்பற்றி சுயச் சாய்வின்றியும், மெதுவாகவும் இயங்குவதற்கு அதிகாரிகள் பக்கமிருந்த விருப்பத்தின் காரணம்.

ஹ்லாடிக்கின் முதல் எதிர்வினை பயங்கர அச்சமாக இருந்தது. தூக்கு மரத்திலிருந்தோ, தலைவெட்டப்படும் கட்டையிலிருந்தோ அல்லது கத்தியிலிருந்தோ தான் பின்வாங்கி இருக்க மாட்டோம் என அவன் நினைத்தான். ஆனால் துப்பாக்கி வீரர்களால் சுடப்பட்டு இறப்பதை அவனால் பொறுத்துக்கொள்ள இயலாமல் இருந்தது. பயன் ஏதுமின்றி வெளிப்படையான, ஜோடிக்கப்படாத மரணம் என்கிற உண்மையே பயங்கரமானதென்றும், அதன் தொடர் சூழல்கள் அல்லவென்றும் தன்னை சமாதானப் படுத்திக்கொள்ள முயன்றான்.  அந்த உறக்கமற்ற விடியற்காலைப் பொழுதிலிருந்து மர்மம் மிகுந்த துப்பாக்கி குண்டுகள் வரை — சாகும் முறையை முடிவற்று எதிர் நோக்கினான். யூலியஸ் ராட்டே நிச்சயித்திருந்த அந்த நாளுக்கு முன், அவன் நூற்றுக்கணக்கான இறப்புகளை இறந்தான் — அசாதாரணமான கோணங்கள், ஜியோமித சாத்தியங்கள் கொண்ட முற்றங்களின் வடிவங்களில், வேறு வேறு போர்வீரர்களால், மாறுபடும் எண்ணிக்கையில், யந்திரத் துப்பாக்கிகளால் சுடப்பட்டான்–அவர்களில் சிலர் சில சமயங்களில் மிக நெருக்கத்திலிருந்தோ, சிலர் தூரத்திலிருந்தோ அவனைக் கொன்றார்கள். இந்த கற்பனைக் கொலைத் தண்டனைகளை அவன் நிஜமான பேரச்சத்துடன் எதிர்கொண்டான். (ஒரு வேளை நிஜமான வீரத்துடன்) : ஒவ்வொரு பாவனையும் சில வினாடிகளே நீடித்தன. சுழற்சி முடிந்தவுடன் முடிவுற்று மீண்டும் தன் சாவின் நடுங்கும் மாலைப் பாடல்களுக்குத் திரும்பினான். யதார்த்தம் பொதுவாக நமது எதிர்ப்பார்ப்புடன் பொருந்திப் போவதில்லை என்று பிறகு சிந்தித்தான் : ஒரு தொடர் சூழ்நிலை பற்றிய விவரங்களை முன்னோக்குதல் என்பது அது நிகழ்வதைத் தடுப்பதாகும் என்று தன் சொந்த தர்க்கத்திலிருந்து யூகித்தான். இந்த வலுவற்ற மந்திரத்தில் நம்பிக்கை கொண்டு, மிகக் கோரமான விவரங்களை உருவாக்கினான்–அவை நிகழக் கூடாதென்றபடிக்கு. இரவில் பரிதாபமாக, கை நழுவிச் செல்லும் காலம் எனும் பொருளைத் தடுத்து நிறுத்தும் வழியைக் கண்டுபிடிக்கப் பெரு முயற்சி செய்தான். காலம் இருபத்தி ஒன்பதாம் நாளின் அதிகாலையை நோக்கி அதீத வேகத்தில் பாய்கிறது என்பதை அவன் உணர்ந்திருந்தான். அவன் உரக்க விவாதித்தான்: ‘நான் இப்பொழுது இருபத்தி இரண்டாம் நாளின் இரவில் இருக்கிறேன்: இந்த இரவு நீடிக்கிற வரையில் (மேலும் ஆறு இரவுகளுக்கு) நான் அழிவற்றவன், நித்தியமானவன். தூக்கம் மிகுந்த இரவுகள் ஆழமாகவும் அவன் தன்னை மூழ்கடித்துக்கொள்ளக் கூடிய இருண்ட குட்டைகளாகவும் தோன்றின.

நல்லதற்கோ, கெட்டதற்கோ, இந்த பயனற்ற கற்பனைகளின் கட்டாயங்களில் இருந்து தன்னை விடுவிக்கப்போகும் அந்த இறுதியான துப்பாக்கி வெடிகளுக்காக அவன் பொறுமையின்றி ஏங்கிய கணங்களும் இருந்தன. இருபத்தி எட்டாவது நாளில், கடைசி சூரிய அஸ்தமனம் உயர்ந்த கம்பிகள் கொண்ட ஜன்னல்களில் பட்டுத் தெரித்துக் கொண்டிருந்தபோது, தன் நாடகமான எதிரிகள் பற்றிய சிந்தனை, இந்தப் படுமோசமான எண்ணங் களிலிருந்து அவனை திசை திருப்பியது.

ஹ்லாடிக் நாற்பது வயது முழுமையடைந்தவன். சில நட்புகளுக்கும், பல பழக்கங்களுக்கும் அப்பாற்பட்டு, பிரச்னைமிகுந்த செயல்பாடான இலக்கியமே அவன் வாழ்க்கையை அமைத்திருந்தது. எல்லா எழுத்தாளர்களையும் போலவே அவன் மற்றவர்கள் முடித்ததை வைத்தே அவர்களின் சாதனைகளை அளவிட்டான். அவன் திட்டமிட்டதையோ அல்லது எதிர் நோக்கியதையோ வைத்து அவனை அளவிடக் கோரினான் அவர்களிடம். அவன் வெளியிட்ட எல்லா நூல்களும் ஒரு குழம்பிய வருந்தும் உணர்வை அவனிடம் தங்கவிட்டிருந்தன. பாமெவின் எழுத்துக்களைப் பற்றிய அவன் ஆய்வுகள், இபின் எஸ்ரா பற்றியவை,  ஃப்ளட் பற்றியவை எல்லாம் சாராம்சத்தில் வெறும் பொருந்தற் செயல்பாடுகளால் தனிப்பட்டுத் தெரிந்தன. ஸெஃபிர் எஸிரா மொழிபெயர்ப்பு, கவனக் குறைவாலும், சோர்வினாலும், யூகித்தலாலும் பண்பு பெற்றிருந்தது. ஒரு வேளை Vindication of Eternity மாத்திரம் சொற்பமான குறைபாடுகள் கொண்டதாயிருக்கும்.

இதன் முதல் தொகுதி மனிதனின் பல வேறுபட்ட, நித்தியத்தைப்பற்றிய கருத்தாக்கங்களின் வரலாற்றைத் தருகிறது–பார்மிநைடிசின் மாறும் இயல் பற்ற இருத்தலில் இருந்து ஹிண்ட்டனின் மாற்றப்படக் கூடிய கடந்த காலம் வரை. இரண்டாம் தொகுதி (ஃபிரான்சிஸ் ப்ராட்லியுடன் இணைந்து ) பிரபஞ்ச நிகழ்வுகள் எல்லாம் சேர்ந்து ஒரே காலத் தொடர்ச்சியை உருவாக்குபவை என்பதை மறுத்தது. விவாதம், மனிதனுக்கு சாத்தியமாகக் கூடிய அனுபவங்களின் எண்ணிக்கை முடிவற்றது அல்ல என்றும், மேலும் ஒரே ஒரு ‘இரட்டிப்பு காலம் என்பது ஒரு மாயத்தோற்றம் என்பதை நிரூபிக்கப் போதுமானதாகி விடுகிறது . . . . துரதிர்ஷ்டவசமாக இதைப் பொய்யானதென்று நிரூபிக்கும் இந்த விவாதங்கள் யாவும் சரிசமமான அளவு பொய்யானவை. ஹ்லாடிக் இவற்றை ஒரு வெறுப்பு மிகுந்த குழப்பத்துடன் ஆராயும் வழக்கத்தில் இருந்தான். அவன் எக்ஸ்ப்ரஷனிஸக் கவிதைத் தொடர்களையும் எழுதியிருந்தான். 1924ல் வெளிவந்த தொகுப்பில் இவை சேர்க்கப்பட்டிருந்தன. ஆனால் அவன் கடும் ஏமாற்றம் கொள்ளும் வகையில் பின் வந்த தொகுப்புகள் அவன் கவிதைகளை ஸ்வீகரித்துக் கொள்ளவில்லை. இந்த இரட்டைத் தொனி கொண்ட, உத்வேகமற்ற கடந்த காலம் எல்லாவற்றிலிருந்தும், தன் கவிதை நாடகமான எதிரிகள்’மூலமாகத் தன்னை மீட்டுக் கொள்ள நம்பியிருந்தான். (ஹ்லாடிக் கவிதை வடிவம் முக்கியம் என உணர்ந்திருந்தான், காரணம், பார்வையாளர்கள் யதார்த்தத்தின் பொய்த்தோற்றத் திலிருந்து பார்வையை அகற்றுவதை அது இயலாமல் ஆக்கிவிடுகிறது : கலையின் அத்தியாவசியங்களில் இதுவும் ஒன்று).

நாடகமானது, காலம், இடம், செயல் ஆகிய ஒருமைகளைப் பின்பற்றியது. காட்சி, ஹ்ராட்கெனி என்ற இடத்தில் ரோமர்ஸ்டாட் என்ற பிரபுவின் நூலகத்தில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி மாலை நேரங்களில் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்தது. முதல் அங்கத்தின் முதல் காட்சியில் ஒரு விநோதமான மனிதன் ரோமர்ஸ்டாட்டைப் பார்க்க வருகிறான். (கடிகாரம் ஏழு அடித்துக் கொண்டிருந்தது, மறையும் சூரியனின் கதிர்களின் உக்கிரம் ஜன்னல்களைக் கவர்ச்சியாகக் காட்டின, உணர்ச்சி மிகுந்த ஹங்கேரிய இசை காற்றில் மிதந்தது). இந்த வருகையைத் தொடர்ந்து மற்றவர்கள் வருகிறார்கள். தன்னிடம் கெஞ்சி முறையிடும் அந்த மனிதர்களை யாரென்று தெரியவில்லை ரோமர்ஸ்டாட்டுக்கு: ஆனால் அவர்களை எங்கோ பார்த்ததான–ஒரு வேளை கனவில் கண்டதான–ஞாபகம் சங்கடமான உணர்வை உண்டாக்கியது. அவர்கள் எல்லோரும் குழைவாகக் கெஞ்சு கிறார்கள்: ஆனால் அவர்கள் அவனை நாசமாக்க ஒன்றிணைந்திருக்கும் எதிரிகள் என்பது முதலில் பார்வையாளர்களுக்கும் பிறகு பிரபுவுக்கும் தெளிவாகிறது. அவர்களின் சிக்கலான சதிகளைத் தவிர்த்தோ அல்லது கட்டுப்படுத்தியோ வெற்றிபெறுகிறான். உரையாடலில் அவனுடைய காதலியான யூலியா வான் வைய்டெனவ் பற்றிய குறிப்பு வருகிறது. யரோஸ்லாவ் குபின் என்பவன் ஒரு காலத்தில் அவளைக் காதலித் திருக்கிறான். குபின் தற்போது புத்திஸ்வாதீனமிழந்து, தான்தான் ரோமர்ஸ்டாட் என்று நம்பிக்கொண்டிருக்கிறான். அபாயங்கள் அதிகரிக்கின்றன: இரண்டாவது அங்கத்தின் இறுதியில் ரோமர்ஸ்டாட் சதிகாரர்களில் ஒருவனை கொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இறுதியான, மூன்றாவது அங்கம் தொடங்குகிறது: பொறுத்தமற்ற நிகழ்ச்சிகள் சிறிது சிறிதாய் அதிகமாகின்றன: நாடகத்திற்கு வெளியில் சென்றுவிட்ட நடிகர்கள் கூட மீண்டும் தோன்று கின்றனர்: ரோமர்ஸ்டாட் யாரைக் கொன்றானோ அந்த மனிதன் ஒரு கணம் மீண்டும் திரும்புகின்றான்: யாரோ ஒருவர் இன்னும் மாலை நேரம் முடியவே இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்: கடிகாரம் ஏழு அடிக்கிறது: உயர்ந்த ஜன்னல்களில் மேற்குச் சூரியன் தெரிகிறது: காற்று ஒரு உணர்ச்சி நிறைந்த ஹங்கேரிய இசைப் பண்ணைத் தாங்கி வருகிறது. முதல் நடிகன் மேடைக்கு வந்து முதல் அங்கத்தின் முதல் காட்சியில் பேசிய வரிகளைத் திரும்பச்  சொல்கிறான். ரோமர்ஸ்டாட் அவனிடம் எவ்வித ஆச்சரியமும் இல்லாமல் பேசுகிறான்: ரோமர்ஸ்டாட்தான், பரிதாபகரமான குபின் என்பதைப் பார்வை யாளர்கள் புரிந்து கொள்கிறார்கள். நாடகம் நடக்கவே இல்லை: குபின் வாழ்ந்து, முடிவற்று வாழ்ந்து கொண்டிருக்கும் சுழல்மயக்கமே அது.

தவறுகளின் இன்ப–துன்பியல் நாடகமான இது பாராட்டத்தகுந்ததா, அல்லது இயல்புக்கு முரண்பட்டதா, சிறப்பான முறையில் சிந்திக்கப்பட்டதா அல்லது கவனக் குறைவானதா என்றெல்லாம் எப்பொழுதுமே ஹ்லாடிக் தன்னைக் கேட்டுக் கொண்டதில்லை. அவன் திட்டமிட்ட கதைப் பின்னல், அவனுடைய குறைபாடுகளை மறைப்பதற்குப் பொருந்தும்படியும், திறன்களைச் சுட்டிக் காட்டும் அளவுக்கும் இருந்து, மேலும்  (குறியீட்டு தளத்தில்) தன் வாழ்வின் அர்த்தத்தை மீட்க அனுமதிக்கும் ஒரு சாத்தியத்தையும் கொண்டிருக்கிறது என அவன் நினைத்தான். அவன் முதல் அங்கத்தையும், மூன்றாவது அங்கத்தின் ஓரிரண்டு காட்சிகளையும் எழுதி முடித்திருந்தான். கவிதை நாடகத்தின் சீர் ஒழுங்குத் தன்மை, அறுசீர் செய்யுள் அடிகளை மாற்றியபடி தன் முன்னால் கையெழுத்துப் பிரதி இல்லாமலேயே  அதை தொடர்ந்து எழுதுவதற்குச் சாத்தியமாக்கியது. இன்னும் இரண்டு அங்கங்கள் எழுதி முடிக்கப்பட வேண்டியிருக்கும் நிலையில், தான் மிக விரைவில் சாகப் போகிறோம் என நினைத்தான். இருளில் கடவுளிடம் பேசினான்: ஏதோ ஒரு வகையில் நான் உயிரோடு இருக்கிறேனென்றால், உன் மறுபிரதிகள் அல்லது தவறுகளில் ஒன்றாக நான் இல்லை என்றால், நான் எதிரிகள் நாடகத்தின் படைப்பாளனாக இருக்கிறேன். இந்த நாடகத்தை எழுதி முடிக்க, அதனால் உன்னையும் என்னையும் நியாயப்படுத்த எனக்கு இன்னும் ஒரு வருடம் தேவை. காலத்தையும், நூற்றாண்டுகளையும் வைத்துக் கொண்டிருக்கிற நீ இந்த நாட்களை எனக்குத் தர வேண்டும். எல்லாவற்றிலும் மிகப் பயங்கரமான இந்த கடைசி இரவில், பத்து நிமிடங்கள் கழித்து இருண்ட நீரைப்போல உறக்கம் அவன் மீது நிரம்பி ஓடியது.

அதிகாலை நெருங்கும்போது க்ளிமென்டைன் நூலகத்தின் நடுக்கூடங்களில் ஒன்றில் மறைந்து கொண்டிருப்பதாக அவன் கனவு கண்டான். கறுப்புக் கண்ணாடி அணிந்த நூலகர் அவனைக் கேட்டார்: ” நீ எதைத் தேடிக் கொண்டிருக்கிறாய்? ஹ்லாடிக் பதில் அளித்தான்: “நான் கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்”‘. நூலகர் அவனிடம் கூறினார் : “க்ளிமென்டைனின் நான்கு லட்சம் தொகுதிகளில் ஏதோ ஒரு பக்கத்தில் உள்ள எழுத்துக்களில் ஒரு எழுத்தில் கடவுள் இருக்கிறார். என் தந்தையர்களும், தந்தையர்களின் தந்தையர்களும் இந்த எழுத்தைத் தேடி இருக்கிறார்கள். நான் அதைத் தேடி குருடாகி விட்டேன்.” அவர் மூக்குக் கண்ணாடியைக் கழற்றினார். முற்றிலும் குருடான அவர் கண்களை ஹ்லாடிக் பார்த்தான். ஒரு வாசகன் அட்லஸ் ஒன்றைத் திருப்பித் தருவதற்கு உள்ளே நுழைந்தான்.  ‘இந்த அட்லஸ் பயனற்றது’ என்று கூறியவன் ஹ்லாடிக்கிடம் கொடுத்தான். கைபோன போக்கில் ஹ்லாடிக் அதைத் திறந்தபோது மயக்கம் கலந்த பிரமிப்பில் பார்ப்பது போல இந்திய தேசப்படத்தைப் பார்த்தான். திடீரென்று, தன்னைப் பற்றிய உறுதிப்பாட்டில், மிகச் சிறிய எழுத்துக்களில் ஒன்றைத் தொட்டான். எங்கும் நிறைந்த குரல், அவனுக்குச் சொன்னது : உன் உழைப்பின் காலம் உனக்குத் தரப்பட்டுவிட்டது. இந்த கணத்தில் ஹ்லாடிக் விழித்தெழுந்தான். மனிதர்களின் கனவுகள் கடவுளுக்குச் சொந்தமானவை என்பதையும், கனவில் ஒலிக்கும் குரல், வார்த்தைகள் தெய்வீகமானவை–அவை மிகத் தெளிவாகவும், தனித்தும் கேட்டாலும் பேசும் நபரைப் பார்க்க முடியாது என்பதையும் மைமோநைடிஸ் எழுதியிருப்பதை ஞாபகப்படுத்திக் கொண்டான். அவன் உடையணிந்து கொண்டான்: இரண்டு ராணுவ வீரர்கள் அவனுடைய ஜெயில் அறைக்குள் நுழைந்து, அவர்களைப் பின்தொடருமாறு அவனுக்கு உத்தரவிட்டார்கள்.

கதவுக்குப் பின்புறம் இருந்துகொண்டு ஹ்லாடிக் சுழல் வட்டமான நடைவழிப்பாதைகளையும், படிக்கட்டுகளையும், தனித்தனி கட்டிடங்களையும் கற்பனை செய்திருந்தான். யதார்த்தம் அவ்வளவு காட்சித்தன்மையாய் இருக்கவில்லை. குறுகலான இரும்புப் படிகளின் வழியாக இறங்கி உள் முற்றத்தை அடைந்தார்கள். பல ராணுவ வீரர்கள் பித்தான்கள் போடப்படாத சீருடையில், ஒரு மோட்டார்சைக்கிளைக் கூர்ந்து கவனித்து பேசிக் கொண்டிருந்தனர்.

சார்ஜெண்ட் கடிகாரத்தை பார்த்தான். 8.44 ஆகியிருந்தது. அவர்கள் 9 மணி அடிக்கும் வரை காத்திருக்க வேண்டும். ஹ்லாடிக், பரிதாபமாக என்பதைவிட மிக அற்பமானவனாய் மரக்கட்டைகளின் குவியல் ஒன்றின் மீது உட்கார்ந்தான். ராணுவ வீரர்களின் பார்வை அவன் பார்வையைத் தவிர்ப்பதைக் கவனித்தான். அவனுடைய காத்திருத்தலைக் குறைக்க சார்ஜென்ட் ஒரு சிகரெட்டை நீட்டினான். ஹ்லாடிக் புகை பிடிப்பவன் அல்லன். தாழ்மை உணர்வு காரணமாகவோ, பணிவு காரணமாகவோ சிகரெட்டைப் பெற்றுக்கொண்டான். சிகரெட்டைப் பற்றவைக்கும்போது  தன் கைகள் நடுங்குவதைக் கவனித்தான். வானம் மேகம் சூழ ஆரம்பித்தது. அவன் ஏற்கனவே இறந்து விட்டது போல ராணுவவீரர்கள் மெல்லிய தொனியில் பேசினார்கள். யூலியா வான் வைய்டெனவ்வின் உருவத்திற்கு ஏற்ற ஒரு பெண்ணை பயன் இன்றி நினைவில் கொண்டுவர முயற்சி செய்தான்.

கைதியைச் சுடும்குழு அமைக்கப்பட்டு விறைப்பாக நின்றது. பாரக்ஸ் சுவருக்கு முன்னால் நின்றிருந்த ஹ்லாடிக் சரமாரியான குண்டுகளுக்காகக் காத்திருந்தான். சுவர் ரத்தத்தால் கறையாகப்போகிறது என்று எவரோ சுட்டிக் காட்டினார்கள். சில அடி தூரம் முன்னெ நகர்ந்து வரும்படி பலி ஆளுக்கு கட்டளை இடப்பட்டது. பொருத்தம் சிறிதும் இன்றி அவனுக்கு இது புகைப்படக்காரர்களின் தடுமாறும் ஏற்பாடுகளை நினைவு படுத்தியது. ஒரு பெரிய மழைத்துளி ஹ்லாடிக்கின் நெற்றிப் பொட்டில் விழுந்து மெதுவாகக் கன்னத்திற்கு உருண்டது. சார்ஜென்ட் கடைசி ஆணையைக் கத்தி அறிவித்தான்.

பௌதிகப் பிரபஞ்சம் ஒரு நிறுத்தத்திற்கு வந்து நின்றது. ஹ்லாடிக்கை நோக்கி துப்பாக்கிகள் ஒருமித்திருந்தன. ஆனால் அவனைக் கொல்ல வேண்டிய மனிதர்கள் இயக்கமற்று நின்றனர். முற்றத்தின் வழிநடைக் கல்லின் மீது ஒரு வண்டின் மாறுதலற்ற நிழல் படிந்திருந்தது. ஒரு சித்திரத்தில் காற்று வீசுவது போல நின்றிருந்தது. ஹ்லாடிக் ஒரு வார்த்தையைக் கத்த முயன்றான். கையின் ஒரு அசைவைச் செய்ய யத்தனித்தான். அவன் செயல் இழந்து போய் விட்டதை அறிந்தான். நின்றுபோன உலகிலிருந்து அவனை ஒரு ஓசையும் அடையவில்லை. அவன் எண்ணினான் : நான் நரகத்தில் இருக்கிறேன். நான் இறந்து விட்டேன்.  அவன் எண்ணினான் :  ‘நான் பைத்தியக்காரன். அவன் எண்ணினான் : காலம் நின்றுவிட்டது. அது நிஜமாக இருக்குமானால் அவன் சிந்தனையும்தானே நின்றிருக்கவேண்டும் என நினைத்தான். அவன் இதைச் சோதிக்க விரும்பினான். வர்ஜிலின் மர்மமான நான்காவது சிறு உரையாடல் பாட்டினை (உதடுகளை அசைக்காமல்) திரும்பச் சொல்லிப்பார்த்தான்.

இப்போது தூரமாய்ப் போய்விட்ட ராணுவ வீரர்களும் அவனுடைய பதற்றத்தைக் கொண்டிருக்க வேண்டும் எனக் கற்பனை செய்தான் : அவர்களுடன் தொடர்பு கொள்ள அவன் ஏக்கங்கொண்டான். நீட்சி பெற்ற செயலின்மையால் உண்டாகும் மரத்துப்போன தன்மையையும், மிகக்குறைந்த சோர்வையும் கூட உணராதது அவனைப் பிரமிக்க வைத்தது.  நிர்ணயிக்க முடியாத காலத்திற்குப் பிறகு அவன் உறங்கிப்போனான். அவன் விழித்தபோது உலகம் இயக்கமற்று மௌனமாய்த் தொடர்ந்தது : அவன் கன்னத்தில் இன்னும் அந்தத் நீர்த்துளி  ஒட்டிக் கொண்டிருந்தது : வண்டின் நிழல் கல்லின் மீது நிலைத்திருந்தது. அவன் வீசியெறிந்த சிகரெட்டிலிருந்து வந்த புகை கலையாமல் நின்றது. இன்னொரு நாள் கடந்து சென்றது, ஹ்லாடிக் அறியும் முன்பாக–தன் படைப்பை முடிக்க கடவுளிடம் அவன் ஒரு முழு வருடத்தைக் கேட்டிருந்தான். அவரின் எங்கும் நிறைந்த சக்தி அதை அளித்து விட்டது. கடவுள் அவனுக்காக ஒரு ரகசிய அற்புதத்தைச் செய்திருக்கிறார். நிர்ணயம் செய்யப்பட்ட நேரத்தில் ஜெர்மன் குண்டுகள் அவனைக் கொல்லும், ஆனால் அவன் மனதில் அந்த ஆணைக்கும், அதன் நிறைவேற்றத்திற்கும் இடையில் ஒரு வருடம் கடக்கும். குழப்பத்திலிருந்து மயக்க நிலைக்கும், மயக்க நிலையிலிருந்து எல்லாம் துறந்த நிலைக்கும், அதிலிருந்து திடீரென்ற நன்றி உணர்வுக்கும் அவன் மாறினான்.

அவனிடம் அவனுடைய ஞாபகத்தைத் தவிர வேறு காகிதங்கள் இல்லை. அதிகமாகச் சேர்க்கப் பட்ட ஒவ்வொரு அறுசீர் செய்யுள் அடியுடன் அவன் பெற்ற பயிற்சி, ஒரு தற்காலிகமான, முழுமையற்ற பாராவை எழுதிய பின் மறந்துவிடுபவர்களால் சந்தேகிக்க இயலாததொரு ஒழுக்கத்தினை அவனுக்கு அளித்தது. பின் வரும் சந்ததியினருக்காகவோ, அல்லது கடவுளுக்காகவோ–அவருடைய இலக்கிய ரசனைகள் பற்றி அவனுக்குத் தெரியாது–அவன் எழுதவில்லை. மிகக் கவனமாக, இயக்கமின்றி, ரகசியமாக, காலத்தில் தன் உன்னதமான, பார்வைக்குப் புலனாகாத சுழல்வட்டங்களைச் செதுக்கினான். இரண்டாம் முறையாக மூன்றாவது அங்கத்தை எழுதினான். திரும்பத் திரும்ப ஒலிக்கும் கடிகாரம், மற்றும் இசை போன்ற சில குறியீடுகளை மிகவும் வெளிப்படையானதெனக் கருதி நீக்கினான். எதுவும் அவனை அவசரப் படுத்தவில்லை. அவன் வரிகளை விடுத்தான்,  இறுக்கமாக்கினான்,  விரிவுபடுத்தினான். சில இடங்களில் அவன் மூலப் பிரதிக்குத் திரும்பினான். முற்றத்தையும், பாரக்சையும் இப்போது ஒருவித அன்புடன் நோக்கினான்: அவனுக்கு முன்னால் இருந்த முகங்களில் ஒன்று ரோமர்ஸ்டாட்டின் பாத்திரம் பற்றிய உருவாக்கத்தை மாறுதல் செய்தது. ஃப்ளாபரைத் துன்புறுத்திய, சலிக்க வைக்கும் ஒருங்கிசைவற்ற வெறும் பார்வை தளத்திலான மூடநம்பிக்கைகள், எழுதப்பட்ட வார்த்தையின் பலவீனம், எல்லைவரையறை என்றும், பேசப்பட்ட வார்த்தை அல்லவென்றும் கண்டுபிடித்தான் . . . அவனுடைய நாடகத்தை முடித்தான். ஒரே ஒரு சொற்பிரயோகம் பற்றிய பிரச்சனையே அவனுக்கு இருந்தது. அதையும் அவன் கண்டுபிடித்தான். அவன் கன்னத்திலிருந்த நீர்த்துளி வழிந்து விழுந்தது. ஒரு பைத்தியக்காரத்தனமான கத்தலுடன் அவன் வாயைத் திறந்தான், முகத்தை நகர்த்தினான், நான்கு துப்பாக்கிகளின் வெடிகளில் கீழே சரிந்தான்.

யரோமிர் ஹ்லாடிக் மார்ச் 29 ஆம் தேதி காலை 9-02 மணிக்கு இறந்தான்.

horizontal-line3Secret Miracle-JL Borges

Translated by Harriet de Onis

Posted in Uncategorized | Tagged: , | Comments Off

Borges-வட்டச் சிதிலங்கள்(Circular Ruins)-Translated by Brammarajan

Posted by brammarajan on November 22, 2008

Circular Ruins-Borges

Circular Ruins-Borges

வட்டச் சிதிலங்கள்(Circular Ruins)

horizontal-line21

Circular Ruins-Borges: Translated into Tamil by Brammarajan

horizontal-line21

(1940)

And if he left off dreaming about you…Through the Looking – Glass, IV

சகலத்தையும் அரவணைத்திருந்த இரவில், மூங்கில் பரிசல் புனிதமான சேற்றில் தரை தட்டுவதையும் அவன் கரையேறுவதையும் எவரும் பார்க்கவில்லை. ஆனால் கொஞ்ச நாட்களிலேயே ஒரு சாந்தமான மனிதன் தெற்கிலிருந்து வந்திருக்கிறான் என்பதையும், அவனுடைய வீடு நீரோடையின் மேற்பகுதிகளில் இருந்த எண்ணிக்கையற்ற கிராமங்களில் ஒன்றாக இருந்தது என்பதையும், அங்கே கிரேக்க மொழியால் ஜென்ட் மொழி இன்னும் அசுத்தப்படாதிருந்தது என்பதையும், அங்கே தொழுநோயாளிகளே கிடையாது என்பதையும் தெரிந்து கொள்ளாதவர் எவருமே இல்லை என்று ஆயிற்று. நிஜம் என்னவென்றால் அந்த சாம்பல் நிற மனிதன் தன் உதடுகளை சேற்றின் மீது பதித்து, கரை மீது தடுமாறி எழுந்து, தன் சதையைக் கிழித்த முட்கிளைகளைக் கூட அகற்றாமல், (ஒரு வேளை உணராமல் கூட), பிரக்ஞை தப்பியபடியும், ரத்தம் சொட்டியபடியும் தன்னை இழுத்தபடி கல்லால் ஆன ஒரு புலி அல்லது குதிரையின் சிலை கண்காணித்துக் கொண்டிருந்த வட்ட வடிவமான திறந்த வெளிக்கு வந்து சேர்ந்தான். அந்தப் பிரதிமை ஒரு காலத்தில் நெருப்பின் நிறத்தினை ஒத்திருந்து தற்போது சாம்பலின் நிறத்தை அடைந்திருந்தது. இந்தத் திறந்த வெளி ஒரு கோயிலாக இருந்து பல யுகங்களுக்கு முன்னால் தீப்பிழம்புகளால் அழித்தொழிக்கப்பட்டது. அந்த சதுப்பு நில வனாந்திரத்தின் தெய்வ தூஷணையால் அந்தக் கோயிலின் கடவுள் மனிதரின் மரியாதையைப் பெறாமல் போனார். அந்த அந்நியன் பிரதிமையின் காலடியில் தன் உடலைச் சரித்துக் கொண்டான். தலை உச்சிக்கு வந்திருந்த சூரியனால் விழிப்பூட்டப்பட்ட அவன், ஏதோ வகையில் வியப்பு மேலிடாமல், தனது காயங்கள் ஆறிவிட்டதைக் கவனித்தான். அவனது வெளிர்ந்த கண்களை மூடி, மீண்டும் உறங்கினான், களைப்பினால் அல்லாமல் விருப்பத் தேர்வினால். அவனது விட்டுக் கொடுக்காத குறிக்கோளுக்குத் தேவைப்படும் இடம் இந்தக் கோயில்தான் என்பதை அவன் தெரிந்து வைத்திருந்தான். நெருப்பால் அழிக்கப்பட்ட, மரணமடைந்த கடவுள்களின் நல்லோரைக் கொண்ட மற்றொரு கோயிலின் இடிபாடுகளை, நதியின் கீழ்க்கோடியில் அத்துமீறுதல் செய்யும் மரங்கள் தமது வேர்களினால் இன்னும் மூடிவிட இயலவில்லை என்பதையும் அறிந்திருந்தான். அவனது உடனடிக் கடப்பாடு உறங்குவதே என்று அவன் அறிந்திருந்தான். நடுச்சாமத்தின் போது நிராதவரான ஒரு பறவையின் அழைப்பினால் விழித்தெழுந்தான். காலடித் தடங்கள், சில அத்திப் பழங்கள், ஒரு தண்ணீர் ஜாடி, இவை எல்லாம் அங்கே அருகில் வசித்த மனிதர்கள் அவனது உறக்கத்தினை ஒரு பயபபக்தியுடன் பார்த்து விட்டு அவனுடைய ரட்ஷிப்பினைக் கோரியோ, அன்றி, அவனது மந்திர சக்திக்குப் பயப்பட்டோ-வந்து போயிருந்ததைத் தெரிவித்தன. அவனுக்குள் பயத்தின் சில்லிடுதலை உணர்ந்தான். சிதிலமடைந்த சுவர்களுக்கிடையில் ஒரு புதைகுழியினைத் தேடி அதில் அவன் இதுவரை பார்த்திராத இலைகளைக் கொண்டு தன்னை மூடிக் கொண்டான்.

அவனை வழிநடத்தும் குறிக்கோளானது, இயற்கையை மீறிய ஒன்றாக இருந்த போதிலும், சாத்தியமில்லாததாய் இருக்கவில்லை. அவன் ஒரு மனிதனைக் கனவு காண விரும்பினான். அந்த மனிதனின் சிறிய, கடைசி நுணுக்கத் தகவல் வரை கனவு கண்டு, யதார்த்த உலகினுக்குள் நுழைக்க விரும்பினான். இந்த மர்மமான நோக்கம் அவனுடைய முழுமனதின் வீச்சினையும் திணற அடித்தது. எவரும் அவனது பெயரையோ, அன்றி, அந்த நிமிடத்திற்கு முந்திய அவனது வாழ்க்கை பற்றியோ கேட்டிருந்தால் அவர்களுக்கு என்ன பதில் கூறுவது என்பது அவனுக்குத் தெரிந்திருக்காது. அந்தக் கைவிடப்பட்ட, சிதிலமுற்ற கோயில் காட்சி தரும் உலகின் குறைந்தபட்சமாக இருந்தது அவனுக்குப் உகந்ததாக இருந்தது. மேலும், பக்கத்துக் கிராமத்தில் இருந்த விவசாயிகளின் அண்மையும், அவனது சொற்பத் தேவைகளைக் கவனித்துக் கொள்வார்கள் என்ற காரணத்தினால் அவனுக்கு உவப்பாக இருந்தது. மேலும் அவர்களின் காணிக்கையாக வந்த சோறும் பழங்களும் அவன் உடலுக்குத் தேவையான போஷாக்கினை அளித்தன. அவனது ஒரே கருமமாக இருந்தது உறங்குவதும் கனவு காண்பதும்.

ஆரம்பத்தில் அவனுடைய கனவுகள் பெருங்குழப்பமாக இருந்தன; பிறகு ஒரு இயங்கியல் தன்மையுடன் இருந்தன. அந்த அந்நியன் அரைவட்ட அரங்கின் மையத்தில் தான் இருப்பதாகக் கனவு கண்டான். அதுவே, ஏதோ வகையில் எரிந்து, அழிந்து போன கோயிலாகவும் இருந்தது. படி அடுக்கின் இருக்கைகளைக் களைப்படையச் செய்தனர் மௌனமான மாணாக்கர் கூட்டங்கள். மறுகோடி வரிசையில் இருந்த முகங்கள் அவனிடமிருந்து பல பல நூற்றாண்டுகளுக்கு அப்பால் நட்ஷத்திரங்களின் உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. ஆனால், அவர்களின் அங்கக் கூர்மைகள் தெள்ளத்தெளிவாகவும், கச்சிதமாகவும் இருந்தன. உடற்கூற்றியல், விண்கோளங் களின் ஆய்வு, மந்திர வித்தைகள் ஆகியவற்றைப் பற்றி அந்த மனிதன் அவர்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருந்தான். தங்களில் ஒருவரை இருப்பின் மாயையிலிருந்து விடுவித்து மெய்ம்மை உலகிற்குள் நுழைத்து விட வல்ல பரீட்சையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டவர்களே போல் அந்த முகங்கள் ஆர்வத்துடன் கவனித்து, புரிதலுடன் எதிர்வினை தர பெருமுயற்சி மேற்கொண்டன. அவனது உறக்கத்திலும் தனது மாணவ ஆவிகளின் பதில்களை ஆழ்ந்து பரிசீலித்து, மோசடியாளர்களால் திசைமாற அனுமதியாமல், அவர்களின் ஒருவித குழப்ப நிலையில் வளரும் புத்திக் கூர்மையைக் கண்டுபிடித்தான். யதார்த்த உலகினுள் ஒரு இடம் பிடிக்கும் தகுதிமிக்க ஆன்மாவினைத் தேடிக்கொண்டிருந்தான்.

ஒன்பது, பத்து இரவுகளுக்குப் பின்னர், தன்னுடைய பாடங்களை சலனமின்றி ஏற்றுக் கொண்ட மாணவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதற்கு ஒன்றுமேயில்லை என்பதையும், ஆனால், அவ்வப்பொழுது தர்க்க நியாயங்கள் கூடிய அளவில் முரண்பட்டவர்கள் நம்பிக்கை தருபவர்கள் என்பதையும் சிறிது கசப்போடு ஏற்றுக் கொண்டான். இதில் முதல் வகையினர் அன்பிற்கும் பாசத்திற்கும் உரியவர்களாக இருந்த போதிலும் அவர்களால் என்றைக்குமே நிஜமான தனிநபர்களாக ஆக முடியாது. இரண்டாவது வகையினர் ஒரு மங்கலான வகையில் ஏற்கனவே தேவைக்கு அதிகமாக நிஜமாகி விட்டிருந்தனர். ஒரு மாலைப் பொழுது(இப்பொழுது அவனது மாலைப் பொழுதுகளும் உறங்குவதற்குத் தரப்பட்டிருந்ததால் விடியற்காலையில் ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்கள் மாத்திரமே அவன் விழித்திருந்தான்) அவனது விரிவான கனவுப் பள்ளியை இறுதியாக நிராகரித்து விட்டு ஒரே ஒரு மாணவனை மாத்திரம் வைத்துக் கொண்டான். அவன் அமைதியானவனாகவும், வெளுத்த உடல் கொண்டவனாகவும், சில நேரங்களில் அடங்காதவனாகவும், கூர்மையான அங்க வடிவங்களுடனும் அந்தக் கனவாளியால் காணப்படுபவனை ஒத்த கூர்மையான அங்க வடிவங்களுடன் இருந்தான். தனது சகமாணவர்களின் திடீர் காணாமல் போதலினால் அவன் அதிகம் பாதிக்கப் படவில்லை. சில தனிப்பட்ட பாடங்களுக்குப் பிறகு அவனுடைய முன்னேற்றம் அவனது ஆசிரியனை வியப்பில் ஆழ்த்தியது. என்றாலும், அழிவை விளைவித்தது. ஒரு நாள் ஒரு பிசுபிசுக்கும் தரிசு நிலத்திலிருந்து வருபவனைப் போலத் தனது உறக்கத்திலிருந்து வெளிவந்து, வெளிர்ந்த மாலை வெளிச்சத்தைக் கண்ணுற்று, முதலில் அதை விடியற்காலையுடன் போட்டுக் குழப்பிக் கொண்டாலும் பின்னர் தான் கனவு காணவில்லை என்பதை அறிந்து கொண்டான். அந்த இரவு முழுவதற்கும், அடுத்த நாளும் உறக்கமின்மையின் அருவருப்பான தெள்ளத் தெளிவு அவன் மீது கனத்துக் கவிந்தது. தன்னைக் களைப்படையச் செய்து கொள்ள சுற்றிலுமிருந்த காட்டினை ஆராய முயன்றான். ஆனால் அவனால் முடிந்ததெல்லாம் ஹெம்லாக் கொடிப்புதர்களிடையே தொடர்ச்சி உடைந்த சிறு சிறு உறக்கங்களை உறங்கியதுதான். அவ்வுறக்கங்களும் தாங்க முடியாத, பண்படாத, தகுதியற்ற ஆழ்பார்வைகளால் விரைவில் மறைந்து விடக் கூடிய மென்சாயல் கொண்டிருந்தன. அவனது பள்ளியை மீண்டும் அமைக்க முயன்று, ஒரு சில சுருக்கமான அறிவுரைகளைக் கூறி முடிக்கு முன்னரே அது உருவம் திரிந்து மறைந்து போயிற்று. அவனது ஏறத்தாழ முடிவற்ற விழிப்புக்காலங்களில், அவனின் வயோதிகக் கண்கள் கோபத்தின் கண்ணீர்த் துளிகளால் கனன்று எரிந்தன.

அவன் உயர்வானதும், கீழ்மையானதுமான ஒழுங்குகளில் சகல புதிர்களை ஊடுருவிய போதிலும், தலை சுற்றச்செய்யும் புத்தியற்ற, ஒழுங்கு முறையற்ற கனவுகளின் உட்பொதிவுகளை வடிவமைக்கும் சிரமகாரியம் ஒரு மனிதனால் முயற்சி செய்யக்கூடியதிலேயே மிகக் கடினமானது-முகமற்ற காற்றினை உருவாக்குவதை விடவும், மணல் கயிற்றினைத் திரிப்பதை விடவும் மிக மிகக் கடுமையானது-என்பதை உணர்ந்தான். . ஒரு தொடக்கத் தோல்வி தவிர்க்கப்பட முடியாதது என்பதையும்ó உணர்ந்தான். அவனை திசை மாறச் செய்த அளப்பரிய பிரமையை மறப்பேன் என சூளுரைத்தான். பிறகு வேறு ஒரு முறைமையைத் தேடித் தேர்ந்தான். அதை முயன்று பார்க்கும் முன்னால் அவனது ஜூரம் வீணடித்த உடல் வலுவினைச் சீர்செய்வதற்கு ஒரு மாதம் செலவழித்தான். கனவு காணுதல் பற்றிய சகல சிந்தனைகளையும் கைவிட்டு ஏறத்தாழ ஒரு பகல் பொழுதின் பெரும்பகுதி நேரம் உறங்கினான். இந்தக் காலகட்டத்தின் சில பொழுதுகளில் கனவு வந்த போது தனது கனவுகளில் லயிப்பதைக் கைவிட்டான். தனது காரியத்தை மீண்டும் கைக்கொள்ளு முன், நிலா ஒரு முழு வட்டத்தினை அடையும் வரை காத்திருந்தான். அப்புறம், மாலையில் நதியின் நீர்களில் தன் உடலைச் சுத்தப்படுத்திக் கொண்டு, கிரகங்களின் கடவுளர்களை வணங்கி, சகல வல்லமை கொண்ட பெயர் ஒன்றின் முறையான சொற்களை உச்சாடனித்து, உறங்கிப் போனான். ஏறத்தாழ உடனடியாக, துடிக்கும் இதயம் ஒன்றினைக் கனவு கண்டான்.

அது துடித்தபடியும், கதகதப்புடனும், ரகசியமாகவும் இருந்ததாகக் கனவு கண்டான். ஒரு முகமோ, பால் வேறுபாடோ இன்றி, மனித உடலத்தின் மங்கிய ரத்தச்சிவப்பில், ஒரு மூடப்பட்ட முஷ்டியின் அளவில் அது இருந்தது. ஒரு பதற்றக் காதலுடன் பதினான்கு தெள்ளிய இரவுகளில் அதைக் கனவு கண்டான். ஒவ்வொரு இரவும் அதை அதிகத் துல்லியத்தோடு அவதானித்தான். அதைத் தொட்டு விடாமல், பார்ப்பதற்கும், கூர்ந்து ஆராய்வதற்கும், அப்பொழுதைக்கப்பொழுது ஒரு பார்வை வீச்சில் அதனைச் சீராக்கவும் மட்டும் தன்னை அனுமதித்துக் கொண்டான். அவன் அதைப் பல தொலைவுகளில் இருந்தும், பல கோணங்களிலிருந்தும் கவனித்துவந்தான். வாழ்ந்து வந்தான். பதினான்காவது இரவில், நுரையீரலுக்குச் செல்லும் முதன்மைக் குருதி நாளத்தினைத் தனது விரலால் தொட்டான். பிறகு அந்த மொத்த இதயத்தையும் உள்ளும் புறமுமாக முழுவதுமாகத் தொட்டுப் பார்த்தான். அந்தப் பரிசோதனை அவனுக்குத் திருப்தியளித்தது. ஒரு நாளிரவு மாத்திரம், வேண்டுமென்றே, கனவு காணாதிருந்தான். அதன் பிறகு அந்த இதயத்திடம் சென்று, ஒரு கிரகத்தின் பெயரை வழிபட்டு வரவழைத்து, பிரதான அங்கங்களில் மற்றொன்றினைக் காட்சி கொள்ளத் தொடங்கினான். ஒரு வருடம் முடிவதற்கு முன்னால் எலும்புக் கூடு மற்றும் கண்ணிமைகள் வரை வந்து விட்டிருந்தான். எண்ணிக்கையில் அடங்காத கேசக் கற்றைகளைக் காட்சி கொள்வதுதான் ஒரு வேளை மிகவும் கடினமான காரியமாக இருந்தது என்று சொல்லலாம். ஒரு முழுமையான மனிதனை, ஒரு இளைஞனை அவன் கனவு கண்ட போதிலும் அந்த இளைஞனால் எழுந்து கொள்ளவோ, பேசவோ, கண்களைத் திறந்து கொள்ளவோ முடியவில்லை. ஒவ்வொரு இரவும்óஅந்த மனிதன் இளைஞனைத் தூங்கும் நிலையில் கனவு கண்டான்.

பண்டைய கிறித்தவ மறைஞானக் கோட்பாட்டாளர்களின் பேரண்டத் தோற்றவியலில் இருந்த படைப்புமுதல்வர்கள், தன் காலில் ஊன்றி நிற்க முடியாத சிவப்பு ஆதாமை வார்த்தெடுத்தனர், அந்தக் கரடுமுரடான, அலங்கோலமான, மூலாதாரமான புழுதியால் ஆன ஆதாம் அளவுக்கே மந்திரவாதியின் இரவுகளில் உருவாக்கப்பட்ட கனவுகளின் ஆதாமும் இருந்தான். ஒரு நாள் மாலை தன் படைப்பாக்கம் முழுவதையும் அழித்து விடும் நிலைமைக்கு (அப்படிச் செய்திருந்தால் அது நல்லதாகவே அமைந்திருக்கும் அவனுக்கு) வந்து கடைசியில் அதற்காக வருந்தி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். பூமி மற்றும் நதியின் கடவுளர்களுக்காக பிரார்த்தனைகளை செய்து தீர்த்த பிறகு பொலி குதிரையாகவோ அல்லது புலியாகவோ இருந்திருக்கக் கூடிய கல்பிரதிமையின் காலடியில் விழுந்து அதன் அறிந்தறியா உதவியைக் கோரி மன்றாடினான். அதே மாலையில் அவன் அந்தப் பிரதிமையைக் கனவில் கண்டான். உயிர்த்துடிப்புடனும், துடித்தபடியும் இருந்த அதைக் கனவில் கண்டான், அது இயற்கைக்கு விரோதமாக புலிக்கும், குதிரைக்கும் இடையிலான கலப்பினச் சேர்க்கையாக இருக்கவில்லை, மாறாக, ஏக சமயத்தில் இவ்விரண்டு மிருகங்களின் குமுறலான தோற்றமாகவும், கூடவே எருது ஒன்றின், ரோஜா ஒன்றின், இடிமழை புயலின் தோற்றமாகவும் இருந்தது. இந்தப் பன்முகக் கடவுள் தனது பூமிபூர்வமான பெயர் நெருப்பென்று தெரியப்படுத்தி, அந்த வட்டக் கோயிலிலும் (அது போன்ற பிறவற்றிலும்) அதற்கு பலி கொடுத்து மனிதர்கள் வணங்கி இருக்கிறார்கள் என்றும், அதன் மந்திர சக்தியால் அந்த மனிதன் தோற்றுவித்த உறங்கும் ஆவி ரூபம் உயிர்ப்பிக்கப்படும் என்றும், நெருப்பைத் தவிரவும், கனவு காண்பவனைத் தவிரவும், உலகின் சகல ஜீவராசிகளும் அவனை ஒரு ரத்தமும் சதையுமான மனிதன் என ஏற்றுக் கொள்வார்கள் என்றும் கூறியது. தனக்குரிய சடங்குகள் பற்றி அந்த மாணவன் அறிவுறுத்தப்பட்டவுடன் அவன் நதியின் கீழ்க்கோடியில் அமைந்த சிதிலமடைந்த கோயிலுக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டது. அதன் பிரமிடுகள் இன்னும் நிலைத்திருந்தன. அவ்விதத்தில் இந்தக் கைவிடப்பட்ட இடத்தில் ஏதோ ஒரு மனிதக் குரல் அவனைப் போற்றிப் புகழக் கூடும். கனவு காண்பவனின் கனவில், கனவு காணப்பட்டவன் விழித்தெழுந்தான்.

மந்திரவாதி கட்டளைகளை நிறைவேற்றினான். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தினை (கடைசியில் அது இரண்டு வருடங்களாக ஆயிற்று) பிரபஞ்சத்தின் புதிர்களிலும், நெருப்புக் கடவுளின் வழிபாட்டிலும் அவனது மாணாக்கனை தீட்ஷைபெறச் செய்வதில் செலவிட்டான். உள் ஆழத்தில், தான் உருவாக்கிய அந்தப் படைப்புயிருக்கு விடை கொடுப்பது அவனுக்கு வருத்தமளித்தது. அவனுக்கு இன்னும் முழுமையாகச் சொல்லித் தரும் சாக்கில், ஒவ்வொரு நாளும் உறக்கத்திற்கென ஒதுக்கி இருந்த மணி நேரங்களைப் நீட்டித்தான். சற்றே குறைபாடுடையதாய் இருப்பதாகத் தோன்றிய வலது தோளை மறுபடியும் வடிவமைத்தான். அப்பொழுதைக்கப்பொழுது இதெல்லாம் முன்பே நடந்தது மாதிரியான உணர்வினால் துன்பப்பட்டான். ஆனால், மொத்தத்தில், அவன் காலத்தின்ó பெரும்பகுதி சந்தோஷமாக இருந்தான். கண்களை மூடிக்கொள்ளும் போது அவன் நினைப்பான், “இப்போது நான் என் மகனுடன் இருப்பேன். அல்லது, அடிக்கடி, நான் பெற்ற மகன் எனக்காகக் காத்திருக்கிறான், நான் போகாவிட்டால் அவன் உயிர்த்திருக்க மாட்டான்.”

கொஞ்சம் கொஞ்சமாக, அந்த இளைஞனை யதார்த்தத்திற்குத் தயார்ப்படுத்தினான். ஒரு சமயம் தூரத்து சிகரத்தில் கொடியினை ஏற்றச் சொல்லிக் கட்டளையிட்டான். அடுத்த நாள் அந்த மலைச் சிகரத்தின் மீது கொடி ஒளிர்ந்தது. இதை ஒத்த பிற பாடங்களையும், சொல்லிக் கொடுக்க ஒன்றை விட மற்றொன்று இன்னும் சவால் மிகுந்ததாய் இருக்கும்படியாக, சொல்லிக் கொடுத்தான். அவனது மகன் பிறக்கத் தயாராக ஆகிவிட்டான் என்பதையும் பொறுமையற்றுப் பரபரத்துக் கொண்டிருக்கிறான் என்பதையும் அவன் கசப்புடன் புரிந்து கொண்டான், ஒரு வேளை பொறுமை இழந்து விட்டானோ என்பதை அறிந்து வருத்தமுற்றான். முதல் முறையாக அந்த இரவு அவனை முத்தமிட்டு நதியின் கீழ்க் கோடியிலிருந்த கோயிலுக்கு அனுப்பி வைத்தான். கோயிலின் சிதிலங்கள், நுழைய முடியாத அடர் கானகம் மற்றும் சதுப்பு நிலங்களின் பலப் பல மைல்களுக்கு அப்பால் இருந்தும் வெண்ணிறத்தில் காணக்கிடைத்தன. ஆனால், முதலில் தான் ஒரு ஆவி ரூபம் என்பதை அவன் என்றுமே அறியாமலிருக்கவும், மற்றவர்களைப் போலவே ஒரு மனிதனாகக் கருதப்படவும் ஏதுவாய் அவனுடைய பயிற்சிக்கால வருடங்களை முழுமுற்றாக மறந்து போகச் செய்தான்.

அவனது வெற்றியும், நிம்மதியும் ஒரு களைப்பினால் ஒளிமங்கிப் போனது. காலையிலும், மாலை மயங்கும் பொழுதிலும் கல் உருவத்தின் முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்தான். அவனது மெய்யற்ற மகனும் இதனை ஒத்த சடங்குகளை நதியின் கீழ்க் கோடியில் இருந்த வேறு வட்டச் சிதிலங்களில் செய்து கொண்டிருப்பான் என்று கற்பனை செய்தபடி கல் உருவத்தின் முன் சாஷ்டாங்கமாக விழுவான். இரவில் அவன் இதன் பிறகு கனவு காணவில்லை, அல்லது பிற மனிதர்கள் எப்படி கனவு காண்பார்களோ அப்படியே கனவு கண்டான். இப்பொழுது ஒரு வித தெளிவின்மையுடன் நடப்புலகின் உருவங்களையும், சப்தங்களையும் புலன்காட்சி கொண்டான். ஏன் எனில் அங்கே இல்லாத அவன் மகன் மந்திரவாதியின் குறைவுபடும் பிரக்ஞையில் தன் ஊட்டத்தினைப் பெற்றுக் கொண்டிருந்தான். அவனது வாழ்வின் நோக்கம் முழுமையடைந்துவிட்டது; நிறைவேறிவிட்டது. ஒரு விதமான பெரு மகிழ்ச்சியில் அவன் நீடித்தான். ஒரு கால எல்லைக்குப் பிறகு அவனுடைய கதை சொல்லிகள் சிலர் வருடங்களாகக் கணக்கிடுகிறார்கள், பிறர் பாதிப்பத்து வருடங்களாக மதிப்பிடுகிறார்கள். ஒரு நள்ளிரவில் இரண்டு தோணி ஓட்டிகளால் விழிப்படைந்தான். அவர்களின் முகங்களை அவனால் பார்க்க முடியவில்லை, ஆனால் அவர்கள் வடக்குப் பகுதியில் இருந்த மந்திரமனிதன் ஒருவன் தீக்கிரையாகாமல் நெருப்பின் மீது நடப்பது பற்றி அவனிடம் சொன்னார்கள். மந்திரவாதி திடீரென்று அந்தக் கடவுளின் வார்த்தைகளை நினைவுக்கொண்டான். உலகின் படைப்புயிர்கள் அனைத்திலுமே, நெருப்புக்கு மட்டும் தான் அவன் மகன் ஒரு ஆவி என்று தெரியும் என்பதை நினைவு கூர்ந்தான். ஆரம்பத்தில் ஆறுதலாக இருந்த இந்த நினைவு கூறல், அவனை இறுதியில் வதைப்பதில் முடிந்தது. இந்த வினோதச் சலுகைப் பற்றி அவன் மகன் யோசனை செய்யக் கூடும் என்றும் அச்சப்பட்டான். ஏதோ வகையில் தான் வெறும் தோற்றமே என்ற தனது நிலையை எப்படியாவது கண்டு பிடித்து விடுவான்.

மந்திரவாதி தன் மகனின்-ஆயிரத்து ஒரு இரவுகளின் வியாபகத்தில் அங்கம் அங்கமாய், சாயல் சாயலாய் சிந்தனையில் வார்த்தெடுத்த மகனின் எதிர்காலம் பற்றி மந்திரவாதி கவலை கொள்வது இயல்பே.

இந்தப் பதற்றங்களின் முடிவு திடீரென வந்தது. ஆனால் சில குறிப்பிட்ட சகுனங்கள் இதை முன் கூறின. முதன் முதலில் ஒரு நீண்ட வறட்சிக்கு பிறகு, ஒரு மலை முகடின் உச்சியில் இருந்த தூரத்து மேகம் ஒரு பறவை அளவுக்கு லேசாகவும் விரைவாகவும் தெரிந்தது; அடுத்து, தெற்கு வானின் நிறம், சிறுத்தைப் புலியின் ஈறுகளை ஒத்த ரோஜா நிறத்தை அடைந்தது. அதன் பிறகு, இரவின் உலோகத்தினை துருப்பிடிக்கச் செய்த தூண்களென அடர்ந்த புகை; இறுதியாக கானகத்து விலங்குகளின் தலைதெறிக்கும் பெரும் பீதி. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் என்ன நடந்ததோ அது இப்போது நடந்தது. நெருப்புக் கடவுள் கோயிலின் சிதிலங்கள் நெருப்பால் அழிக்கப்பட்டன. பறவைகளற்ற விடியலில் நெருப்பின் சுழலும் விரிப்புகள் சுவர்களைச் சூழ்வதை மந்திரவாதி பார்த்தான். ஒரு கணம், நதியில் தஞ்சம் அடையலாம் என நினைத்தான். ஆனால் மரணம் அவனது வருடங்களுக்கு கிரீடமிடும் பொருட்டும், அவனது சிரமங்களில் இருந்து விடுதலை அளிக்கவும் வருகிறது என்று உணர்ந்தான். உயர்ந்து கிளம்பும் நெருப்பின் பிழம்புகளின் உள்ளாக நடந்தான். அவனது சதைக்குள் ஊடுருவதற்குப் பதிலாக அவை அவனை வருடி, சூடோ, தகித்தலோ இன்றி அவனை விழுங்கின. ஒரு ஆசுவாசத்தில், தன்னடக்கத்தில், பெரும் பீதியில், அவன் புரிந்து கொண்டான் தானுமே வேறு எவரோ ஒருவர் கனவு கண்டுகொண்டிருந்ததின் ஒரு தோற்றமே என்பதை.

horizontal-line21

Posted in Uncategorized | Tagged: , | Comments Off

கிளை பிரியும் பாதைகளின் தோட்டம்-Borges-Garden of Forking Paths-Translated by Brammmarajan

Posted by brammarajan on November 22, 2008

கிளை பிரியும்  பாதைகளின் தோட்டம்-Translated by Brammarajan

விக்டோரியா ஓகேம்ப்போவுக்கு

borders4

லிடல் ஹார்ட்  என்பவர் எழுதிய முதல் உலகப் போரின் வரலாறு என்ற நூலில் பதிமூன்று பிரிட்டீஷ் தரைப்படைப் பிரிவுகள் (1400 தரைப் படை ஆயுத வண்டிகளின் உதவியுடன்) Sarre-Montauban பிரிவின் மீது 1916 ஆம் ஆண்டு  ஜூலை மாதம் 24 ஆம் தேதி செய்வதாகத் திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல் 29ஆம் தேதி காலைவரை ஒத்திப்போடப்பட்டது என்பதை 22ஆம் பக்கத்தில் காண்பீர்கள். பொத்துக் கொண்டு கொட்டிய மழை இந்தத் தாமதத்தை ஏற்படுத்தியது என்று கேப்டன் லிடல் ஹார்ட் குறிப்பிட்ட போதிலும் அது முக்கியமற்ற ஒரு காரணம் என்பது உறுதி.

பின்வரும் அறிக்கை யூ சூன் என்பவரால் சொல்லப்பட்டு, மறுபடி படித்துப் பார்க்கப்பட்டு, கையெழுத்திடப்பட்டது. சிங்காட்டோவில் உள்ள Hochschule வில் சில காலம் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார் யூ சூன். அவரின் அறிக்கை, மேற்குறிப்பிட்ட அந்த முழு நிகழ்ச்சியின் மீது சந்தேகமே பட்டிராத ஒரு தெளிவினை அளிக்கிறது. அவருடைய அறிக்கையின் முதல் இரண்டு பக்கங்களைக் காணவில்லை. அறிக்கை தொடர்கிறது.

. . . நான் தொலைபேசி ரிஸீவரைக் கீழே வைத்தேன். உடனடியாக ஜெர்மன் மொழியில் எனக்குப் பதில் தந்த குரலினை அடையாளம் கண்டு கொண்டேன். அந்தக் குரல், கேப்டன் ரிச்சட் மேடனுடையது. விக்டர் ரூனபெர்க்கின் இருப்பிடத்தில் மேடன் இருப்பது எங்கள் பதற்றங்களுக்கெல்லாம் ஒரு முடிவினை அர்த்தப்படுத்தியது–ஆனால் இது, இரண்டாம் பட்சமாக எனக்குத் தோன்றியது, கண்டிப்பாகத் தோன்றியிருக்க வேண்டும்,–அது எங்கள் உயிருக்கும் முற்றுப் புள்ளியும்தான் என.  தவிர ரூனபெர்க் கைது செய்யப்பட்டான். அல்லது கொலை செய்யப்பட்டான் என்றும் அது அர்த்தப் படுத்தியது.* அந்த நாளின் சூரியாஸ்தமனத்திற்குள் நானும் அதே மாதிரியான முடிவினை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மேடன் மசியமாட்டாதவன். அல்லது அவ்வாறு இருக்க வேண்டிய கட்டாயமுற்றவன். இங்கிலாந்தின் பணியில் இருந்த அந்த ஐரிஷ்காரன், கடமை தவறியதற்கு அல்லது காட்டிக் கொடுத்தலுக்காக குற்றம் சாட்டப்பட்டவன்.   ஜெர்மன் ரைக்கின் இரு ரகசிய உளவு ஏஜண்டுகளைக் கண்டுபிடித்து, கைது செய்து தீர்த்துக்கட்டுவதற்கான இந்த அரிய வாய்ப்பினை நன்றியுடன் ஏற்று இந்த அற்புதமான சந்தர்ப்பத்தை எப்படிக் கைப்பற்றத் தவறுவான்?  நான் என் அறைக்குச் சென்றேன்; அபத்தமாக கதவைச் சாத்திவிட்டு என் குறுகலான இரும்புக் கட்டிலில் சரிந்தேன். ஜன்னலின் வழியாக பரிச்சயமான வீட்டுக் கூரைகளையும் மேகம் மறைத்த ஆறுமணிச் சூரியனையும் பார்த்தேன். எவ்விதமான முன்தெரிவித்தலோ அல்லது அறிகுறிகளோ இல்லாத அந்த நாள் எனது இரக்கமற்ற மரண நாளாக இருக்கும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இறந்து போன என் தந்தையை மீறியும், ஹை ஃபெங்கின்  சமச்சீரான தோட்டம் ஒன்றில் நான்  குழந்தையாய் இருந்தேன் என்பதை மீறியும்–இப்போது–நான் சாகப் போகிறேனா? சகலமும் ஒரு மனிதனுக்கு இந்தக் கணத்தில், மிகச் சரியாக,

இந்தக் கருதுகோள் வெறுக்கத்தக்கது, விநோதமானது. ஹான்ஸ் ராஸனர் என்கிற விக்டர் ரூனபர்க் ரஷ்யாவைச் சேர்ந்தவன். அவனைக் கைது செய்ய வாரண்ட்டுடன் வந்திருந்த கேப்டன் ரிச்சட் மாடனை ஆட்டோமேடிக் துப்பாக்கியால் தாக்கத் தயாரானான். மாடன் தற்காப்புக்காக தாக்கியபோது ஏற்பட்ட காயத்தினால் ரூனபர்க் இறந்தான். (எடிட்டரின் குறிப்பு)

இப்போதுதான் நடக்கிறது என்பதை ஆழ்ந்து சிந்தித்தேன்.  நூற்றாண்டுகளின் நூற்றாண்டுகளாக நிகழ்காலத்தில்தான் விஷயங்கள் நடக்கின்றன. காற்றிலும் இந்த பூமியின் முகத்தின் மீதும் கடலின் மீதும், உள்ள கணக்கற்ற மனிதர்கள் மற்றும் நிஜமாக நடந்து கொண்டிருப்பதெல்லாம் இப்போது எனக்கு நடக்கின்றன . . . . இம்மாதிரியான சிந்தனையின் கட்டற்ற ஓட்டத்தினை, பொறுப்பதற்கரிய, மேடனின் குதிரை போன்ற முகம் நிறுத்தியது. எனது வெறுப்புக்கும், பீதிக்கும் இடையே (இப்பொழுது நான் பீதியைப் பற்றிப் பேசுவது என்னளவில் அர்த்தமற்றதாகிறது. நான் ரிச்சட் மேடனை பழித்துவிட்டபடியாலும், எனது கழுத்து தூக்குக் கயிற்றுக்கு ஏங்குவதாலும்) அந்தக் கொந்தளிப்பான, சந்தோஷமான போர் வீரன் என்னிடத்தில் ரகசியம் இருப்பதாக சந்தேகப்படவில்லை என்று எனக்குத் தோன்றியது. Ancre நதியின் பக்கம் புதிய பிரிட்டீஷ் தரைப்படைத் துருப்புக்கள் முகாம் போட்டிருந்த இடம்–மிகச் சரியான இடம்–எதுவென்பது தான் ரகசியம். சாம்பல் நிற ஆகாயத்தில் ஒரு பறவை குறுக்காகப் பறந்தது.  அதை நான் ஒரு விமானமாக மாற்றிப் புரிந்து கொண்டேன். அந்த விமானத்தை (பிரெஞ்சு வானத்தின் பின்னணியில்) தரைப்படையின் மீது செங்குத்தாகக் குண்டுகளை வீசி அழிக்கக்கூடிய பல போர் விமானங்களாகவும்.  ஒரு துப்பாக்கிக் குண்டு என் வாயைச் சிதைப்பதற்கு முன் என்னால் மட்டும் அந்த ரகசியப் பெயரை உரக்கக் கத்தி ஜெர்மனியில் கேட்கும்படி  அறிவிக்க முடியுமானால்? என் மனிதக் குரல் பலவீனமானது.  நாங்கள் ஸ்டாஃபோர்ஷயரில் இருக்கின்றோம் என்பதைத் தவிர வேறு எதுவும் என்னைப் பற்றியும் ரூனபர்க் பற்றியும் தெரியாமல்–பெர்லினில் காற்று வீசியடிக்கும் தனது அலுவலகத்தில் அமர்ந்து, முடிவே இல்லாது செய்தித்தாள்களை ஆராய்ந்து கொண்டு, எங்கள் அறிக்கைக்காகக் காத்துக் கொண்டிருக்கிற, நோயாளியான எனது முதன்மையதிகாரியின்  வெறுப்பு மிகுந்த காதுகளுக்கு எப்படி கேட்கச் செய்வது?. . . நான் உரக்கக்கூறினேன்.  நான் தப்பித்தாக வேண்டும். ஏதோ மேடன் என்னைப் பிடிக்க மறைந்திருப்பது போல., ஒரு வித பயனற்ற அமைதியின் முழுமையில் ஓசையின்றி எழுந்தேன்.  ஏதோ ஒன்று– எனது கையிருப்புகள் ஒன்றுமே இல்லை என்பதை நிரூபிப்பதற்கான பயனற்ற வெறும் பகட்டு–என் பாக்கெட்டுகளைத் துழாவச் செய்தது. நான் எதைப் பார்ப்பேன் என்று தெரிந்திருந்தேனோ அதைப் பார்த்தேன். அமெரிக்க கடிகாரம், நிக்கல் செயின், ஒரு சதுரமான நாணயம், ரூனபெர்க்கின் அறைக்கான வில்லங்கத்தில் மாட்டிவிடக் கூடிய சாவிகளைக் கொண்ட வளையம், ஒரு நோட்டுப் புத்தகம், உடனடியாக கிழித்துவிட வெண்டுமென்று தீர்மானித்த ஒரு கடிதம் (அதை நான் செய்யவில்லை) ஒரு crown, இரண்டு ஷில்லிங், சில பென்சுகள், சிவப்பு மற்றும்  நீல மைய் கொண்ட பென்சில், கைக்குட்டை, ஒரே ஒரு குண்டு மட்டுமிருந்த ரிவால்வார். எனக்குள் தைரியத்தை வரவழைக்கும் பொருட்டு அந்த ரிவால்வாரை அபத்தமாகக் கையில் எடுத்து கனத்தை அளந்தேன். ஒரு துப்பாக்கி சப்தமானது நீண்ட தொலைவிற்கு அப்பால் கேட்கும் என்று தெளிவற்று எண்ணினேன். பத்து நிமிடங்களில் திட்டத்தினை முழுமைப்படுத்தினேன். செய்தியை ஒலிபரப்புவதற்குத் தகுந்த ஒரே ஒரு மனிதனின் பெயரை தொலைபேசி டைரக்டரி காட்டியது.  ஃபென்டன் புறநகர்ப் பகுதியில், அரை மணிநேர ரயில் பயணத்தில் சென்று அடையக்கூடிய தூரத்தில் அந்த மனிதன் வசித்தான்.

நான் ஒரு கோழைத்தனமான மனிதன். அதன்  அபாயங்களின் தன்மையை எவராலும் மறுக்க முடியாத திட்டத்தினை முடிவுக்கு கொண்டுவந்து விட்டதால் , இப்போது நான் சொல்கிறேன், அதன் செயலாக்கம் பயங்கரமாக இருந்ததை நான் அறிவேன். ஜெர்மனிக்காக நான் அதைச் செய்யவில்லை. இல்லை. ஒரு உளவாளியாக இருக்க வேண்டிய கையறுநிலையை என்மீது சுமத்திய ஒரு காட்டுமிராண்டி நாட்டைப் பற்றி எனக்கு எந்த அக்கறையுமில்லை. மேலும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு மனிதரை நான் அறிவேன்–ஒரு பவ்யமான மனிதர்–என்னைப் பொருத்தவரை அவர் கதேவை விட எந்த வகையிலும் தகுதி குறைந்தவரல்லர். ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகத்தான் அவருடன் நான் பேசியிருப்பேன், ஆனால் அந்த நேரத்தில் அவர்தான் எனக்கு கதே. . . . நான் இதைச் செய்வதற்குக் காரணம் என் முதன்மை அதிகாரி என் இனத்து மனிதர்களைக் கண்டு ஏதோ வகையில் அஞ்சினார்–என்னுள் இணையும் என் கணக்கிலடங்காத மூதாதையர்களுக்காக. ஒரு மஞ்சள் நிற மனிதன் அவரது படைகளைக் காப்பாற்ற முடியும் என்று அவருக்கு நிரூபிக்க விரும்பினேன். மேலும் நான் கேப்டன் மேடனிடமிருந்து தப்பிக்க  வேண்டும். அவனது கைகளும், குரலும் எந்த வினாடியிலும் என் கதவருகில் வந்து விடலாம். மௌனமாய் உடையணிந்து, கண்ணாடியில் தெரிந்த என் உருவத்திடம் விடை பெற்று, படியிறங்கி, அமைதியான தெருவினை உற்றுக் கவனித்த பின் வெளியே வந்தேன். என் வீட்டிலிருந்து ரயில் நிலையம் அதிக தூரமில்லை என்றாலும் ஒரு வாடகைக் காரை அமர்த்திக்கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும் என்று நினைத்தேன். என்னை அடையாளம் கண்டு பிடித்துவிடக்கூடிய சாத்தியம் இதனால் குறையும் என எனக்குள் விவாதித்தேன்; ஆள் நடமாட்டமே இல்லாத தெருவில் என்னை எளிதாகக் கண்டுபிடித்து விட முடியும். மேலும் பாதுகாப்பில்லாது போகும். பிரதான நுழைவாயிலுக்கு சற்று தூரம் முன்பாகவே வண்டியை நிறுத்தும்படி டிரைவரிடம் சொல்லியிருந்தேன். நானே உருவாக்கிக் கொண்ட ஏறத்தாழ  வலிமிக்க நிதானத்துடன் வண்டியிலிருந்து இறங்கினேன். நான் ஆஷ்குரோவ் என்ற கிராமத்திற்குச் செல்ல வேண்டியிருந்த போதிலும் இன்னும் தூரமான ஒரு ஸ்டேஷனுக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டேன். இன்னும் சில நிமிடங்களில் ரயில் கிளம்பத் தயாராக இருந்தது. அதாவது 8.50 க்கு.  ஏறத்தாழ  அடுத்த ரயில் கிளம்ப ஒன்பதரை மணி ஆகும். நான் விரைந்தேன். பிளாட்பாரத்தில் ஆட்களே இல்லை. கோச்சுகள் வழியாக நடந்தேன். சில விவசாயிகள், துக்க நாட்களுக்காக உடை உடுத்தியிருந்த ஒரு பெண்,  டேசிடஸ் எழுதிய Annalsஐ தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன், காயம்பட்ட ஆனால் சந்தோஷமான ராணுவ வீரன் ஆகியோரைப் பார்த்தேன்.

ஒரு வழியாக ரயில் பெட்டிகள் முன்நோக்கி இழுத்துக் குலுங்கின. நான் அடையாளம் கண்ட ஒரு மனிதன் பிளாட்பாரத்தின் முனை வரை பயனற்று ஓடிவந்தான். அவன் கேப்டன் ரிச்சட் மேடன். பீதியூட்டும் ஜன்னலில் இருந்து இருக்கையின் தூரத்து முனையில் போய் ஒதுங்கினேன். குன்றிப்போன இந்நிலையில் இருந்து ஒரு விதமான இழிவான மனநெகிழ்வுக்கு உள்ளானேன். இருவருக்கான யுத்தம் ஏற்கனவே தொடங்கிவிட்டதென்றும், ஒரு விதிவசமான சந்தர்ப்பத்திலும் வெறும் நாற்பது நிமிடங்களுக்கே எனினும் எதிராளியின் தாக்குதலை முறியடித்தேன் என்றும் மிகச் சொற்பமான வெற்றிகளில் இது ஒன்று என்ற போதிலும் முழுமுற்றான வெற்றியை இது முன் அறிவிக்கிறது என்று நான் சொல்லிக் கொண்டேன். துணிகரமான அந்தக் காரியத்தை வெற்றிகரமாக சாதிக்கக் கூடிய மனிதன் நான் என எனது கோழைத்தனமான மனநெகிழ்வு நிரூபித்தது என அதே அளவு பொய்மையோடு எனக்குள் விவாதித்தேன். இந்த பலவீனத்திலிருந்து என்னைக் கைவிட்டு விடாத ஒரு பலத்தைப் பெற்றேன். மனிதன் ஒவ்வொரு நாளும் இன்னுமின்னும் கொடுரமான நடவடிக்கைகளை மேற்கொள்வான் என்பதை என்னால் முன் கூட்டியே பார்க்க முடிகிறது ; விரைவிலேயே போர்வீரர்களையும் படைகளையும் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு நான் பின் வரும் ஆலோசனைகளை வழங்குகிறேன்.–ஒரு கொடுமையான அல்லது அநியாயமான செயலை செய்யப் போகிறவர் ,அதை தான் ஏற்கனவே செய்து முடித்து விட்டதாகக் கற்பனை செய்து கொள்ள வேண்டியதும் , கடந்த காலத்தின் மாற்ற முடியாத தன்மையைக் கொண்ட ஒரு வருங்காலத்தைத் தன் மேல் வலிந்தேற்றிக் கொள்ள வேண்டியதும் மிக அவசியம். இப்படி நான் தொடர்ந்தேன்- ஏற்கனவே இறந்துபோனவனுடையதைப் போன்ற எனது கண்களைக் கொண்டு அந்தப் பகல் மறைவதையும்– ஒரு வேளை இது கடைசியாக இருக்கலாம்–இரவின் பரவுதலையும் பதிவு செய்தவாறு, நான் பயணமானேன்., சாம்பல் மரங்களிடையே நிதானமாய் ரயில் ஓடிக்கொண்டிருந்தது. ஏறத்தாழ வயல்களுக்கு நடுவில் நின்றது. எவரும் நிலையத்தின் பெயரை அறிவிக்கவில்லை. பிளாட்பாரத்தில் இருந்த சில இளைஞர்களிடம் “ஆஷ்குரோவ்?” என்று கேட்டேன் “ஆஷ்குரோவ்”தான் என்று பதில் கூறினார்கள். நான் ரயிலை விட்டிறங்கினேன்.

ஒரு விளக்கு பிளாட்பாரத்திற்கு வெளிச்சம் தந்தது. ஆனால் பையன்களின் முகங்கள் நிழலில் இருந்தன. அதில் ஒருவன் “Dr.ஸ்டீபன் ஆல்பர்ட்டின் வீட்டுக்கா செல்கிறீர்கள்?”‘ என்று கேட்டான். என் பதிலுக்குக் காத்திராமல் அவன் சொன்னான் “வீடு இங்கிருந்து நீண்ட தொலைவில் இருக்கிறது. இந்த சாலையில் சென்றீர்களானால் நீங்கள் வழி தவறிவிட மாட்டீர்கள். ஒவ்வொரு குறுக்குச் சாலை வரும்போதும் இடதுபக்கமாகத் திரும்ப வேண்டும்.”‘அவர்களிடம் ஒரு நாணயத்தை எடுத்து வீசினேன் (என் கடைசி).  கல் பாவப்பட்ட படிகளில் இறங்கி தனிமையான சாலையில் நடக்கத் தொடங்கினேன். அது மலைச்சரிவில் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கியது . அந்த சாலை மூலாதீனமான மண்ணால் ஆகியிருந்தது. தலைக்கு மேல் மரக்கிளைகள் பின்னலிட்டன. தாழ்ந்த முழு நிலவு என்னைத் தொடர்ந்து வருவது போலத் தோன்றியது.

ரிச்சட் மேடன் ஏதோ வகையில் எனது நெருக்கடியான திட்டத்திற்குள் ஊடுருவி விட்டான் என ஒரு கணம் நினைத்தேன்.  உடனே அது சாத்தியமில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். எப்போதும் இடது புறம் திரும்ப வேண்டும் என்ற அறிவுரை, சில சுழல்வட்டப்புதிர்களின் மையப்புள்ளியை கண்டு பிடிப்பதற்கான பொதுவான செயல்முறையை நினைவூட்டியது. சுழல்வட்டப் புதிர்கள் பற்றி ஒருவித புரிந்துகொள்ளல் எனக்கு உண்டு. யூனான் பகுதியின் கவர்னராக இருந்த, சூயி பென்னின் கொள்ளுப் பேரனாக நான் இருப்பது ஒன்றுமில்லாமல் போய் விடுவதற்கல்ல. சூயி பென் லௌகீக உலகின் அதிகாரத்தை இரண்டு விஷயங்களுக்காகத் தியாகம் செய்தார்.   ஹுங் லா மெங்  நூலில் இருப்பதை விட அதிகம் கதாபாத்திரங்கள் நிறைந்திருக்கக் கூடிய ஒரு நாவலை எழுதுவதற்காகவும், சகல மனிதர்களும் தொலைந்து போய் விடக்கூடிய ஒரு சுழல் வட்டப் புதிரினை கட்டுவதற்காகவும் பதின்மூன்று வருடங்களை (முற்றிலும் வேறுபட்ட பணிகளுக்கு) தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். ஒரு அந்நியனின் கை அவர் உயிரைப் பறித்து விட்டது. அவருடைய நாவல் கோர்வை இல்லாதிருந்தது. புதிரைக் கண்டுபிடிக்க எவராலும் முடியவில்லை. ஆங்கில நாட்டு மரங்களுக்குக் கீழே இருந்தபடி, தொலைந்து போன அந்தப் புதிரைப் பற்றித் தியானித்தேன். ஒரு மலையின் சிகரத்தில் பூரணமானதாயும், தூய்மை மீறப்படாததாயும் அப்புதிரைக் கற்பனை செய்தேன். நெல் வயல்களால் அழித்தெழுதப்பட்டிருப்பதாக, நீருக்கு அடியில் அது இருப்பதாகக் கற்பனை செய்தேன். எண்கோணக் கூடாரங்கள் மற்றும் திரும்பு பாதைகள் போன்றவற்றால் அது அமைக்கப்பட்டிராது, நதிகளாலும், சமஸ்தானங்களாலும், அரசுகளாலும் அது எல்லையற்று அமைந்திருப்பதாக. . . . கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் சுற்றிச் சூழ்ந்து, வளைந்து பெருகி, எப்படியோ நட்சத்திரங்களையும் சம்மந்தப்படுத்தக்கூடிய, புதிர்களின்புதிரான  சுழல்வழி யினைக் கற்பனை செய்து பார்த்தேன்.

இந்தப் பொய்யான காட்சிகளால் ஈர்க்கப்பட்டு, துரத்தப்படும் ஒருவனின் கதியை நான் மறந்து போனேன். அறியப்பட்டிராத ஒரு காலவரையறைக்குள் இவ்வுலகினை அரூபமாய் உட்கிரகிக்கக் கூடியவனாக என்னை உணர்ந்தேன். மங்கலான ஆனால் உயிர்ப்புடனிருந்த கிராமப்புறம், அந்த நிலவு, நாளின் மிச்சங்கள் ஆகியன என் மீது ஆட்சி செலுத்தின. சாலையின் தாழ்வான சரிவு, களைப்பின் சாத்தியத்தை இல்லாமல் செய்தது. மதியம் ,இணக்கமும் நெருக்கமும் கொண்டதாகவும், எல்லையற்றதாகவும் இருந்தது. பாதை இறங்கி இப்போது குழம்பித் தோன்றிய புல்பரப்புகளுக்கு இடையில் கிளைத்துப்பிரிந்தது. உச்சஸ்தாதியினதும் ஏறத்தாழ அசை வடிவானதும் ஆன இசை என்னை அடைந்து, மாறி வீசும் காற்றினாலும் இலைகளாலும் தொலைவினாலும் கூர்மை குறைந்து பின்வாங்கியது. ஒரு மனிதனாகப்பட்டவன் பிற மனிதர்களுக்கும், பிற மனிதர்களின் கணங்களுக்கும் எதிரியாக இருக்கலாமே தவிர ஒரு நாட்டுக்கே இருக்க முடியாது: மின்மினிகளுக்கு, சொற்களுக்கு,தோட்டங்களுக்கு, நீரோடை களுக்கு, சூரியாஸ்தமனங்களுக்கு எதிரியாக இருக்கவே முடியாது. இப்படியாக நான் ஒரு உயரமான துருப்பிடித்த கேட்டுக்கு முன்னால் வந்து சேர்ந்தேன். குறுக்குக் கம்பிகளின் இடைவெளியில் பாப்லர் மரக்கூட்டத்தையும் ஒரு விதான மண்டபத்தையும் அடையாளம் கண்டேன். திடீரென்று இரண்டு விஷயங்களைப் புரிந்து கொண்டேன்: இசையானது விதான மண்டபத்திலிருந்து வந்ததென்பதையும், அது சீனத்து இசை என்பதையும். முதலாவது அற்பமானது ; இரண்டாவது நம்பவே முடியாதது. பிரத்யேகமாய் இதே காரணத்திற்காக எவ்வித சிரத்தையுமின்றி திறந்த மனத்துடன் அதை நான் ஏற்றுக் கொண்டேன். அங்கே ஒரு அழைப்பு மணி இருந்ததா அல்லது நான் கையால் கேட்டினை தட்டினேனா என்பது எனக்கு நினைவில்லை. இசையின் கீற்றுத் தெறிப்புகள் தொடர்ந்தன.

வீட்டின் பின்புறத்திலிருந்து ஒரு லாந்தர் விளக்கு நெருங்கி வந்தது: சில சமயம் மரங்களால் கோடிடப்பட்டும், சில சமயம் மறைக்கப்பட்டும் வந்த அந்த காகித லாந்தர் ஒரு மத்தள உருவிலும் நிலாவின் நிறத்திலும் இருந்தது. அதை ஒரு உயரமான மனிதர் பிடித்திருந்தார். அவர் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. காரணம் ஒளி என் கண்களைக் கூசச் செய்தது. அவர் கதவைத் திறந்து மெதுவாக என் மொழியிலேயே சொன்னார்.’”பக்திமிக்க சி பெங் எனது தனிமையை தொடர்ந்து, இடைவிடாது சரி செய்கிறார் என்பதைப் பார்க்க முடிகிறது. சந்தேகமின்றி தோட்டத்தைப் பார்க்கத்தானே விரும்பினீர்கள்?”

எங்களது அயல் நாட்டுத் தூதர்களில் ஒருவரின் பெயரினை அடையாளம் கண்டு கொண்ட நான் சற்றே மனச்சமன் குலைந்து “தோட்டமா?”‘என்றேன்.

“கிளை பிரியும் பாதைகளின் தோட்டம்”

ஏதோ ஒன்று என் ஞாபகத்தில் கிளர்ந்தது. புரிந்துகொள்ள முடியாத நிச்சயத்துடன் நான் சொன்னேன், “என் மூதாதை சூயு பென்னின் தோட்டமா?”

“உங்கள் மூதாதையா? உங்கள் பிரசித்தமான மூதாதையா? உள்ளே வாருங்கள்”.

எனது இளம் பிராயத்தைப் போலவே வளைந்து வளைந்து சென்றது ஈரமான பாதை. மேற்கு நாடுகள் மற்றும் கிழக்கு நாடுகளின் புத்தகங்கள் அடங்கிய நூலகத்திற்கு வந்து சேர்ந்தோம். தொலைந்துபோன என்சைக்குளோபீடியாவின் பல தொகுதிகள் மஞ்சள் பட்டுத் துணியில் பைண்ட் செய்யப்பட்டிருப்பதை  அடையாளம் கண்டேன். அவை  பிரகாசமிகுந்த பேரரசினைச் சேர்ந்த மூன்றாவது பேரரசரால் எடிட் செய்யப்பட்டது. ஆனால் அச்சாகவே இல்லை. வெண்கலத்தில் வார்க்கப்பட்ட ஃபீனிக்ஸ் பறவைக்கு  அருகில் கிராமபோனில் ஒரு இசைத்தட்டு சுழன்றது. பல நூற்றாண்டுகள் பழமையான ஒரு Famille Rose பூச்சாடியையும் பாரசீகத்து மட்பாண்ட கைவினைஞர்களிடமிருந்து எங்கள் கைவினைஞர்கள் காப்பியடித்த ஒரு வித நீலத்தின் வகையையும் கூட என்னால் நினைவு கூற முடிகிறது. . .

ஒரு புன்முறுவலுடன் ஸ்டீபன் ஆல்பர்ட் என்னை உற்றுக் கவனித்தார். நான் கூறியபடி அவர் மிக உயரமாயிருந்தார்– கூர்மையான தோற்றக் கூறுகளுடனும், நரைத்த தாடியுடனும் சாம்பல் நிறக் கண்களுடனும் காணப்பட்டார். “சீனவியலாளராக ஆகும் எண்ணம் வருமுன்” டியன்ட்சன் பகுதியில் அவர் ஒரு மதப்பிரச்சாரகராக இருந்ததாகக் குறிப்பிட்டார்.

நாங்கள் அமர்ந்தோம்–நான் நீண்ட தாழ்வான திவான் மீது அமர ஜன்னலுக்கு முதுகைக் காட்டியபடி உயரமான வட்டவடிவ கடிகாரத்திற்கருகில் அவர் அமர்ந்தார். என்னைத் துரத்திவரும் ரிச்சட் மேடன் இன்னும் அரைமணி நேரத்திற்கு இங்கு வந்து சேர முடியாது. என்னுடைய மாற்றமுடியாத தீர்மானத்தினை கொஞ்சம் தள்ளிப் போடலாம். “சூயி பென்னின்  விதியானது பிரமிக்கத்தக்கது” என்று ஸ்டீபன் ஆல்பர்ட் கூறினார். “அவரது சொந்த மாநிலத்தின் கவர்னர்ராக இருந்தார். வானசாஸ்திரம், ஜோதிடம் கற்றிருந்தார், சலிப்பே இல்லாமல் வேத மதசமயச் சட்டங்கள்–நூல்களுக்கு விளக்கம் தந்தவர், சதுரங்க ஆட்டக்காரர், பிரசித்தமான கவிஞர், கையெழுத்துக் கலைஞர்–இவ்வளவு விஷயங்களையும் ஒரு நூலை எழுதவும் ஒரு புதிரைக் கட்டவும் கைவிட்டார். சர்வாதிகாரத்தினுடையதும்,நீதியினுடையதுமான சந்தோஷங்களை தியாகம் செய்தார். பல பெண்களால் நிரம்பிய அவரது கட்டிலை, பெரும் விருந்துகளை, ஏன் ஆழ்ந்த படிப்பினையும் கூடக் கைவிட்டு தெள்ளிய தனிமையின் விதானமான மண்டபத்தில் தன்னைப் பூட்டிக் கொண்டார். அவர் இறந்த பிறகு பெருங்குழப்பமாக இருந்த கையெழுத்துப் பிரதிகளைத் தவிர அவரின் வாரிசுகள் வேறு எதையும் கண்டெடுக்கவில்லை. நீங்கள் அறிந்தபடி அவரது குடும்பத்தார் அவற்றை நெருப்பில் எரிக்க விரும்பினர். ஆனால் அவரது விருப்பத்தை செயலாற்றியவர் ஒரு தாவோயிஸ்ட் அல்லது புத்த பிக்கு-அப்பிரதிகளை வெளியிட வேண்டுமெனப் பிடிவாதமாயிருந்தார்.”

“சூயி பென்னின் வழிவந்த நாங்கள் அந்த பிக்குவை சபித்துக்கொண்டிருக்கிறோம்.” நான் பதில் அளித்தேன். “அவற்றின் வெளியீடு அர்த்தமற்றது. அந்த நூல் முரண்பாடுகள் மிகுந்த பிரதிகளின் தீர்மானிக்க முடியாத குவியல். ஒரு முறை நான் அவற்றை ஆராய்ந்திருக்கிறேன். மூன்றாவது அத்தியாயத்தில் கதாநாயகன் சாகிறான், நான்காவதில் உயிரோடிருக்கிறான். சூயி பென்னின் மற்றொரு காரியமான புதிரைப் பொருத்தவரை. . .” என்று கூறிய நான் முடிக்காமல் நிறுத்தினேன்.

“இதோ இருக்கிறது சூயி பென்னின் புதிர்”‘ ஒரு உயரமான வார்னிஷ் பூசிய பெரிய மேஜையைக் காட்டிக் கூறினார் அவர்.

“ஒரு தந்தத்தால் ஆன புதிர்!”ஆச்சரியத்தில் கூறினேன். “ஒரு குறைந்தபட்ச புதிர்.”

“குறியீடுகளால் ஆன ஒரு புதிர்!”‘ என அவர் திருத்தினார். “கண்ணுக்குப் புலனாகாத காலத்தின் புதிர். இந்த ஊடுருவிப் புலனாகும் மர்மத்தை விடுவிக்க வேண்டிய பொறுப்பு ஒரு காட்டுமிராண்டித்தனமான ஆங்கிலேயனான என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. நூறு வருஷங் களுக்கு மேற்பட்ட தகவல்கள் திரும்பக் கிடைக்க முடியாதவை, ஆனால் என்ன நடந்தது என்பதை யூகிப்பது கடினமல்ல.  நான் ஒரு நூலை எழுதுவதற்காக ஓய்வு பெறுகிறேன் என.சூயி பென் ஒரு முறை சொல்லி இருக்கவேண்டும். வேறு ஒரு சமயம்: நான் ஒரு வட்டச் சுழல் புதிரைக் கட்டுவதற்காக தனித்துப் போகிறேன் எனவும். ஒவ்வொருவரும் இரண்டு படைப்புகளை கற்பனை செய்திருந்தனர். புத்தகமும் புதிரும் ஒன்றே என எவருக்கும் தோன்றவே இல்லை. சிக்கலாக அமைந்த தோட்டத்தின் மையத்தில் நின்றிருந்தது தெள்ளிய தனிமையின் விதான மண்டபம். இந்த சந்தர்ப்பங்கள் அவரது சந்ததியினருக்கு ஸ்தூலமானதொரு புதிரை அறிவித்திருக்கக்கூடும். சூயி பென் இறந்தார். அவருக்குச் சொந்தமான  பரந்த நிலப்பரப்புகளில் எவருமே புதிரைக் கண்டு பிடிக்கவில்லை. நாவலின் குழப்பம் எனக்கு அதுவேதான் புதிர் எனத் தெரிவித்தது. பிரச்னைக்கான சரியான தீர்வினை இரண்டு சந்தர்ப்பங்கள் அளித்தன. முதலாவது சூயி பென் கறாரான வகையில் முடிவில்லாத ஒரு புதிரினை படைக்கத் திட்டமிட்டார் என்கிற விநோதமான புராணிகக் கதை. இரண்டாவது: நான் கண்டுபிடித்த ஒரு கடிதத்தின் பகுதி.”

ஆல்பர்ட் எழுந்தார். என் பக்கம் ஒரு கணம் அவரது முதுகு திரும்பியிருந்தது. கறுப்பு மற்றும் தங்க நிற டெஸ்க்கின் இழுப்பறையைத் திறந்தார். அவர் என்னை நோக்கித் திரும்பி நின்றார்.  இற்று விழுந்துவிடக் கூடிய, பல தடவை மடிக்கப்பட்ட, ஒரு காலத்தில் சிவப்பாக இருந்திருக்கக் கூடிய , இப்பொழுது பிங்க் வர்ணத்தில் இருந்த ஒரு காகிதத் துண்டை அவர் கைகளில் பிடித்துக் கொண்டிருந்தார்.

சூயி பென்னுக்குக் கிட்டியிருந்த கையெழுத்துக் கலைஞன் என்ற பேரும் புகழும் நியாயமனைவையே.  என்னுடைய ரத்தத்தின் ரத்தமான ஒரு மனிதனால் நுண்மையான தூரிகை கொண்டு எழுதப்பட்டிருந்த  வார்த்ததைகளை , நான் அர்த்தங்களை உள்வாங்கிக் கொள்ளாமலும், அதீத ஆர்வத்துடனும் படித்தேன். பல்வேறு வேறுபட்ட வருங்காலங்களுக்கு  (எல்லாவற்றுக்கும் அல்ல)என்னுடைய கிளைபிரியும் பாதைகளின் தோட்டத்தை நான் விட்டுச் செல்கிறேன். வார்தைகளின்றி காகிதத்தை நான்  திருப்பித் தந்தேன். ஆல்பர்ட் தொடர்ந்தார்:

“இந்தக் கடிதத்தைக் கண்டுபிடிக்கு முன், இந்த நூல் முடிவற்றதாய் இருக்கக் கூடிய வழிவகைகளைப் பற்றி என்னை நானே கேள்வி கேட்டுக் கொண்டேன். ஒரு வட்ட வடிவமான தொடர்சுற்றுத் தொகுதியைத் தவிர வேறு எதையும் என்னால் யோசித்துப் பார்க்கவே முடியவில்லை. அந்தப் புத்தகத்தின் கடைசிப் பக்கம் முதல் பக்கத்துடன் ஒன்றுபடும். இவ்வாறு முடிவற்று தொடரும் சாத்தியம் கொண்டது. ஆயிரத்து ஒரு இரவுகளின் மையத்தில், ஒரு இரவில் ஷெஹர் ஷாதி (பிரதி எடுப்பவனின் மந்திரத்தனமான கவனப்பிசகின் காரணமாக) வார்த்தைக்கு வார்த்தை மாறாமல் ஆயிரத்து ஒரு இரவுகளின் கதையை திரும்பச் சொல்லத் தொடங்கி அவள் திரும்பச் சொல்லவேண்டிய அந்த இரவுக்கு வரவேண்டிய அபாயத்தினை ஏற்படுத்தி, இவ்வாறு எல்லையற்று–என நான் அந்த இரவினையும் நினைவு கூர்ந்தேன். வம்சாவழியான, தந்தையிடமிருந்து மகனுக்கு மாற்றப்படுகிற பிளாட்டோ தன்மையான ஒரு படைப்பினையும் நான் கற்பனை செய்தேன். அதில் ஒவ்வொரு தனி மனிதனும் ஒரு அத்தியாயத்தைச் சேர்ப்பான் அல்லது பயபக்தியுடன் தனது மூதாதையரின் பங்கங்களைத் திருத்துவான். இந்தக் கற்பிதங்கள் என்னைத் திசை திருப்பின. ஆனால் எதுவுமே, தூரத்துத் சம்மந்தத்திலும் கூட முரண்மிக்க சூயி பென்னின் அத்தியாயங்களுடன் ஒத்துப் போகவில்லை. இந்தப் பெருங்குழப்பத்திற்கு இடையில் ஆக்ஸ்போர்டிலிருந்து ஒரு கையெழுத்துப் பிரதி எனக்குக் கிடைத்தது. அது நீங்கள் படித்தது. இயல்பாகவே நான் இந்த சொற்றொடரில் நிலைத்திருந்தேன்.

பல் வேறு வருங்காலங்களுக்கு (எல்லாவற்றிற்கும் அல்ல) என்னுடைய கிளைபிரியும் பாதைகளின் தோட்டத்தை நான் விட்டுச் செல்கிறேன். ஏறத்தாழ அந்த கணத்திலேயே எனக்கு புரிந்துவிட்டது. “கிளைபிரியும் பாதைகளின் தோட்டம்” தான் அந்தக் குழப்பமான  நாவல். பல வேறுபட்ட வருங்காலங்கள் (எல்லாவற்றுக்கும் அல்ல) என்ற  சொற்தோடர், கிளை பிரிதல் காலத்தில் மட்டும்தானே தவிர புவிவெளியில் அல்ல என்று குறிப்பால் உணர்த்தியது.  அகண்ட மறுவாசிப்பு இந்தக் கருத்தாக்கத்தினை உறுதிப்படுத்தியது. எல்லாப் புதினங்களிலும் வேறுபட்ட மாற்றுக்களை ஒவ்வொரு முறை ஒரு மனிதன் எதிர்கொள்ளும் போதும், அவன் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து மற்றவற்றை நீக்கி விடுகிறான். சூயி பென்னின் நாவலில்–ஒரே நேரத்தில்–அவன் அனைத்தையும் தேர்வு செய்கிறான். இவ்வாறு அவன் தம் அளவிலேயே பெருகிக் கிளைபிரியும்–வேறுபட்ட வருங்காலங்களையும், மாறுபட்ட காலங்களையும்  உருவாக்குகிறான்.  இங்குதான் இருக்கிறது நாவலின் முரண்பாடுகளுக்கான விளக்கம். ஃபேங் என்பவனிடம் ஒரு ரகசியம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவனிடத்திற்கு ஒரு அந்நியன் வந்து கதவைத் தட்டுகிறான். ஃபேங் அவனைக் கொல்லத் தீர்மானிக்கிறான். இதன் விளைவுகள் இயல்பாகவே வேறுபட்ட சாத்தியமிக்கவையாய் இருக்கும். இடையூறு செய்தவனை ஃபேங் கொல்லலாம், இடையூறு செய்தவன் ஃபேங்கைக் கொல்லலாம். இருவருமே தப்பித்து விடலாம், இருவருமே இறந்து போகலாம், இப்படியாக. சூயி பென்னின் நாவலில் சகல சாத்தியமிக்க விளைவுகளும் தோன்றுகின்றன. ஒவ்வொன்றும் வேறு ஒரு கிளைபிரிதலுக்குரிய ஆரம்பப் புள்ளியாகிறது. சில நேரம் சுழல் புதிர்களின் பாதைகள் சங்கமிக்கின்றன. எடுத்துக்காட்டாக இந்த வீட்டை நீங்கள் அடைகிறீர்கள், ஆனால் சாத்தியமுள்ள கடந்த காலங்களில் ஒன்றில் நீங்கள் எனது எதிரி, மற்றொன்றில் எனது நண்பன். எனது திருத்தமுடியாத உச்சரிப்பை பொறுத்துக் கொள்ள முடியுமென்றால், நாம் சில பக்கங்களைப் படித்துப் பார்க்கலாம்.”

அவருடைய முகம், விளக்கு வெளிச்சத்தின் துலக்கமான வட்டத்தில் கேள்விக்கு அப்பாற்பட்ட வகையில் ஒரு கிழவனுடையதைப் போல் இருந்த போதிலும் அதில் ஏதோ ஒன்று மாறுதலுக்கு அப்பாற்பட்டதாய், இறவாத்தன்மையுடையதாய்த் தோன்றியது. நிதானமான ஒழுங்குடன் அவர் ஒரே காவியத்தன்மை வாய்ந்த அத்தியாயத்தின் இரண்டு விவரிப்புகளை நிதானமாகவும் திருத்தமாகவும் வாசித்தார். முதல் விவரிப்பில் ஒரு தனித்த மலையில் வழியாக போருக்கு அணிவகுத்துச் செல்கிறது ஒரு படை; பாறைகளின் நிழலும் பயங்கரமும் வீரர்களைத் தமது உயிரைக் குறைத்து மதிப்பிட வைக்கிறது. அவர்கள் எளிமையான வெற்றியைப் பெறுகின்றனர். இரண்டாவதில் அதே படை ஒரு அரண்மனையின் ஊடாகக் கடந்து செல்கிறது. அதில் பெரும் விழா ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. நெருப்பு ஒளிரும் போரானது அவர்களுக்குக் களியாட்டத்தின் தொடர்ச்சியைப் போலத் தோன்றியதால் அவர்கள் ஜெயிக்கிறார்கள். எனக்கு ரத்த சம்மந்தம் உள்ளவனால் உருவாக்கப்பட்டவை, உலகின் ஒரு கோடியில் உள்ள சாம்ராஜ்தைச் சேர்ந்த ஒருவனால் மேற்கத்திய தீவொன்றில் துணிகர முயற்சி ஒன்றில் ஈடுபட்டிருந்த  சமயம் கண்டறியப்பட்டு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது என்பதைத் தவிர அந்த புராதனக் கதையார்த்தங்களில், அவற்றின் அளவில் பாராட்டும்படியாக பெரிதாக ஒன்றும் இல்லை என்று தோன்றியது. ஒரு ரகசியக் கட்டளை போல ஒவ்வொரு வகையான விவரிப்பிலும் திரும்பத் திரும்பக்  கூறப்பட்ட அந்தக் கடைசி சொற்களை நினைத்துக் கொண்டேன். இவ்வாறு போரிட்டார்கள் நாயகர்கள், பாராட்டுதல் மிக்க அவர்களின் இதயங்கள் சலனமின்றி, அவர்கள் வாள்களோ வன்மத்துடன், கொல்வதற்கும் சாவதற்கும் தீர்மானித்தபடி.

அந்தக் கணத்திலிருந்து, என்னைச் சூழ்ந்தும், எனது இருண்ட உடலுக்கு உள்ளாகவும் கண்ணுக்குப் புலனாகாத, ஸ்பரிசிக்க முடியாத, மொய்த்துக் கொள்ளப்படும் உணர்வு எனக்கு ஏற்பட்டது. விலகிச் செல்கிற, இணைகோட்டுத் தன்மையிலிருந்து இறுதியில் சங்கமித்துக் கலக்கும் படைகளின் பெருகுதல் அல்லாமல்,  ஆனால் மேலும் சென்றடையச் சிரமமான மிக அத்தியந்தமான உலுக்குதல்களாக ஏதோ வகையில் இவை முன் கூறலாயின. ஸ்டீபன் ஆல்பர்ட் த